Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Tuesday, May 5, 2015

கற்பனைதான் ஆனால் உண்மை...!


ஒரு கற்பனை...!

நீங்க தனியா ஒரு மலைமேல் ஏறிபோரிங்க..  நீங்க போகும் பாதை ஒரு மூன்றடி அளவுதான் இருக்கும். வலதுபக்கம் மலைசரிவு, படுபாதளமாக இருக்கிறது, விழுந்தால் அவ்வள்வுதான். இடது பக்கம் செங்குத்தாக இருக்கிறது. அதில் ஏறவே முடியாத நிலை மீறி ஏறினால், கற்கல் சரிந்து விழும். இப்படி உயர்ந்தும், அடந்தும் காணப்படும் மலை மேல் ஏறி போறிங்க.. அப்படி போகும்போது உங்க முன்னாடியும் யாரும் வரவில்லை. பின்னாடியும் யாரும் இல்லை. அங்கு நீங்க மட்டும்தான் தனியா போறிங்க...

இப்படி போய்கொண்டிருக்கும்  நேரத்தில் தூரத்தில் நாய்களின் உருமலுடன் குரச்சலாக மாறி  நீண்ட சத்தமாக கேட்கிறது. சிறிது நேரத்தில் அச்சத்தம் உங்க அருகிலே கேட்கிறது. நீங்க நாய்களை பார்த்துவிட்டீர்கள். நல்ல கொழு கொழுத்த நாய்கள், அது பத்துக்கு மேலவே இருக்கும். அதுங்க உங்களை நோக்கிதான் ஓடிவருகிறது. இப்ப நீங்க, பின்னாடியும் ஓடமுடியாது, முன்னாடியும் நகரமுடியாது. ஒரு பக்கம் படுபாதாலமான பள்ளம். இன்னோரு பக்கம் செங்குத்தான மலை, இப்ப என்ன செய்விங்க....!? நாய்கள் உங்கள் அருகிலும் வந்துவிட்டது.

நீங்க என்ன செய்விங்க என்று எனக்கு தெரியாது. ஆனா, நான் என் பயத்தை முழுவதும் அனுமதித்து அதை அமைதியாக பார்த்துகொண்டிருந்தேன். ஆம், நான் மேலே சொன்னது கற்பனை இல்லை... இது எனக்கு நடந்த உண்மை.



                                              (இதுதான் அந்த மலை பாதை)


சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம் என்று நினைத்து போனேன். கிரிவலம் எல்லாம் முடித்து ரமணா ஆஷ்ரம்  போனேன். அது காலை ஆறு மணி இருக்கும். ஆஷ்ரம் எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு பின்புறம் போனேன். அங்கு ஒரு பலகையில் விருபாட்சி குகை செல்ல இந்த வழியாக செல்லவும் என்றிருந்தது. விருப்பாட்சி குகை ரமணர் பல வருடங்கள் தவம் செய்த இடம். ஞான அடைந்ததும் அந்த இடம்தான் என்று சொல்கிறார்கள். ரமணாஷ்ரம் அடிவாரத்தில் இருந்து, விருப்பாட்சி குகை இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.


(இதுதான் ரமணர் தவம் செய்த விருபாட்சி குகை. அக்குகையின் அமைதி, வார்தைகளில் சொல்ல அப்பார்பட்டது. அக்குகைக்கு நீங்க செல்ல வழி, கோயிலின் பின்பக்கமாகவும் செல்லலாம். ரமண ஆஸ்ரமத்தில் இருந்தும் செல்லலாம்.)     

 நான் மலை மேலே செல்லும் போது அங்கு ஆள்  நடமாட்டம் இல்லாமல் இருந்தது. மேலே செல்ல செல்ல எனக்கு அது மிக அற்புதமான காட்சியாக இருந்தது.

சூரியன் மெல்ல வானில் உதிக்கும் நேரம், பறவைகளின் "கீச், கீச்" என்ற சத்தம், மெல்லிய சில்லென்று வந்த தென்றல் காற்று, கால் வைத்து நடந்த பாறைகளின் சொர சொரப்பு. இப்படி சின்ன சந்தோசத்தை அனுபவித்து கொண்டே மேலே ஏறஏறதான்... அங்கு பின் தொடர்ந்த மர்மமும் எனக்கு புரிந்தது. அங்கு நிலவிய நிசப்தமான அமைதியே அந்த மர்மத்தை கொடுத்தது. அடுத்து அங்கு என்ன நடக்க போகும் என்று தெரியாமல் இருந்தது. ஒருவேளை என்னவேண்டுமானாலும் கூட நடக்கலாம் என்றும் இருந்தது. அது எனக்குள் ஒருவித பயத்தையும் சேர்த்து கவ்விகொண்டது.

