Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Friday, February 27, 2015

பொதுவாய் பெண்கள் தங்களை...!




நாம் இளமையாக இருந்து,  கண்ணாடி முன் நின்றபோது, கண்ணாடி அழகாக காட்சி  அளித்தது.  இளமை மெல்ல மெல்ல போய்கொண்டிருக்கும்போது இப்போது கண்ணாடி, அழகற்று போய்விட்டது. அதை பார்கவே பல பேருக்கு பயமாக இருக்கிறது.

இதில் கண்ணாடி, அப்போது எப்படி இருந்தோ, அப்படியேதான் இப்போதும் உள்ளது.  அதற்கு எந்தவித அழகைபற்றியும், அசிங்கதைபற்றியும் கவலை இல்லை. அது முன் யார் போய் நின்றால் அப்படியே அது பிரிதிபளிக்கும்.

எனக்கு தெரிந்தவர் சொன்னார், “பொதுவாய் பெண்கள் தங்களை அதிக நேரம் அலங்கரித்துகொள்வதே தங்களின் அழகற்றதை மறைக்கதான் ஆனால் அழகான பெண்கள் தங்களை அலங்கரித்துகொள்ள அதிக நேரம் எடுத்துகொள்ள மாட்டார்கள்.பியூட்டி பார்களுக்கும் போகமாட்டார்கள் என்றார்.

அவர் சொன்ன பின்தான் எனக்கே ஒரு உண்மை தெரிந்தது, “ஏன் பல பெண்கள் தங்களை அலங்கரித்துகொள்ள அதிக நேரம் எடுத்துகொள்கிறார்கள் என்று.

சேரில் இருந்துதான் அழகான தாமரையும் வெளிவருகிறது. அழகிய தாமரையின் விதையும் சேரில்தான் இருக்கிறது. அசிங்கம் என்று சொல்வதில் அழகும் உள்ளடங்கி உள்ளது.

காமம் அசிங்கம் என்று மதங்கள் சொல்கிறது. அதைபின்பற்றி  பல மனிதர்களும் சொல்கிறார்கள். என் அப்பா, அம்மா காமம் அசிங்கம் என்றிந்தால் அசிங்கம் என்ற சொல்படுகிற காமத்தைபற்றி இப்போது நான் எப்படி எழுதமுடியும்.

ஒவ்வொரு புனித்திலும் ஒரு அசிங்கம் உள்ளது. ஒவ்வொரு அசிங்கத்திலும் ஒரு புனிதம் உள்ளது.  மனம்தான் இது அழகு, அது அசிங்கம் என்று பிரிக்கிறது.

கண்ணாடி எப்போதும்போல் கண்ணாடியாகதான் இருக்கிறது.   




என்றும்  நட்புடன்:

Sunday, February 22, 2015

அது என்ன தியானம் என்பது.? சும்மா உட்கார சொல்கிறாங்க..!




நான் பிறந்தது முதல் எனக்கான ஆன்மிக தேடுதல் ஆரம்பித்துவிட்டது. 
ஆரம்பத்தில் உருவழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தேன். மந்திரங்கள் உச்சரித்தேன். யோகா பயின்றேன். சித்தர்கள் சொன்னதையேல்லாம் தேடி படித்தேன். ஞான குருமார்களை சந்தித்தேன். எங்கும் எனக்கான விடை கிடைக்காமல் ஒருவித தேடுதலுடனே அலைந்தேன். இந்த ஆர்வம், முயற்சியே ஒரு ஆன்மிக சாதானக்கு எப்போதும் வேண்டும். அது நம்மை என்றும் பக்குவபடுவத்தும் தளம்.. அதில் விழுந்து, அடிபட்டு வரும்போது ஒரு வெறுமை தோன்றும் அவ்வெறுமை  கவனிப்பதில் நிலைநிறுத்தும்போது தியானம் கைவரபடுகிறது.

நான் ஆன்மிகத்தை பேசும்போதேல்லாம். அதிகம் பேர்  கேட்கிறார்கள், “அது என்ன தியானம் என்பது.? சும்மா உட்கார சொல்கிறாங்க, கண்ண மூட சொல்கிறாங்க, கண்ண மூடினா கருப்பா தெரியுது. அதான் தியானமா...? என்கிறாங்க.

நான் சொன்னேன், “அது ஆரம்பம்தான் தொடர்ந்து அதையே பார்த்துகொண்டு இருக்கனும்.என்றேன்.

ஒரு பெண் கருவுற்று, அக்கரு குழந்தையாகி  பூமியில வந்து விழுவதற்கே 10 மாதம் ஆகிறது. ஆனா, தியானம் என்பது நீங்க நினைத்தவுடன் கைக்கூடிய வரும் பொருளா... முதலில் நமக்கு பொறுமை வேண்டும்.  ஒரு ஆன்மிக தேடுதல் வேண்டும். இருப்பதிலே எளிமையானுதும் தியானம்தான். அதுபோல் இருப்பதிலே கடினமானதும் அதுதான். இதை நாம் எப்படி எடுத்துகொள்கிறோம் என்பதை பொருத்துதான் ஆன்மிக பயணம் உள்ளது.

நான், பதினைந்துவருடமாக ஆன்மிக தேடுதலில் உள்ளவன். இன்னும் பயணித்து கொண்டிருக்கிறவன். அந்த  பயண அனுவத்தை, என் தியான அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் எளிமையாகவும் சொல்கிறேன் புரிந்துகொள்ளுங்கள்.

