Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, September 26, 2010

நீங்க கேள்வி கேட்டா...என் பதில் எப்படி இருக்கும்...? படியுங்க...

 
அஹிம்சையை இம்சை என நினைக்கலாமா.. அப்படி நினைத்தால் அதற்கு மாற்றுவழி உண்டா...?

புத்தர், அஹிம்சையை இம்சை என நினைத்ததில்லை.. அஹிம்சை, காந்தி வழி தோன்றுதல் என்று பல பேர் நினைப்பதால் காந்தியை பிடிக்கததால் அஹிம்சையும் எனக்கு பிடிக்காது என்பதுபோல் ஆகிவிட்டது. பலபேருக்கு திருடியவனை பிடிக்கவில்லை என்றால் திருடப்பட்ட பொருளும் பிடிக்காமல் போகுகிறது.  பயன்படுத்தும் பொருளை யாரும் பயன்படுத்தலாம்..திருடன் பயன்படுத்தியதால் அது திருட்டு பொருள் ஆகாது...அறிவாளியிடம் இருந்துதான் முட்டாள் பாடம் கற்கவேண்டும்...முட்டாளிடம் கற்றால் அவன் மேலும் முட்டளாவான்...எதிர்தாக்குதளைவிட தற்காப்பு தாக்குதல் உகந்தது...இதில் வன்முறை தவிர்த்து அஹிம்சையும் உட்பட்டே இருக்கிறது. ஆனால் நமக்கு தேவையானதை பெற்றுக்கொள்ள சூழ்ச்சி, பொறுத்திருந்து எப்பவும் எழுந்திருக்கமுடியாத தாக்குதல், தொலைநோக்கோடு எவற்றையும் அலசுதல், எதிரிக்கு மறைமுகமாக  இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குதல், தேவைக்காக எதிரியும் நண்பனாக்கி கொள்ளுதல்...இவையெல்லாம் நம் எதை பெறவேண்டும் என்று சுயதேவை பொறுத்தே அமையவேண்டும். பழைய கருத்துகளும் பழையதாகவே இருக்கும் அந்த சூழ்நிலைக்கு அது ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால்  நடைமுறை சூழலுக்கு எவை பொருந்த குடியது என்பதை அறியவேண்டும். ஏற்கனவே புரட்சில்  நடந்ததை தொடர்வதைவிட புதியதை கைக்கொள்ளவேண்டும். பலது பெறவேண்டுமானால் சில வழிமுறைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளவது நல்லது என்றே நினைக்கிறேன். நான் சொல்வது பலது உங்களுக்கு உடன்பாடு இல்லாமல்  இருக்கலாம்..." எதையும் மாற்றி யோசி..." என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.


மனம் எங்கே இறுகிய நிலைக்கு தள்ளபடுகிறது...?

போராட்டம், புரட்சி என்றாலே அங்கே மனம் ஒரு இறுகிய நிலைக்கே தள்ளபடுகிறது... பிறர் புன்னைகைக்காக தன் புன்னகை வெறும் செல்லா காசாகிறது....அப்படியும் புன்னகைத்தால் அப்புன்னகையில் அன்பைவிட அனல்தான் தெறிக்கிறது.


மனம் இரண்டுபக்கத்தை பார்க்குமா...?

இயல்பில் எல்லாமே ஏற்ககுடியதுதான் எரிச்சல் பட எதுவுமில்லை...எதுவும் எரிச்சலாக இருந்தால் உலகில் படைக்கப்பட்டது படைக்கபடாமலே போயிருக்கும். அன்பு ஏதுபோல உள்ளதோ அதுபோல்தான் கோவமும்...இரண்டும் வேற வேற பக்கங்கள்..ஒருபக்கத்தை பார்க்கும் மனசு மறுபக்கத்தை மறுக்கிறது...என் மனம் எதையும் ஏற்கும் நிலையில்தான் இருக்கிறது...விருப்பு ஏதோ போலவோ அதுபோல் பிறர் என் மேல் காட்டும் வெறுப்பையும்...


எந்த பணி வேகமானது, விவேகமானது...?


கலபணியை விட எழுத்து பணி ரொம்ப விவேகமானது...ரொம்ப வேகமானது. காரல் மார்க்ஸ் எந்த போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் பங்கேடுத்துகொண்டார். ஆனால் அவரின் மூலதன எழுத்துகள் ஒரு பெரிய முதலாளித்துவ சாம்ராஜியத்தையே...புரங்காட்ட ஓட செய்தது இன்னும் இதன் எதிரே நிற்க தைரியம் இல்லாமல்தான் அது இருக்கிறது. இவை எப்படி ஏற்பட்டது உங்களுக்கு தெரியாததா..ஒரு அரசு கல்விக்காக செலவிடும் பணம் லாபம் இல்லாமல் தான் இருக்கிறது. ஆனால் அக்கல்வி கொடுப்பதால் அவ்வரசுக்கு எதுமாதிரி பயன்கள் அமையும் எனபது உங்களுக்கும் தெரியும். இதில் அக்கல்விக்கு செலவிடும் பணம் விரையம் என்றால் பின் அவ்வரசு லாபல் எப்படி ஈட்டுவது....


நாம் பார்க்கும் பார்வை எத்தகையது...?

நாம் பார்க்கும் ஒவ்வொருவரின் பார்வை வித்தியாசமகத்தான் இருக்கிறது போல..."மலரை, பெண்கள் கண்டால் அவர்களுக்கு சூடிக்கொள்ள ஆசைவரும், என்போன்றவர்கள் கண்டால் பார்த்து ரசிக்க ஆவல் வரும், கவிஞ்சர்களிடம் கண்டால் கவிதையாய் வரும் , ஓவியன் கண்டால் ஓவியம் வரும், பையத்தியகாரன் கண்டால் கசங்கிவிடும்....


உளவியல் முலமாக பிரச்சனையை அனுகலாகமா...?


எந்த பிரச்சனையும் மேலோட்டமாக ஆராயும்போது அதற்கு தற்காலிக தீர்வுதான் கிடைக்கும் ஆனால் அதன் பிரச்சனையின் புகைச்சல் எப்போதும் இருக்கத்தான் செய்யும்....அதே அப்பிரச்சனையை உளவியல் பூர்வமாக ஆராயும் போது பிரச்சனையின் அடிவேர்வரை சென்று தீர்க்கலாம்...இது ஒரு நிரந்தர தீர்வாக கூட அமையும்...ஆனால் நம் நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு தற்காலிக... தீர்வுதான் நிரந்தர தீர்வாய் இருக்கிறது. மாற்றபடுகிறது ...நாம் வாழும் வாழ்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் உளவியல் பூர்வமாக அணுகினால் நம் மனம் சார்ந்த பிரச்சனைகள் நிரந்தரமாக தீர்க்கலாம்....இதில் நான் பிரச்சனைகளை எப்போதும் கொஞ்சம் அழமாகதான் பார்ப்பேன். பிறர் பிரச்சனை எனக்கு ஏற்பட்டால் அதன் விரியம் எப்படி இருக்கும் என்று நினைத்துதான் அணுகுவேன். இது எனக்கு கசப்பான நிலையிளும் நல்ல அனுவத்தை தரும். அதனால் "உளவியல் பூர்வமாக" என்ற வார்த்தை வாழ்கைக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது...நீங்களும் முயற்சிசெய்யலாம்....! என் குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றாலும் நான் என் குழந்தை நிலையில் இருந்ததுதான் பார்பேன்....குழந்தையின் வயதுக்கு அவன் நிலைக்கு சென்றுதான் பார்பேன்...பார்க்கவேண்டும்...


எவை சமுகத்தில் மாற்றத்தை கொண்டுவரும்...?

"எதேச்சையாக சிந்திக்கும் சிந்தனைகள்தான் சமுகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும்..."இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.


பெண்கள் அலங்காரத்தி துறந்துதான் வாழவேண்டுமா...?