நான் அதை அனுமதித்தேன். வெளியே பார்த்த சந்தோசத்துடன், உள்ளையும் ஏற்பட்ட பயத்தையும் பார்த்துகொண்டேதான் சென்றேன். அப்போதுதான் அது நடந்தது. ஆம், கொழு கொழுத்த நாய்கள் குலைத்துகொண்டே என் அருகில் வந்துவிட்டது. ஒரு நாயாக இருந்திருந்தால் விரட்டி விட்டுருக்கலாம். பத்து நாய்கள், அதுங்க என்னை அடித்து காலி செய்வதற்கான போதுமான பலமும் அதுங்ககிட்ட இருந்தது. அதுங்க, என்ன கடிக்க கூட வேண்டாம் மொத்தமா சேர்ந்து என்னை தள்ளிவிட்டிருந்தாலும் போதும், நான் பரலோகம் சென்றிருப்பேன். அதுங்ககிட்ட நான் என்ன செய்திருக்க முடியும்.!?

எதுவேண்டுமானாலும் நடக்கட்டும் என்று என் பயத்தையும் கவனித்துகொண்டே அமைதியாக நின்றுவிட்டேன். என்னை நோக்கி வேகமாக ஓடி வந்த நாய்கள், என்னை கடந்து சென்றுவிட்டது. பின்னால் வந்த ஒரு நாய் மட்டும் என்னருகில் நின்றுவிட்டது. சிறிது நேரம் அது என்னையே ஏறிட்டு பார்த்து கொண்டிருந்தது. பின் மெல்ல வந்து, என்னை நன்றாக முகர்ந்து பார்தது. நானும், பார்கட்டும் என்று விட்டுவிட்டேன். சிறிது நேரம், அது அங்கு அமைதியாக இருந்து. பின் அந்நாயும் சென்றுவிட்டது. அப்போது என்னை கவ்விய பயம் காற்றில் மெல்ல கரைந்துகொண்டிருந்தது.

சித்தர்கள், காக்கா குருவி என்று பல உயிர்களாக மலையில் உலாவார்கள் என்று கேள்விபட்டிருக்கேன். என்னை முகர்ந்து பார்த்த நாய் கூட   சித்தராக கூட இருந்திருக்கலாம். "ஒருவேலை இவனும் என்னை போல நாயாக இருக்கிறானே..." என்றுகூட நினைத்திருக்கலாம். யார் அறிவார்.!?

ஆபத்து என்று உணர்ந்தும், அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் ஒரு வித மர்மத்துடன் செல்வதில்தான் நாம் காணும் கடவுள் வாழ்கிறார். உங்க நாடி நரம்புகள் முருக்கேரி மரண பயம், உங்களை தொற்றிகொள்ளும்போதுதான் இருக்கிறது. ஆன்மிகத்தின் உச்சம்....!

மரணம் உங்கள் அருகில் வரும்போதே அது தெரியும். அதுபோல ஏதுமற்ற, எந்த முயற்சியும் பலன் அளிக்காத நேரத்தில் மரண அனுபவம் உங்க அருகில் வந்தால், எந்த வீண்முயற்சியும் இல்லாமல் அதனிடம் சரணடைந்து விடுங்கள். அப்போது நீங்கள் இதுவரை காணத பயமாக அது இருக்கும். அப்போது நீங்கள் அதன் அடியின் இருட்டு வரை சென்றிருப்பீர்கள். அதுவே பயத்தின் முடிவான இருட்டாகும். அதுவே மரணத்தின் முடிவு. அவ்விருட்டின் பயம் நீங்கிய பின் எந்த பயமும் உங்களை ஒன்று செய்துவிட முடியாது. பின் நீங்கள் புதியதாக பிறந்தாக உணரலாம். ஒருவேலை இறந்தாலும் முழு பிரஞ்னையுடன்(விழிப்புடன்) இறக்கலாம். அது மீண்டும் பிறக்காமல் பிறவி பெருங்கடலை நீந்தியும் சென்றிருக்கலாம்.



என்றும் நட்புடன்:

Thursday, March 12, 2015

என் மனமாக நீ இருந்தாயே...!




நான், நான் அல்ல.. எல்லாம் நீதான் ஐயா,

எங்கள் தாவோவே, பிதாவே, அல்லாவே, புத்தரே... என் மனமும் நீதான் ஐயா,

நீயே கடலாக இருக்கிறாய் அதில் நீர் குமிழியாய் எங்கள் மனம் எழுகிறது. அதில் ஆசை எனும் மாயை நீதானே பிரிதிபளிகிறாய். அது வெறும் மாய ஒளிதானே என புரியாதவர் அழுகிறார், ஆர்பரிக்கிறார், ஓடுகிறார், எல்லா வினையும் செய்கிறார், பின் மரணிகிறார். அவருக்கு கால சக்கரம் மீண்டும் சூழல்கிறது. அவர் மீண்டும் பிறக்கிறார்.

மாய ஒளி புரிந்தவர் அமைதியாகிறார். அதை வேடிக்கை பார்கிறார். நீர்குமிழும்(மனமும்) நீதான் என்று புரிந்தவரிடம் உன் திருவிளையாடல் நிறுத்தபடுகிறது. நீர்குமிழ் உடைகிறது.  உன்னில் நான் கலக்கிறேன். நீயே, நீ, உன்னில் கரைத்துகொள்கிறாய்.

நீதான் ஐயா நான், உன்னை புரிந்துகொள்ள இப்பிறவில் எனக்கு ஒரு சந்தர்பம் கொடுக்கிறாய். நான் வெற்று மூங்கிலாய் இருகின்றேன் நீதான் ஐயா, அதில் இசையாய் இசைகிறாய். இங்கு என் முயற்சி எதுவும் இல்லை, எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு எதாவது தெரிந்தது என்றாலும் அதுவும் உன்னில் இருந்து வந்ததே இதில் என் பங்கு எதுவும் இல்லை. உன்னிடம் சராணகதி ஆவது மட்டுமே என் பங்கு... பார்க்கும் இடம் எல்லாம் நீதானே ஐயா... நீயே கொலை செய்கிறாய், நீயே கொலைபட்டு கீழே விழுகின்றாய், நீயே கொலைகான கருவியாகவும் ஆகின்றாய். எல்லாம் வெவ்வேறானது அல்ல எல்லாம் நீயே, ஒன்றாகவே இருக்கின்றாய்.

நான் உன்னை அடையாளம் கண்டேன்.  நான் உன்னை கண்டு சிரித்தேன். நீயும் என்னை பார்த்து சிரித்தாய்.

என் மனமாக நீ இருந்தாயே... நீயே ஆசைபட்டாய், நீயே கோவபட்டாய் ஆனால் நீ, எனக்கு அறிவென்ற கயிற்றையும் கொடுத்தாய் அதில் நான், மனம் என்ற பாதள கிணற்றில் இருந்து மேலே ஏறிவந்தேன். உன் இன்முகம் கண்டேன். நீ எனக்காக அங்கு காத்துகொண்டுதான் இருந்தாய்.

என் தந்தையையே, தாயே, உன்னை எப்படி இவ்வளவு நாள், நான் காணாமல் இருந்தேன். இனிமேல் நான் உன்னைவிட்டு பிரியமாட்டேன். நீயும் என்னை விடமாட்டாய் என்பதை நான் அறிவேன்.  

மேலும் நான், உன்னை அணைத்துகொள்ள காத்திருக்கிறேன். நான் அறிவேன் அது சீக்கிரம் நிகழும் என்று. என் பிரபஞ்ச இருப்பே.... என் போலவே உன் பிள்ளைகளும், நீ உண்டாக்கிய நீர்குமிழ் பாதள கிணற்றில் அள்ளளுற்று இருக்கிறார்கள். அவர்களையும் சீக்கிரம் மேலேற்ற வேண்டும். என் அம்மையப்பனே, என் அருட்பெருஞ்ஜோதியே, என் தாயுமானவே... எங்களை காத்தருளும். உன் கருணைக்கு ஈடுயிணையில்லை....

