Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Monday, December 27, 2010

நீங்க முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...


நாம பலநேரம்  ஏதார்த்தம் என்பதை தவறவிட்டுவிடுகிறோம். சகஜமான வாழ்வை தொலைத்துவிட்டு முட்டி மோதி கடைசியில் கைகாசு கூட மிஞ்சாமல் போகிறது.  நம் வயிறு பசிக்குது என்று உணவை நம் கை எடுத்து வாயில் ஊட்டிவிடுகிறது.  அவ்வுணவை பல் அரைத்து வயிற்றுக்குள் தள்ளுகிறது.  அதை உடலும் தேவையானது என்று ஏற்றுகொள்கிறது. ஆனா நாம் வாழும் வாழ்வில் பிடிக்கிறதோ, பிடிக்கலையோ கட்டாயத்தின் பேரில் சிரமப்பட்டுதான் வாழ்ந்தாகவேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட இடரான வழ்க்கை எதற்கு.? வயிறு பசித்து கை எடுத்து கொடுத்து சாப்பிடுவதை போல வாழ்வும் எதார்த்தமாக இருந்தால் நாம் வாழும் வாழ்வில் எந்த வேதனையும்  இல்லை அப்படியே இருந்தாலும் அது வேதனையாக இருப்பதில்லை. நீங்கள் அருவியில் கொட்டுகிற தண்ணீரை பார்த்திங்கனா ரொம்ப சலசலப்பா இருக்கும். அதன் பக்கத்தில் போகவே முடியாது. ஆனா அதே அருவி தண்ணீர் கொஞ்சம் தூரம் போன பின்னே அதன் நீரோட்டம் கவனித்தீர்கள் என்றால் அது எந்தவித சலனம் ஏற்படுத்தமால்   அமைதியாக போகும் அதில் எப்போதும் ஒரு அழகு இருக்கும். அதுபோலதான் நாம் வாழும் வாழ்வும்  நீரோட்டம் போன்றது.  அருவி போல் எப்போதும் சலலப்பு இருந்தாலும் அதன் தெளிந்த நீரோடையாக இருப்பது நமக்கு என்றும் நல்லதாக இருக்கும். அது நாம் வாழும் வாழ்வை எந்தவிதத்திலும் சிதைக்காமல் தொந்தரவு செய்யாமல் இருக்கும். நான் சொல்வது வாழ்வின் ஏதார்த்தத்தை இதை  புரிந்தவர்களுக்கு வாழ்வது ரொம்ப எளிதுதாக இருக்கும்.

நீங்கள் எரியாத மெழுகுவர்த்தியாய் இருந்துகொண்டு மற்றவரை எரியவைக்க முயற்சிப்பதில் என்ன பயன். முதலில் உங்கள் அனுபவங்களில் உங்களை தேடுங்கள். நம் பசிக்கு உணவு இல்லாதபோது பக்கம் பக்கமாக படித்து என்ன பலன் வேண்டிருக்கு. இது என் அனுபவத்தில் தேடிய வாக்கியம்...      

அறிவு சார்ந்த ஒன்றை தெரிந்துகொள்ள நாம் ஒரு அரங்குக்கு செல்வோம். அங்கு ஏற்கனவே பல பேரு இருப்பார்கள் நாம் கடைசியாக போய் அமர்வோம். இப்போது நாம் நினைப்போம் "ஐயோ நாம்தான் கடைசியா" என்று ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து நம் பின்னே பல பேர் வந்து அமர்வார்கள் இப்போது நாம் கடைசி இல்லை.  நமக்குதான் பிரச்சனை என்றால் பலபேர் பிரச்சனையுடதான் இருக்கிறார்கள். வாழ்கிறார்கள்.  "உனக்கு கிழே உள்ளவர் கோடி" என்று கண்ணதாசன் எழுதிய பாடல் போல் இருக்கிறது பிரச்சனைகள்.  எதுவும் நம் நினைப்பில்தான் உள்ளது.      

நம்மில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லா சிந்திகிறாங்க பேசசொன்ன மணிக்கணக்காக பேசுகிறார்கள். எழுத சொன்னால் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். ஆனால் செய்முறை பயிற்சி இருக்கா என்றால் இல்லை ஒழுக்கத்தை பற்றி ஓயாமல் பேசுவோர்களும் உண்டு ஆனால் சொன்ன ஒழுக்கத்தை ஒருநாளேனும் நினைத்தார்களா இல்லை கடைபிடித்தார்களா என்றால் இல்லை. இதில் அவர்களுக்கு செயல்முறை பயிற்சி இல்லை. எதையும் பழக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். எல்லோருக்கும் எல்லா திறமைகளும் உண்டு. அதை வெளிகொண்டுவரத்தான் யாரும் முயற்சிப்பதில்லை ஆசை என்னவோ எல்லோருக்கும்தான் இருக்கிறது ஆனா அதை சிலபேர்தான் அடைகிறார்கள். காரணம் ஆசையுடன் ஆர்வம் மட்டும் போதாது முயற்சி அதனுடன் இணைந்த பயற்சியும் அதை என்றும் நடைமுறைபடுத்தி இயல்பாக்கினால் கடின உழைப்பு என்று சொல்வது கூட  எளிமையாகிவிடும். ஆர்வத்துடன் போதிய முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம்தான்.

நாம் வெற்றி, வெற்றி என்று சொல்வது ஒன்றுமில்லை ஆசையின் மறைபொருல்தான் வெற்றி. நாம் நினைக்கும் அடையும்  வெற்றி ஒரு எல்லைவரை வரையறுத்தது. அதை பார்பவர்களுக்கு வேண்டுமானால் நாம் வெற்றி அடைந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அது வெற்றி இல்லை. ஒருவரின் எண்ணத்தின் பார்வைமட்டும் நம் வெற்றியை நிர்ணயப்பதில்லை. அதில் நம் எவ்வளவு மன உறுதியாய் பெற்றோம் என்பதில்தான் வெற்றி உள்ளது. ஏழை ஏழையாய் இருப்பதற்கு அவனிடம் இருந்து சுரண்டலுக்கு அடுத்து ஒரு சில காரணங்களும் உண்டு. அதை அவன் எப்போதும் அறியவில்லை அவன் ஏழ்மையின் எண்ணமும் ஒரு காரணம். ஏழ்மையில் இருப்பவன் எழ்மையைதான் நினைப்பான் அதனால் மேலும் அவன் ஏழையாகின்றான். பணக்காரன் மேலும் பணத்தையே நினைக்கின்றான் அதனால் மேலும்  பணக்காரனாகின்றான். இதில் ஏழ்மையை இருப்பதற்கும் பணகாரனாய் இருப்பதற்கும்  எண்ணமே விதையாக இருக்கிறது. வானத்தில் பரந்த பறவையை பார்த்து தாமும் அதுபோல பறக்கவேண்டும் என்ற கற்பனை என்னத்தை விரித்த மனிதன்தான் அந்த எண்ணத்தை  உண்மையாக்குவதற்க்கு பெரிய சவாலே நடத்தி காட்டினான். அந்த சவால் ரைட் சகோதரர்களால் உண்மையாக்கபட்டது. பறவைபோல கற்பனை செய்த மனிதனின் எண்ணம் நிறைவேறியது.     

பலதை கைகொள்ள என்றால் சிலது நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். புகை பிடிப்பதால் உடல் நலகேடு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் புகையின் தீமையை படித்து இன்னொன்று புகையை இழுத்து விடுவார்கள். நான் எதையும் செயல்முறையில் கொண்டுவர முயற்சிக்கிறேன். நான் 10 வருடமாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது ஆனால் இப்போது 3 வருடமாக புகையை நிறுத்திவிட்டேன் இதனால் என் உடலும், மனமும் சரியாக இருக்கிறது. தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன் 2 வருடமாக செயல்படுத்துகிறேன். "இதெல்லாம் என்ன ஒரு பெரிய விஷயமா" என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் எனக்கு பல திட்டசெயல் முறைகளை நடைமுறைபடுத்த சிலதை கடைபிடித்துதான் ஆகவேண்டும். 

வாழ்வில் கிடைக்கவேண்டியது கிடைக்கவேண்டும் என்றால் சிலதை நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். அதனால் படிப்பதுடன் இருக்காமல் முடிவதை செயல்முறைபடுத்துங்கள். நீங்கள் காணும் எதிர்பார்ப்பும் நிச்சயம் நிறைவேறும். இது என்னால் நிரூபிக்கப்பட்ட வெற்றிமுறை...   



என்றும் நட்புடன்:     

Saturday, December 25, 2010

கன்னித்தாய்க்கு குழந்தை ஏசு..?

 முதல் கதை:


வாழ்வில் சலிப்படைந்த ஒரு வாலிபன் விடுதியில் உள்ள பதினான்காவது மாடியின் ஜன்னலிலிருந்து குதித்து விடுவதாக மிரட்டினான் காவலர்கள் மிக அருகில் செல்ல முடிந்த இடம் ஒரு சில அடி கீழே உள்ள கட்டடத்தின் கூறையாகும் பாதுகாப்பாக திரும்பி வரும்படி கெஞ்சியது. எதுவும் பலனில்லை பக்கத்தில் இருந்த தலைமை சமய குரு அழைக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அன்பான முறையில் அவர் "மகனே , சிந்தனை செய், மகனே! உன்னை நேசிக்கும் உனது தாய், தந்தையை பற்றி சிந்தனை செய், என தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வாலிபனிடம் கூறினார்.

"அவர்கள் என்னை நேசிக்கவில்லை. நான் குதிக்கபோகிறேன் என்றான்.

இல்லை மகனே!  நில்" என ஆழ்ந்த அன்போடு கூடிய குரலில் பாதிரியார் கூறினார்.  உன்னை நேசிக்கும் பெண்ணை பற்றி யோசி!

"யாரும் என்னை நேசிக்கவில்லை. நான் குதிக்கபோகிறேன்." என பதில் வந்தது.

"ஆனால் நினைத்து பார் ஜீசஸ், மேரி, ஜோசப் உன்னை நேசிக்கும் இவர்களை சிந்தனை செய்! என பாதிரியார் கெஞ்சினார் .

"யார் அவர்கள் .? என அவன் கேட்டான்.

உடனே பாதிரியார் "குதி! யூத புறம்போக்கே குதி ! என்றார்.

எல்லாஅன்பும் உடனடியாக மறைந்து விடுகிறது. அன்பை பற்றிய எல்லா பேச்சுகளும் மேலோட்டமானவை பொருத்துகொள்ளுதலை பற்றிய எல்லா பேச்சுக்களும் அடி ஆழத்தில் பொருமையற்றவை.
  
இரண்டாவது கதை:

மனித இனம் வெற்றுவார்தைகளால் பிளவுபட்டுக் கிடக்கிறது. வெற்று வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். தம்மை இந்துக்கள் என்றும், யுதர்கள் என்றும், கிருஸ்தவர்கள் என்றும், முகமதியர்கள் என்றும் இன்னும், அவர்கள் இவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் வெற்று வார்தைகள் மேல் நம்பிக்கை வைத்திருபவர்கள். எல்லாமே இரவல் தான் சண்டை, சச்சரவு, விமர்சனம், என்று மனித சரித்திரத்தையே இரத்தம் தோய்ந்தாக்கி வைத்திருக்கிறார்கள் அதுவும் கடவுளின் பெயரால்

ஒரு யூத பெண் தனிப்பட்ட ஓரிடத்தில் ஒரு மாலை நேரம் தங்க வேண்டி வந்தது "தனிப்பட்ட" என்றால் யுதர்களுக்கு இடம் தராத என்று பொருள். ஊருக்குள் இருந்த ஒரு ஹோட்டலுக்கு போனாள் தங்குவதற்கு ஓர் அரை வேண்டும் என்று கேட்டாள்.

டெஸ்க் கிளார்க், ரூம் ஒன்னும் இல்லையே" என்றான் .

' பிறகு ஏன் ரூம்கள் கிடைக்கும்னு போர்டு வெச்ரிகிரிங்க?"

' யூதர்களுக்கு ரூம் தரதில்லே.'

'ஆனா இயேசு கூட ஒரு யூதர்தானே?'

' இயேசு யூதர்தானு உனக்கு எப்படி தெரியும்'

'அப்பா தொழிலுக்குதானே அவரும் போனாரு? அதுவுமில்லாம நான் கத்தோலிக்க மதத்துக்கு மாறிட்டேனே! கேள்வி எதாச்சும் கேட்டு பாரு. நான் பதில் சொல்றேன்.

சரிதான். இயேசு எப்படி பிறந்தாரு?'

'கன்னியிடமிருந்து பிறந்தாரு. அவரோட அம்மா பேரு மேரி, அப்பா பேரு புனித ஆவி.'

'சரிதான். இயேசு எங்கே பிறந்தாரு?'

'மாட்டுத் தொழுவத்தில்.'

'அதுவும் சரிதான். அவரு ஏன் அங்கே போயபிறந்தாறு?'

'உன்ன மாதிரி தேவிடியாப் பசங்க ஒரு யுத பொம்பளைக்கு ஒரு ராத்த்ரி தங்கறதுக்கு ஒரு ரூம் தரதிள்ளனுட்டுதாலே. அங்கே போய் பிறந்தாறு.'

ஆனால் இதை போன்ற தேவிடியா பசங்கதான் எல்லா இடத்திலையும் இருக்கிறார்கள். அவர்கள்தான் புசாரிகலாகவும், ராபிக்கலாகவும், பண்டிதர்கலாகவும், சங்கராச்சாரியர்கலாகவும், போப்புகலாகவும் இருக்கிறார்கள். இவர்கள் வெகு தந்தரசாளிகள் வெற்று வார்த்தைகளை வைத்துகொன்டு விளையாடுகிறார்கள், தர்க்க வெட்டிகள் சிகைமயிறை பிளகிறார்கள் பயனற்றவைகளை பற்றி முடிவில்லாமல் விவாதிக்கிறார்கள்.

கத்தோலிக்க போப் தன் கட்டுபாட்டில் பல லட்சம் பேர்களை கொண்டவர். இதில் ஒருவர் கூட கன்னிப் பெண் எப்படி குழந்தை பெற்றால்.? என்று கேள்வி எழுப்பியதில்லை "இயேசுதான் தேவமைந்தன் என்பதற்கு என்ன ஆதாரம்.? பலரை துயரத்தில் மீட்பவர்தான் இயேசு என்பதற்கு என்ன அத்தாட்சி.? அவர் தன்னையே காப்பாற்றி கொள்ளமுடியாதவராகத்தான் இருந்தார்.

:-osho

பல விஞ்ஜானதிர்க்கு சொந்தகாரர்களாக இருக்கும் மேற்கத்தியகார்கள் ஏசு எப்படி கன்னித்தாய்க்கு பிறந்தார் என்ற விஞ்ஜானத்தை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் இது ரொம்ப வேடிக்கையாகதான் இருக்கிறது. இப்பொழுது கன்னித்தாய்க்கு பிறந்த தேவமைந்தன் நான்தான் என்று யாரவது சொன்னால் கிறிஸ்துவர்கள் ஏற்றுகொள்வார்களா...?


"நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு காரணமாய் இருப்பது அச்சமும் ஏக்கமும் ஆகும். ஒரு மததில் நம்பிக்கை கொள்ளாவிட்டால் பேரிழிப்பு எற்படுமென்ற அச்சமும், ஏக்கமும் மக்களை அச்சுருத்துகின்றன."

:-ஜே.கே



என்றும் நட்புடன்:

Friday, December 10, 2010

ஆணும், பெண்ணும் சமகால தோழர்கள்...


சில பெண்ணியவாதிகளுக்கு ஆண்களை கண்டால் பாவக்காய் போல கசப்பாதான் பார்பார்கள். அவர்கள் சொல்லுவார்கள் "நீ என்னடா என்னை கற்பழிக்கிறது நான் உன்னை கற்பழிக்கிறேன் பார்" என்று. "ஆணாகிய நீ இறுக்கமான ஆடை போட்டால் நானும் அப்படியே போடுவேன் அது எனக்கு சரியா இருக்கா.? இல்லையா.? என்றேல்லாம் எனக்கு கவலை இல்லை,"நீ தம்பு(சிகெரேட்) பிடித்தால் நானும் பிடிப்பேன். நீ நின்றுகொண்டே சீறுநீர் கழித்தால் நானும் நின்று கொண்டே கழிப்பேன் பார் (என்று ஒரு வேலை கூறினால்) ஆணுக்கு நிகர் பெண் என்ற அடிப்படை வாதமே தவறாகி போய்விடுமே...

ஆணின் தைரியத்திற்க்கும், துணிவுக்கும் தோழமையுடன் போட்டி போடலமே அன்றி எதிர்ப்பு நிலை உண்டாக்கி "அவனை போல் நானும் செய்து காட்டுகிறேன் பார்" என்றால் சமுகத்திற்க்குதான் சீரழிவு. பெண்ணியவாதிகள், ஒரு விதத்தில் தாங்கள் ஆணை வென்று விட்டோம் என்று கூறிகொள்ளலாம். ஆனால் இவர்கள் பெண்களை அழிவு நிலைக்குதான் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். பெண்ணின் சுயசிந்தனையான, முற்போக்கு எண்ணங்கள் ஆணை எதிர்த்தோ அவனை காப்பி அடித்தோ இருக்க கூடாது. ஒரு அழிவு இன்னொரு அழிவுக்குதான்  இட்டுசெல்லலும். ஆணும் பெண்ணும் சமக்கால தோழர்களாக இருக்கவேண்டும். ஏனென்றால் ஆணும் பெண்ணும் ஒன்றோடு ஒன்று இணைந்த உறவு, தோழமை..இவை இல்லாமல் தனித்து எதிர்ப்பு நிலையில் செயல்பட்டால் அது ஒரு கசப்பான பிரிவைத்தான்  உண்டாகும். இதனால் நாளைய தலைமுறை பல இன்னல்களை எதிர்கொள்ளவேண்டிவரும். இப்போதே இதன் தாக்கம் அதிகரித்து விட்டது. அது மேலும் அதிகரித்து கேள்விகுறியில் நிற்கவேண்டாம்.

நாகரிகம் வளர்ந்த மேற்குலகில் கணவனும், மனைவியும் ஏதோ அற்ப காரணங்களுக்காக பிரிந்து செல்வதால் இதில் ஒன்றும் அறியாத குழந்தைகள்தான் பாதிக்கபடுகிறார்கள். அக்குழந்தைகள் பாதிக்கபடுவதால் பின்னாளில் அதுவும் பெற்றோர்கள் எடுத்த நிலையே எடுக்கும். இதில் மாற்றம் எதுவும் இருக்காது. அதனால் ஆணும், பெண்ணும் தோழமையுடன் இணைந்த சமுதாயம்தான் ஆரோக்கியமான சமுதாயமாக இருக்கும். ஆண் செய்த இழிவையே  பெண்ணும் செய்ய நினைத்தால் எதிர் விளைவுகள்தான் ஏற்படும். இது எப்படி என்றால் கொழுந்து விட்டு எறிந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அணையும் தருவாயில் அவை அணையாமல் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊற்றுவதற்க்கு ஈடானது. இந்த எண்ணெய் எதுபோல என்றால் "நீ என்னடா என்னை கற்பழிக்கிறது நான் உன்னை கற்பழிக்கிறேன் பார்" என்று சொல்வதை போல... 

என் எண்ணத்தின் எழுத்தை படித்த உங்களுக்கு என் நன்றிகள்...



என்றும் நட்புடன்:

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி,  மற்றும் நம் குரல்  பதியவும்.....நன்றி.)

Wednesday, December 8, 2010

காதலுக்கு ஒரு சோதனை கதை...


ஒரு அரசன் தன் மகள் ஒரு எழ்மையானவனை காதலிக்கிறாள். என்று தெரிந்து தன் மகளிடம் பேசிபார்த்தார் ஆனால் மகள் பிடிவாதமாக"அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் நான் செத்துவிடுவேன்" என்று மிரட்டினால்...'காதல் சாகவும் துணியும்' என்று எண்ணிய அரசன் மகளின் காதலின் உண்மை தன்மையை புரியவைக்கவேண்டும். என எண்ணி தன் மகளிடம் ஒரு நிபந்தனை வைத்தார். அதாவது "உங்களை ஒருநாள் 24 மணிநேரம் முழுவதும் ஒருவர் ஒருவரை  பார்க்க முழு நிர்வாணமாக கட்டி வைத்து விடுவோம்...நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து  அந்த 24 மணி நேரத்தை கடந்தால் உங்கள் காதலுக்கு எனக்கு முழுசம்மதம்" என்கிறார். இதற்கு காதலர்கள் சம்மதிக்கிறார்கள். ஏனென்றால் அந்த காதல் பல கவிதைகள் எழுதி, பாடி, பேசி வாழ்ந்த காதல் அல்லவா.."இது என்ன பெரிய நிபந்தனை  நாங்க வெற்றிபெற்று காதலில் ஜெயித்து காட்டுகிறோம்" என்று காதலர்கள் சொல்ல...அரசன் இருவரையும் எதிர் எதிரே கட்டி போடா ஆணையிட்டான். இருவரையும் முழு நிர்வாணமாக ஒரு தூணில் நிற்கவைத்து கட்டி போட்டார்கள். அப்போது இருவருக்கும் கொஞ்சம் வெட்கி தலை குனிந்து ஒருவரை ஒருவர் ஓரக்கண்னால் பார்த்து தம் காதல் வெற்றியடையும் என்று எண்ணி பூரிப்பில் இருந்தார்கள். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்தது. இப்போது சில நேரம் சென்றுவிட்டது. காதலனுக்கு சிறுநீர் கழிக்கணும் போல ஒரு உணர்வு ஆனால் அதை அடக்கி கொண்டான். இதேபோன்று அந்த பெண்ணுக்கும்...இருவரும் அடக்க முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை வெளியேற்றி விட்டார்கள். இப்போது வெளியேறிவிட்டது. அந்த இடமே நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. இருந்தும் முக சுளிப்புடன் சமாளித்தார்கள். ஆனால் காதலனின் வயிறு சாமாளிக்க முடியவில்லை அடுத்த மலகடனை வெளிற்ற நேரம் வந்து விட்டது. இந்த முறை அவன் முயற்சி செய்தும் பலன் இல்லை மலத்தை வெளியேற்றிவிட்டான். நாற்றம் முன்னரை விட இப்போது ரொம்ப அதிகமாகிவிட்டது. என்ன செய்வான்பாவம் அவன் முயற்சிக்கு இயற்கை உபாதைகள் கட்டுப்படவில்லை அந்தவேளையில் கட்டுபாட்டை மீறி கொண்டு வந்துவிட்டது. இப்போது காதலின் முகம் பல கோணல்களை வெளிபடுத்தி விட்டது. "என்னடா நம் காதலன் இப்படி ஒரு நிலையில் இருக்கிறானே..என்ன ஒரு அருவருப்பான நிலை" என்று மனதுக்குள் எண்ணி வெறுப்படைந்தால். இப்போது காதலர்கள் ஒரு முகத்தை ஒருவர் பார்க்கவே அருவருப்பாக இருந்த நிலை முகத்தை திருப்பி கொண்டு தங்களை விடுவித்தால் போதும் என்று எண்ணினார்கள். காதலர்களை விடுவித்தாகிவிட்டது. ஆனால் அவர்களுக்குள் முன்னே இருந்த காதல் இல்லை...

காதல் எனபது உணர்வில் ஏற்படுவதை விட கவர்சியில்தான் ஏற்படுகிறது. அது கவிதையாக, வசனமாக, வீரமாக எல்லாம்  ஒன்றன் பின் ஒன்றாக கொழுந்துவிட்டு எறியும் ஆனால் அவையெல்லாம் உடல் சூட்டின் வேகம் தணியும் வரை...நடைமுறையில் உள்ள காதலர்களை எது சொல்லியும் சமாதானபடுத்த முடியாத சூழ்நிலைதான்  இருக்கும். அவர்களே உண்மை தன்மை உணர்ந்துவிட்டால். உணர்ந்து ஒருவேளை கடந்துவிட்டால்  உண்மை காதலையும் அவர்கள் உணரலாம்...அதன்பின் அந்த காதலில் 'பிரிவு' என்றுமே இருப்பதில்லை. அதனால் உண்மை காதலை காதலியுங்கள். கவர்ச்சி ஒரு தேவைமட்டும்தான் அது என்றுமே காதலுடன் வருவதில்லை....

எனக்கு தெரிந்த கதையை உங்களுடன் பகிர்ந்துகொண்டு அதில் என் கருத்தையும் சொல்லிருக்கிறேன் பிடித்திருந்தால் பதிவை காதலியுங்கள்... 



என்றும் நட்புடன்:



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Tuesday, December 7, 2010

மார்கழிமாதம், புரட்டாசிமாதம் தமிழர்களை அதிகம் சுரண்டும் சாமிகள்...

பலபேரில் சிலபேரு, சிலபேரில் அதிகம் பேரு...கஞ்சா அடிக்கிறவன், துண்டுபீடி அடிக்கிறவன், சரக்கு அடிக்கிறவன், பொம்பளைகிட்ட போறவன், மொள்ளமாரித்தனம் பண்றவன், கந்துவட்டி விட்டு கட்ட பஞ்சாயத்து பண்றவன் எல்லாம் இந்த கார்த்திகை, மார்கழி மாதத்தில் ஒரு 48 நாள் ரொம்ப நல்லவனுங்கலா மாறிவிடுவானுங்க ஏன்னா எல்லோரும் சபரி மலைக்கு மாலை போட்டுபானுங்க....வணக்கம் சாமி, வாங்க சாமி, போங்க சாமி, சாப்பிடுங்க சாமி என்று ஒரே சாமி மயமா இருக்கும்.

தமிழர்களை  இரண்டு மாநிலத்தில் உள்ள சாமிகள்  பக்தி என்ற பேருல நம்ம கிட்ட இருக்கிற கைகாசு எல்லாத்தையும்  சுரண்டுது...கார்த்திகை, மார்கழி இரண்டு மாதத்தில் சபரிமலையில் தமிழனின் பக்தி என்ற பேரில் அவனின் ஆண்டு வருமானத்தை கரைக்குது...இன்னொன்று "ஏடுகுண்டல வாடா" வெங்கட்ரமணா கோவிந்தா என்ற கோஷத்துடன் வருடமுழுவதும் அதுவும் ஜனவரியில் இருந்து அக்டோபர் வரைக்கும் கோவிந்தவுக்கு ஒரே மஜ்ஜாதான் கல்லாவுக்கு பஞ்சமே இருக்காது...அதுவும் புரட்டாசி மாதம் என்றால்  தமிழர்களின் பக்தி வியாபாரம் அவர்களுக்கு படுஜோரா இருக்கும். ஏன்னா கோயிந்தாவுக்கு அது உகந்த மாதமாம்...நம் மாநிலத்தவனின் பக்தி வருமானம் இரண்டு மாநிலத்திற்க்கு போகுது...ஏன் தமிழர்களின் தமிழ் கடவுள் பழனியில் ஒரு பண்டாராம் ஆண்டியா நிக்குதே அங்கே போகலாமே..நான் சும்மா சொல்ல கூடாது தமிழர்கள் போறாங்க ஆனா வெங்கிக்கு இருக்கிற கல்லா ஆண்டிக்கு கிடைகிறதில்லை...ஆந்திராவின் பட்ஜெட்டே வெங்கியை நம்பித்தான் இருக்கு...பெரும்பான்மையான  தமிழர்களுக்கு என்ன பயம்ன்னா...கோவணம் கட்டி இருக்கும் ஆண்டிகிட்ட போனா நாமும் போன்டியாகிவிடுவோம் என்ற பயமும் இருக்கு...ஆனா இரண்டு ஆண் கடவுளுக்கு பிறந்த ஐயோ அப்பனும், முருகனின்  பட்டையை அழித்து இரவோடு இரவாக நாமத்தை போட்டு இதுதான் பெருமாள் சாமி என்று எல்லோரையும் நம்பவைத்த  வைணவ பாப்பானுங்க விழுந்து விழுந்து கும்பிடுற கோயிந்தா சாமியும் தமிழர்களாகிய  நீங்க  ஏன் போய் கும்மிடனும்...

தமிழர்களாகிய நீங்க பண்டாரம் ஆண்டியை வணங்கினால் தமிழக கஜானாவுக்கு ஏதோ பக்தி என்ற பேருல வருமானமும் வரும். ஏதோ மக்களுக்கு உங்களால் நல்ல காரியமும் நடக்கும். ஆனா நல்லது அரசியல்வாதி நினச்சாத்தான் நடக்கும் நீங்க நம்பலாம்....அப்படியும் இல்லனா பக்தி பணத்தை என்கிட்ட கொடுங்க... ஆதரவற்ற அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஏழை மாணவர்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் அமைப்புக்கள் போன்ற சமுக அமைப்புகளின் முகவரி எனக்கு தெரியும்...நீங்க என்கிட்ட கொடுத்தால் உங்க பெயரிலே அவர்களிடம் வழங்குகிறேன். உங்களுக்கு ரசிதும் கொடுக்கிறேன் அதற்கான கணக்கும் நீங்க கேட்டால் காட்டுகிறேன்.  அந்த அமைப்புகளுக்கு நல்லது செய்வதால் ஐயோ'அப்பா' , கோயிந்தா, ஆண்டிபண்டாரம் இந்த சாமிகளிடம் கிடைக்காத நிம்மதி நிச்சயம்  கிடைக்கும்...

மறுபடியும் சொல்றேன் திருந்துங்க பக்தி, நம்பிக்கை, வழிப்பாடு என்ற பேர்ல்ல தமிழர்களை முட்டாளாக்கி சுரண்டி கொண்டிருக்கிறது பல கூட்டம் அதுக்கு என்றும் பலியாகிவிடாதிங்க....உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லனா அந்த நம்பிக்கையை வேற எங்க தேட முடியும் அது முடியாது. அப்படி முடியும் என்றால் அது நம்பிக்கையாக இருக்காது. அது உங்களை ஏமாற்றும் வேலையாய் இருக்கும். உங்களுக்கு ஒன்று தெரியுமா பலவீனமானவன்தான் தன்னம்பிக்கை அற்றவன்தான் கோவிலுக்கு செல்வான்...."உன்னை நீ நம்பாமல் வெறும் கல்லை நம்புகிறாய்" என்றால் நீ எவ்வளவு பெரிய முட்டாளாய் இருக்கிறாய் என்று ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்க ..

ஓஷோ கூறியது போல "உண்மையான தேடுதல் கடவுளை தேடுவதாக இருக்காது அப்படி தேடினால் அது ஒரு சால்ஜாப்புதான்  ஏனென்றால் வியாதிக்காரன் மனத்தின் தேவைதான் கடவுள்..."


எண்ணத்தின் எழுத்தை வரவேற்றமைக்கு உங்களுக்கு நன்றி...எதிர்ப்பு இல்லேன்னா என் நன்றியை ஏத்துக்கலாம்...


என்றும் நட்புடன்:    


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Tuesday, November 30, 2010

இன்னல்படும் காஷ்மீர்...


நம்ம வீட்டு எதிர் வீட்டுக்காரன் ரொம்ப பிரச்சனை பண்றான். அவனுடன் மோத நாம் தயாரில்லை ஆனா நம்ம பக்கத்து வீட்டுகாரன் ரொம்ப பவ்வியமான ஆளு என்று நினைத்து அவனிடம் பாதுகாப்பு கேட்டு உதவிக்கு போறோம். பக்கத்து வீட்டுக்காரன், "நான் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் பயபடாதிங்க" என்று ஆறுதல் சொல்லி பாதுகாப்புக்கு அவன் வீட்டில் உள்ள நண்டு, சிண்டுகளை நம் வீட்டின் முன் நிறுத்துகிறது. இதை எதிர்வீட்டுக்காரன் பார்த்து பயந்து தற்காலிகமாக ஒதுங்கிட்றான் ஆனா அப்போ அப்போ ஒளிந்து ஒளிந்து நம் வீட்டுமேல கல் எரியுறான். இப்ப நம்ம பக்கத்து வீட்டுக்காரன் செத்து போய்ட்டான் அவனுங்க புள்ளைங்க நம் பாதுகாப்புக்கு பொருப்பெடுத்துகுதுங்க பாதுகாப்புக்கு இருந்த நண்டு, சிண்டுங்க எங்க வீட்டு பொம்பள பிள்ளைகளை கைய பிடிச்சி இழுக்குதுங்க பலாத்தாரம் செய்யுதுங்க இதை தட்டி கேட்டா எங்கலையே அடிக்குதுங்க...ஏன் இப்படி பண்றிங்க என்று கேட்டா, அதுங்க சொல்லுதுங்க "இத்தன வருடம் பாதுகாப்புக்கு  இருந்ததால உங்க வீடு எங்களுக்குத்தான் சொந்தம் எங்கள கேட்காம நீங்க எங்கையும் போக கூடாது" என்று. சொல்றானுங்க..இந்த சங்கதியெல்லாம் தெரிஞ்சும் எதிர்வீட்டுக்காரன் அப்போ அப்போ கல்லு விட்டுக்கொண்டுதான் இருக்கான். அண்ணன் எப்போ காலியாவான் தின்ன எப்போ காலியாகும் என்று கடுப்புல எதிர் வீட்டுக்காரனுக்கு இருக்கான்.

எதிர்வீட்டுகாரனுக்கு என்ன வெறுப்புன்னா.. இவ்வளவு நாள் நாம எடுத்துக்கலாம் என்று பகல் கனவு போட்டுகிட்டே இருக்கோம்...ஆனா பக்கத்து வீட்டுக்காரன் அந்த வீட்ட எடுத்துட்டு போயிட்டானே அந்த வீடு எப்போ நம்ம கைக்கு வரும் என்று எதிர்பர்த்துகொண்டிருக்கிறான். இந்த மேட்டர் எல்லாம் நம்ம பக்கத்து விட்டுகாரனுக்கு நல்லா தெரியும். "எதிர் வீட்டுக்காரன் எடுத்துகொண்டு போரதுக்கா  நாங்க இவ்வளவு நாள் காவல் இருக்கோம் அதெல்லாம் முடியாது நாங்கதான்  இந்த வீட்டுக்கு வாரிசு" என்று பஞ்சாயத்துக்கு வரவங்க கிட்டயெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கான். ஆனா நாங்க மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம நம்ம பேடிதாத்தா  கோழைத்தனத்த, விவேக,வீரமில்லாததனத்தை  நினச்சி நினச்சி ரொம்ப வருத்ததுல இருக்கோம்...இப்ப கூட கொஞ்ச நாளைக்கு முன்னே  எங்க வீட்டு சின்ன பையன் பேரிக்கா வாங்க கடைக்கு போனான் அவன் கைல பேரிக்கா  இல்ல வெடிகுண்டு இருந்தது  என்று சொல்லி  எங்க பையன சாக அடிச்சுட்டானுங்க.. எங்க குலமே கொஞ்ச கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கு....இப்படி அநியாயம் ஏன் பண்றிங்க என எங்களுக்கு ஆதரவா தட்டி கேட்ட சமுக போராளி அருந்ததிராய் மேல சமகடுப்புல இருக்கானுங்க அவங்க என்ன அப்படி இல்லாதத கேட்டுடாங்க "அவங்க வீடு அவங்களுக்குத்தானே சொந்தம்.  நீங்க சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்கு" என்று கேட்டதுக்கு அவங்கள கைது பண்ண போறங்களாம்....

எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்..எங்கள் வீடு வேண்டும்.....!

("எங்கள் நாட்ட எங்களுக்கு கொடுங்க" என்று அடிபட்டு உதைபட்டுதானே வெள்ளக்காரன்கிட்ட நாமும் சுதந்திரம் பெற்றோம். அந்த உரிமை நமக்கு இருந்தது ஏனென்றால் அது நம் பூமியாக இருந்தது அதுபோலத்தானே காஷ்மீர்...ஆனா நாம் ஏன்  காஷ்மீர் மக்களின் நியமான சுதந்திரத்தை புரிந்துகொள்ள மறுக்கிறோம்.

இதில் நான்  காஷ்மீர் மக்களின் உணர்வில் கலந்தவன்....)


என் எண்ணத்தை புரிந்துகொண்டு நீங்களும் குரல் கொடுக்க  வாருங்கள்...நன்றி 



என்றும் நட்புடன்:    



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Saturday, November 27, 2010

ஆங்கில மொழி மவுசு இன்னும் இருக்கா...


ஆங்கில மொழியை ஒரு மாயையாக ஆக்கிவிட்டான் நம்மை ஆட்சிசெயதவன், அதற்கு இன்னும் துணைபுரிந்துகொண்டிருப்பவர்கள்  நம்  ஆட்சியாளர்களும் ஆனால் இன்னும் அந்த ஆங்கில மாயையில் மயங்கித்தான் கிடக்கிறோம் இது வெட்கப்படவேண்டியவை வெள்ளக்காரன் ஆட்சி செய்த காலனி ஆதிகத்தில் உள்ள நாடுகளிலெல்லாம் அவன் மொழி அவன் மதத்துடன் சேர்ந்தே அப்போது  பரப்பப்பட்டது. அவர்கள் ஆட்சி செய்த நாட்டின் மொழியுடன் தேவையான வார்த்தைகளையும் இணைத்து கலப்பின மொழியாகத்தான் ஆங்கில மொழி இன்றுவரை  செயல்பட்டுகொண்டிருக்கிறது. அது ஒரு உலக வர்த்தக மொழியாகவும் இருக்கிறது. இதை இந்த கண்ணோட்டத்தில் மட்டுமே நாம் பார்க்கவேண்டும். மத்தபடி நம் அன்பின் உணர்வுகளை வெளிபடுத்த அதால் முடியாது அதற்கு  நம் தாய் மொழிதான் சிறந்தது. லண்டன்ல கழிப்பிடம் (கக்குஸ்) கழுவுறவன் அட்டகாசமா ஆங்கிலம் பேசுவான்...அது அவன் தாய் மொழி அவன் அப்படி பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை ஆனால் இங்கு உள்ளவர்கள் தட்டு தடுமாறி பேசினால் ஒரே சிரிப்புதான் அதில் ஒரு நக்கல் பார்வைவேற பார்பாங்க...

நம்ம மாநிலத்தில் உள்ள சுற்றுலாதளமான  மாமல்லபுரம் போனா அங்க இருக்கிற வழிகாட்டி (Guide) அட்டகாசமா ஆங்கிலம் பேசுவான் அதுமட்டும் இல்லாமல் பிரஞ்ச், தெலுகு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஒரு ஐந்தாறு மொழி அவர்களுக்கு  தெரியும்...அதுவும் அவர்களின் பள்ளிபடிப்பு 5 வது 8 வது என்ற அளவில்தான்  இருக்கும். இது எப்படி சாத்தியம்  என்றால் அவர்கள் தினமும் பேசி பேசி பழக்கம்...அதுபோலதான் மொழி தெரியாத ஊரில் ஒரு ஆறு மாதம் இருந்தாலே போதும் தானாகவே வந்துவிட போகிறது...வந்துதான் ஆகணும் ஏனென்றால் அது கட்டாயத்தால் நாமாகவே பேச ஆரம்பித்துவிடுவோம். அதனால பிற இடத்தில் தங்கிதான் பிற மொழிகள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. ஆர்வம் இருந்தால் எங்கிருந்தும் எம்மொழியையும்  கற்றறியலாம் அதனால் இந்த மொழிதான் சிறந்தது அந்த மொழிதான் சிறந்தது என்று சொல்வதை விட எது தேவையோ அது தெரிந்துகொள்வது நல்லது. அது நம் தாய் மொழியையும் பாதிக்காமல் இருக்கும். அதனால் மொழிக்கும், சிந்திக்கும் அறிவுக்கும் சம்பந்தம்மில்லை அது சிந்தனைக்கு ஒரு எழுதுகோல் (Pen) போலதான். இதில் எழுதுகோலே முழு அறிவாகாது... ஒரு மொழி எனபது மக்களின் அன்பின் மற்றும் சிந்தனை உணர்வுகளை தாங்கி வரவேண்டும். அம்மொழிகளை  நான் மதிக்கிறேன்...


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...



என்றும் நட்புடன்:    



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Tuesday, November 23, 2010

ஓஷோ சொன்ன நகைச்சுவை புராண கதை....


ஒருமுறை ஓஷோவின் இளமை காலவாழ்வில் அவர் வாழ்ந்த பகுதியில் புராண நாடகங்கள் நடக்கும். இவர் நாடக நடிகர்களுடன் நல்ல நட்புடன் பழகிவந்தார். அவர்களின் நடிப்பில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி மக்களை சிரிக்க வைத்து கண்டு ரசிப்பார். இது நாடகம் நடத்துபவர்களுக்கு பெரும் இன்னலாக இருக்கும். அவர் தந்தையிடம் ஓஷோவை பற்றி சொல்வார்கள். அதனால் நாடக நடிகர்கள் இவருடன் பழகுவதை நாடகம் நடத்துபவர்கள் விரும்பவில்லை. அதனால் இவர் நாடக நடிகர்களின்  தொடர்பு இல்லாமல் இருந்தார். ஓஷோவின் வீட்டிற்கு தட்சர் ஒருவர் வருவார். ஓஷோவின் வீட்டில் உள்ள மரவேலைகளை எல்லாம் அத்தட்சர்தான் செய்வார் அவர் ஒரு நாட நடிகரும் கூட இதை ஓஷோ தெரிந்து அவரிடம் "நான் சொல்வதை நீங்க கேட்பிங்கள" என்று கேட்க அதற்கு "அவர் தாரளமாக கேட்கலாம்" என்ன விவரம் என்று கேட்டதற்கு... நீங்க இன்று நடக்கும் நாடகத்திற்கு போகும்போது நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும் என்றார். அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

அன்று அவ்வூரில் நாடகம் நடக்கிறது. என்ன நாடகம் என்றால் இராமாயணயத்தில் வரும் கதையில் லட்சுமணன் எதிரின் விஷஅம்பு பட்டு மயக்கத்தில் சாகும் நிலையில் இருக்கிறார். இதை பார்த்த ராமனுக்கு பெரும் கவலை மருத்துவர் சஞ்சீவி மூலிகை இருந்தால் இவரை காப்பாற்றிவிடலாம் என்று சொல்கிறார். இதை கேட்ட அனுமன் அதை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறார். அதற்கு மருத்துவர் அது அருணாசல பர்வதமலையில் இருக்கிறது அது இருளில் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும் அதுதான் அந்த மூலிகை அதை பறித்துக்கொண்டு வா என சொல்கிறார். அதை கேட்டு அனுமன் பறந்து சென்று  மூலிகை எதுவென்று தெரியாமல் மொத்த மலையே பெயர்த்துகொண்டு வருவார். அதுதான் அப்போது நடக்கும் கதை.  அட்டையில் செய்யப்பட்ட மலைபோன்றதில் மெழுவர்த்தி கொளுத்தபட்டு அதை அனுமன் தூக்கி கொண்டு வரும் போது அந்த தச்சர் அனுமனை கயிரு முலம் இழுக்கவேண்டும். ஆனால் தச்சரிடம் ஓஷோ சொல்கிறார் "நீங்க பாதி இழுத்து அப்படியே இருந்திடுங்க அதுக்கு மேல இழுக்காதிங்க" என்று அவரும் அதையே செய்கிறார்.

இச்சம்பவத்தை ஓஷோ சொல்கிறார்:

இப்போது லட்சுவணன் அடிபட்டு சாக இருக்கிறான். இராமன் சோகமாக பக்கத்தில் நிற்கிறான். ஆனால் வர வேண்டிய அனுமன் பாதிலே தொங்கிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த மக்களுக்கு ஒரே சிரிப்பு இதை அறிந்த நாடக மேனஜர் ஓடிவந்து கயிறை வெட்டி விடுகிறார். அனுமன் தொப்பென்று கிழே விழுந்து கோவம் அடைகிறார்.  ஆனால் இராமன் தான் பேசவேண்டிய வசனத்தை திரும்ப திரும்ப சொல்லிகொண்டே இருக்கிறான்.

அனுமனே, என் பக்தி நிறைந்தவனே நண்பனே" என்று..

அனுமனோ, "உன் நண்பர்கள் நாசமாய் போக! எனக்கு எலும்பு முறிந்துவிட்டது" என்றான். ஆனால்  இராமன் அதே வசனத்தை சொல்லிகொண்டே இருந்தான்.  "என் தம்பி செத்துகொண்டிருக்கிறான்" என்று...

அதற்கு அனுமன், அவன் சாகட்டும் எனக்கு ஒன்று தெரியவேண்டும் யார் கயிறை அறுத்தது என்று அவன நான் கொல்லாமவிடமாட்டேன்! என்று கத்தினான். இதை பார்த்த மக்கள் வயிறு குலங்க சிரித்தார்கள். அவர்கள் சிரித்த சிரிப்பை கண்டு நான் மகிழ்ந்தேன். பின் என் தந்தையிடம் சென்று என்னை பற்றி பெரிய நாடகமே நடந்தது...

"பழைய பாரம்பரிய மதவாதிகளுக்கு சிரிப்பை ஏற்றுகொள்வது சிரமம்தான் மாதா கோயிலில் நீங்கள் சிரிக்கவே முடியாது. மதங்களுக்கு மதபண்பு வேண்டும். சில பண்புகள் காணப்படவே இல்லை அவற்றில் மிக மிக முக்கியமானவை நகைச்சுவை உணர்வு...



ஓஷோவின் வாழ்வின் நகைச்சுவை கதையும், கருத்தையும் படித்த அனைவருக்கும் நன்றி....




என்றும் நட்புடன்:

Sunday, November 21, 2010

வாள் முனையில் பரப்பட்ட மதம்...


"அல்லாவுடைய மார்க்கம் நிலைபெறும் வரையில் யுத்தம் செய்யுங்கள் (8-49) " - என்று குரானே சொல்கிறது அப்புறம் எப்படி யுத்தமும் வன்முறையும் அதுனுடன் சேர்ந்த மிரட்டலும் இல்லாமல் இருக்கும்.

நபியின் தம்பி அலி இவர் நபியின் பெரிய தந்தையின்  கடைசி மகன்...இஸ்லாம் மார்கத்தை பின்பற்றியவர்களில் இண்டாவது நபராக  இருப்பவர். முதல் நபர் நபியின் மனைவி...இந்த அலி முலம்தான் பல யுத்தங்கள் செய்து இஸ்லாம் மார்க்கம் பரப்பப்பட்டது...மற்றபடி ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்று சீனே இல்லை மார்கத்திற்கு மசியலன வெட்டு, துண்டுபோடு அடையலாம் தெரியாமல் ஆக்கு...இதுதான் அவர்களின் மதபரப்பு கொள்கையாக இருந்திருக்கிறது. அதற்கு சாட்சி குரான் வாக்கியங்கள்:

யுத்தம் செய்வது உங்களுக்கு வெறுப்பாக இருந்தும் அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது(2-216)

யுத்தம் செய்ய மறுப்போரை நீங்கள் சந்திப்பீர்களானால் அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள்(47-1)

அவர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை கணுக் கணுவாக துண்டித்து விடுங்கள் (8-12)

சிறை பிடியுங்கள் முற்றுகையிடுங்கள் பதுங்கி இருந்து பாயுங்கள் (9-5)

வாள் முனையில்தான் அம்மதம் பரப்பட்டது எனபது முகமது நபியின் தம்பி அலியே ஒரு சாட்சி....

மூஸாவுக்கு ஹாருன் எப்படியோ அதுபோல் எனக்கு(ஸல்), அலி(ரபி) முக்கியமானவன். நான் ஒரு மார்கத்தை துவக்க போகிறேன் என்னுடன் இருப்பவர்கள் எல்லாம் வரலாம் என்று....தன் உறவினர்களுக்கு  விருந்துவைத்து இஸ்லாம் மதத்தை தழுவுங்கள் என்று நபிகள் சொன்னபோது. அதை யாரும் சட்டை பண்ணவில்லை ஆனால் அதில் அலி மட்டுமே நபியின்  வாதத்தை ஏற்றார். மறுபடியும் சொல்கிறேன் வாள் முனையில்தான் அம்மதம் பரப்பட்டது. அன்பினால் அல்ல...அதற்கு சாட்சி அலிதான்.


என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Friday, November 19, 2010

காமம் அசிங்கமா....?


உலகில் போராட்டம், புரட்சி எனபது ஆண்களை மையபடுத்தியே வருகிறது அதன் வரலாறும் ஆண்களின் துடுப்பாக இருக்கிறது.அவனுக்கு தேவையானததை அவன் பெற்றுகொள்கிறான் ஆனால்  பெண்கள் உரிமையை பெறுவதில் விரல் விட்டு எண்ணகுடிய நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் உரிமை பெறுவதில் சிலது வேடிக்கையும் இருக்கிறது. கொடுமை என்னவென்றால் ஆணுக்கு நிகராக பெண்களும்  ஆண்களை  கற்பழித்தார்கள் என்று கேள்விப்படும்போது சிரிப்புடன் சேர்ந்து எரிச்சல்தான் வருகிறது. அதெப்படி பெண் ஆணை கற்பழிக்கமுடியும். ஒரு பெண் சம்மதம் இல்லாமல் ஆண் கற்பழிக்கலாம் ஆனால் ஒரு ஆண் ஈடுபடாமல் பெண்கள் கற்பழித்தார்கள் என்று சொல்வது ஏற்புடையதாக இருப்பதில்லை. எனென்றால் ஆணின் உறுப்பு வெளிப்புறத்தே இருக்கிறது. பெண்ணின் உறுப்பு உடலுடன் இணைந்தே இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஆண்களுக்கு விறைப்பு ஏற்படாத நிலையில் பெண்கள் கற்பழிக்க முடியாது. ஆணின் விறைப்பு மனத்தால் மூளையில் உண்டாகும் கட்டளையால் உண்டாவது. அதில்லாமல் பெண்கள் கற்பழித்தார்கள் என்று சொல்வது பொய்தான் கற்பழித்தார்கள் என்று இருந்தால் அது கற்பழிப்பு நிலையில் இருந்திருக்காது பெண்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஆணை பலவந்தபடுத்திருக்கவேண்டும் அவன் இணைய மறுத்ததால் கொலை செய்திருக்கலாம். இந்த ஆராய்ச்சி தேவையா என்று நீங்கள் கேட்கலாம்.? செய்தி தெரிந்ததால் உங்களுடன் சொல்கிறேன்.

நித்தமும் எல்லார் மனதிலும் வக்கிரங்கள் நிறைந்திருக்கிறது. அதில் சிலது அறிவை மிஞ்சி செயல் வடிவம் பெறும்போதுதான் சீரழிவு ஏற்படுகிறது பலது சட்டம் என்ற பயத்தால் தடுக்கபடுகிறது. சிலது அறிவால் தடுக்கபடுகிறது. ஆனால் சட்டத்தின் பயம் ஆசைக்கு முன் ஒதுங்கிவிடுகிறது. அறிவும் வேலை செய்வதில்லை. இதில் சாவதற்க்கும் துணிந்து தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். அதன் விளைவு அவர்களை மட்டும் பாதிப்பதில்லை அவர்களை சார்ந்திருந்த குடும்ப நபர்களையும் பாதிக்கிறது. தனி நபர் குற்றம் தனி நபருடன் போவதில்லை அது சமுக சூழலுடன் சேர்ந்தே வருகிறது.

இந்த குற்றபிரச்சனையில் உண்டாகும் காமத்தை கவனித்தோம் என்றால் அவை உடல்சார்ந்த கூறுதான் அதை ஒதுக்கிவைத்து வாழ்வை அணுக முடியாது.  வயிற்றுக்கு பசி எடுத்தால் சாப்பிடுகிறோம், தாகம் எடுத்தால் நீர் அருந்துகிறோம் ஆனால் உடலில் ஹார்மோன் முலம் உண்டாகும் காமம் மட்டும் ஏன் வேறுவிதமாக பார்க்கபடுகிறது. அடக்கபடுகிறது. அடக்காமல் பாதுகாப்பான, பிறரை துன்புறுத்தாத காமம் சிறந்ததுதான். இது இல்லாமல்  தவம் செய்யலாம், காமத்தை கட்டுபடுத்தலாம் என்று நாம் நினைத்தால் மேலே சொன்னதுபோலத்தான் நடக்கும் ஆண், பெண்ணை கற்பழிப்பான். பெண் ஆணை கற்பழித்தேன் என்று பொய்யும் சொல்லுவாள். காமத்தை கட்டுபடுத்தும் சமுகம்தான் நோய்வாய்பட்ட சமுகம் அங்கே குற்றங்கள் குறைவில்லாமல் நடக்கும். காமத்தை கட்டுபடுத்துதல் நடந்தால்  இயற்கையின் படைக்கப்பட்டதிற்கான பொருள் விளங்காமலே போய்விடும்.

நம் தாய், தந்தை காமத்தை அசிங்கம் என்று நினைத்தால் நாம் இப்போது காமத்திற்கு விளக்கம் கொடுத்திருக்க முடியாது. ஒவ்வொரு புனிதத்திலும் ஒரு அசிங்கம் உள்ளது. ஒவ்வொரு அசிங்கத்திலும் ஒரு புனிதம் உள்ளது. மலம் வயிற்றில் உள்ளவரை அது அசிங்கமாக இல்லை அதுவே  உடலை விட்டு வெளியேறிய பின்தான் மனது அதை அசிங்கமாக நினைக்கிறது. புரிதல் இருந்தால் மனது எதையும் ஏற்புடையதாகத்தான் மாற்றும் காமம் உட்பட....! மறுபடியும் சொல்கிறேன். பிறரை துன்புறுத்தாத காமம் சிறந்ததுதான்.

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:    



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Wednesday, November 17, 2010

எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள்

 ஒரு பிரச்சினை நம்மிடம்  'பலன் தராது' என்றால் கடைசிவரை பகையும் தீராது. ஒரு செயலின் தொடக்கம் எதுபோல தொடங்குகிறாதோ அதுபோல் முடிவும் அமைகிறது. இதில் நாம் பிரச்சனை  தொடங்குவதற்கான நிலையைதான் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் நல்ல செயல், தீயசெயல் எல்லாம் நம் எண்ணங்களை தாங்கி இருக்கும் மனம் சார்ந்த உளவியல் காரணங்கள்தான் அதை ஏன் நாம் அதே உளவியல் பூர்வமாக ஆராய்ந்து தீர்வுகாண முற்படகூடாது. ஏனென்றால் நம் செயலின்  எல்லாவற்றிலும் தொடக்கம் இருந்தால் முடிவும் இருக்கும் அது அழிவானதாக இருந்தாலும், வளர்சியானதாக இருந்தாலும் தொடக்கமும், முடிவும் இருக்கும்.  இதில் நாம் வளர்ச்சியாவதைதான்  கவனத்தில் கொள்ளவேண்டும். அதன் அடிபடையில் பார்த்தோமானால் வளர்சிக்கான எந்த செயலை செய்வோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். இதில் "விழிப்புணர்வு" எனபது மிக முக்கிய சொல்...

போராட்டம், புரட்சி இதன் மூலமே தீர்வு ஏற்படும் என என்னும் நாத்திகம் சார்த்த கருத்துடையோர் ஏன் தியானம் மூலம் ஏற்படும் விழிப்புணர்வை ஏற்க மறுக்கிறது. புத்தரை மேற்கோள்காட்டி பேசும் நாத்திகம் தியானத்தையும் அதன் மூலம் ஏற்படும் விழிப்புணர்வையும் முன்மொழியலாமே விழிப்புணர்வு  ஏற்படுத்தினால் அவை உண்டானால்  மக்களிடம் சண்டையும் தேவை இல்லை, சமாதானமும் தேவையில்லை..அது அது அதன் வழியே தொந்தரவு இல்லாமல் போகும்..ஒரு உதாரணத்திற்கு நான் உங்களை கோவமாக திட்டும்போது நீங்க கோவப்பட்டு என்னை அடிகிரீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள். இப்போது திட்டிய வார்த்தையை விட அடித்ததே வன்முறையாக போய்விடுகிறது. நான் திட்டியது உங்க மனதில் வலியை உண்டாககியிருக்கலாம் ஆனால் நீங்கள் அடித்தது என் உடலில் வலியை உண்டாக்கியது. இதில் வன்முறைக்கு வார்த்தையை விட உடம்பே பிரதானமாகிறது. இது ஒரு இனம், மதம் சார்ந்த அடிபடையில் நிகழும்போது இதன் வெடிப்பு படுபயங்கரமாக இருக்கும். இதன் தீர்வின் உள்ளாழத்தை எப்படி அறிவது.. கசப்பான சூழ்நிலையால் கோவமான எனக்கு உங்கள் மேல் உண்டான வார்த்தையா.? இல்லை நீங்கள் அதை சகிக்காமல் அடித்ததா.? சமாதானம் பேசும் இடத்தில் சமாதானம்தான் பேசியாகணும்..அடிக்கிற இடத்தில் அடித்துதான் ஆகணும் என்ற நிலை இருக்கும் போது இதில் தேவைகளை தேவையான நேரத்தில் தேடியும்,அடித்தும்தான் பெறவேண்டி  இருக்கிறது விழிப்புணர்வு அற்று இருந்தாலும்  அதைதான் செய்தாகவேண்டும் இருக்கிறது வாழ்வுக்காக...

எப்போதும் ஒரு நிலைத்தான் சிறந்தது என்று நினைத்து அதையே செயல்படுத்திக்கொண்டு மற்றவர்களையும் செயல்படவைத்தால் அது கால சுழற்சியில் மக்கிதான் போகும்..அதுபோல்தான் இந்த அகிம்சை தற்போது இம்சையாக இருக்கிறது. இது தற்போது நடைமுறை காலத்திற்கு ஏற்றதாக இருக்காது.  இந்த அஹிம்சை ஓட்டு பொறுக்கி அரசியல்'வியாதி'காரணங்களுக்கு வேண்டும்யேன்றால் ஏற்றதாக இருக்கலாம். காந்திய தேசம், அஹிம்சை தேசம் என்று உலக நாட்டையே  பொய் உரையாய் உரைக்கும் இந்நாடுதான் பொய்யாக மாவோஸ்ட் வேட்டையாடுதல் என்ற பெயரில் உள்ளூர் பழங்குடி மக்களை சுற்றி வளைத்து தாக்குகிறது. அஹிம்சை தேசம் என்ற சொல்ற நாடு ஏன்.? வன்முறை, மனித உரிமை மீறலை கட்டுகடங்காமல் நடத்திகொண்டிருக்கிறது. இதில் எல்லாமே வேஷம் போட்டுதான் நடக்கிறது.

எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள். ஒருவருடைய விருப்பு, வெறுப்பு மாறும்போதுதான் தாக்குதல் ஆரம்பமாகிறது. புலி குட்டி, நாயிடம் பால் குடிக்கலாம். அது புலியாகும்வரை...! உண்மை குணம் வெளிபடும்வரைதான் மனிதன் என்று நாம் நம்புவது. வெளிபட்டால் அது மனிதனும் இல்லை மிருகமும் இல்லை.. இதை நாம் எப்படி அறிந்தோம் பகுத்துதானே பகுத்தறிவது என்றால் பகுத்து அறிவதுதான் அது கல்லானாலும் சரி, கடவுளானாலும் சரி. கடவுள் கருத்துக்காக பிறர் மனம் புண்படும் என்று சமரசம் செய்யும் போது அச்சமரசம் மனம் சம்பந்தப்பட்டதாகிறது. கொள்கையை அடமானம் வைக்கும் ஒருவரை அதிகமாக பாராட்டுவதும் சமரசத்தீர்க்கு ஈடுதான் பாராட்டி பேசினால் அவர்கள் மனம்  குளிரும் பின் சமரச திட்டம் தயாராகும் அப்புறம் எல்லாம் கலைந்துவிடும் மறுபடியும் தொடக்கத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். அது உப்பு சப்பில்லாமல் தொடங்கிவிடும். பின் எடுபடாமல் போய்விடும்           

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:     


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Wednesday, November 3, 2010

'தொல்'லை திருமாவளவனை பற்றி என்ன நினைகிறீர்கள்:


 நீங்கள் இந்த 'தொல்'லை திருமாவளவனை பற்றி என்ன நினைகிறீர்கள்:

நான் என்ன நினைக்கிறேன் என்றால் அது சிறுத்தை அல்ல...அது  பயந்து ஓடும் ஒரு பூனை... என்ன அதுக்கு பாராட்டு விழா என்று தெரியலா நான் இருக்கிற ஊரெல்லாம் ஒரே போஸ்டரா ஒட்டிருக்கு அப்போஸ்டரில் இருக்கும் வார்த்தைகளை பார்த்தால் அவருக்கு அதுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கு. அதில் வீரத்த தமிழனே, ஈழமக்களுக்கு குரல் கொடுத்தவனே(டம்மிய குரல் மட்டும்தான் கொடுத்தார் உயிரை கொடுக்கல) எங்கள் தளபதியே, நாளையே தமிழகத்தின் விடிவெள்ளியே, ராஜபக்ஷவை நேருக்கு நேர் நின்று எதிர் கேள்வி தொடுத்தவனே....இதில் எல்லாத்தையும் பார்த்து சகிச்சிகின்ன ஆனா கடசியா படிச்சத பார்த்துதான் ரொம்ப கடுப்பாகிடுச்சு...

அது என்ன சமட்சாரம் என்றால் "ஈழதமிழர்கள் இன்னும் உயிரோடு இருக்காங்களா எல்லோரும் காலியாயுட்டார்களா..." என்று பார்க்க ஒரு எம்பிக்கள் குழு டி.ஆர் பாலு தலைமையில் இலங்கைக்கு சென்றுச்சு அந்த குழுவில் 'தொல்ஸ்' விடாபிடியாக இணைந்து கொண்டு இலங்கைக்கு போனார். போனவர் சண்டாளன் ராஜாபக்ஷவையும் மீட் பண்ணார். அப்போது அந்த பன்னாட  ராஜாபக்க்ஷசே, இந்த வீராதி வீரனை பார்த்து சொல்லிச்சு..."நீங்கள் பிரபாகரன் நண்பர் தானே நீங்க பிரபாகரன்னுடன் இருந்திருந்தால் உங்களை கொண்டிருப்போம். தப்பிட்சிங்க..." என்று சொல்ல நம்ம வாய்சொல்லில் சூரர் சும்மா சூ... முடிக்கின்னு கொம்முன்னு இருந்து வந்துச்சு...அப்படி இவர் மானம் நாரிபோய் இருக்கும் போது இது ஜால்ட்ரங்க இங்கே இப்படி எல்லாம் டயலாக் விடுதுங்க....அந்த ஸ்பாட்ல நான் இருந்தென்ன நம்ம டைலாக்கே வேறமாதிரி இருந்திருக்கும். நான் சொல்லிருப்பேன்  "பிரபாகரன் என் நண்பர் என்று சொல்றத எனக்கு பெருமைதான் அது யாருக்கும் கிடைக்காத பெருமை...அப்போது நான் சாகும் நிலை வந்தால் குறைந்தது ஒரு பத்து பேரையாவது சாக அடிச்சுட்டுதான் சாவேன். அந்த பத்து பேரில் நீங்களும் ஒருத்தனா இருந்திருந்தா ரொம்ப சந்தோசமா செத்துருப்பேன்"  என்று என் பேச்சு இருந்திருக்கும்.

போரினால் பாதிக்கபட்ட முள்வேலிக்கு இடையில் தடுக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக  இந்தியா சார்பில் சென்ற ஒரு குழுவில் இடம் பெற்ற இவர், எதுக்கு அந்த பன்னாட அப்படி சொன்னதுக்கு இந்த வீராதி சோணகிரி அப்படி பயந்துச்சு என்று தெரியல...அப்படியே எதிர்த்து பேசிருந்தால் என்ன   பண்ணிருப்பான் அந்த நாதாரி...இப்படி அவமானப்பட்டு திரும்பிவந்த 'தொல்ஸ்' இங்கே சவுண்டு அதிகமாக விட்டுகிட்டு திரியுது...

வீராதி வீரனாம் சூராதி சூரனாம் இது இடதுபக்கம் சேகுவாரா படம் வலது பக்கத்துல பிரபாகரன் படம் நடுவுல இவர்  படம்... இதுகூட இருக்கிற அள்ள கைகிங்க இப்படி படம் போடுதுங்க....

வீரன்னா  எவன்தெரியுமா வீரன் நிர்கதியா ஆயுதங்கள் அற்ற நிலையிலும் எதிரிக்கு அடிபணியாமல் நெஞ்ச நிமிர்த்தி "உனக்கு தைரியம் இருந்தா என் நெஞ்சில சுடுடா" என்று நெஞ்ச நிமிர்த்தி காட்டி தில்லா நிற்பவன்தான்  மரணத்தை கண்டும் கலங்காத வீரன்....அவனே சேகுவாராவை போன்றவன். இதில்லாமல் இந்த 'தொல்ஸ்' மாதிரி ஆட்கள் பளுனில் உள்ள காத்த பிடிகிங்கி விட்டது போல காத்து ஏறும்போது நல்லா  ஏறும் ஆனா பிடிக்கிங்கவிட்டா புஸன்னு போய்டும்....

காற்றை பிடிங்கிவிட்ட பளுன்தான் இந்த தமிழர்களின் 'தொல்'லை திருமாவளவன்.  


 பதிவை பொறுமையாக படித்தற்கு  நன்றிகள்...!



என்றும் நட்புடன்:     


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Tuesday, November 2, 2010

'அருந்ததிராய்' நினைப்பது நடக்குமா...

 
இந்த மதச்சார்புடைய அரசியல்வாதிகளுக்கும், தேசியம் ஒருமைப்பாடு என்று ஒப்பாரி வைப்பவர்களுக்கும் காஷ்மீர் இந்தியாவுடன் ஒருகிணைந்த ஒரு மாநிலமாகத்தான் இருக்கவேண்டுமே தவிர அது இந்தியாவுடன் சுதந்திரம் பெற்று தனிநாடு என்ற அந்தஸ்தை பெற கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள், ஏனென்றால் காஷ்மீர் தனி நாடு அந்தஸ்து பெற்றுவிட்டால் இந்தியாவின் ஒற்றுமை கதை முடிஞ்சது ....இப்பவே அங்க ஒன்னு இங்க ஒன்னு என்று பத்திகின்னு எரியுது ..அப்புறம் ஒட்டுமொத்தமா எரிய ஆரம்பிக்கும்....

தமிழ்நாட்டில் பெரியார் எதிர்பார்த்த தனி தமிழ்நாடு கொஞ்சம் ஓங்கி ஒலிக்கும்.(அது ஒலிக்கவேண்டும் என்பதே நம் விருப்பமும்.) அப்புறம் பஞ்சாப் சர்தார்ஜிகள் சும்மா இருப்பார்களா...ஏற்கனவே நம் பிரிவினை குரல் கொடுக்கும் போதே அவர்களுக்கும் குரல் கொடுதவர்கலாட்சே...இதுதான் சான்ஸ் என்று பால்தாக்கரே, பூ... தாக்கரே என்ற இவர்கள் மாரத்தி மாரத்தியர்கலுக்கே என்று மாராத்தி நாடு வேண்டும் என்று சவுண்டு அதிகமாக விடுவானுங்க. அப்புறம் தெலுங்கான சந்திரசேகர்ராவ் தெலுங்கான மாநிலம் பிரிப்பது போய் தெலுங்கான நாடு எங்களுக்கு வேண்டும் என்று வழக்கம்போல் சாகாமல் உண்ணாவிரதம் இருப்பார்.

இங்கு நான் சொன்னதெல்லாம் நடக்கும்...(ஏன்னா நான் நாஸ்ட்றோம் மாதிரி இதுவெல்லாம் நடக்களன்னா உங்க பேர மாத்தி வச்சுக்குங்க) இந்தியாவின் தலையே காஷ்மீர்தான் அதை வெட்டி எடுத்துட்டா அப்புறம் இந்தியா முண்டம் ஆகிடும்....அப்புறம் முண்டம் இருந்து என்ன பிரோஜனம்....அதனால் தலை விழவேண்டும். ஒருநாள் விழும். நான் ஏற்கனவே சொன்னதுபோல இந்தியாவின் ஒற்றுமை ஒரு நூல் இழையில்தான் உள்ளது, அது எந்நேரமும் அறுந்து விழலாம்....அது காந்தியம் என்ற நூல் இழை அது தற்போது மக்கி போய் இருக்கிறது....அது அறுந்துவிழும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

இந்த பிரிவினை பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் ரொம்ப சாதகமாக மாறிவிடும்....எனக்கே தெரிஞ்ச சங்கதி இந்தியாவின் உளவு அமைப்பு 'ரா'வுக்கு தெரியாதா...இதெல்லாம் கணக்கு போட்டுதான் காஷ்மீர் பிரிய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.அந்த உறுதியை அருந்ததிராய் கொஞ்சம் ஆட்டிவிடுருக்கார் அது இப்போதுதான் கொஞ்சம் ஆட ஆரம்பிச்சிருக்கு இன்னும் நல்லாவே ஆட ஆரம்பிக்கும்....


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!




என்றும் நட்புடன்: 



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Saturday, October 23, 2010

வட்டத்தின் நடுவே அம்பு...


ஒரு மனநல மருத்துவரிடம் ஒரு பெண்மணி தன் மகன் சிறு வயதில் இருந்தே இன்றுவரை படுக்கையிலே சீறுநீர் கழிக்கிறான் நீங்கள்தான் அவனின் பிரச்சனையாய் தீர்க்கவேண்டும் என்று சொல்கிறார். அவர் அப்பிரச்சனையை தீர்த்தாரா..என்று தெரியவில்லை ஆனால் அதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிவிட்டார்.     

இதை போன்றே ஒரு பிரச்சனையை ஓஷோ அவர்களிடம், ஒரு பெண்மணி " ஐயா, என் மகன் எப்போதும் விரல் சூப்புகிறான். இப்படி வளர்ந்து கல்யாணம் பண்ற நிலையில் இருக்கிறான் இன்னும் விரல் சுப்பிகிட்டே இருக்கான் .எனக்கு ரொம்ப கவலையா இருக்கு" என சொல்கிறார். அதற்கு ஓஷோ, "நீ ஏம்மா கவலை படுகிறாய் நீ சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் செய்துவை அப்புறம் ஏன் விரலை சப்ப போகிறான், இப்பொழுது இருக்கிற பழக்கம் அப்பொழுது மறைந்துவிடும் கவலைபடாதே" என்றார்.

வட்டத்தின் நடுவே அம்பை குறிபார்த்து ஏய்வதைவிட, அம்பை ஏய்துவிட்டு அதை சுற்றி வட்டம் போட்டுவிட வேண்டியதுதான்...வேலை எளிதாக முடிந்துவிடும் அம்பும் வட்டத்தின் நடுவிலே இருக்கும். நம் இலக்கும் சரியாக இருக்கும்.

சில பிரச்சனைகள் எளிய முறையில் தீர்க்கபடுவதை பெரும் பிரச்சனையாக மாற்றுவதுதான் என்றும் நம் கலையாக இருக்கிறது..எல்லா நம்மிடமே இருக்கிறது..ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறவேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை..


ஓஷோவின் விளக்கத்தையும், என் எண்ணத்தின் எழுத்தினையும் வரவேற்றதற்க்கும்  நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:  


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Thursday, October 21, 2010

'கெட்ட' வார்தையிலே திட்டிபுடுவேன்....

 
ஒரு வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லும்போது மனம் அதை ஏற்காமல் எரிச்சல் அடைகிறது. நாளடைவில் அது கெட்டவார்த்தையாக மாறுகிறது...நடிகர் சிவகுமார் ஒரு பேட்டியில் சொன்னது. "ஒருத்தனை நீங்கள் மாடுபோல  இருக்கியே என்று சொன்னால் கோவபடுவான் அதுவே அவனை நீ ஒரு பசு மாதிரிப்பா...என்றால் ரொம்ப சந்தோசபடுவான் ஆனால் பசுவும் ஒரு மாடுதான் என்று அவன் உணரமாட்டான்..."

இதில் மாடு என்ற வார்த்தை பலபேருக்கு  கெட்டவார்த்தையாகவே  ஆகிவிட்டது..அதுபோலதான் நாய், கழுதை, பண்ணி இதெல்லாம் மனிதனை பார்த்து மிரளதுங்க அதனால் இவைகள் எல்லாம் ஏலனமாக மற்றவர்களை திட்ட பயன்படுத்துகிறான்...அதே அவங்களை சிங்கம், புலி, சிறுத்தை என்று சொன்னால் ஒரே சிலிர்ப்புதான்.... மனம் சார்ந்த மனிதன் என்றுமே கேவலமானவன்...

உடம்பிலே அதிகமாக கை படாத இடமெல்லாம் கூச்சம் என்றதில் அவ்வுருப்பு எல்லாம்  கெட்ட வார்த்தைகளாய் மாறிவிட்டது. ஆண் குழந்தைகைங்க அவன் பெல்லாவில், குஞ்சி (இது ஆண் உறுப்பு - இது இலக்கிய வார்த்தை இல்லை சென்னை லோக்கல் வார்த்தை) அக்குழந்தை கைவைத்தால் அதை பார்பவர்கள் அக்குழந்தையை  "ஏன் அதுல கைய வைக்கிற..." என சொல்லி அடிப்பார்கள்....இதில் அவங்க எண்ணத்தின் பார்வை  சரியானது இல்லை. குழந்தை அவன் உறுப்பை தொட்டு பார்த்து கொள்கிறான். அவ்வுறுப்பின் உணர்வினை அவன் உணர்கிறான். இதில் அவனின் புலன் உணர்வு முழுமை அடைய விரும்புகிறது. இதை அறியாமல் அவன் கையை தட்டிவிடுகிறார்கள் அவனின் புலன் உணர்வின் அறிவு முழுமை அடையாமலே குறுகி போய்விடுகிறது...நாளடைவில் அவன் வாழ்நாள் கவனம் எல்லாம் அதுமேலையே இருக்கும்...நாளடைவில் அவன் வளர்ந்து காமபசி அதிகமாகி கற்பழிப்புக்கு தயாராகிவிடுவான். இதில்  அவனின் கற்பழிப்புக்கு சமுகம் சார்ந்த ஒழுங்கினமும் காரணமாக இருக்கிறது.

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:  



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Wednesday, October 20, 2010

நதி மூலம், ரிஷி மூலம்....


நதி மூலம் ரிஷி மூலம் என்றும் அறிய முடியாது என்றார்கள் மூடர்கள் ஆனால் இப்ப இருக்கிற அறிவியல் துறையில் எல்லா மூலத்தையும் அறியலாம்...ரிஷிகள் இப்போது இருந்தால் அவர்களை உட்காரவைத்தும் மூலத்தை அறியலாம். என்ன பொல்லாத மூலம்...

ஒருவனை பதவி அதிகாரத்தில் அமரத்தபடும் போது திறமையுடன் அவனின் பின்புலத்தை அறியவேண்டும்...ஏனென்றால் அவனின் வளர்ந்த சூழ்நிலைகள் சாதக, பாதக கருத்துகள் அவன் இனத்தை சார்ந்தே வரும். உதாரணம் பாப்பான் அதிகார மையத்தில் இருக்கும் போது அவனின் அதிகாரம் எதை சார்ந்து இருக்கும் என்று அவனை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். இதில் அவனை அதிகாரத்தில் அமர்த்தும் போது அவனின் பின்புலத்தை நிச்சயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேல்தட்டு நிலையிலே ஒருவன்  படித்து மேற்பதவி அடையும்போது அவன் எப்படி கீழ்மட்ட மக்களின் போராட்ட உணர்வினை எப்படி உணர்வான். நிச்சயம் அவனால் உணரமுடியாது. பிரச்சனைக்கு தீர்வும் கிடைக்காது... அடிப்படை அறிவு இல்லாதவனே இன்று அமைச்சராய் இருக்கிறான். இவன் எப்படி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். அதனால் நதிமூலம், ரிஷிமுலம் அறிவதுபோல் ஒவ்வொருவரின் பின்புலத்தையும் அறிவேண்டும்...அவ்வாறு அறிந்து செயல்பட்டாலே பல பிரச்சனைகள் தீரும் என்றே நினைக்கிறேன்.




என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!




என்றும் நட்புடன்: 



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Sunday, October 10, 2010

சிரிக்க தெரியாத மனிதர்கள்.."ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுகிறார்கலாம்."


ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாமா காண முடியுமா....இதில் நாம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்லி இறைவனை காணுவதர்காகவே ஏழையை ஏழையாய் வைத்திருப்போமா...

இதில் குழந்தை சிரிப்பும் இறைவனின் சிரிப்பாம் சிரிக்க தெரியாத மனிதர்கள் சொல்கிறார்கள். நாம் நாய் நன்றியுள்ளது என்று சொல்கிறோம்.  அதற்கும் சில நேரங்களில் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி போட்டால்தான் இன்னும் நம்மிடம் நன்றி உணர்வுடன் வாலட்டிகொண்டு இருக்கும்...இல்லையென்றால் அதற்கு ஒரு நிலைக்கு மேல் இந்த மனிதர்களுக்கு  நன்றியே  இல்லை இவர்கள்  நம்மிடம் மட்டும்தான்  நன்றியை எதிர்பார்க்கிறார்கள் என்று அதற்கு புரிந்துவிடும. இதுபோல் அறியாத குழந்தையின் சிரிப்பு, சிரிப்புதான்...அக்குழந்தை ஏதோ அறியும் குழந்தையானால் அதற்கு விளையாட ஒரு பொருள் வேண்டும் சாப்பிட உணவு வேண்டும் அதை யார் தருகிறார்களோ அவர்கள் மேல் அதற்கு சிரிப்புடன் கலந்த அன்பு வரும்...அது இறைவனின் சிரிப்பாய் எப்படி மாறும்...அக்குழந்தைக்கு கேட்கும் பொருளையும், நல்ல உணவையும் வாங்கி கொடுக்க முடியாத நிலைதான் இருக்கிறான்  ஏழைகள் பின்  எப்படி குழந்தையிடம் பொய்யாக சிரிக்க சொல்லி அவர்களும் சிரிப்பார்கள்...இதில் என்ன ஒரு வேடிக்கை என்னவென்றால்  இல்லாத இறைவனை எப்படி முன்னிலைபடுத்துவது ...ஆனால் பல பேர் போலியான சுயதேடுதல் என்று சொல்லி முன்னிலைபடுத்தி கொண்டுசெல்கின்றனர். அவை அவர்களுக்கு இறைவன், கடவுள், சாமி, தெய்வம் என்று பல பெயர் கொடுத்து காசு சம்பாதிக்கும் ஒரு  வியாபாரமாக  வைத்திருக்கிறார்கள். இந்த்  நிலைகெட்ட மனிதர்கள்...     

இந்த ஏழை மக்கள் கடவுளிடமும், இவனுடைய அடிமட்ட  ஏழையிடம்  மட்டுமே பேரம் பிரமாதமாக பேசுவான். ஆனால் நம்மை  ஆட்சி அதிகாரத்தில், பண பலம் உள்ளவனிடம் இவன் பேரம் பலிக்காமலே போய்விடும் என்றுமே  ஏமாறுபவனாகவே இருப்பான் ஆனால் இவன்  "நாமும் உஷாராதான் இருக்கிறோம்" என்ற நினைப்பு மட்டும் எப்போதும் வந்துவிட்டு போகும்...அரசியல்'வியாதி'காரன்தான்  புரியாததை புரிந்ததாக காட்டிகொள்வான். .என்ன புரிந்தோம் ஏது புரிந்தோம் என்று கூட அறியாமல் அ..ஆ..ஒ.. ஓ என்று சொல்வதுதான் நமக்கு  ஆச்சர்யமாக உள்ளது. புரியவில்லை என்றால் எனக்கு புரியவில்லை என்று சொல்லவது கூட இல்லை...அரசியல்'வியாதி'காரனைப்போல்  எல்லாம் புரிந்ததுபோல் நடிபவர்கள்தான் பல பேர் இருக்கிறார்கள். இது போல் ஏதுவும் அறியாத பெரும் கூட்டம்தான்... முட்டாள் அரசியல்'வியாதி'காரனை பெரும்பான்மையான ஓட்டுவித்தியாசத்தில் தேர்தெடுக்கிறது...நம்மிடம் என்று தீருமோ இந்த முட்டாள்களின் எண்ணிக்கை...பலரிடம் இருக்கும் பொய்,  அவர்களின் உண்மை முகத்தை மறைத்துக்கொண்டு உண்மையுடனே வருகிறது...ஆனால் நாம்தான் பொய்யை உண்மையாக நம்பிவிடுகிறோம்... அதனால் உண்மை எதுவென அறியாமலே போய்விடுகிறது.          

இது போன்ற நிலைகளைத்தான் மார்க்ஸ் சிந்தனைகள் என்றும் நிலைபடுத்தபட்டது. உண்மையை அறியவைத்தது அவரின் சிந்தனைகள் எல்லாம் அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வாதரத்தை மையபடுத்தியே இருந்திருக்கிறது....பசி எடுத்தவனுக்குதான் உணவின் அருமை தெரியும்..அதை எப்பொழுதும் அவன் சிந்தாமல் சிதறாமல்  சாப்பிடுவான். வறுமையில் வாடி வறுமையை பார்த்த மார்க்ஸ் வறுமைக்கான முல காரணங்களை எண்ணினான், அதை செயல் படுத்தினான் எனபது ஆச்சர்யபடுவதற்கில்லை....

எதுவாயினும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்தியாகவேண்டும் இதுதான் மார்க்சும் சொல்வது...தேவைகள் பூர்தியாவதில் இருந்தே  விஞ்சான மறுமலர்ச்சி. கலை, இலக்கியம். மட்டை. மசிரு எல்லாம் கிளர்ந்தெழும் இவையெல்லாம் மக்களின் வாழும் அடிப்படை தேவை பொறுத்து அமையவேண்டும் அதைதான் மார்க்ஸ் எண்ணியது, அவரை பின்பற்றியவர்களும் நினைப்பது....இதில் நானும் அடக்கம்..!

விவேகனந்தர் சொன்னதுதான் நினைவில் வருகிறது...."பசியோடு வருபவர்களுக்கு  முதலில் சாப்பாடு  போடு.. உபசேமெல்லாம் அப்புறம் வைத்துகொள்ளலாம்"

                    
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!





என்றும் நட்புடன்:  



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Thursday, October 7, 2010

நம் ஆணவத்தின் மதிப்பீடு...


பிறர் நம்மை பற்றிய மதிப்பீடு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமாக இருக்கிறது. அவை முட்டாளாய், உதவகரையாய் புத்திசாலியாய், எதிரியாய், நண்பனாய், மோசகாரராய், பாசகாரராய், வேசகாரராய், ஏமாளியாய், கோமாளியாய், சிந்தனைவாதியாய் என்று பல மாதிரி தெரிவோம். ஆனால் அவர்களிடம் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்தே நம்மை அவர்கள் மதிபீடுகிறார்கள்....அவர்கள் சொல்வதர்கெல்லாம் 'ஆமாம்' என  சொல்ல ஆரம்பித்துவிட்டால் நாம் அவர்கள் கண்ணுக்கு  நல்லவராய் காட்சி அளிப்போம்....அதுவே அவங்க கருத்துக்கு  எதிர் கருத்து சொல்ல ஆரம்பித்தால் அவர்கள் முகம் கொஞ்சம் கோணல் ஆகும்..."இவன நல்லவன் என்று தெரியாதனமா நினட்சிட்டமோ..." என்று நினைக்க ஆரம்பிப்பாங்க...அதுவே இன்னும் கொஞ்சம் கோவம் கலந்து சொல்லும்போது நம்மை எதிரியாகவே நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க...அப்புறம் உங்க பெயர் நினைத்தாலே அவங்களுக்கு நீங்க எதிரிதான்..."பிறரிடம் எதிர்ப்பு இல்லாதவரை எல்லோருக்கும் நாம் நண்பர்கள்தான்"...இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை....

எதிர்ப்பை உண்டக்குவதேல்லாம் நம் மனம் செய்யும்  வேலைதான். அதற்கு  எப்போதும் சாய்ந்து கொள்ள ஒரு ஆதரவு வேண்டும். மனம் சொல்வதை கேட்டு 'ஆமாம் சாமி'நீ சொல்வது சரிதான்' என்று சொல்ல பல மனங்கள் வேண்டும். இவைகள் இல்லையென்றால் ஆணவம் என்ற சுவற்றின் மீது ஏறி மனம் இல்லாத ஆட்டம் போடும்...இதில் நாம் செய்யவேண்டியது ஆணவம் எனும்  சுவரை உடைத்து தள்ளவேண்டும் அப்போதே மனத்தின் ஆட்டம் அடங்கும் பின்பு என்ன.? மனம் நம்மை விட்டு ஓட்டம்தான்...

நம் மனம் இல்லாத நிலையில் நம்மிடம் முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படும் அது புத்தருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு அவ்விழிப்புணர்வு வந்துவிட்டால் ஒருவரை பற்றிய மதிப்பீடு நம்மிடமிருந்து தானாய் மறையும்...பின்பு அன்புள்ள  நெஞ்சத்திலே எதையும் அன்புடன் அரவனைக்க கைகள் காத்திருக்கும்...அங்கு எதிர்ப்பு இல்லை, வெறுப்பு இல்லை வேதனை இல்லை. பார்க்கும் பொருளெல்லாம் நாமாகி போகும் போது பின்பு நாம் எங்கு போவது...எல்லாமே நம்முள் அடக்கம்...!


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்: 



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Monday, October 4, 2010

ஜாதியை பார்காதிங்க ஏழையை பாருங்கள்...


ஜாதியை ஒழிப்போம் நீதியை காப்போம்:

எனக்கு ஒரு சந்தேகம் உயர் ஜாதிக்காரன் என்று சொல்றவனுங்ககேல்லாம் கீழ் ஜாதி பெண்களை கல்யாணம் செய்யமாட்டான்கலாம் ஆனால் கீழ் ஜாதி பெண்களின் கூ..? மட்டும் ஆசைபடுவான்கலாம்...இதில் ஆசைபட்டும் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.....நாங்க உயர்ந்த ஜாதி என்று சொல்றவனுங்ககேல்லாம் தோல்மேல போடற துண்டுக்கும் மட்டும்தான் ஜாதிபார்பானுங்க போல அவிழ்க்கும் வேட்டிக்கு கிடையாது.....ஒருவேளை  உயர்ஜாதி ஆண்களின் பூ..? ,  கீழ் ஜாதி பெண்களின் கூ..?யை  அறியாதுபோல.....

ஜாதி வெறி பிடித்தவனுக்கு தன் உற்ற நண்பனும் எதிரியாவான். அவன் நல்லவனாக இருந்தாலும் அவன் ஜாதி படு மோசமானது....

ஜாதி வெறிபிடித்தவன் பல தலைமுறையாக  ஜாதி என்கிற மலத்தை உடல் முழுவது பூசிகொண்டு வந்தவன்....அவனால் ஜாதி என்ற மலநாற்றத்தை சுவாசிக்காமல் வாழமுடியாது....ஜாதி அப்பேர்பட்டது...!  இந்த சாக்கடை ஜாதிகளுக்கு மனிதாபிமானம் எனபது  துளிகூட கிடையாது...

ஜாதி, ஜாதி என்று சொல்றவனுங்கள என்ன பண்ணலாம்...சொல்லுங்க...

இழுத்து வச்சு......நறுக், நறுக்....    


ஏழைகளின் வறுமை:

ஏழை மக்களுக்கு உயர்தரமான பொருட்களை பார்க்கத்தான் முடிகிறது...அது ஆடையாகட்டும், உணவு பொருளாகட்டும், வாழும் வசதி வாய்ப்பாகட்டும் எல்லாம் தள்ளி நின்று பார்க்கத்தான் முடிகிறது... இதில் தொடுவதற்கு கூட பல நேரம் அனுமதிப்பதில்லை....

ஏழைகளுக்கு வாங்கும் சக்தி இல்லை....மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டுமே உயர்தரம் கிடைக்கிறது...எச்சிலையாய் வீசியெறியும் பொருட்களையே விலைகொடுத்து வாங்குகிறான் ஏழை...!

நான் ஒரு பூங்காவில் கண்ட காட்சி...."மெலிந்த தேகத்துடன் பசியால் இறுகிய  வயிருடன் ஒருவன் சுருண்டு படுத்திருக்க.... உடல்பெருத்த ஒருவன்  மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிகொண்டு அவனை கடந்து செல்கிறான்...."

இதில் ஒருவனுக்கு உணவு இல்லை, மற்றொருவன் அதிக உணவு உண்டு கொழுத்து கொழுப்பை கரைக்க நடைபயற்சி செல்கிறான்....

ஓ...இதுவல்லவோ இந்திய ஜனநாயகம்...பார்த்திர்களா  இந்தியாவில் சரிசமமான வளர்ச்சி....

வறுமையில் இருக்கும் ஏழைக்கு பணம்தான் சந்தோஷம் கொடுகிறது...."ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்" என்பார்கள். அதெல்லாம் பொய்..வறுமையான் ஏழைக்கு சிரிப்பை பார்க்கவேண்டும் என்றால் வறுமையை போக்கும் பணம்தான் தேவை.  அதுதான் அவன் முகத்தில் சிரிப்பை கொண்டுவரமுடியும்....

இதில் சிரிப்பாய் சிரிக்கும் இறைவன் என்றும் நம்மிடம் வரமாட்டா(ன்)(ள்)(ர்)....(இந்த இறைவனை எந்த பாலினத்தில் சேர்த்து -கொல்வதே...என்றே தெரியவில்லை....)

இந்தியாவில் சுத-தந்திரம் கிடைக்கும் முன்னே ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரி வெள்ளகாரன்தான் இருந்தான் ஆனால் சுத-தந்திரம் அடைந்தவுடன் மக்களுக்கு எதிரி அதிகமாக ஆகிவிட்டார்கள்...மக்களுக்கு யாரை எதிர்த்து சுதந்திரம் அடைவது என்றே தெரியவில்லை....  

 
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்: 


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Saturday, October 2, 2010

காந்தி யாருக்காக பிறந்தார்...


காந்தி, அவர் எழுதிய சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த சுவையான, கசப்பான அனுபங்களை சொல்லிருக்கிறார்.

‎"காந்தி கணக்கு" என்று ஒன்று சொல்லுவாங்க யாருக்காவது தெரியுமா....காந்தி எங்கே போனாலும் கூடவே ஒரு உண்டியலை எடுத்து கொண்டு செல்வாராம்...யார் அவரை பார்கிறார்களோ அவர்களிடம் உண்டியலை நீட்டுவாராம் "முதலில் உண்டியலில் காசுபோடுங்கள் பின்பு பேசலாம்" என சொல்வாராம். ஏனென்றால் ஆதரவற்றவர்களுக்காக உதவி செய்வதற்கு  நிதி திரட்டுவாராம். அவ்வாறு உண்டியலில் போடும் பணம் காந்தியிடம் சேர்ந்ததால்  காந்தி கணக்காய் மாறிவிடுமாம்...நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பேச்சு வழக்கத்தில்அதுவே "காந்தி கணக்கு" என்று மாறிவிட்டது....அதவாது நீங்க எனக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராது அது "காந்தி கணக்காய்" என்று இருக்கும்.

காந்தி சொல்கிறார். "தான் பகலில் பிரமச்சரியத்தை கடைபிடிக்கிறேன் ஆனால் என் கனவில் பிரம்மச்சரியம்  இல்லாமல்  இருக்கிறேன். என்று துணிந்து உண்மையை சொல்லிருக்கிறார்.  அவர், "உண்மையிலே நமக்கு காம ஆசை போய்விட்டதா..." என சந்தேகம் கொண்டு அவர் உறங்கும் போது இரு பெண்களை தன்னுடன் உறங்க சொன்னாராம்...அவர்கள் யார் என்றால் எப்போதும் காந்தியுடன் செல்பவர்கள் காந்தியின் கைகளை சுமப்பவர்கள்...அப்பெண்களை ஒருநாள் தன் பக்கத்தில்  உறங்கவைத்து இவரும் உறங்கிவிட்டாராம்...நடுஇரவில் இவருக்கு காம உந்துதல் அதிகமாக இருந்ததாம்...அப்பொழுதுதான் உணர்ந்தாராம் நாம் வெளியில் காமத்தை மூடிமறைக்கிறோம்   ஆனால் அவ்வுணர்வு நம்மிடம் இருப்பது அப்படியேதான் இருக்கிறேன். என்று நினைத்து அந்நாள் முதல் கடுமையான விரதம் மேற்கொண்டாராம்...

இன்னொரு சம்பவம். காந்தியின் அம்மா இறந்தபோது அவர் உடல் அருகே எல்லோரும் அழுது கொண்டிருந்தார்களாம்...அப்போது காந்தி மனைவி கஸ்துரிபாய்யும் தன் மாமியார் உடல் அருகே அழுதுகொண்டிருந்திருக்கிறார்..அப்போது காந்தி, தன் மனைவி கஸ்தூரிபாயயை  பார்த்தவுடன் இவருக்கு காம இச்சை வந்துவிட்டதாம் ...அப்போது "தன் மனைவி பேரழகியாக இருக்கிறாலே இவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது.  பின்பு மனைவியை சாடையாய் அழைத்து வீட்டில் உள்ள ஒரு அறையில் தன் இச்சையை தீர்த்துகொண்டேன். அப்போது ஏற்பட்ட உறவில் மூலம் பிறந்தவன்தான் தேவதாஸ்" அப்போது ஏற்பட்ட கசப்பான நிலையில் என் சந்தோசத்திற்காக மனையுடன் உடலுறவு வைத்ததால் எனக்கு தேவதாஸ் என்ற மகன் பிறந்து அவன் நாளடைவில் குடிக்கு அடிமையாகி இறந்தே விட்டான்" என்று சொல்கிறார். இவ்வாறு சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த உணமையை மறைக்காமல் சொல்லிருக்கிறார். உணமையை மறைக்காமல்  சொன்ன காந்தியை நிச்சயம் பாராட்டலாம்...

காந்தியின்  மகன் தேவதாஸ் குடிகாரன் என்பதால் இவனுக்கு கல்யாணம் செய்தால் திருந்துவான் என்று கல்யாணம் செய்ய முடிவிடுத்திருகிறார்கள் ஆனால் குடிகார தேவதாசுக்கு பெண் கொடுக்கக யாரும் முன்வரவில்லை அப்போது ரொம்ப துணிச்சலாக தன் பெண் வாழ்வை விட என் பார்பான்  இனமும் நமக்கு ஒரு தலைமையும் வேண்டும் என்பதற்காக மூதறிஞசர்   என்று சொல்ற ராஜாஜி தன் மகளை தேவதாசுக்கு மனம் முடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். கல்யாணமும் சிறப்பாக,சிரிப்பாக நடந்து சிலவருடம் கழித்து தேவதாஸ் மரணம் அடைகிறான். ராஜாஜிக்கு இதன் மூலம் பெற்ற மகளின் வாழ்க்கை போனாலும் காந்திக்கு சம்பந்தி என்ற உறவு கிடைத்தது. அதன் மூலம் ராஜாஜிக்கு தன் இன மக்களுக்கு "மகளை கொடுத்து இனத்தை காத்த பெருமாகான்" என்ற பட்ட பெயரும் ராஜாஜி கிடைத்தது...

இதனாலையே பாப்பானின் ஆதிக்க சக்திக்கு உட்பட்டு பல ஈ(ஜி)களின் சொல்படி கேட்டும் வாழ்ந்த காந்தி "தன் கொள்கையில் உறுதியானவர், இவராலே நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்க முடியும், கொடுக்கப்பட்டது" என்ற ஒரு திட்டமிட்ட மாயயை  பாப்பான்னிய ஆதிக்க சக்தியால் வளர்க்கப்பட்டது, வளர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது ....

காந்தி, அவர் இனம், மதம் சார்ந்த அடிப்படையில் இல்லாமல் இருந்திருந்தால் அவர் உண்மையிலே எல்லா மதத்து மக்களுக்கும் அவர் ஒரு புனித ஆத்மாவா இருந்திருப்பார். ஆனால் ஹே ராம்...என்ற தந்திரத்தை அடிகடி உச்சரித்து நான் இன்னார் மதத்தில் இருந்து வந்தவன் என்று தன்னை அடையாளபடுத்தி கொண்டார்...அதனால் அவர் இந்துக்களுக்கு மட்டும் மகாத்தமா....


காந்தின் நிகழ்வின் ஊடே என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:  



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Thursday, September 30, 2010

ஏன், உங்க சிந்தனை கருத்துக்கு பஞ்சமா....வந்துவிட்டது


வலைபதிவில் மற்றும் மூகநூலில், மொக்கையா ஒரு மேட்டர் போட்டா அதிகம் பேர் லைக் போட்டு  கருத்து வேற சொல்றிங்க....ஆனால் கருத்துள்ள மேட்டர் போட்ட லைக், கருத்து எதுவும் இல்லாமே போய்டுது.... ஏன் உங்கள் கருத்துக்கு பஞ்சமா....இல்லை உங்கள் சிந்தனைக்கு பஞ்சமா....

ஆனால் வார்த்தைகளிலும், செயல்களிலும்   பொழுதுபோக்கு,கவர்ச்சி, போதை இவைகள் மட்டும்  இருந்தால் மக்கள் என்கிற நண்பர்கள் எங்க இருந்தாலும் வந்துவிட்டு போவார்கள்போல...ஏனென்றால் இதன் மவுசு மக்கள் மனதில்  என்றும் நீங்காமல், குறையமால் இருக்கிறது.... டாஸ்மார்க் கடை  சந்து போந்துல எங்க இருந்தால் தேடி பிடிச்சு போய் தண்ணி அடிக்கிறான். நல்ல உணவு பொருட்களை பார்க்கும் படி விற்றால் வாங்க மறுக்கிறான்.

அடுத்து சினிமா, இது ஒரு பொழுதுபோக்கு எனபது போய் பலபேருடையா வாழும் கனவாகவே மாறிவிட்டது....ஒரு 80  வருஷம் முன்னே நாடு, நாடாயாய் திரிந்து நாடகம் நடத்தி ஏதோ சொற்ப வருமானத்தில் வாழ்ந்த  கூத்தாடிகள். இன்று இருந்த இடத்தில் ஆடி பார்பவர்களை கூத்தாடியாக்குகிறான், பின் முட்டாலாக்குகிறான்.  நாட்டின் ஆட்சி, அதிகாரம் எல்லாம் மறைமுகமாக கூத்தாடி கைகளுக்கே போய்விட்டது. பொழுதுபோக்காக பார்க்கும் சினிமா மக்களின் வாழ்வில்  பொழுதுவிடிய விடாமல் கபளீகரம் செய்கிறது. இது ஒரு வகை போதை ஆனால் இது போதைல பெரியா போதைதான் இருக்கு.  அடுத்து கவர்ச்சி...இது சொல்லவே வேண்டாம் லைட் போஸ்ட்கம்பத்திற்கு போடவை கட்டினாலும் , வறட்சி, விரட்சியோடு பார்பவனுங்கதான் நாட்டில் பலபேரு இருக்கானுங்க....இந்த சினிமா கூத்தாடிகள் இதை புரிந்துகொண்டு  படம் என்ற பேர்ல ஒரே பிட்டு படமா எடுத்து தல்றானுங்க...அந்த பிட்டுள இவன் மயங்கிறான்...மயங்கியவன் வெளிய வந்து மக்களுக்கு என்ன  ஞான உபசேமா பண்ண போறான். பார்க்குற பெண்களை ஒரு மாதிரியாய் பார்ப்பான் இதில் போதை அதிகமா ஆயடுட்சுனா பெண்ணை கைய பிடிச்சு இழுப்பான், அடுத்த காட்சி  கற்பழிப்பு....இதில் பாதிக்கப்படும் பெண்ணுக்கு நீதி. "கோர்ட், கேசு, வாய்தா.... என்று நீண்டு கொண்டே போகும். அவளின் மறுக்கப்பட்ட நீதி....

அதனால் மனிசனுங்க  அடிமையாகறது கூத்தாடி ஆடும் சினிமா, டாஸ்மார்க் சரக்கு, பாலியல் இன கவர்ச்சி.

இதுபோல மயக்கங்கள் எதுவும் இல்லாமல். பார்க்கும் நிகழ்வையும், கேட்கும் வார்த்தைகளையும், பேசும் சொற்கள்களையும்  நம் சிந்தனையில் ஏற்றி சரியா, தவறா என கொஞ்ச நேரம் அலசி சிந்தித்தாலே பல உண்மைகள் வந்து விழும். நம் வாழ்வின் இருண்ட பொழுதும் விடியும்...   
                                        

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:  


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Monday, September 27, 2010

ஓஷோ சொன்ன கதை....

 

ஒரு ஊரின் பாதை வழியே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது. அவ்வழியே இருந்த கிணற்றில் தவறுதலாக விழுந்துவிடுகிறான். விழுந்தவன் மேல ஏற முடியாமல் கத்துகிறான்...யாரும் வரவில்லை சிறிது நேரம் போனதும் அந்த வழியே இந்து மதத்தை பின்பற்றுபவன் ஒருவன் வருகிறான். அவன், கூக்குரல் கேட்டு கிணற்றில் எட்டி பார்கிறான்...... "அட பாதாக இப்படி விழுந்துவிட்டாய்யே போன பிறவியில் நீ என்ன பாவம் செய்தாயோ இந்த பிறவியில் சாவ போகிறாய் உன் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று சொல்லிவிட்டு போய்விடுகிறான். இன்னும் கொஞ்சம் நேரம் போனபின் சீனன் ஒருவன் வருகிறான். அவன், "நான் கன்பூயுசத்தை பின்பற்றுபவன். இந்த கிணற்றை சுற்றி சுவர் எழுப்பவேண்டும் எழுப்பாமல் விட்டது மனிதனின் தவறு அடுத்த முறை இந்த தவறு ஏற்படாமல் நான் பார்த்துகொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அதன் பின் அவன் அழுகுரல் கேட்டு ஒரு பாதிரியார் வருகிறார். அவர் கிணற்றில் விழைந்தவன் அழுகுரல் கேட்டு மிகவும் பதற்றம் அடைகிறார். "நான் காப்பாற்றுகிறேன் அன்பரே கவலை அடையாதே" என்று சொல்லி ஒரு கயிர விட்டு விழுந்தவனை காப்பாற்றுகிறார். அவன், "நான் உயிர் பிழைத்தேன் யாருமே என்னை காப்பாற்றவில்லை நீங்கள் தான் என்னை பிழைக்க வைத்தீர்கள் இந்த நன்றியை நான் மறக்கமாட்டேன்" என்றான். அதற்கு பாதிரியார், "இது எங்கள் மதத்து கடமை அப்பா யார் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீ காப்பாற்றுவாயாக அப்போதே உனக்கு புண்ணியம் ஏற்படும். என் இராச்சியத்தில் சீக்கிரம் புகுவாய்" என்று பைபிளில் வாசகம் உள்ளது. அதனால் காப்பாற்றினேன். "இனிமேல் நீ எப்போதெல்லாம் விழுவாய் என்று எனக்கு முன்பே சொல்லிவிடு நான் வந்து உன்னை காப்பாற்றுகிறேன். பின்பு எனக்கு புண்ணியம் அதிகரித்து இறைவன் இராட்சியத்தில் சீக்கிரம் இடம் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

மக்கள் புண்ணியம் அடைவதற்குதான் மற்றவர்களுக்கு பல உதவிகள் செய்யபடுகிறது. எல்லா உதவிகளும் சுயதேவையை பொறுத்தே அமைகிறது..




ஓஷோ கதையை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!





என்றும் நட்புடன்:



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Sunday, September 26, 2010

நீங்க கேள்வி கேட்டா...என் பதில் எப்படி இருக்கும்...? படியுங்க...

 
அஹிம்சையை இம்சை என நினைக்கலாமா.. அப்படி நினைத்தால் அதற்கு மாற்றுவழி உண்டா...?

புத்தர், அஹிம்சையை இம்சை என நினைத்ததில்லை.. அஹிம்சை, காந்தி வழி தோன்றுதல் என்று பல பேர் நினைப்பதால் காந்தியை பிடிக்கததால் அஹிம்சையும் எனக்கு பிடிக்காது என்பதுபோல் ஆகிவிட்டது. பலபேருக்கு திருடியவனை பிடிக்கவில்லை என்றால் திருடப்பட்ட பொருளும் பிடிக்காமல் போகுகிறது.  பயன்படுத்தும் பொருளை யாரும் பயன்படுத்தலாம்..திருடன் பயன்படுத்தியதால் அது திருட்டு பொருள் ஆகாது...அறிவாளியிடம் இருந்துதான் முட்டாள் பாடம் கற்கவேண்டும்...முட்டாளிடம் கற்றால் அவன் மேலும் முட்டளாவான்...எதிர்தாக்குதளைவிட தற்காப்பு தாக்குதல் உகந்தது...இதில் வன்முறை தவிர்த்து அஹிம்சையும் உட்பட்டே இருக்கிறது. ஆனால் நமக்கு தேவையானதை பெற்றுக்கொள்ள சூழ்ச்சி, பொறுத்திருந்து எப்பவும் எழுந்திருக்கமுடியாத தாக்குதல், தொலைநோக்கோடு எவற்றையும் அலசுதல், எதிரிக்கு மறைமுகமாக  இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குதல், தேவைக்காக எதிரியும் நண்பனாக்கி கொள்ளுதல்...இவையெல்லாம் நம் எதை பெறவேண்டும் என்று சுயதேவை பொறுத்தே அமையவேண்டும். பழைய கருத்துகளும் பழையதாகவே இருக்கும் அந்த சூழ்நிலைக்கு அது ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால்  நடைமுறை சூழலுக்கு எவை பொருந்த குடியது என்பதை அறியவேண்டும். ஏற்கனவே புரட்சில்  நடந்ததை தொடர்வதைவிட புதியதை கைக்கொள்ளவேண்டும். பலது பெறவேண்டுமானால் சில வழிமுறைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளவது நல்லது என்றே நினைக்கிறேன். நான் சொல்வது பலது உங்களுக்கு உடன்பாடு இல்லாமல்  இருக்கலாம்..." எதையும் மாற்றி யோசி..." என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.


மனம் எங்கே இறுகிய நிலைக்கு தள்ளபடுகிறது...?

போராட்டம், புரட்சி என்றாலே அங்கே மனம் ஒரு இறுகிய நிலைக்கே தள்ளபடுகிறது... பிறர் புன்னைகைக்காக தன் புன்னகை வெறும் செல்லா காசாகிறது....அப்படியும் புன்னகைத்தால் அப்புன்னகையில் அன்பைவிட அனல்தான் தெறிக்கிறது.


மனம் இரண்டுபக்கத்தை பார்க்குமா...?

இயல்பில் எல்லாமே ஏற்ககுடியதுதான் எரிச்சல் பட எதுவுமில்லை...எதுவும் எரிச்சலாக இருந்தால் உலகில் படைக்கப்பட்டது படைக்கபடாமலே போயிருக்கும். அன்பு ஏதுபோல உள்ளதோ அதுபோல்தான் கோவமும்...இரண்டும் வேற வேற பக்கங்கள்..ஒருபக்கத்தை பார்க்கும் மனசு மறுபக்கத்தை மறுக்கிறது...என் மனம் எதையும் ஏற்கும் நிலையில்தான் இருக்கிறது...விருப்பு ஏதோ போலவோ அதுபோல் பிறர் என் மேல் காட்டும் வெறுப்பையும்...


எந்த பணி வேகமானது, விவேகமானது...?


கலபணியை விட எழுத்து பணி ரொம்ப விவேகமானது...ரொம்ப வேகமானது. காரல் மார்க்ஸ் எந்த போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் பங்கேடுத்துகொண்டார். ஆனால் அவரின் மூலதன எழுத்துகள் ஒரு பெரிய முதலாளித்துவ சாம்ராஜியத்தையே...புரங்காட்ட ஓட செய்தது இன்னும் இதன் எதிரே நிற்க தைரியம் இல்லாமல்தான் அது இருக்கிறது. இவை எப்படி ஏற்பட்டது உங்களுக்கு தெரியாததா..ஒரு அரசு கல்விக்காக செலவிடும் பணம் லாபம் இல்லாமல் தான் இருக்கிறது. ஆனால் அக்கல்வி கொடுப்பதால் அவ்வரசுக்கு எதுமாதிரி பயன்கள் அமையும் எனபது உங்களுக்கும் தெரியும். இதில் அக்கல்விக்கு செலவிடும் பணம் விரையம் என்றால் பின் அவ்வரசு லாபல் எப்படி ஈட்டுவது....


நாம் பார்க்கும் பார்வை எத்தகையது...?

நாம் பார்க்கும் ஒவ்வொருவரின் பார்வை வித்தியாசமகத்தான் இருக்கிறது போல..."மலரை, பெண்கள் கண்டால் அவர்களுக்கு சூடிக்கொள்ள ஆசைவரும், என்போன்றவர்கள் கண்டால் பார்த்து ரசிக்க ஆவல் வரும், கவிஞ்சர்களிடம் கண்டால் கவிதையாய் வரும் , ஓவியன் கண்டால் ஓவியம் வரும், பையத்தியகாரன் கண்டால் கசங்கிவிடும்....


உளவியல் முலமாக பிரச்சனையை அனுகலாகமா...?


எந்த பிரச்சனையும் மேலோட்டமாக ஆராயும்போது அதற்கு தற்காலிக தீர்வுதான் கிடைக்கும் ஆனால் அதன் பிரச்சனையின் புகைச்சல் எப்போதும் இருக்கத்தான் செய்யும்....அதே அப்பிரச்சனையை உளவியல் பூர்வமாக ஆராயும் போது பிரச்சனையின் அடிவேர்வரை சென்று தீர்க்கலாம்...இது ஒரு நிரந்தர தீர்வாக கூட அமையும்...ஆனால் நம் நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு தற்காலிக... தீர்வுதான் நிரந்தர தீர்வாய் இருக்கிறது. மாற்றபடுகிறது ...நாம் வாழும் வாழ்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் உளவியல் பூர்வமாக அணுகினால் நம் மனம் சார்ந்த பிரச்சனைகள் நிரந்தரமாக தீர்க்கலாம்....இதில் நான் பிரச்சனைகளை எப்போதும் கொஞ்சம் அழமாகதான் பார்ப்பேன். பிறர் பிரச்சனை எனக்கு ஏற்பட்டால் அதன் விரியம் எப்படி இருக்கும் என்று நினைத்துதான் அணுகுவேன். இது எனக்கு கசப்பான நிலையிளும் நல்ல அனுவத்தை தரும். அதனால் "உளவியல் பூர்வமாக" என்ற வார்த்தை வாழ்கைக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது...நீங்களும் முயற்சிசெய்யலாம்....! என் குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றாலும் நான் என் குழந்தை நிலையில் இருந்ததுதான் பார்பேன்....குழந்தையின் வயதுக்கு அவன் நிலைக்கு சென்றுதான் பார்பேன்...பார்க்கவேண்டும்...


எவை சமுகத்தில் மாற்றத்தை கொண்டுவரும்...?

"எதேச்சையாக சிந்திக்கும் சிந்தனைகள்தான் சமுகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும்..."இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.


பெண்கள் அலங்காரத்தி துறந்துதான் வாழவேண்டுமா...?

ஆண்களின் அடிமை மனப்பான்மை நீங்கவேண்டும் என்பதற்காக பெண்கள் அவர்களுக்கு பிடித்த அலங்காரத்தை  துறந்து  ஆண்கள் மாதிரி ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை என்று நினைக்கிறன். இதில் பெண்கள் பற்றிய  பெரியார் கருத்துக்கும், உங்கள் கருத்துக்கும் எனக்கு  உடன்படவில்லை...பெண்கள் பெண்களாய் இருக்கலாம். அவள் ஆணை சார்ந்திருக்காமல் இருக்கலாம் ஆண்களுக்கு நிகரான சமவாய்ப்பு கொடுக்கலாம். ஒரு பெண் இப்படி இருக்க விரும்பினால் அப்படி இருக்க அவளை அனுமதிக்கலாம் இதில் ஆணிடம் அனுமதி பெறகூட தேவையில்லை அவளே அவள் வாழ்வை தேர்ந்தேடுத்துகலாம்....இதில்லாமல் ஆண்கள் மனோபாவம் மாறவேண்டும் என்று நினைத்து ஆண்கள் மாதிரி இருக்கவேண்டும் நினைத்தால் இதில்  பாலினமே மாறிவிடும்....ஏதோ ஒரு பழமொழி சொல்வார்கள் கிணறு வெட்டபோய் பூதம் கிளம்பினதுபோல....

பெண்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் கோவபடமாடிங்கனா ஓஷோவின் கருத்தை மேற்கொள்காட்டுகிறேன்:

"பெண்கள் சிகரெட் பிடிப்பதை என் கண்ணால் நம்பவே முடிவதில்லை....ஆண்கள் செய்வதையே பெண்கள் செய்தால் இதன் எதிர்விளைவு உலகத்தில் எப்படி அமையும்.. மோசமாகத்தான் இருக்கும். ஆண்கள்தான் அறிவு கெட்டவன் தன் தவறை மெல்ல மெல்ல உணர்ந்து, திருந்தி கொண்டிருக்கிறான். அப்போதும், இப்போதும்  அவன் செய்த  தவறுகளையே பெண்களும் செய்தால் இது வேறு ஒரு  மாதிரி அமைந்துவிடும். இவள் அடுத்து என்ன செய்வாள் ஆண்கள் மாதிரி நின்றுகொண்டே சிறுநீர் கழிக்கபோறால... " இப்படி சொல்வதால் ஓஷோவுக்கு  பெண்களைபற்றிய மதிப்பீடு தவறாக கொள்ளவேண்டாம். "பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்"  என்ற தலைப்பில் முழுக்க, முழுக்க ஆணிடம் இருந்து பெண்கள் விடுதலைகளை மற்றும் அவளின் பெருமைகளை பற்றியே  சொல்லிருக்கிறார். இப்புத்தகம் சென்னையில் உள்ள கவிதா பதிப்பகத்தில் கிடைகிறது. 


நாத்திகம் யாருக்கு சொந்தமானது...?

நாத்திகம் எனபது பெரியாருக்கு மட்டும் சொந்தமானது அல்ல அது புத்தர் காலத்தின் முன்பிருந்தே வருகிறது...எல்லார் மனதிலும் ஏற்புடையது, விருப்பமில்லாதது என்று ஒவ்வொன்று  உள்ளது. நம் மனது ஏற்பதை கேள்வி கேட்காமல் எதையும் எளிதாக ஏற்கும் ஆனால் விருபம்மில்லாதது  சிலதை மட்டும் மனது வெறுக்கும். அவ்வெறுப்பு அறிவின் துணைகொண்டு  சிந்தனையுடன்  இருந்தால் அது நியாமானதே அதை விடுத்து நாத்திகம் உட்பட எல்லாத்தையும் வெறுத்தால் அது ஏற்புடையதாக இருக்காது. அப்படி இருந்தால் சிந்தனை எங்கோ தடைபட்டுவிட்டது என்று பொருளாகும்...


வரலாற்று நாயகர்கள் சாதனைகள் எவ்வாறு...?

வரலாற்று சாதனையாளர்கள் உடலில் வீசும் வியர்வை கூட சந்தன மணமாக கூட மாறும் போல....இலங்கையில் புத்தம் கூறியதை விட்டுவிட்டு புத்தரின் பல்லை பாதுகாப்பதுபோல்...எல்லாமே பாதுகாக்கபடவேண்டியதாகிறது...


உலகத்தில் கண்டுபிடிப்பு எல்லாம் எப்படி கண்டுபிடிக்கபட்டது.....?

ஒரு நிகழ்வின் உண்டாகும் அனுபவம், அறிவு தேடுதலின் அடுத்த நகர்வு...ஆர்வம், எளிமை படுத்தவேண்டும் என்ற வழிமுறை பின் லாப நோக்கம் இதன் அடிப்படையில் பல கண்டுபிடிப்புகள் உருவாயின...ஆனால் எல்லோரும் கண்டுபிடிபளாராய் இருப்பதில்லை ஒரு சிலரே மாறுகிறார்கள் மாற்றிகொள்கிறார்கள். இருள் அடைந்த பொழுதை நி...த்தமும் கண்டு எடிசனின் கண்டுபிடிப்பு அமைந்தது.


யார் நாளைய சரித்திர நாயகன்....?

உங்களால் முடியாது என்று விட்டதை உலகத்தில் எங்கோ ஓரிடத்தில் ஒருவன் முயற்சித்து கொண்டிருப்பான். அவனே நாளை சரித்திர நாயகனாகிறான்.


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்: 




(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

Saturday, September 25, 2010

எந்திரன் தோல்வி படமா...?

 
கட்டயமாக நீங்க எந்திரன் படம் பார்க்க போறிங்களா....ஒரு நிமிடம் உங்களை நீங்கள் கொஞ்சம் கிள்ளிகொள்ளுங்கள் வலிக்கவில்லை என்றால் போய் பாருங்கள். கிள்ளி வலித்தால் உங்களுக்கு சுரணை இருக்கிறது என்று நினைக்கலாம்....ஏனென்றால் எனக்கு கிள்ளினால் வலிக்குது

கொள்ளை அடித்து கோடி கோடியாய் சம்பாதித்த கொள்ளை கூட்டம் நம்மை வரிசையாய் படுககவைத்து நம்மீதே ஏறி நம்மேலேயே காரி உமிழ போகிறது....தன்மான தமிழனே தரங்கெட்டு போய்விட்டதா உன் தன்மானம்...

ரொம்ப வருமையில் வாழுகின்ற நடிகர் படம் 'எந்திரன்' இப்படம் நல்லா ஓடவேண்டும் என்று இவர் ரசிகர்கள் கோவில் 1000 படிக்கட்டு மேலே முட்டிபோட்டே நடந்தார்கலாம்....தந்தை பெரியார் கண்ட, காணும் தமிழ் நாடு எங்கே போகிறது. கோவில் படிக்கட்டு மேலேயா...?

தமிழ் உணர்வுகொண்ட உணர்வாளர்களே கொஞ்சம் உணர்ந்துபாருங்களேன்.."நமக்கு இந்தியாவில் தமிழன் என்ற மரியாதை இருக்கிறதா, தமிழ்நாட்டில் பணம் அதிகாரம் படைத்தவனிடம் மரியாதை இருக்கிறதா.."என்று.  ஒருநிமிடம் சிந்தித்தால் நீ உண்மை தமிழனாய் இருப்பாய். உறுதியாய் இருப்பாய்...அப்படிருந்தால் உனக்கு மேலும் விளக்கம் தேவையில்லை...என்றே நான் நினைப்பேன்.



என்றும் நட்புடன்:

Wednesday, September 22, 2010

பிரான்சை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்....


எனக்கு இப்போது பிறநாட்டு இலக்கியம் அதன் வரலாறு பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் வருகிறது. இதற்கு காரணம் நமக்கு ஏற்கனேவே அந்நாட்டின் பற்றி ஏதோ தெரிந்த சரித்திர நாயகர்கள். நெப்போலியன் போன்றவர்களை பற்றிய வரலாறுகள் இதில் அவர்களுடைய சிந்தனை, பேச்சு இவைவாவும் நாம் ஏற்கனவே படித்ததால் தொடர்ந்த அதன் தொடர்ச்சி அந்நாட்டினை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலை கொடுக்கும். இவையில்லாமல்  நமக்கு பிடித்த நண்பர்களும் அந்நாட்டில் இருப்பதால் கூட அந்நாட்டினை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்தை கொடுக்கும்.        

ஒரு நாட்டின் இலக்கியங்கள், அதன் வரலாறு அந்நாட்டின் தொன்மையும் மக்களின் உணர்வையும் நன்கு தெளிவுபடுத்தும். இதில் இலக்கியம் அம்மக்களின் உணர்வுகளை பிரிதிபலிக்கும் காலக்  கண்ணாடிபோன்றது. அது என்றும் பிரிதிபளித்துகொன்டே இருக்கும். இதில் பிரான்சின் இலக்கிய சார்ந்த அந்நாட்டின் வரலாறு அருமையானது, அழகானது...

பிரான்ஸ் 2500 ஆண்டுக்குமுன் இதன் பெயர் கோல்(Gaule), மேற்கு ஐரோப்பாவில் இருந்த ஒரு இனம் சேலத்(celtes) இனம் என அழைக்கப்பட்டது. இந்த சேலத் இனம் கோல் நாட்டில் இருந்ததால் கொலுவா என்று சொல்வார்களாம்...அப்போது வாழ்ந்த கொலுவா மக்களில் துருய்த் என்றழைக்கப்பட்ட குருமார்கள் வீரத்திலும், மதிப்பிலும் புகழ்வாய்ந்தவர்களாக இருந்திருகிறார்கள். கி.மு 390 கொலுவா என்றழைபட்ட  பிரான்ஸ், ரோம பேரசுடன் போரிட்டு ரோம் நகரை கைபற்றியது. கி.மு 50 ஆம் ஆண்டு  ரோம சக்கரவர்த்தியான ஜூலியஸ் சீசர் ஆல்ப்ஸ் மலையை கடந்து கோல் நாட்டை கைபற்றினான்.  கொலுவா மக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். ஒரு நாடு இன்னோர் நாட்டை கைபற்றினாள் அந்நாட்டு மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். அடிமைகளாகவே இருந்தனர். பெண் அடிமைகள் காம லீலைக்கும், ஆண் அடிமைகள் மற்ற வேலைக்கும் ஈடுபடுத்தினார்கள். ஒவ்வொரு செல்வந்தனிடம் இருக்கும் அடிமைகளின் எண்ணிக்கையை பொறுத்தே அவன் மதிப்புடைய செல்வந்தனாக கருதப்பட்ட காலம்...ஜூலியஸ் சீசர், கொலுவா நாட்டை போரிட்டு உடனேயே   பிடிக்கமுடியவில்லையாம்  பல வருடங்களுக்கு பிறகே இந்நாட்டை கைபற்றினான். இவனின் பிரிசிதிபெற்ற வாக்கியம். "வந்தேன், கண்டேன், வென்றேன்" எனபது.

சுமார் 400 வருடம் இருந்த இந்த ரோம பேரரசு பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் வடக்கு ஐரோப்பா வரை அடக்கி ஆட்சி செய்தது. 4ஆம் நூற்றாண்டில் இருந்த ரோம பேரரசு விழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டது அதன் ஏதோ சதிகாரம், மக்களை அடிமைகளாக வைத்திருந்தது, குடி, பெண்களுடன் சல்லாபம் போன்ற என்னற்ற காரணங்களால் தன சாம்ராட்சியத்தை மெல்ல மெல்ல இழந்தது. இதில் இயேசு பிறந்தவுடன் மக்களிடம் ஒரு புதிய எழுர்ச்சி கண்டது . மக்கள் தங்களை உணர ஆரம்பித்தார்கள். ஒரு மதத்தின் குடையின் கீழ் கொலுவா  நாடு வந்தது. மக்கள் கிறிஸ்துவ மதத்தை பரப்ப திவரமாக முனைந்தனர். கிபி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்துவம் இப்பிரதேசங்களில் வேரூன்றத் தொடங்கியது. கிபி நான்காம் நூற்றாண்டளவில் அது இங்கே நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. 8 முதல் 12 ஆம் நூற்றண்டு வரை இஸ்லாம் மதம் ஐரோப்பா முழுவதும் பரவ தொடங்கியது. இம்மதம் பரவவிடாமல் கிருஸ்துவ மன்னர்கள், நிலபிரபுக்கள், மத அமைப்புகள் தடுத்திட முனைந்தனர். இதன் விளைவாலே ஏற்பட்டது "புனித சிலுவை போர்" இது பல வருடங்களாக நடந்தது. புனித சிலுவை போர் 1095 முதல் 1270 வரை நடந்தது. அதன் எதிரொலி இப்போது வரை அந்நாட்டில் மறைமுகமாக தொடர்கிறது. தற்போது பிரான்சில் வாழும் இஸ்லாம்
பெண்கள் பார்தா போட தடை விதித்திருக்கிறது. 400 வருடம் இருந்த ரோம ஆட்சியில் அவர்களின் செல்திக் மொழி மறைந்து போயிட்டு இப்போது சில உதிரி வார்த்தைகளே இருக்கிறதாம்..பிரான்ஸ் மொழியில் அதிகமாக லத்தின் மொழின் ஆதிக்கமே இருந்திருக்கிறது. பல்வேறு இலக்கிய நூல்களும் லத்தின் மொழியிலே வந்திருக்கிறது.  இம்மொழியில் தொடர்ந்து அக்கால ஸ்பெயின், கோல் வழங்கிய பிரான்சிஸ்யர் என்ற மொழியும் அடங்கி பிரான்ச் மொழியையானதாம். மார்கோபோலோ என்ற வெனிஸ் நகர யாத்திரிகன் சீனா போன்ற கிழக்கு நாடுகளில் பயணம் செய்து இந்நாடுகளின் பெருமைகளை கட்டுரையாக "அதிசையங்களின் புத்தகம்" என்ற தலைப்பில் பிரஞ்சு மொழிலே எழுதினானாம்.     
  
ரூசோ, வால்டேர் போன்ற அறிஞசர்களின் சிந்தனையால், ஏழுர்ச்சி மிகு பேச்சுகளால்  மக்கள் புரட்சிக்கு   அடிகோலிட்டது. 18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் உலக சரித்திர நிகழ்வான பிரான்சுப் புரட்சி வெடித்தது அப்புரட்சி மக்களிடம் ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது. நெப்போலியன் தலைமையில் புதிய வரலாற்றை படைத்தது. இந்த புரட்சியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. ஆண்டான், அடிமை  நிலைமை மாறி மக்களாட்சிக்கு கொண்டுசென்றது. மன்னர், நிலபிரபுகள், செல்வந்தர்களுக்கு புதிய ஆட்டத்தை காண செய்தது. நெப்போலியனின் படையெடுப்பு, அவன் ஆட்சி முறை மக்களுக்கு துணிவை தந்தது.  இங்கிலாந்துக்கு எதிராக 14 ஆம் நூற்றாண்டில் 100 வருட போர் நடந்தது.  இது ஒரு நூற்றாண்டு போர் என வரலாட்டு அறிஞசர்களால் சொல்லப்படுகிறது. இறுதியில் "ழான தார்க்" என்ற ஆயர்குல பெண் போர்படைக்கு தலைமையேற்று ஆங்கிலரை எதிர்த்து போரிட்டால். அப்போரின் விளைவில் அவள் 1431 ஆம் ஆண்டு உயிருடன் எரிக்கபட்டாள். அதன்பின்னரே இப்போர் முடிவுக்கு வந்தது.

பிரான்ஸ் மொழியை மேன்மை படுத்தும் நோக்கத்தால் 1626 ஆண்டு பல அறிஞ்சர்கள் தலைமையில்  லத்தின் மொழி ஆதிக்கம் தவிர்த்து பிரன்ச் மொழியை வளர்க்க வாரம் ஒரு முறை ஒன்றுகூடி மொழி வளர்ச்சியை பற்றி விவாதித்தனர். இவை அந்நாட்டு மந்திரிக்கு தெரிந்து 1636 அரசரின் அனுமதியுடன் பிரஞ்ச அகடெமியாக  அங்கீகரிக்கப்பட்டது. பிரஞ்ச அகடெமி 40 உறுபினர்களுடன் செயல்பட்டது. பின்னர் பல துறைகள்களும் இணைந்தன..அப்போது மகளிர் மேம்பாடு உயர்வுநிலை பெற்றிருந்தது மகளிர் மாமன்றங்கள் அதிகம் இருந்தன ஆனால் 1635 ஆண்டில் இருந்து 1980 வரை அகடெமிக்கு பெண்கள் எவரும் உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தது. 345 ஆண்டுகள் பெண்வாடையே இல்லாமல் இருந்த பிரஞ்ச அகடெமி 1980 ஆண்டு, முதல் பெண் உறுப்பினர் "மர்கரீத் யூர்ஸ்னார்" நியமிக்கப்பட்டார். இன்றுவரை அகதெமி சிறப்புடனே நடக்கிறது. தற்போது பிரான்ஸ் உலக அரங்கில் தன்னிறைவு பெற்ற நாடக திகழ்கிறது. அதன் பொருளாதாரம் வளர்ச்சி மேம்பட்ட நிலையில்தான் இருக்கிறது. பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் சபையில் ஜி8 நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று.  பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 75 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.


பிரான்சை பற்றிய நான் சேகரித்து எழுதிய எழுத்துகளை வரவேற்றதற்கும், பதிவை பொறுமையாக படித்தற்கு மிக்க நன்றி...!



என்றும் நட்புடன்:



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)