முதலில் நம் உடலும், மனதும் தனிதனியானது அல்ல... இரண்டும் இணைந்து ஒன்றாக செயல்படுவது. நாம் கண்ணால் பார்க்கும் பொருள்கள் யாவும் மனதின் கற்பனையின் வடிவமே... உடல்தான் அப்பொருளை உருவாக்கியது. ஆனால் பின் இருந்து இயக்கியது மனம்தான். மனமும், உடலும் ஒரு மாட்டுவண்டியில் கட்டிய இரண்டு மாடுகள். ஒன்று நின்றாலும், இன்னோன்று செயல்படாது. தலைவலி வரும்போதுதான் மனம் தலையை பற்றியே நினைக்கும். பல்வலி வரும்போதுதான் நாக்கு பல் இருக்கும் பகுதியே துலாவிகொண்டிருக்கும். உடல்  நோயில் சரிந்தால் அது சரியாகும் வரையே மனம் உடலை சுற்றியே இருக்கும். அப்போது பதைபதைக்கும். அந்த நேரத்தில் யாரவது  நம்மிடம் சாதரணமாக பேசினாலும் கோவப்பட்டு எரிந்து விழுவோம். பின் உடல் சரியானதும் மனது, ஆசையேனும் இறைகைகட்டி பறக்க ஆரம்பிக்கும். இங்கு உடல் என்பது வெறும் செயல்படும் கருவிதான்  ஆனால் மனதுதான் அதன் சூத்திரதாரி  இதில் நேரடியாக பாதிக்கபடுவது உடல்தான். அதுதான் நம் கண்ணுக்கு தெரிவது. இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்

உடலியல், மனயியல், உளவியல்  போன்றவை எல்லாம் இன்று மனிதனை பயன்படுத்தி, பணம் சாம்பாதிக்கும் துறையாக மாறிவிட்டது. எதுவும் நிரந்திர தீர்வுக்கு வழிவகுக்கவில்லை.

மனம், உடல், இது பொதுவாய் எல்லோருக்கும் தெரியும். உடல் கண்ணுக்கு தெரிவது, மனம் கண்ணுக்கு தெரியாதது. அது வலியும், சந்தோசத்தையும் மட்டும் உணரக்கூடியது. இப்போதுதான் தியானத்தைபற்றி முக்கிய ஒன்றை நான் சொல்ல போகிறேன். இந்த இரண்டையும் தாண்டிய இன்னோன்று உண்டு. அது மனதாலும், உடலாலும் கட்டுபடுத்த முடியாதது. அது பிரபஞ்ச சக்தியானது அது வெறுமனே கவனிப்பது. அதை எப்படி விளக்கலாம் என்றால், டென்னிஸ் ஆடுபவர்கள், ஒரு  பக்கம் அடிகிற பந்தை இன்னொரு பக்கம் அடிப்பாங்க, அது போல் இந்த பக்கம் வந்த பந்தை அந்த பக்கம் அடிப்பாங்க... இப்படி, அப்டியும் போற பந்தை ஒருத்தர், வலைக்கு மேலே அமர்ந்து பார்த்துகொண்டே இருப்பாரு தெரியுங்களா..? அவர் யார் என்றால் அவர்தான் அவ்விளையாட்டின் நடுவர். அவர் வேலை,  பந்து எங்கு தடைபடுறது யார் தடுத்தது, யாருக்கு பாயின்ட் போய் சேரும் என்பதை கவனித்துகொண்டே இருப்பார். இப்ப நடுவரே இல்லாமல் விளையாடுகிறாங்க என்று நினைத்து பாருங்க... அந்த ஆட்டம் எப்படி இருக்கும். கடைசியில் சண்டையில்தான் போய் முடியும்.

இதில் நம் வாழ்கை எனும் ஆட்டத்தில்,  நடுவர் இல்லை என்று நினைத்து ஆடுகிறோம் ஆனால் அங்கு நடுவர் இருக்கிறார். நடுவர் இல்லாமல் எந்த ஆட்டமும் இல்லை... அப்படி இருந்தால் அது ஆட்டமே இல்லை. அங்கு நடுவர் இருக்கிறார். நாம் அவரை கவனிக்காமல் ஆடுகிறோம். இப்போது முதன்முறையாக நாம் நடுவர் இருக்கிறார் என்று நினைத்து ஆடபோகிறோம். இப்போது ஆட்டம் பதட்டமாக இருக்கும் ஒருவித பரவசமாகவும் இருக்கும். அதற்குதான் தியானம் துணையாக இருக்க போகிறது.  

இப்போது உங்க உடலும், மனமும், ஆசை கொண்ட பந்தை  ஆடட்டும். ஆனா, நீங்க நடுவரா இருந்து அதை கவனிங்கஇந்த விளையாட்டில் எந்த மதிப்பீடும் வேண்டாம் எந்த மதிபெண்ணும் கொடுக்கவேண்டாம். வெறுமனே கவனியுங்க அது போதும். இப்போது அது வெறும் விளையாட்டுதான் என்ற முதன் முதாலாக உங்களுக்கு ஒரு புரிதல் உண்டாகும். அதில் தீவிரம் கொள்ளமாட்டிங்க வெறுமனே கவனித்துகொண்டே அதை விளையாடுவிங்க... உணர்ச்சிவசபடமாட்டிங்க, ஏனென்றால் உணர்ச்சிவசபடுவங்கதான் பதட்டமடைவாங்க, பயபடுவாங்க உணர்வு பூர்வமான சிந்திகிறவங்க அடுத்து என்ன செயலாம் என்பதைதான் யோசிப்பாங்க... நமக்கு தெரிந்தவங்களுக்கு அடிபட்டால் நாம் உடனே பதட்டம் அடைகிறோம். ஆனா நாம் பதட்டம் அடைவது போல டாக்டரும் பதட்டம் அடைந்தால் என்ன ஆகும்.  மருத்துவம் பார்க்க முடியாது. நாமும் நம் மனதுக்கும், உடலுக்கு தலைசிறந்த மருத்துவராகதான் இப்போது இருக்கவேண்டும். ஒன்றை நினைவுபடுத்திகொள்ளுங்கள். “100 வயது நான் ஆரோக்கியமாக வாழ்வேன் என்று சொல்பவன் எந்த வியாதி வந்து செத்து போவான்.? சொல்லுங்க... எப்படியும் அவனுக்கு ஒரு நோய் வந்துதானே இறப்பு வரும். இதில் புரிந்துகொள்ளவேண்டியது மரணம் என்பது நிச்சயக்கபட்ட ஒன்று இதை மாற்றமுடியாது. இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் கவனிக்கும்போது மரண பயம் உண்டாகும். அப்படி பயம் வரும் போது அந்த பயத்தையும் கவனிக்கவேண்டும். ஏனென்றால் மனம் எப்படியும்  நீடித்து இருக்கனும் என்றுதான் நினைக்கும். அது உடலோடு ஒட்டிகொண்டு தனித்து வராது. அப்படி மனம்  பயம் கொள்ளும் போது அந்த பயத்தையும் நீங்க கவனிக்கும் போது அப்பயம் தானாய் நீங்கும். மனம் கொஞ்சம் பக்குவபடும் முதன் முறையாக உடலைவிட்டு தனித்து வெளிவரும். அப்போதே இருட்டாக இருந்தில் மனதின் முகம் தெரியும். 

அந்த முகத்தை கவனிப்பது நடுவரான உங்களுக்கு அந்நடுவர்தான் அதுதான் விழிப்புணர்வு அல்லது தன்ணுணர்வு என்று சொல்வது. 

ஒரு மான் புல் மேய்கிறது என்றால் அது எங்கு ஆபத்து உள்ளது என்று உணர்ந்தே மேய்ந்துகொண்டிருக்கும். அவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும். ஒரு ஆடோ, மாடோ, குரங்கோ எந்த உயிரினத்தையும் தூக்கி தண்ணீரில் போட்டால் அவரை அட்டகாசமாக நீந்துகிறது. மிக எச்சரிச்சரிக்கையாக இருக்கிறது ஆனால் குரங்கில் இருந்துதான் மனிதன் வந்தான் என்று டார்வின் பரிபாணம் சொல்கிறது. பின் ஏன் நம்மால் தண்ணீரில்  நீந்த முடியவில்லை அதற்காக ஏன் விசேச பயிற்சி எடுத்து நீந்த வேண்டிருக்கு.? ஏனென்றால் உடலை, ம்னம், ஆசை கொண்டு மங்கடித்துவிட்டது, மறுக்கடித்துவிட்டது, அதை மீட்டேடுக்கதான் தியானம்.


இப்போது இரண்டு கடந்து மூன்றாவதுக்கு வந்துவீட்டீர்கள். அதாவது உடல், மனது, தன்ணுணர்வு. ஆம், இந்த தன்ணுணர்வு கொண்டுதான் உடலையும் மனதையும் கவனிக்கவேண்டும் அது எப்படி என்றால் நீங்க திரைபடம் பார்கிறீர்க்ள். அங்கு முதலில் வெண்திரை இருக்கிறதுசிறிது நேரம் கழித்து பின்னால் இருந்து ஒளி பீச்சபடுகிறது. நமக்கு பிடித்த  நடிகர், நடிகை திரையில் தோன்றிவிடுகிறார்கள். கைதட்டல், விசில் சத்தம் காதை கிழிகிறது.   இப்போதுதான் கவனமாக இருக்கவேண்டும் உடல் என்னும் வெண்திரையில், மனம் எனும் ஒளி பீயிச்சபடுகிறது இப்போது நீங்கள் முழு கவனிப்பவாரக இருந்தால் அதில் ஒன்றாமல் வெறும் பார்வையாளானாக, நடுவராக இருந்து கவனிப்பீர்கள். இல்லையேன்றால் அந்த வெண்திரையும் மறந்து, மறைந்து, ஒளியே உண்மையேன நம்பி, அதிலே லயபட்டு, அந்த நடிகர், நடிகைக்கு ரசிகராகி கோவில் கட்டி பின் கும்பாபிஷேகம் பண்ணி வரும் தேர்தலில் எம்.எல்.ஏவாக ஆக்கி, அதை தாண்டி அவரை தமிழ்நாட்டின் முதல்வராகவே ஆக்கி விடுவோம். முதல்வரானவங்க சும்மா இருப்பாங்களா.? இருந்தாங்களா.? மேலும் நம்மை எப்படியேல்லாம் முட்டாளாக்களாம் என்பதிலே கவனமாக இருப்பாங்க.. இப்படிதான் உலகத்தில் உள்ள ஒவ்வொரு  நாட்டின் தலைவிதியும் சினிமா போன்று ஒவ்வொருவிததில் மாறுது. அந்த தலைவிதி யாரால மாறுது.? நம்மால்தான் மாறுது... கேட்டா இப்படி சொல்லுவோம், “அவர் பிரதமரா, முதலமைச்சரா வருவார்ன்னு விதி இருக்கு வந்துட்டாரு என்போம். ஆனா, அவர் வருவது நாம் கவனிக்காமல் விதைவிதிச்சோம் என்பதை நாம் சாவுகாசமாக மறந்துவிட்டோம். அதை மறக்காமல் அது திரைபடமாக இருந்தாலும், வாழும் வாழ்வாக இருந்தாலும் கவனித்தலில்தான் மாற்றம் வரும்.

இதுபோல மாற்றம் வர, நம் மனதை கவனிக்கும்போது அது வாழ்வேனும் திரைபடமே என்று பார்கும்போது. உங்களுக்கு முதன் முறையாக புதிய பார்வை வந்துள்ளது. அங்கு நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்கபடுகீறீர்கள். அதுதான் பிரபஞ்ச பார்வை, அது மூன்றாவது கண் பார்வை. பாருங்கள், பாருங்கள் பார்த்துகொண்டே இருங்கள்.

இப்போது மேகம் வானத்தில் வந்துகொண்டே இருக்கும். வானம் என்றால் மேகம் இருக்கதானே செய்யும் ஆனால் மேகத்தை கடந்தால் அங்கு வானமும் இருக்காது, மேகமும் இருக்காது. அங்கு பிரபஞ்ச ஒளி, ஒலியே இருக்கும்.