என் உடலாகவும், உயிராகவும், என் மனமாகவும் ஆகின்றாய். பின் வாழ்கை படகை உன்னில் செலுத்துகின்றாய் அதில்தான் எத்தனை எத்தனை அச்சம், ஆசை, எண்ணிலடங்கா துன்பம் என்ற புயலாக அல்லவா நீ வீசுகின்றாய் உன்னை அடையாளம் கண்டு புரியாதவர், அப்புயலில் சிக்கி விழுகிறார்கள். புரிந்தவர்கள் படகை செலுத்தி உன் கரையில் வந்து சேர்கிறார்கள். எனக்கும் உன் கரை தெரிந்துவிட்டது ஐயா, என் தாவோவே நீ எனக்காக(உனக்காக) இவ்வளவு நாள் காத்திருக்கின்றாய். நீயே என்னை பெற்றெடுத்தாய் நீயே என்னை வளர்த்தாய் நீயே இப்போது என்னை அனைத்துகொள்வாய். உன்னில் நான் கரைவேன்.

உன்னில் என்னை,
உணரவைக்க,
என்னில் ஆடுகிறாய்..
எண்ணிலடங்காமல் ஆடுகிறாய்...!

நான் புதிய பரிமானம் கொண்டேன் உன் கருணையால்...!
உண்மையான அன்பு, கருணை, நேசத்தை, நான், உன்னால் அறிந்தேன்.
நான் என்பது கூட இங்கு தவறாகும் நீயே நீ அறிந்தாய்.

        

என்றும் நட்புடன்:

Sunday, March 1, 2015

கேட்டா அப்படிதான் சொல்வோம்...!



 இன்றைய பரபரப்பு உலகத்தில் எதையும் ஆரஅமர உட்கார்ந்து பேச யாருக்கும் நேரம் இல்லை (கேட்டா அப்படிதான் சொல்வோம்) உருபடியா எதையாவது செய்யவதென்றாலும் அப்படிதான், ஏன் சாப்பிட கூட  நேரம் இல்லாமல்தான் பல பேர் தவிக்கிறார்கள். இப்படி இயந்திர வாழ்கையாய் மாறிபோனது. இதில், உங்களுக்கு, இலக்கிய வாசிப்பு இருக்கா... என்றால், யோய் போய்யா, போய் பொழப்ப பாருய்யா... இலக்கியமாவது, மண்ணாகட்டியாவது...  எனக்கு பேப்பர் படிக்கவே நேரம் இல்ல,  இதுல இலக்கியத்தை வாசிகிறதா.?என்று சலித்து கொள்வார்கள். அப்படியே   ஒருவேலை அவர்களுக்கும் கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றில் படிக்க விருப்பம் இருந்தாலும் அதன் வார்த்தை நீளம், பொருள் அறியாத நிலையால் படிக்கும் பொறுமை இழந்து அதை விட்டே வெளியே வந்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது மீண்டும் அவர்களை இலக்கிய வட்டத்தில் வரவைப்புது சிரம்ம். இதே கொடுமைதான் எனக்கும் பல எழுத்தாளர்களால், நாவல், சிறுகதை என்று சொல்லி நாவலாய் எழுதினதை எல்லாம் படித்துவிட்டு இலக்கியத்தை விட்டே டியிருக்கிறேன்.
      நாவலை பொருத்தவரை எப்படி என்றால், அது ஒரு கிரிகெட்டில் நடக்கும் டெஸ்ட் மேட்சு போல, ஆடிட்டே இருக்கலாம், வேடிக்கை பார்கிறவனை பற்றியே கவலையே இல்லாம... இப்படிதான் நாவல் எழுதும் எழுத்தாளர்கள் படிக்கிறவன் சலிப்படைவானே என்று யோசிக்கவே மாட்டாங்க, அவங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு வார்தையை வஞ்சகம் இல்லாம இழுத்துட்டு போய் முடிவும் தெரியாம, ஆரம்பமும் புரியாமா.. ஏதோ ஒரு திக்குல போய் முடிப்பாங்க...
     இதில் நாவல் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு சிறுகதையாய் வந்தது.  அது கிரிகெட் ஒன்டே மேட்சு போல, அதுவும் பார்க்க இப்போது ஒருவித சலிப்பு ஏற்பட்டுகொண்டிருக்கிறது. இப்போது அது டி20 மேட்சாய் நடக்குது. அது கிரிகெட் ரசிகர்க்க்கு விருவிருப்புக்கு பஞ்சமில்லாம இருக்குது.
     இதே டி20 போலதான், சிறுகதையின் வடிவம் இப்போது சிறுசிறுகதையாய் சுருங்கி போனது. இப்போது எல்லாம் வாசகர்கள் தெளிவாக இருக்காங்க... அவங்க தெளிவு எல்லாம் டிவில பல மெகா சிரியல் பார்த்தே வந்துடுச்சு.... அதனால் வார்த்தை ஜாலம், என்று வார்த்தையை இழு இழு என்ற இழுத்தால் எழுத்தாளர்கள் எப்போதும் கல்லா கட்ட முடியாது. அதனால் தேவைக்கு ஏற்றார் போல் இலக்கிய வடிவத்தையும் மாற்றி கொண்டே போயாக வேண்டும்.
       “சுமை வேண்டாம் சாரம் மட்டுமே போதும்” என்று வாசகர்கள் தெளிவாக இருக்காங்க...
     தமிழில் இந்த சிறுசிறுகதைகளை எழுத்தாளர் சுஜாதா இருக்கும்போதே அவர் கையாண்டு எழுதிருகிறார்.  எனக்கும் அதுபோல சிறுசிறுகதைகள் எழுதனும் என்று அப்போது இருந்தே ஒரு ஊந்துதல் இருந்தது அதனால் நேரம் கிடைக்கும்போது எழுதியதை எல்லாம் மொத்தமாக தொகுத்து இங்கு வெளியிடுகிறேன். படித்து உங்கள் மேலான கருத்துகளை தெரிவியுங்க்ள்.
நன்றி...! 


                              மூன்று வார்த்தைக் கதை

தலைப்பு: பல் தேய்ங்க.. என்றாள் மனைவி.
  கதை :  பல்செட் கீழே விழுந்தது.



தலைப்பு: ‘அவனுக்கு தலைவார ஆசை
  கதை : கழன்று விடுமோயேன்று பயம்



தலைப்பு: ‘கடற்கரை
   கதை: அங்கு அஸ்திக் கரைத்துக்கொண்டிருந்தார்கள்.



தலைப்பு: ‘காதல்
   கதை: “கருவை கலைச்சுடு.. என்றான்.



தலைப்பு: ‘கன்னீத்தீவு
   கதை: சிந்துப்பாத்தை, சிங்கம் பார்த்தது.



தலைப்பு: ‘கல்யாண மேடையில் அரசியல்வாதி
   கதை: “தலைவர் வாழ்க, வாழ்க..!



தலைப்பு: ‘கல்லூரி
   கதை: “மச்சி, ஃபிகர் சூப்பர்..



தலைப்பு: ‘தாய்மை
   கதை: தாரம் வந்ததும் போனது.

                                                        
தலைப்பு: ‘பார்க் பெஞ்சில் காதலர்கள்
    கதை: “எங்க வீட்டுக்காரரு பார்த்துட்டாரு... 



தலைப்பு: ‘காவல் நிலையத்தில் திருடன்
   கதை: போலிஸ், “மாமூலே கொடுப்பதில்ல...



தலைப்பு: ‘குடும்பத்துப் பெண்    
   கதை: “இன்னிக்கு மாமியார் தூங்கும்போது..!?



தலைப்பு: 2075-ல் கணவன் மனைவி
   கதை:“நாளையோட ஒப்பந்தம் முடியுது..”



தலைப்பு: ‘கட்டிட மேஸ்திரி
   கதை: “சித்தாள் எப்போ வருவா..?



தலைப்பு: ‘வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருகை
   கதை: சதுர அடி 3000/-



தலைப்பு: ‘ஆம்புலேன்ஸ்
   கதை: போக்குவரத்து நெரிசலில் மூச்சு..!?
     


தலைப்பு: ‘ஊழல் வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு
   கதை: “தள்ளுபடி வழக்குக்கு மட்டும்...


தலைப்பு: ‘நடுனிசி இரவு
   கதை: முனங்கள் சத்தம் கேட்டது.



தலைப்பு: ‘கல்யாணம் ஆனவன் வாழ்வு
   கதை: “நான் பேச்சுலர்... என்றான்.



தலைப்பு: மாற்றாந்தாய்
   கதை: “தம்பியை மட்டும் கொஞ்சுகிறாள்



தலைப்பு: ‘அறையில் காதலர்கள்
   கதை: “கடைசியாக நாம இங்கே..!?



தலைப்பு: ‘அழகான பெண்
   கதை: “முகத்துல வியர்வை வடியுதே...



தலைப்பு: ‘டாக்டரின் 100 ஆப்ரேஷன்
   கதை: போலி மருத்துவர் மாட்டிக்கொண்டார்.

தலைப்பு: ‘மாமியார் பாசம்
   கதை: “மருமக தாலியறுக்கனும்...” என்றாள்.



தலைப்பு: “மூன்றுபேர் இரண்டு காதல்
   கதை: “அவனை கழற்றி விடு..


தலைப்பு: நண்பனின் காதலி
   கதை: “துரோகம் செய்யவில்லை என்றான்.




                        இரண்டு வார்த்தைக் கதை:

தலைப்பு: ‘நாய் ஒன்று புகுந்துவிட்டது
   கதை: மாரத்தான் ஓட்டம்..


தலைப்பு: பாட்டி கதை சொல்லாமல்   துங்கிவிட்டாள்  
 கதை: பாட்டியின் மரணம்.



தலைப்பு:குடிமகன்களின் காலை உணவு
   கதை:சரக்கு இல்லையாமே...



தலைப்பு:கொசுவை கடித்த எறும்பு
   கதை: “என் இரத்தம்..



தலைப்பு:2100-ல் பள்ளிக்கூடம்
   கதை: “தமிழா, அப்டின்னா...



தலைப்பு:குப்பைத் தொட்டியின் கனவு
   கதை: “தங்கம் குப்பையாகுமா..?



தலைப்பு:நாட்டின் சிக்கனத்தைப்பற்றி நீதி அமைச்சர்
   கதை:பொண்ணு கல்யாணத்தை....!



தலைப்பு: ‘விமான பாதையில் வந்த பறவை
   கதை: “கடவுளே... என்றார்கள்.



தலைப்பு::இன்றோடு அவளை
   கதை: டிவியை நிறுத்தினாள்.

                                                        
தலைப்பு:குழந்தை கடவுளிடம் பிரார்தனை
     கதை: சோறு காத்திருக்கிறது.



தலைப்பு: ‘பையன் பிறந்தான்
   கதை: “கன்னிகாதாரமா...கேட்கணும்.



தலைப்பு:தலைவர்களின் அறிக்கை
   கதை: முன்பேழுதியது எங்கே...?



தலைப்பு:மலர்கள்
   கதை:இறுதி ஊர்வலம்..



தலைப்பு:பூ விற்பவள்
   கதை: தலை வாடியது.



தலைப்பு:அவன் நடந்த பாதையில் மின்னல்
   கதை: அவளைக் கண்டான்.



தலைப்பு:இரு நாட்டு கிரிகெட் வீர்ர்கள்
   கதை: “புக்கிஸ் சொல்லிட்டானா..



தலைப்பு:சுனாமியில் தேங்கிய தண்ணீர்.
   கதை: “குழந்தைகளின் கப்பல்...



                                                         -151-
தலைப்பு:ஊழலுக்கு எதிராக அமைச்சர் ராஜனமா..
   கதை:தொழிலதிபர்கள், கொண்டாட்டம்...



தலைப்பு:நாடாலும் உரிமை பெண்களுக்கும் வேண்டும் என்றான்.
   கதை: “என்னடி சமையலு...



தலைப்பு:சுதந்திரத்திற்கு பின் இந்தியா
   கதை: “கமிஷன் வந்துடும்...



தலைப்பு: தந்தைப் பெரியார் படம் போட்ட திருமண அழைப்பிதழ்
   கதை: “மாங்கல்யம் தந்துனானே...



தலைப்பு:கல்யாணப் புகைப்படம்
   கதை:கடைகியாக சிரித்தது.



தலைப்பு: வாடகை வீடு
   கதை: கல்லறை சொந்தமானது.



தலைப்பு:என்னை யாரோ துரத்துகிறார்கள்.
   கதை:என் நிழல்...



                       ஒரு வார்த்தைக் கதை
  

தலைப்பு: ‘கண்ணீர் அஞ்சலி
   கதை: காதல்


தலைப்பு: அவள் உறவு அவனுக்கு தெரிந்துவிட்டது.
   கதை: கொலை


தலைப்பு: என்னை நான் பார்த்தேன்
      கதை: புகைப்படம்



தலைப்பு: ‘நல்வரவு
    கதை: வணக்கம்.



என்றும் நட்புடன்: