Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, February 14, 2016

பிரபஞ்சத்தில் மனிதா, நீ எங்கே...!?


நாம் பிறக்கும் போது தனியாகதான் இப்பூமியில் பிறந்தோம், இறக்கும்போது தனியாகத்தான் இறக்கபோகிறோம் ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும் வாழ்வு, ஒவ்வொருத்தரும் புரிதல் இல்லாமல்  நரகமாக்கிகொண்டு வாழ்கிறோம்.

வாழ்க்கைக்கு மிக முக்கிய தேவை பிறப்பு, இறப்பு பற்றிய புரிதலே...

நாம் யார்.? எதற்காக பிறந்தோம்.? எதற்காக வாழ்கிறோம்.? இதுவரை என்ன சாதித்தோம்.? இனிமேலும் என்ன சாதிக்கபோகிறோம்.? தன்னளவில் என்ன சந்தோசம் அடைந்தோம்.? அந்த சந்தோஷம் எவ்வளவு நாள் நீடித்திருந்தது.? என்ற பல கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நம் மனதில் எழுந்தால், நாள்தோறும் ஆணவமும்,ஆசையும் கொண்டு அலையும் நம் மனது, அக்கேள்விக்கு விடை காணாமல் ஏங்கிதவிக்கும்.

அதன் தவிப்பில்தான் உருவாகும் தேடுதலுக்கான உண்மையாக ஆன்மிகம்...!

அது உருவழிபாடு, பூஜை, மந்திரம், தந்திரத்தில் வராது மற்றும் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டு வராது. அது தன்னால் வரும். அதன் அழகிய கால்தடம் நாம் அறிந்தே இருப்போம்..!

ஆம், அதுதான் உள்ளோளி தியானம் என்பது அத்தியானமே ஒருவர் தன்னை உணர்வதற்கான மாமருந்து.  அந்த மருந்து உங்கள் வாழ்வின் பிரச்சனைகளை தெளிவாக விளக்கும். அது அடுத்த கட்ட ஆன்மிக பரிமானதிற்கு உங்களை அழைத்து செல்லும்.
ஆங்கிலத்தில் Meditation என்ற வார்தையில் இருந்துதான் Medicin என்ற வார்தை பிறந்தது.
ஆம், மீண்டும் சொல்கிறேன் தியானமே உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கான மருந்து.
உங்களை உணர்ந்து கொள்ளாதவரை பிறரை எப்போது உணர்ந்துகொள்ள முடியாது இதைதான் புத்தரும் தன் வாழ்வின் கடைசியாக உச்சரித்த வார்தைகள் "அபோ திபோ பவ" (உனக்கு நீயே ஒளியாக இரு) என்று.

இரு மூச்சுக்கு இடையே அது உள்ளது. அங்கு நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் பிறப்பு, இறப்பும் கடந்து சாஸ்வதமாக, நித்தியமாக என்றும் அழிவில்லாதவராக இருக்கிறீர்கள்.

நாம் சுவாசிக்கும் சுவாசம் வெறும் காற்று மட்டும் இல்லை அது அறிவியல் பார்வைக்கு ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு என்ற வாய்வாகவே அறியும் ஆனால் இவை இரண்டையும் தாங்கி செல்லும் நுட்பமான ஒன்று 24 மணி நேரமும் இயங்கிகொண்டிருக்கிறது அதுவே உங்கள் சுவாத்தை வாகனமாக தாங்கி செல்கிறது. அதுவே பிரபஞ்ச உயிர்காற்றாகும். அதனையே யோகத்தில் பிராணன் என்கிறார்கள். அதுவே உங்கள் உயிரின் உட்கருவாகும். அதனுடந்தான் நீங்கள் பிறந்தீர்கள். வ்வுகரு நீங்கும்போதே இறப்பீர்கள்.

அந்த பிறப்பு, இறப்பை கடந்த சத்திய ஜீவிதம். இரு சுவாதிற்கு நடுவே மையமாக உள்ளது.
அதை குறித்து விழிப்புணர்வுடன் தியானம் செய்யவேண்டும்.  அதைதான் புத்தர் "அனா பனா சதி யோகா" என்கிறார். வேறு எந்த யோகமும் ஒரு ஆன்மிக சாதகருக்கு தேவை இல்லை. இந்த யோகமே போதும்.

பிறக்கும் போது மூச்சு இழுக்கிறோம் இறக்கும்போது மூச்சு விடுகிறோம். நாம் விடும் மூச்சே எல்லாவற்றிற்கும் ஆதாரம். ஒவ்வொரு நொடியும் சுவாசிக்கும் சுவாத்தில் பிறப்பும், இறப்பும் கலந்தே இருக்கிறது. அப்பிறப்பையும், இறப்பையும் மையாக தாங்கி நிற்பது ஒன்றே, அதுவே மையம், அதுவே நீங்கள். அதைதான் தியானத்தில் உணருங்கள்.

எந்த புனித நூல்களையும், எந்த சாமியும், எந்த மகான்களையும் வணங்கவேண்டாம் உங்களை நீங்களே வணங்கிக்கொள்ளுங்கள். நீங்களே முடிவில்லாத ஆதியும் அந்தமும்....
அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம்" என்றார்கள் சித்தர்கள். நாம் அனைவரும் அந்த மகாசக்தி பொருந்தியவர்கள்.  அச்சக்தியை உணர தியானமே சரியான வழிகாட்டி.

ஒரு நாள் 23.1/2 மணி நேரம் உங்கள் வேலைக்கு செலவிடுங்கள் மீதி 1/2 மணி தியானத்திற்கு செலவிடுங்கள். அதுவே உண்மையான செலவாகும்.

கண்ணை மூடி விழிப்புணர்வுடன், எண்ணங்களை கவனித்துக்கொண்டிருங்கள். ஒரு நாள் அல்ல ஒரு நாள் அந்த ஜீவித ஒளி உங்களை ஆட்கொள்ளும். அதுவே சத்திய ஜீவிதம். அதுவேதான் நீங்கள். அப்போது உங்களை நீங்களே முதன் முறை காண்பீர்கள். அதுவே நித்திய ஆனந்தம். அதுவே சத்+சித்+ஆனந்தம்(சச்சிதானந்தம்) அந்த ஆனந்தம் எந்த போலி வாழ்கையின் ஆனந்திற்கு ஈடுயிணையாகாது.

ஒருமுறை அந்த ஆனந்தத்தை சுவைத்துவிட்டால் உங்கள் ஆன்மிக பயணம் தொடங்கிவிட்டது.  பின் உங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த ஜீவித ஒளியே உங்களை வழி நடத்தும்.  அதுதான் புத்தர் சொன்னது அப்போது நீங்களே உங்களுக்கு ஒளியாக இருப்பீர்கள்.

இவையாவும் என் அனுபவம் கொண்டு அனுபவித்தே சொல்கிறேன். ஜீவித ஒளி இருப்பது உண்மையே புத்தர் சொன்னது உண்மையே அதற்கு நானே ஒரு சாட்சி என்னை நம்பலாம். நான் அற்ற நான் எதையும் அனுபவத்தில் உணராமல் சொல்லமாட்டேன், எழுதமாட்டேன்.
உங்களுக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் மற்றும் ஆன்மிக புரிதல் வர இங்கு இரு காணொளி காட்சி பதிவை பதிவிடுகிறேன் அதை பாருங்கள்.

ஒவ்வொரு நாளும் மறக்காமல் அக்காணொளியை பாருங்கள்.  அது ஒரு நாள் நிச்சயம் உங்களை தியானத்தில் அமரவைக்கும்.

ஒவ்வொருத்தருக்கும் புரிதல்தான் ஆரம்பம். புரிந்துவிட்டால் நித்திய ஜீவித பயணம் தொடங்கிவிட்டதே என்று அர்த்தம்....!

நன்றி.! வணக்கம்.!


நட்புடன்:

Thursday, February 4, 2016

சிறு நெருப்பு பொறி நெஞ்சில்...



          நம் சமூக உறவுகளை ஆராய்வதென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் குடும்ப உறவுகள் ஆய்வை எல்லாம் நான் அருகில் இருந்து பார்த்தது, ரசித்தது மற்றும் வெறுத்ததும் அவ்வுறவுகளின் ஆய்வை பற்றி சொல்வவேண்டுமென்றால் தெள்ள தெளிவாக சொல்லலாம். எனக்கு குடும்ப உறவுகளில் ரொம்ப பெரிய ஆதரவும், பாதிப்பு உண்டாகிருக்கு. இதையேல்லால் பற்றி எனக்கு பெரிய சந்தோசமோ, கவலையோ இல்லை. என் சுதந்திரத்தில் அவர்கள் தலையிடாதவரை அவர்களுக்கும் பிரச்சனை இல்லை, எனக்கும் பிரச்சனை இல்லை. தலையிட்டால்,  நான் நேரடியாகவே கேட்டுவிடுவேன். தயங்கமாட்டேன். 

நான் யாரையும் தனி நபர் விமர்சனம் செய்யமாட்டேன். என்னால் முடியும் உதவியை செய்வேன். அவர்களிடம் நான் காட்டும் அன்பில் எந்தவித குறையும் இருக்காது. அதையே அவங்க அதன் மேலாதிக்கதனமாக எடுத்துகொண்டால் மற்றும் என்னை கீழ்நிலைப்படுத்தி தனி நபர் தாக்குதல் தொடுத்தால் பிரச்சனை வேறோரு திசையில் பயணிக்கும். மீண்டும் சொல்கிறேன் யாரும் யாருடைய சுதந்திரத்தில் தலையிட உரிமை இல்லை. முடிந்தால் உதவியாக இருக்கலாம் ஆனால் உபத்திரமாக இருக்க கூடாது. அப்படிதான் உபத்திரமாக இருக்கிறார்கள் என்றால் பிறரின் மனகுமுறலின் தாக்கம் அவர்களை சும்மா விடாது, அது அவங்க தலைமுறையே பாதிக்கும். எனக்கு தெரிந்து எவ்வளவோ சம்பவங்கள் பார்திருக்கேன். பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவையே செருப்பால அடித்தவன், இன்றைக்கு உறவுகளின் மதிப்பு, மரியாதை இழந்து அவன் புள்ள, மருகளாலே அவமானபட்டு, பிச்சை எடுத்து தின்னாத குறைதான் அவ்வளவு கீழான வாழ்கை வாழுகிறார்.

நியாயமான விசயதிற்கு நாம் போராடி பிரச்சனை செய்தால் அது ஏற்புடையதே அதனால் பிறருடைய சாபமோ,வயிற்றெரிச்சலோ நம் வாழ்க்கையை ஒன்றும் செய்யாது. எது நியாயம்.?  எது நியாயம் இல்லை.? என்று நம் மனசாட்சிக்கே தெரியும். ஆனா, பிறரின் உடமை மேல் ஆசை வைத்து செயலாற்றினால், பிறரை வார்தைகளால் வஞ்சித்து தூற்றினால் நிச்சயம் வாழ்கையில் பாதகமான முடிவுகளே வந்து சேரும்.

என் சொந்தகார பொம்பல வாய திறந்தாலே பிறரை அவ்வளவு கேவலமாக மட்டமாகதான் பேசும். அவளின் பேச்சு கேட்கவே படுகீழ்தரமாக இருக்கும். இப்படியே போயிட்ட இருந்தது. ஒரு நாள் நல்லா ஓடி ஆடி விளையாடிய அவளின் பிள்ளை காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாகிட்டான். என்ன ஆனதோ என்று தெரியவில்லை அவனுக்கு இரண்டு காலும் வேலை செய்யவில்லை. அவனுக்கு என்ன என்னவோ மருத்துவம் பார்தாச்சு எந்த பயனும் இல்லை. ஒரே புள்ள இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் அவளின் கணவனும் செத்து போய்விட்டார். இப்போது அவளின் நிலைமை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. நல்ல திடகாத்திரமாக இருந்த பெண்மணி, இப்ப பார்க்க  நோயாளி போல் இருக்கிறாள்.  சில நாட்கள் முன் அவளை பார்தேன். என்னை பார்த்தும் ‘பொள பொள வென்று அழுதுவிட்டாள், “நான் என்ன பாவம் செய்ஞ்சேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி...” என்று குமுறி அழுதாள். செய்த பாவம் செயல்லதான் செய்யனும்மா.. பேசுர வார்த்தை போதாதா, அப்பேச்சே பாவதிற்கு ஈடானதுதான்.  நான் என்ன சொல்லமுடியும் அமைதியா அங்கிருந்து நகர்ந்துட்டேன்.

உறவுகளுக்கு பணம் காசு, கவுருவம், மதிப்பு, மரியாதை என்று வந்துவிட்டால் தலை கால் புரியாது எதுவேண்டுமானலும் செய்யலாம், எதுவேண்டுமானலும் பேசலாம் என்ற முடிவுக்கு வந்துடுறாங்க... அப்படி அவங்க பேசும் நியாயம் வாதம் இருக்க, அடேங்கப்பா, தீர்ப்பு சொல்லும் நீதிபதியே கூட தோல்வி அடைந்துவிடுவார். அவ்வளவு அருமையா தீர்ப்பு சொல்லுவாங்க... உறவுகள் என்றும் தன்னுடைய தவறுகளை சர்வ சாதரணமாக மறந்துவிடுகிறார்கள். ஒரு பிரபல அறிஞர் சொன்னது, அவர் பெயர் நினைவில்லை ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள்  நறுகென்று என் நெஞ்சில் ஏறிவிட்டது அதாவது, “மனிதர்கள் தன் தவறுகள் என்று வரும்போது அதை  நியாயப்படுத்தி வாதாடும் வக்கீலாக இருக்கிறார்கள் அதே தவறு பிறர் செய்யும் போது தீர்ப்பு சொல்லும் நீதிபதியாக மாறிவிடுகிறார்கள்” என்றார். இப்போ நாட்டுலையும், வீட்டுலையும் இதுபோல நடப்பதுதான் அதிகமாக இருக்கிறது.