இப்போது மனதை கவனிக்க, கவனிக்க உங்கள் மனது முதன் முறையாக உடலை கட்டுபடுத்தாது என்பதை நீங்கள் உணர்வீர்கள். உடல் இப்போது முழு தளர்வாக, ஒய்வு தன்மைக்கு செல்லும். உடல் தூங்குகிறது என்று கூட அதை சொல்லலாம் ஆனால் மனம் எண்ணம்கொண்டு பல கனவாய் காட்சியளிக்கும் அதையும் நீங்கள் கவனிப்பீர்கள். நாம் இரவில் தூங்குவது இதன் அடிபடையில்தான் நடக்கிறது. அங்கு ஒரு சிறுவித்தியாசம்  நாம் மனதையும், உடலையும் கவனிப்பதில்லை நாம் மனதுடன் அதன் காட்சிகளில் ஒன்றிவிடுகிறோம். கனவு காண்கிறோம். ஆனால் தியானம் அப்படி நடக்காது அங்கு கவனித்துகொண்டே நாம் தூங்கிகொண்டிருப்போம். இதைதான் சித்தர்கள் சொன்னது, “தூங்காமல் தூங்கி எழுவது எக்காலம் என்று.  இதை தொடந்து கவனிக்கும் போது இது நம் அன்றாட வாழ்வின் செயல்களிலே நடக்கும். செயல் இருக்கும் ஆனால் செயல்படும் மனம் அங்கு இருக்காது. அங்கு கவனித்துகொண்டிருக்கும் தியானமே இருக்கும். அது அழகாக காட்சி அளிக்கும். இதுபோல செயலைதான் ஜப்பான் மக்கள் செய்கிறார்கள். இன்று உலகத்தில் அரிய அழகான பொருட்கள் ஜப்பானில்தான் உள்ளது. ஏனென்றால் அவர்கள் அதை தியானமாக செய்கிறார்கள். அதுதான் அங்கு ஜென் ஆக பரிணமிக்கிறது. ஜென் என்பது தியானம் என்ற தமிழ் சொல்லிருந்து தியான் என்ற சமஸ்கிரத சொல்லாகி, சீனாவில் அது தியோ என்றாகி அது ஜப்பானில் ஜென்னாக மாறியது. வார்த்தைதான் மாறியதே தவிர தியான தன்மை என்றும் மாறாது. அந்த தியானம் என்ற ஜென்னை கொண்டு போனவர் நம் தமிழர் போதி தர்மரே அவர்தான் ஜென்னை முழுமையாக மலர செய்தார்.

இப்போது தியானம் நம் நடைமுறை வாழ்கையில் இணைந்தே இருக்கும்போது வெண்திரையில், மாய ஒளி வீசுவது குறைகிறது. ஒருவேலை முழுவதும் இல்லாமல் போய்விட்டது. கரைந்துவிட்டது என்று கூடசொல்ல்லாம். இப்போது வெறும் திரைமட்டும் இருக்கிறது அதை பார்வையாளன் பார்த்துகொண்டு இருக்கிறான். பள்ளமான இட்த்தில்தான் நீர்வந்து சேரும், காற்று இல்லாத இடத்தில்தான் காற்று வந்து சேரும். காலி பாத்திரத்திலே நீரை  நிரப்ப முடியும்... “ஒன்று இல்லாத இடத்தில்தான் இன்னொன்று வந்து சேரும் என்பது இயற்கை விதி.

வெண்திரையில் மாய ஒளி நின்ற பிறகு, இன்னொரு ஒளி அங்கு வீசப்படும் அதுதான் பிரபஞ்ச்ச ஒளி. அது எம்மாதிரி ஒளி என்பது நான் இன்னும் அறியவில்லை ஆனால் அதன் சிறு சிதறலை நான் உணர்ந்தவன். அதன் சாரலில் நனைந்தவன். அது சொல்லில் எழுத முடியாத பரவசம். ஒரு ஞானி சொன்னது,  “ஞானம் என்பது சொல்லில் சொல்லமுடியாதது அப்படி சொன்னால் அது ஞானம் இல்லாதது.” அது முழுக்க, முழுக்க உணரகூடியது. இதனால்தான் சிவபித்தர்கள். சித்தர்கள் ஆவதற்கு முன்னே “இறைவா ஆனந்த அப்பரவசத்தை தாங்கும் வலிமையை தா என்று மனம் உருகி வேண்டுவார்கள். ஏனென்றால் அந்த தேனின் ஒரு துளியை அவர்கள் ருசித்துவிட்டார்கள். இதனாலே அப்படி சொல்வார்கள்.

அந்த வெண்திரையில் பிரபஞ்ச ஒளி இருக்கும்போது   கவனிப்பவர் அதாவது உங்கள் தன்ணுணர்வு, பிரபஞ்ச ஒளியில் இணைந்துவிடும் அல்லது கரைந்துவிடும் என்று சொல்லாம். சூரியன் வந்த பின் பனி உறுகி ஆவியாகி போவதுபோல் அந்த பிரபஞ்ச்ச சூரியனில் ஐக்கியமாகிறது. இந்த இணைப்பில்தான் மனிதன் கடவுளாகிறான். ஞானி மீண்டும் குழந்தையாக பிறக்கின்றார். இதனால்தான் ஏசுவும் சொன்னார், “நீங்கள் குழந்தையாக மாறுங்கள். மீண்டும் குழந்தையாக பிறங்கள் என்று  குழந்தை, மனம் இல்லாமல், தன்  உடலையும் அறியாமல் கடவுளாக இருக்கிறது ஆனால் ஞானி எல்லாம் அறிந்து அதனை அறியாமல் இருக்கிறார். அவர் ஆற்றை கடந்துவிட்டார். படகையும் அங்கையே விட்டுவிட்டார். முழுமையில் கலந்துவிட்டார். நிர்வாணம் ஆகிவிட்டார். இதுவே முழு நிர்வாணம் என்பது முழுமையில் கலப்பதே நிர்வாணம் மற்றபடி ஆடையை கலைந்து நிற்பது நிர்வானம் அல்ல... அது ஒரு குறீயிடு. முழு நிர்வாணத்தில்தான். நானே கடவுள் (அகம் பிரம்மாஸ்மி) என்பதை நாம் உணர்வோம். அதுவே உண்மையான மதம், அதுவே புத்தம், இந்து, சமணம், கிறிஸ்துவம், இஸ்லாம் எல்லாம்..

ஆறுகள் பலவானாலும் சேரும் இடம் கடலே. இதை நாம் புரிந்துகொண்டாலே போதும்.

முழு கவனிப்பதிலே இறைவன் வாழ்கிறான். அவனே இறைவனாகிறான். அதுவே தியானம். மனதை(மாயஒளி) கவனியுங்கள் உடல்(படகு) ஒய்வு தனமைக்கு செல்லும். மாய ஒளி இல்லாத இடத்தில் கவனிப்பு(தியானம்) என்ற ஒளி மூலம் ஆற்றை கடக்கலாம். அப்போது படகு(உடல்) ஆற்றிலே விட்டுவிட்டு கரையேறலாம்.

பிறவி பெருங்கடல் நீந்துவோர் நீந்தார்
இறைவனடி சேராதர்.

இந்த திருகுறளின் உண்மை பொருள் இதுவே... கண்ணை மூடுங்கள் இருள் தெரிந்தால் பரவாவில்லை. இருட்டில் மறைந்திருக்கும் மனம் தன் முகத்தை காட்ட ஆரம்பிக்கும். அதுவே ஆரம்பம்.


முதல் அடி எடுத்துவையுங்கள். அதுவரை காத்திருந்து கவனியுங்கள்.





என்றும் நட்புடன்:



Thursday, February 12, 2015

நான் பலரிடமும் கேட்டுபார்த்தேன்...!





ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம், நான் பலரிடம் கேட்டுபார்த்தேன் "தெரியல" என சொன்னாங்க, சம்பந்தபட்ட  நபரிடமும் கேட்டுபார்த்தேன். அவங்களும் தெரியல என்றுதான் சொன்னாங்க, அது எனக்கு கிண்டாலகதான்பட்டது. அது என்ன அப்படி ஒரு கேள்வின்னா.. முக்கிய சில சாதியில இருக்கிரவங்க நெற்றில நாபம் போட்டுருக்காங்களே, அது எதுக்கு.? இந்த கேள்வியதான் அவங்ககிட்ட நான் கேட்டேன். மீண்டும் இதை எனக்கு தெரிந்த ஒரு ஐயரிடம் கேட்டேன் அவரு சொன்னாரு, "அட அபிஷ்ட்டு அது பெருமாளுடைய பாதம்டா.." என்றார். எனக்கு ஒரு சந்தேகம் ஐயரே, "அப்போ பெருமாளுக்கும் நாமம் போட்டுருக்காங்களே அது யாருடைய பாதம்..." என்றேன். அவருக்கு வந்தது பாருங்க கோவம், அவரு கோமனம் கழுலாததுதான் பாக்கி, மத்தது எல்லாம் அவரு உடம்புல ஆட ஆரம்பித்தது. உடனே நான் அங்கிருந்து எஸ்கேப் ஆகிட்டேன்.

"நெற்றில பத்து போட சொன்னா பதினோன்னு போட்டான் இந்த மாபாதகன்" என்று ஒரு படத்துல நடிகர் வடிவேல ஒரு ஆயா திட்டும். ஆனா, இந்த பதினொன்று அல்லது பெருமாள் பாதம் என்று சொல்கிற நாமத்த யார் கண்டுபிடிச்சா.? யார் அதை நெற்றில இட்டு புழக்கத்துல விட்டது.? என்று ஆராய்ந்தா... இது ஒரு வேதகால அகத்தின் குறியீடு. இதன் பழைய மறைபொருள் சீன தேசத்துடையது. பன்டைய சீனாவில் லாவோட்சு என்ற ஞானி வாழ்ந்தார். அவர், இந்தியாவில் புத்தர் வாழ்வதற்கு முன்னேரே வாழ்ந்தவர். அவர் "தாவோ" என்ற சொல்லை பயன்படுத்தினார். அவர் முதலும், கடைசியுமாக எழுதிய புத்தகம் "தவோ த ஜிங்" அதில் அவர் சொல்லிருப்பார், "இரண்டுக்கும் நடுவில் இருப்பது தாவோ" இந்த தாவோ என்பதை நீங்கள் கடவுள், ஆண்டவன், இறைவன், இயற்கை, பேய், நாய், என்று கூட அழைத்துகொள்ளலாம். என்னடா கடவுளை போய் நாய் என்று சொல்கிறான் என்று நினைகிறிங்களா..! ஒருவிதத்தில் கடவுளும், நாயும் ஒன்ணுதான் எப்படி தெரியுங்களா, கடவுளை நாம் ஆங்கிலத்தில் எப்படி எழுதுவோம் GOD என்று இந்த வார்தையே அப்படியே திருப்பி போடுங்க, இப்போ என்ன வருது, 'DOG'. ஆம், எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன் என்கிறோம், பின் அவன் ஏன் நாயிலும் இருக்க கூடாது. நாயகவும் இருக்க கூடாது. இருக்கலாம் இல்லையா.?

இயற்கையில் இரண்டு விதி என்றும் மாறதது. எந்த இரண்டு விதியை நாம் மதித்து, புரிந்து நடந்தால் நாம் தாவோ தன்மையில் இருப்போம் அதாவது கடவுள் தன்மையில் இருப்போம்.
தாவோ இரண்டுக்கும் நடுவில் வாசம் செய்கிறது. அந்த இரண்டு எது என்ற ஒரு கேள்வி வரும். அந்த இரண்டிரண்டு இன்பம், துன்பம்; பகம், இரவு; மேடு, பள்ளம்; நல்லது, கெட்டது; வருமை, செழுமை; ஆண், பெண்; சக்தி, சிவன்... இப்படியே உதாரணமாக தாவோவைப்பற்றி கூறலாம். ஒரு ஆணும், பெண்ணும் இணையும்போது ஒரு புதிய உயிர் உண்டாகிறது. ஒரு மின்சார விளக்கு எரியவேண்டும் என்றால் அங்கு நேர் ஆற்றலும், எதிர் ஆற்றலும் வேண்டும் அப்போதே பல்பு பளிச்சென்று எரியும்.



இந்த இரண்டு தன்மையைதான் புத்த மதத்தில் ஜென் என்கிறார்கள் ஜென் என்பது இரண்டுக்கும் நடுவில் வாழ்வது. நாம் ஒரு வேலை செய்வோம் அங்கு செயல் இருக்கும் அதனுடன் சேர்ந்து மனமும் இருக்கும் ஆனால் ஜென்னில் தன்மையில் செயல்படும்போது செயல் இருக்கும் ஆனால் செயல்படுவது அதாவது மனம் இருக்காது. மனம் எங்கு இல்லையோ அங்கு கடவுள் வாசம் இருக்கிறது. அதுதான் இயற்கையின் அழகு. இன்றும் ஜப்பானில் இருக்கும் ஒவ்வொரு கலைபடைப்பும் இயற்கையின் அழகு, அங்கு செய்யும் கலை படைப்பில் மனமே இருக்காது. யாவற்றிலும் அழகே இருக்கும் அவ்வழகு ஜப்பானியர்களுக்கு போதி தர்மர் அருளிய ஜென்னை முழுமையாக உள்ளது. அந்த முழுமையிலே வாழ்கிறார்கள். ஜாப்பானியர்கள் சாதரணமாக 100 வயதை கடந்த முதியோர்கள். அதிகம். உலகதிலே அதிகமான முதியோர்கள் கொண்ட நாடு ஜப்பான்தான் அந்த அளவு அவர்கள் எந்த வித இறுக்கமும் இல்லாமல் இயல்பாய் வாழ்கிறார்கள். இந்த இயல்பே ஜென் அதுவே அவர்களின்  நீண்ட வாழ்வாதாரமாக இருக்கிறது.

இதை இந்துமதம் மிக எளிமையாக விளக்குகிறது. "கடமையை செய் பலனை எதிர்பார்காதே.."என்று, நமக்குதான் எளிமையாக சொன்னால், எதுவும் கஷ்டமாக எடுத்துகொள்வோமே... ம்னம் எதிர்பார்காமல் கடமை செய்யும்போது அங்கு பலன் தானாக நிகழும். இதைதான் கிருஸ்துவ மதமும் போதிக்கிறது "தட்டுங்கல் திறக்கபடும், கேளுங்கள் தரப்படும்' என்று, ஆனால் கிருஸ்துவர்கள் இதன் வார்தையின் பொருளையே மாற்றிவிட்டார்கள். ஏதோ ஆண்டவனிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்று ஆசைகொண்டு கேட்கிறார்கள். அந்த நடுனிலையில் இருந்து உணரும் போது, தட்டும்போது, கதவும் திறக்கும். அங்கு அவர்களுக்கு ஞானத்தின் மார்கம் புலப்படும். இதுதான் கிருஸ்து சொன்னதுகான உட்பொருள்.

நாமத்துல ஆரம்பித்து ஏசுவரை நீண்டுவிட்டது ஆனால் இதில் ஒன்று நீங்க கவனிச்சிங்கன்னா, நான் சொன்னது எல்லாம் ஒரே மையத்தை பற்றியதாகதான் இருக்கும். அதுதான் லாவோட்சு அருளிய "தாவோ" அதுவே இரண்டு வெள்ளை கோட்டுக்கு நடுவில் உள்ள சிவப்பு கோடு அதுவே நாமம். இதுதான் நாமத்தை பற்றி மறைபொருள் இருந்த ரகசியம். இதில் நடுவில் இருக்கும் சிவப்பு கோடுவை "தாவோ" என்கிறோம் ஆனால் அது ஏன் சிவப்பில் இடுகிறோம் என்றால், சிவப்பு, நெருப்பின் நிறம். நம் நெற்றியில் ஆறாவது சக்கரம் அஞ்ஞ சக்கரம் உள்ளது. அதுதான் சிவனின் நெற்றிகண், சிவநேத்ரா என்று இந்துமதம் சொல்கிறது. அந்த நடுனிலையானதில் இருந்து சக்கரம் சுழலும் போது, மூன்றாவது கண் திறக்கிறது என ஞானியர்கள் சொல்கிறார்கள். அந்த மூன்றாவது கண் திறக்கும் போது எல்லா மறைபொருல் ரகசியங்களும் ஒரு மனிதனுக்கு தெரியவரும், அப்போதே அவன், தெய்வத்திற்கு நிகராகிறான். இதன் அடிபடையில்தான் சொன்னார்கள். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று, அந்த மூன்றாவது கண், ஆஞ்ஞ சக்கரத்தை அடையாலபடுத்துவதற்கு, மனம், அந்த சிவப்பு குறியீடில் ஒருனிலைப்படுவதற்கு, இரண்டுக்கு நடுவில் வாழ்வதற்குதான் அந்த சிவப்பு கோடு இடுகிறார்கள். இதுதான்  நெற்றியில் இரண்டு கோட்டுக்கு நடுவே மூன்றாவது கோடாய் சிவப்பு கோடான நாமம் வந்த கதை.

ஒரு நாத்திகனால்தான் உண்மையான ஆன்மிகம் எதுவென்று உணர்ந்து, அதை வெளிபடுத்த முடியும். ஏனென்றால் அவன் திறந்த மனதுடன் செயல்படுவான். அவனிடம் கேள்வி கேட்கும் திறன் இருக்கும். பகுத்தறிவுடன் சிந்திப்பான். ஆனால் ஆலைய வழிபாட்டில் உருவ வழிபாடு கொண்டு, வாழ்வில் அதிக ஆசை கொண்டு, பல மூட நம்பிக்கைகளை சுமந்துகொண்டு, வாழ்வே பாரம் என இருக்கும் போலி ஆன்மிகவாதியால் உண்மையான ஆன்மிக மறைபொருள் ரகசியத்தை வெளிபடுத்த முடியாது.

நாத்திகத்தை உணர்ந்த பிறகு ஆத்திகத்தை உணருங்கள். பின் இரண்டு நிலையும் கடந்து வாருங்கள். அங்கே தாவோ(கடவுள்) வாழ்கிறது. உண்மை மறைபொருள் அதுவே...!

அருட்பெருஞ் ஜோதி...!
அருட்பெருஞ்ஜோதி...!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி...!        



என்றும் நட்புடன்:


Saturday, February 7, 2015

லுங்கி துகிலுரிக்கபட்டது...!





சில நாட்கள் முன் எங்க வீட்டு அருகில் இருந்த ஒரு பலசரக்கு அங்காடிக்கு(சூப்பர் மார்கெட்) போனேன். வீடு பக்கத்தில்தானே உள்ளது என்பதால் லுங்கி கட்டிக்கொண்டுதான் போனேன். நான் போகும்போதே, அரை டவுசர் போட்டுகொன்டு ஒரு வெள்ளகாரரும் என் பின்னே வந்தார். நான் உள்ளே போய் பொருட்கள் வாங்கி ரசிது போடு இடத்தில் வந்து நின்றேன். ரசிதுபோடுபவர் என்னை ஏற, இறங்க பார்த்தார். அவரின் ஒருவித பார்வை என்னை உள்ளுக்குள் அம்மணமாக்கியது. அப்படி ஒரு பார்வை ஆனால் என் பக்கத்திலே ரசிதுக்காக காத்திருந்த வெள்ளக்காரரை ஒரு சிரிப்புடன், மரியாதையாகதான் பார்த்தார். அம்மரியாதை, அவரின் சிரிப்பிலே தெரிந்தது. "இது என்னடா கொடுமை, லுங்கிய விட டவுசருக்கு அதிக மரியாதையா..!?" என எண்ணி அவ்வங்காடியைவிட்டு நான் வெளியேறியேன்.

நாம் வாழும் சமூகத்தில், "ஆள் பாதி ஆடை பாதி" என்ற சொல்லாடல் எல்லாம் வெறும் வார்தைகளாகதான் இருகின்றன. இதைப்பற்றி எனக்கு தெரிந்த நபரிடம் பேசும்போது அவர் சொன்னார், "யேம்பா, ஒருத்தன் உள்ளூரிலே கோவனம் கட்டிருந்தாலும் அவனுக்கு மரியாதைதான் ஆனால் வெளியுரில் அந்த மரியாதை அவனுக்கு கிடைக்காது.. அங்கு நவநாகரிக ஆடைக்கே மரியாதை" என்றார். அவர் சொன்னதில் பாதி உடன்பாடு இருந்தாலும் முழு உடன்பாடில்லை. இச்சமூகத்தில் ஆடையைவிட மனிதர்களின் தோலின் நிறங்களே முதன்மைபடுத்தபடுகிறது. ஏனென்றால் எனக்கு அங்காடி அனுபவமே அதை உணர்த்தியது. எனக்கும் திறந்த மார்புடன் அண்ணா சலையில் (மவுண்ட் ரோட்டில்) வண்டி ஓட்டிகொண்டு செல்லவேண்டு என்று ஆசை. இதற்காக நான் நெற்றியில் நாமத்தை, தோலில் பூனூலை மாட்டிக்கொண்டு செல்லமுடியுமா.? சாதாரணமாக செல்வதற்கும், அடையாலம் கொண்டு செல்வதற்கும் இச்சமூகம் அதிக வித்தியாசம் வகுத்துள்ளதே..

தமிழரின் பாரம்பரை உடைகளில் லுங்கியும், வேட்டியும், ஆனால் இதை இங்கு கட்டிகொண்டுபோனால் நம் மக்களே நம்மை வேற்று மனிதர்களாக பார்கிறார்கள் என்பதுதான் நமகெல்லாம் வேதனையாக இருக்கிறது. நம்ம ஆளுங்க மனதில், "வெள்ளகாரன் ஜட்டி போட்டுக்கொண்டுவந்தாலும் அவன் டீசன்ட்டாகதான் இருப்பானாம். ஆனா, நாம் லுங்கி கட்டிகொண்டு போனால் அது அவனுக்கு கேவலமாக தெரிகிறதாம். இப்படிதான் வேட்டிக்கட்டிகொண்டு போன ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியும், அவருடன் சென்ற வழக்கறிஞ்ரையும் சென்னை கிரிகெட் கிளப் உள்ளே விட மறுத்தது. இது ஊடகத்தில் ஒரு பெரிய விவாதமாகி, இதைப்பற்றி முதலமைச்சரே சட்டசபையில் பேசும் அளவுக்கு, அப்பிரச்சனை சென்றது. தமிழனனின் பாரம்பரிய உடை இன்னும் பல பேருக்கு நகைப்புக்குரியதாகதான் தெரிகிறது ஆனால் வெள்ளகாரன்கிட்ட இந்த நகைப்பை நாம் வெளிபடுத்தமுடியவில்லை. ஏன்னா, அவன் செவத்த தோலுக்கு சொந்தகாரனாம். செவத்த தோலுக்கு மயங்கிதான் அன்று நாட்டை கொடுத்தோம். இன்றும் உலகபொருளாதார மயமாக்கலால் என்ற பெயரில், அன்னீய முதலீட்டால்  மீண்டும் நாட்டை அவனுக்கு அடமானம் வைக்கிறோம்.  

ஆப்பிரிகர்களுடையே, வெள்ளையர்களை பற்றி ஒரு சொல்லாடல் உண்டு. "வெள்ளையர்கள் இங்கு வரும்போது அவர்களிடம் பைபிள் இருந்தது. அவர்கள் எங்களை ஜபம் செய்ய சொன்னார்கள். நாங்கள் ஜெபம் செய்தோம். ஜபம் செய்து நிமிர்ந்து பார்த்தோம் அவர்களிடம் நாடு இருந்தது எங்களிடம் பைபில் இருந்தது" அவன் பிடித்த நாடுகளில் எல்லாம் முதலில் மதபிரசங்கமாகதானே உள்ளே  நுழைந்தான் பின் இங்கு நிலவிய அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலையை பயன்படுத்தி தன் ஆட்சியை அல்லவா விரிவுபடுத்தினான்.

நடிகர் மணிவண்னன் ஒரு படத்துல நகைச்சுவையாக சொல்வார் "வெள்ளையா இருக்கவன் பொய்சொல்லமாட்டாண்டா.." என்று, அது என்ன வெள்ளைக்கும், உண்மைக்கும் அப்படி ஒரு தொடர்பு என்று எனக்கு தெரியவில்லை... அப்போ கருப்பா இருப்பதெல்லாம் கலங்கபட்டதா...!?

பல்லியை திருப்பிபோட்டால் வெளுத்துபோன ஒரு நிறம் இருக்குமே அதுபோல நிறம்தான் வெள்ளகாரன் தோலின் நிறம். அவன் நாட்டுல சூரிய வெளிச்சமே படாமல் இருப்பதால் அவன் தோலில் சுரக்கும் மெலன் என்ற திரவம் குறைவாக சூரக்கும் அதனாலே அவ்வெளுத்துபோன நிறம் வருகிறது. உடலில் ஒன்று குறைவாக சுரக்கிறது என்றால் அது உடலில் குறைபாடுதானே. அக்குறைபாடாக உள்ளது எப்படி நமக்கு எல்லாம் ஆரோக்கியமாக தெரிகிறது.? இதில் நம்மை விட அவன் குறை, அவனுக்கு நல்லாவே தெரிகிறது அதனால்தான் அவன் உடல் கருத்துபோக நாளேல்லாம் சன் பாத் என்ற பெயரில் வெயிலில் படுத்துகொண்டுயிருகிறான் ஆனால் இங்கு அந்த பிரச்சனையே இல்லை வெயில் இங்கு போதும் போதும் என்ற அளவுக்கு வெலுத்து வாங்குகிறது இதனால் நம் தோலில்,மெலன் அதிகம் சுரக்கிறது. மெலன் திரவம் அதிகம் சூரப்பதால் தோல் கருப்பு நிறமுடையதாக மாறுகிறது. இன்னொரு தகவல் தோல் கருப்பாக இருப்பதால் புறஊதா (அல்ட்ரா வாயிலட்) கதிர்கள் கருத்த தோலை அதிகம் தாக்காது. இதனால் தோல் புற்று நோய் வருவது பெருமளவு தடுக்கபடுகிறது. இதில் இன்னொரு பயன் என்னவென்றால் சூரிய கதிர்கள் பரவலாக இருக்கும் நாட்டில் வைட்டமின் டி குறைபாடு இருக்காது என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். இந்த வைட்டமின் டி சத்து, உடம்பில் சேரும் பல முக்கிய சத்துகளுக்கு ஆதார சக்தாக இருக்கிறது என்கிறார்கள். இப்படி போகிறது தோலை பற்றிய ஆய்வு இன்னும் சொல்லிகொண்டும் போகலாம்.

நான் கேள்விபட்ட ஒரு கற்பனை கதை, கடவுள் மனிதர்களை படைக்கும் போது மனிதர்களை சரியாக சுடாமல் விட்டதால் வெளுத்த மனிதர்களாக வ்ந்தார்களாம் அவர்களே வெள்ளையர்களாம். சரியாக சுடாத மனிதர்களை எண்ணி வருந்திய கடவுள், "இம்முறை சரியாக சுடுவோம்" என்று, பின் வந்த மனிதர்களை அதிகமாக சுட்டுவிட்டாராம் அதனால் அவர்கள் கருப்பின மக்களாக(நீக்ரோக்களாக) வந்தார்களாம். மீண்டும் கடவுளுக்கு பெருத்த சோகம், "இந்த முறை படுகவனமாக செயல்படுவோம்" என நினைத்து சரியான பதத்தில் சுட்டாராம் அவர்களே தமிழர்களாக வந்தார்களாம்.

தமிழர்கள் நிறமே கருப்புதான். வெள்ளை இங்கு ஆரியர்கள் மூலமாக குடியேரிய நிறம் அது ஒருவிதத்தில் சரியாக வேகாத தோசை ஆனால் அந்த வேகாத தோசையைதான் மக்கள் விரும்பி வரவேற்கிறார்கள். வெள்ளைகாரன் ஏற்படுத்திவிட்டு சென்ற காலனி ஆதிகம், நிற அடிமைதனம் இன்னும் இம்மண்ணை விட்டு நீங்கவில்லை. அது சமூகத்தில், ஜாதி அடிபடையிலும், மத அடிபடையிலும், பொருளாதார அடிபடையிலும் ஒவ்வொரு நாளும் வெளிபட்டு கொண்டுதான் இருக்கிறது.

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...! என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்..! என்ற பாரதியின் பாடல் வரிகளே என் நினைவில் வந்துவிட்டு செல்கிறது.