ஆண்களின் அடிமை மனப்பான்மை நீங்கவேண்டும் என்பதற்காக பெண்கள் அவர்களுக்கு பிடித்த அலங்காரத்தை  துறந்து  ஆண்கள் மாதிரி ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை என்று நினைக்கிறன். இதில் பெண்கள் பற்றிய  பெரியார் கருத்துக்கும், உங்கள் கருத்துக்கும் எனக்கு  உடன்படவில்லை...பெண்கள் பெண்களாய் இருக்கலாம். அவள் ஆணை சார்ந்திருக்காமல் இருக்கலாம் ஆண்களுக்கு நிகரான சமவாய்ப்பு கொடுக்கலாம். ஒரு பெண் இப்படி இருக்க விரும்பினால் அப்படி இருக்க அவளை அனுமதிக்கலாம் இதில் ஆணிடம் அனுமதி பெறகூட தேவையில்லை அவளே அவள் வாழ்வை தேர்ந்தேடுத்துகலாம்....இதில்லாமல் ஆண்கள் மனோபாவம் மாறவேண்டும் என்று நினைத்து ஆண்கள் மாதிரி இருக்கவேண்டும் நினைத்தால் இதில்  பாலினமே மாறிவிடும்....ஏதோ ஒரு பழமொழி சொல்வார்கள் கிணறு வெட்டபோய் பூதம் கிளம்பினதுபோல....

பெண்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் கோவபடமாடிங்கனா ஓஷோவின் கருத்தை மேற்கொள்காட்டுகிறேன்:

"பெண்கள் சிகரெட் பிடிப்பதை என் கண்ணால் நம்பவே முடிவதில்லை....ஆண்கள் செய்வதையே பெண்கள் செய்தால் இதன் எதிர்விளைவு உலகத்தில் எப்படி அமையும்.. மோசமாகத்தான் இருக்கும். ஆண்கள்தான் அறிவு கெட்டவன் தன் தவறை மெல்ல மெல்ல உணர்ந்து, திருந்தி கொண்டிருக்கிறான். அப்போதும், இப்போதும்  அவன் செய்த  தவறுகளையே பெண்களும் செய்தால் இது வேறு ஒரு  மாதிரி அமைந்துவிடும். இவள் அடுத்து என்ன செய்வாள் ஆண்கள் மாதிரி நின்றுகொண்டே சிறுநீர் கழிக்கபோறால... " இப்படி சொல்வதால் ஓஷோவுக்கு  பெண்களைபற்றிய மதிப்பீடு தவறாக கொள்ளவேண்டாம். "பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்"  என்ற தலைப்பில் முழுக்க, முழுக்க ஆணிடம் இருந்து பெண்கள் விடுதலைகளை மற்றும் அவளின் பெருமைகளை பற்றியே  சொல்லிருக்கிறார். இப்புத்தகம் சென்னையில் உள்ள கவிதா பதிப்பகத்தில் கிடைகிறது. 


நாத்திகம் யாருக்கு சொந்தமானது...?

நாத்திகம் எனபது பெரியாருக்கு மட்டும் சொந்தமானது அல்ல அது புத்தர் காலத்தின் முன்பிருந்தே வருகிறது...எல்லார் மனதிலும் ஏற்புடையது, விருப்பமில்லாதது என்று ஒவ்வொன்று  உள்ளது. நம் மனது ஏற்பதை கேள்வி கேட்காமல் எதையும் எளிதாக ஏற்கும் ஆனால் விருபம்மில்லாதது  சிலதை மட்டும் மனது வெறுக்கும். அவ்வெறுப்பு அறிவின் துணைகொண்டு  சிந்தனையுடன்  இருந்தால் அது நியாமானதே அதை விடுத்து நாத்திகம் உட்பட எல்லாத்தையும் வெறுத்தால் அது ஏற்புடையதாக இருக்காது. அப்படி இருந்தால் சிந்தனை எங்கோ தடைபட்டுவிட்டது என்று பொருளாகும்...


வரலாற்று நாயகர்கள் சாதனைகள் எவ்வாறு...?

வரலாற்று சாதனையாளர்கள் உடலில் வீசும் வியர்வை கூட சந்தன மணமாக கூட மாறும் போல....இலங்கையில் புத்தம் கூறியதை விட்டுவிட்டு புத்தரின் பல்லை பாதுகாப்பதுபோல்...எல்லாமே பாதுகாக்கபடவேண்டியதாகிறது...


உலகத்தில் கண்டுபிடிப்பு எல்லாம் எப்படி கண்டுபிடிக்கபட்டது.....?

ஒரு நிகழ்வின் உண்டாகும் அனுபவம், அறிவு தேடுதலின் அடுத்த நகர்வு...ஆர்வம், எளிமை படுத்தவேண்டும் என்ற வழிமுறை பின் லாப நோக்கம் இதன் அடிப்படையில் பல கண்டுபிடிப்புகள் உருவாயின...ஆனால் எல்லோரும் கண்டுபிடிபளாராய் இருப்பதில்லை ஒரு சிலரே மாறுகிறார்கள் மாற்றிகொள்கிறார்கள். இருள் அடைந்த பொழுதை நி...த்தமும் கண்டு எடிசனின் கண்டுபிடிப்பு அமைந்தது.


யார் நாளைய சரித்திர நாயகன்....?

உங்களால் முடியாது என்று விட்டதை உலகத்தில் எங்கோ ஓரிடத்தில் ஒருவன் முயற்சித்து கொண்டிருப்பான். அவனே நாளை சரித்திர நாயகனாகிறான்.


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்: 




(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

5 comments:

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான பதிவு நண்பரே . கேள்வியும் நானே ! பதிலும் நானே ! சிந்திக்கத் தூண்டுகிறது . பகிர்வுக்கு நன்றி

ஷஹி said...

பெண்கள் அலங்காரம் பற்றியதெல்லாம் ஒரு கேள்வியா? எத்துனையோ முக்கிய விபரங்களைப் பகிர்ந்து கொள்ள அவகாசம் இல்லாத பொழுது?அதற்குத் தங்கள் பதில் அதை விட எரிச்சல் கிளப்புகிறது சகோதரரே!"கோபப்பட மாடீர்கள் என்றால்"... என்று எழுதிவிட்டால்... கோபம் வராதாமா?"சிறந்த பதிவர்" என்று பேர் வாங்கிவிட்டு?.... என்னமோ போங்க!!!

http://rkguru.blogspot.com/ said...

@ ஷஹி

நீங்கள் என் பதிவில் கருத்து கூறியது எரிச்சல் படுவதகாக இருந்தது என்று சொல்லிருகிரீர்கள் ஏன் என்று எனக்கு புரியவில்லை....நீங்கள் சொல்லும் கேள்வி ஒரு நண்பர் என்னிடம் கேட்டார் பெண்கள் எல்லாம் இப்போது அவர்களுடைய அலங்காரத்தை துறந்து ஆண்களாக மாறுகிறார்களே இது தேவையானதா....அப்படி மாறலாமா மாறினால் சரியாக இருக்குமா என்று கேட்டார். அவருக்கு என் பதிலை இப்போது உள்ள பதிலாய் சொன்னேன் நான் அவருக்கு சொன்ன பதிலையே கேள்வி பதிலாய் தெரிவித்தேன்....இதில் நான் சொல்லவந்தது பெண்கள் பெண்களாய் இருக்கலாம். ஆண்கள் போல் மாற எந்த தேவையும் இல்லை எனபது....இதில் ஓஷோவின் கருத்தையும் மேற்கோள்காட்டி சொன்னேன்,,,இது தவறாக தெரியவில்லை ஆனால் உங்களுக்கு எரிச்சல் பட்டிருக்கு....பல பழைய குப்பைகளை கிளரும் போது சிறந்த பதிவர் என்ற பட்டத்தையும் துறந்துதான் ஆகணும்.....பட்டம் எனபது என்ன.? நமக்கு நாமே சுடிகொள்வதுதானே....இருந்தும் கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி....

ம.தி.சுதா said...

ஃஃஃஃ...போராட்டம், புரட்சி என்றாலே அங்கே மனம் ஒரு இறுகிய நிலைக்கே தள்ளபடுகிறது... பிறர் புன்னைகைக்காக தன் புன்னகை வெறும் செல்லா காசாகிறது....அப்படியும் புன்னகைத்தால் அப்புன்னகையில் அன்பைவிட அனல்தான் தெறிக்கிறது...ஃஃஃ அருமை மிகவும் உண்மையான பதில் இது...

தனி காட்டு ராஜா said...

//பல பழைய குப்பைகளை கிளரும் போது சிறந்த பதிவர் என்ற பட்டத்தையும் துறந்துதான் ஆகணும்.....பட்டம் எனபது என்ன.? நமக்கு நாமே சுடிகொள்வதுதானே....//

நீங்க எழுதுங்க தல ....
புத்தி உள்ளவனுக்கு பிரபல பதிவர் ,புண்ணாக்கு பதிவர் எல்லாம் ஒண்ணுதான் .....கருத்து தான் முக்கியம் ....