 நான் தினமும் காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். நாலு மணியில்  இருந்து ஆறு மணி வரை நடைபயிற்சிதான் அப்படி இன்று நடைபயிற்சி போகும்போது எதையும் நினைக்க கூடாது எல்லா சிந்தனையும் கழித்து போடனும் என்று நினைத்துகொண்டுதான் நடப்பேன். ஆனா இழவு, எங்கிருந்துதான் இந்த உறவுகளின் சிந்தனை வருமோ என்று தெரியாது. நான் இந்த  உறவுகளை பற்றி ஒரு ஆய்வு கட்டுரையே பல்கலைகழகத்தில் சமர்பித்தால் நிச்சயம் எனக்கு பி.எச்.டி பட்டம் தருவார்கள் என்று எதிர்பார்கலாம். நல்ல சிந்தனையும், நொல்ல சிந்தனை எல்லாம் சேர்ந்தேதான் வரும். பல சிந்தனைகள் வேண்டாம் என்று மறந்துவிடுவேன். சிலது அனுபவம் ஏதார்தமாக இருக்கும் அச்சிந்தனைகளை அப்போதே காகிதத்தில் குறித்துவைத்துகொள்வேன். பின் அதைப்பற்றிய விசயங்கள் எழுதும் போது அதை மேற்கொள்காட்டி எழுதிவிடுவேன். அப்படி என்னதான் இன்றைக்கு வந்த அந்த “அலும்பல் உறவுகளின் சிந்தனை” என்றால், “பொதுவா எல்லா உறவுகளும் அதாவது மாமன், மச்சான், சித்தி, சித்தப்பா, பெரியப்பா, சகல, அண்னண், தம்பி, ஒன்னுவிட்ட பங்காளி, தூரத்து நண்டு, சிண்டு.. என்று இதுபோல உறவுகள் எல்லாம் ஒருவிதமா சேர்ந்து வாழும்ன்னுதான் ஆசைப்படுது. ஆனா, சேர்ந்து வரும்போது அதுல எல்லார் முன்னாடியும் தன் கெத்த காட்டது. நான் கேட்கிறேன், “இது எதுக்கு.?” எல்லா உறவுகளும் வேண்டும் என்றுதான் மனசு துடிக்குது, மதிப்பு, மரியாதை இழந்திட போறோம் என்று எல்லா உறவுகளை தேடி ஓடுது. ஆனா, எல்லா உறவுகளை நட்பு பாராட்டி, பின் அவங்களையே ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக்குது. உறவுகள் வேண்டும் என்று சொல்லும் ஆனா உறவுகளை தூற்றிகொண்டிருக்கும். பிறரிடம் அன்பை வெளிபடுத்த தயங்குது ஆனா அன்பை எதிர்பார்கிறது. அன்பை வெளிபடுத்த அவ்வளவு கஞ்சதனம். ஆனா, பேச்ச மட்டும் பாருங்க அவ்வளவு வக்கனையா பேசும். இப்படி இருக்கும் உறவுகளின் அனுபவம் பொதுவாக நம் எல்லாருக்கும் இருக்கும் என்று நான் நினைகிறேன்.

இப்படி அவங்க, அவங்க இருப்பதால் அது உதவி என்பதை தாண்டி ஒருவித தொல்லை நிலைக்குதான் அது அழைத்து செல்லும். ஒவ்வொருவரின் போட்டி, பொறாமை இங்கிருந்தான் உருவாகிறது. இது போல இருப்பதே ஒருவித வியாதிதான்.

ஒவ்வொரு உறவுகளும் அவர்களை சுய விசாரணை செய்துகொள்ள வேண்டும். நாம் யாருக்காக வாழ்கிறோம்.? ஏன் இந்த நிலைமை.? இப்படி இருப்பதால் யாருக்கு  என்ன லாபம்.? இதில் நாம்  என்ன சாதிக்கப்போறோம்.? யாரை எதிர்த்து வாழ்கிறோம்.? கடைசியாக எதை கூடவே எடுத்துகொண்டு போகபோகிறோம்.? என்று உள் விசாரனை செய்தால், ஒரு சிறு நெருப்பு பொறி நெஞ்சில் கனன்றால் வாழ்வின் பார்வையே முற்றிலும் மாறிபோகும். 

மாறனும், மாறாட்டும் என்றுதான் நம் எல்லோர் நினைவும். ஏனென்றால் உறவுகள் இல்லாத வாழ்வும் நமக்கு கசப்பானதுதான் அதனால் மாறட்டும், மலரட்டும் என்று முடிப்போம்.

           மீண்டும் ஒரு அழகிய பொழுதில், இன்னொரு அழகிய சிந்தனை பதிவில் சந்திப்போம். நன்றி.!


         நட்புடன்: