Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Saturday, August 27, 2016

எந்த வேலையும் இங்கு இரண்டாம்தரமான வேலை இல்லை..


இந்தியாவில்தான் கரைபடியாத வேலை செய்யனும்ன்னு ரொம்ப பேர் ஆசைபடுவாங்க இதை ஆங்கிலத்தில் "white collar job" என்று சொல்லுவாங்க.. இதை நாம் லோக்கல் பாஷையில் சொல்லனும்ன்னா, "நோவாம நோம்பு கும்பிடரது, நோவாம நுங்கு உரியுரது" என்பார்கள். எனக்கு ஒரு ஐங்கார் பிரமாணன் நண்பன் இருக்கான்.  நான் அவங்க வீட்டிற்கு செல்வேன். அவங்க அம்மா நன்றாக என்னிடம் பேசுவாங்க.. அவங்க தன் மகனை பற்றி பேசும்போது, " நாங்க எல்லாம் ஃபேன் காத்து கீழே வேலை செய்தவங்கப்பா... இவன் என்னடான்னா படிப்ப ஒழுங்கா படிக்காம மார்கெட்டிங் வேலை செய்ரான்." என்றார்.  நான் அமைதியாக கேட்டுகொண்டேன். அவர்கள் பேசிய பேச்சில் சாதிய அடையாள தீமிர் பேச்சு இருந்தது. "நாங்களேல்லாம் அப்படி, நீங்க இப்படிதான்" என்று. இப்படி பேசுவது எல்லாம் பொதுவாக சாதி அடிபடையிலும், இன அடிப்படையிலும், நிற அடிபடையிலும்தான் நடக்கும்.

நான் பொதுவாக எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன் கௌருவம் எல்லாம் பார்க்க மாட்டேன். எனக்கு கட்டிட வேலையான கொத்தனார், பெரியாள் வேலை செய்வேன். பிளம்பிங் வேலை தெரியும், பெயின்ட் வேலையும் தெரியும். எங்கவீட்டுக்கு எல்லாம் பெயின்ட் நான்தான் அடிப்பேன். கொஞ்சம் கார்பென்டர் வேலை, கொஞ்சம் எலட்ரிஷ்யன் வேலையும் பார்பேன். பேன், டியுப் லைட் மாட்டுவது மற்றும் ஒயிரிங் லைன் கனெக்க்ஷன் மாற்றிகொடுப்பது எல்லாம் தெரியும். கடைகியாக ஒன்றை சொல்லவேண்டும் என்றால் ட்ரைனேஜ்ல இறங்கி கழிவு அடைப்பும் எடுப்பேன்.

அன்று ஒருநாள் அப்படிதான் சைதாப்பேட்டை குடித்தனம் இருக்கும் வீட்டில் கக்குஸ் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. அதை என்னிடம் சொன்னாங்க நான் போய் கழிநீர் அலுவலகத்தில் எழுதிகொடுத்துட்டு வந்தேன். ஆனால் "பின்னாடியே வரேன் போங்க..." என்று சொன்னவங்க வரவில்லை மறுநாள் அரசு விடுமுறை அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை ஆனால் சனிக்கிழமையே ட்ரைனேஜ் தொட்டி நிரம்பி பொங்கி வழிந்து விட்டது, சரி இதுக்குமேல பார்த்தால் வீடு நாறிடும் என்றேண்ணி தொட்டியில் இறங்கி பட்டையான ஒரு மூங்கில் குச்சியை எடுத்து உள்ளேவிட்டேன். அது கொஞ்ச தூரம் சென்றதும் அங்கு ஏதோ தட்டுபட்டுச்சு.. நல்லா அழுத்தி குத்தியவுடன் கோணிப்பை அடைத்துகொண்டிருந்தது. அதுனுடன் சேர்ந்து தலைமுடி மற்றும் பல சத்தைகள், மனித கழிவு அப்படியே அடித்துகொண்டு வந்தது. நான் கையில் பாலித்தின் கவர் போட்டுகொண்டு வெளியே அக்கழிவை வாரி கொட்டினேன். இதுல ஒரு கொடுமை என்னவென்றால் அதுவரை வேடிக்கை பார்த்த கொண்டிருந்த எங்கவீட்டு கோஷ்டிங்க, அக்கழிவை வாரிகொட்டியதும் "..ச்சீசீ" என்று மூக்கை பொத்திகொண்டு விலகி ஓடியது. அப்புறம் நான் வெளியே வந்து துடைப்பம் எடுத்து அந்த இடத்தை துத்தமாக கழுவிவிட்டேன். பின்பு என்னை நான் தண்ணீரால் சுத்தபடுத்திகொண்டு, எங்க குடித்தனம் இருந்த பெண்ணிடம், "கொஞ்சம் குடிக்க தண்ணி கொடும்மா.." என்றேன். அவங்க என்னிடம் தண்ணீர் கொடுக்க அப்படி ஒரு தயக்கம்காட்டினாங்க.. அவங்க பாத்திரத்தை என் கையில் கொடுக்க அவ்வளவு அருவெருப்பு இருந்தது. அது அவங்க முகத்திலே நன்றாகவே தெரிந்தது. இதெல்லாம் என் மனைவிக்கும் தெரியும். அன்று மட்டும் நான் அப்படியே விட்டிருந்தால் வீடே நாறிபோயிருக்கும்...

திங்கரவரைக்கும்தான் சோறு, அது தொண்ட குழி இறங்கியது மலம். அது வயிற்றுல எத்தனை மணி நேரம் தம்கட்டி இருந்தாலும் அசிங்கம் இல்லையாம் ஆனால் வெளியே வந்தால் ..ச்சீயாம். விலகி ஓடுதுங்க கழுதைங்க... நான் அதுனுடன் அருகில் இருக்க சொல்லவில்லை. அது கழிவுதான், அசுத்தம்தான் அதனால் நோய்தொற்று அதிகம் உண்டாகும். அவைகள் அகற்றபடவேண்டியதுதான். ஆனால் அதை அகற்றும் ஊழியர்களின் நிலையை நாம் நினைத்து பார்க்க மறந்துவிடுகிறோம். இன்னாட்டில்தான் இன்னும் மனித கழிவுகளை மனித அகற்றும் கொடுமை நடந்துகொண்டு இருக்கிறது. 


 இந்த நாட்டில்தான் இதுபோல் கொடுமை எல்லாம்... ஜப்பானில் பள்ளி குழந்தைகளே தான் பயன்படுத்தும் கழிவரையை தானே எப்படி சுத்தம் செய்யவேண்டும் என்று பள்ளி நிர்வாகமே சொல்லிகொடுக்கிறது மற்றும் அதற்கென்றே ஒரு வகுப்பே இருக்கிறது. உலகத்திலே ஜப்பான் போல சுத்தமான நாட்டை எங்கும் பார்க்க முடியாது. அப்படி ஒரு சுத்தம் அங்கு. ஆனால் இந்தியாவில் சுத்தம் பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள். "எவனாவது சுத்தம் செய்யட்டும், நாம் நோவாம போயிட்டு வந்துடலாம்.." என்று  நினைக்கிறார்கள். இதோ நம்ம பக்கத்து நாடான சீனாவை எடுத்துகொண்டால் அங்கு கக்கூஸ் கழுவுரவனும் அவனுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியும் ஒரே டேபிளில் உட்கார்ந்து டீ அருந்துவார்கள். அங்கு, "இவன் கக்கூஸ் கழுவுரவனாச்சே.. நாம முதலாளியாச்சே" என்ற பாகுபாடு இருக்காது. அதுதான் பொதுவுடமை சித்தாந்தத்தின் அடிபடை மரபு,. அதுதான் உண்மையான சமத்துவம், சகோதரத்துவம். அதுதான் நானும் இங்கு எதிர்பார்பது. ஆனா இங்குதான் அந்த வேலை செய்ரவங்கள தோட்டி, சக்கிலி என்று சாதி அடையாளம் கொடுத்து அழைகிறார்கள் மற்றும் ஒதுக்கி வைகிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான் என்ற எண்ணம் இல்லை. அவர்களும் பல்வேறு போராட்டங்களின் மூலம்தான் அரசிடம் இருந்து பெறமுடிகிறது. ஆனால் மக்களின் மனங்களோ இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கின்றது.

இதெல்லாம் நான் எதற்கு இங்கு சொல்கிறேன் என்றால், "எந்த வேலையும் இங்கு கீழ்தரமான, இரண்டாம்தரமான வேலை இல்லை. எல்லோரும் இங்கு சமம், செய்யும் தொழிலில் ஏற்ற தாழ்வு பார்க்ககூடாது. அப்படி பார்த்தால் அதைவிட கொடுமை வேறெதுவும் இருக்காது. அப்படி பார்க்கும் மனநிலை இருந்தால் அவர்கள் படித்த படிப்பை எல்லாம் தூக்கிகொண்டு போய் குப்பையில் போடவேண்டியதுதான். நாம் மனிதர்களை படிக்கனும், மனித மனங்களை படிக்கனும், எந்த தொழிலாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் செய்யனும். அதுவே உயர் கல்வியின் லட்சணம் மற்றும் அடையாளம். அவர்கள் போன்றவர்களை நான் சிறந்த கல்விமான் என்பேன்.  

இன்னாடு வளர்ச்சி பெற பல மனித தடைகளை கடக்கவேண்டிருக்கு. அப்படியெல்லாம் கடந்தால்தான் இன்னாடு முழு வளர்ச்சி பெற்ற நாடாக மாறும். உண்மை வல்லரசு கனவு, நனவாகும்.  நன்றி..!
 
நட்புடன்:   
Rk.Guru

Friday, August 19, 2016

என் எழுத்து தொட்டு நக்குகிற தேன் அல்ல..



அடடா, அருமையான தமிழ்திரைபடம் சமீபத்தில் வெளிவந்து நன்றாக ஓடிகொண்டிருக்கும் "ஜோக்கர்" என்ற படம் அரசியலை கிழிகிழின்னு கிழிச்சிருக்கு. கிழிச்சிட்டார் இயக்குனர். படம் முழுவதும் எதார்த்தமான இயல்பான நடிப்பு. இடதுசாரி சிந்தனை அதிகம் நிரம்பிய படம். அவசியம் எல்லோரும் பார்க்கவேண்டிய படம். இந்த படத்திருக்கு மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக விருது கொடுக்கவேண்டும். அப்படி விருது கொடுக்க தவறினால் இது உண்மையில் கேடுகெட்ட ஜனநாயக அரசுதான் என்று நான் இன்னும் ஒரக்க சொல்வேன்.

நான் 15 வருடங்களுக்கு முன்பிருந்தே பொதுவுடைமை, சமூகநீதி தோழர்களான காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மார்க்சிம் கார்கி, தந்தைபெரியார், அம்பேத்கார் போன்ற புத்தங்களை அதிக படித்து வளர்ந்தவன். அப்போதெல்லாம் உள்ளுக்குள் ஒருவித போராட்ட உணர்வே எனக்கு அதிகம் நிரம்பிருக்கும்.. இடையில் பௌத்ததில் நாட்டம் ஏற்பட்டது. புத்தர் புத்தகங்களை அதிக படிக்க ஆரம்பித்தேன். இதில் ஒஷொ, புத்தரை அவரின் அழகிய வார்த்தைகளால் விளக்கிருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பின் ஒஷொ எழுத்துமேல் எனக்கு தனியாத தாகம் ஏற்பட்டது. இதில் என் உள்ளுக்குள் இருந்த போராட்ட உணர்வு இலக்கிய, ஆன்மிக வடிவமாக மாறியது.

என் எழுத்து தொட்டு நக்குகிற தேன் அல்ல... தொட்டால் சுடும் நெருப்பு. நான் இன்றும் "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர். நான் 2009 இருந்து சமூக வளைதலங்களில் என் கருத்துகளை எழுதிவருகின்றேன். எனக்கு யாரிடமும் பயம் இல்லை. எனக்கு தோன்றுவதை தைரியமாக சொல்வேன், எழுதுவேன். எனக்கு சாதி, மத அமைப்புகளிடம் இருந்தும், முக்கிய இரு கட்சிகளிடம் இருந்தும் எவ்வளவோ மிரட்ட போன் கால்கள் வந்தது. நேரடியாக சில பேர் மிரட்டிவிட்டு சென்றார்கள். இரண்டு முறை போலிஸ் விசாரனை வேற நடந்தது.

ஒரு எழுத்தாளன் என்பவன் வார்த்தைகளில் சமரசம் செய்துகொள்ள கூடாது. எதற்கும் வலைந்து கூனிகுறுகக் கூடாது. நினைப்பதை துணீந்து எழுதனும் அப்படி எழுதுபவனே சமூக எழுத்தாளன்.

சில நண்பர்கள் சொல்கிறார்கள், "நல்ல நல்ல கருத்துகளைதான் எழுதுர.. ஏன் அதை புத்தகமாக எழுதி வியாபரம் செய்யலாமே உனக்கு பணம் கிடைக்குமே" என்றார்கள். "புத்தகம் எழுதலாம்தான் ஆனால் எனக்கு பணம் சம்பாதிக்கனும் நோக்கம் அல்ல... அதற்கு பல தொழில் இருக்கு. என் கருத்து மக்களிடம் சென்று சேரனும் அது எந்த ஊடகம் வழியாக சென்றால் என்ன... இதில் லாப நஷ்ட கணக்கு பார்க்க முடியாது." என்றேன்.

நாம் சமூகத்தில் குடும்ப அமைப்பு கொண்டு வாழ்கிறோம். சமூகம் அரசியல் சார்ந்து உள்ளது. அந்த அரசியல் தீமிர் பிடித்த அரசியல்வாதி கைகளிலும் பணம் படைத்தவன் கைகளில் உள்ளது. நாம் நம் தலைமுறைக்கு செய்யவேண்டிய முக்கிய கடமைகள் உள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் நம் பிள்ளைகளுக்கு முதலில் காந்தியை அறிமுகபடுத்துவதைவிட காரல் மார்சையும், தந்தை பெரியாரையும் அறிமுகபடுத்தவேண்டும். பிள்ளைகளுக்கு சமூக அரசியலை வளர்க்கவேண்டும். இந்திய அரசியலமைப்பு மற்றும் மூப்பிரிவு சட்டங்களை சொல்லிகொடுக்கவேண்டும். எவ்வளவு பெரிய அதிகார தீமிர் பிடித்த மயிராக இருந்தாலும் அவன் கண்ணுல விரலைவிட்டு ஆட்டும் அளவுக்கு போராடும் மனோபாவத்தை வளர்க்கவேண்டும்.

இந்த ஜனநாயக நெறிமுறை அமைப்பு சரியில்லை இதை மாற்றியாகனும்.


தோழமையுடன்:

Wednesday, August 17, 2016

இந்த சினிமாகாரனுங்களில் முக்கால்வாசி பேர்..!?



60-70 லட்சம் வரை நா.முத்துகுமாருக்கு பல தயாரிப்பாளர்கள் கொடுக்கவேண்டிய பணமாம். பல செக்குகள் போலி மோசடி செக்காம். அவருக்கு உயர் மருத்துவம் பார்க்க போதிய பணம் இல்லாமல்தான் அவர் இறப்புக்கு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவரும் யாரிடமும் பணம் கேட்கவில்லை. சமாளித்துவிடலாம் என்றிருந்திருக்கிறார்.

படுபாவி பயலுக... 70 லட்சம் வரையும் பாக்கி வைத்து ஒரு அருமையான படைபாளியை ஏமாற்றிருக்கானுங்க.... இந்த உலகம் கேடுகெட்ட உலகம். நல்லவங்களதான் தேடிபிடித்து ஏமாற்றும்.

என்னை கேட்டால், நாம் நல்லவங்களாக இருக்கலாம் ஆனால் முட்டாளாக இருக்ககூடாது. நாம் யாரையும் ஏமாற்ற வேண்டாம் ஆனால் நம்மை ஏமாற்றவனிடம் மிகவும் ஜாக்ரதையாக இருக்கனும்.

இந்த சினிமாகாரனுங்களில் முக்கால்வாசி பேர் திருட்டு பயலுங்க. சினிமாவே ஒரு மாய உலகம்தான். அது வெளிபுற அழகு கவர்ச்சி கொண்டது. உள்ளே பல அழுக்குகளை சுமந்திருக்கும். சினிமாகாரனுங்க அடுத்து இன்னொரு கேடி பயலுக இருக்கானுங்க அவனுங்கதான் உலகமகா ஜித்தனுங்க அவனுங்கதான் அரசியல்வியாதிங்க... ஐய்யோ, சினிமாகாரனுங்களிடனும், அரசியல்வியாதிகளிடனும் நீங்க பேச்சு கொடுத்தா... சும்மா வக்கணையா பேசுவானுங்க... இந்த உலகமே அவனுங்க முப்பாட்டன் வாங்கி போட்ட சொத்துதான் என்று அலந்துவிடுவானுங்க.... ஒன்னா நம்பர் கேப்மாரிங்க பயலுங்க.. ஆனால் இவனுங்க இரண்டு பேரையும் விழுங்கி சாப்பிடுற இன்னொரு மிகபெரிய கேப்பாரி இருக்கான்... அவனுங்ககிட்ட இவனுங்க இரண்டு பேரும் எப்போதும் தொடர்பிலே இருப்பானுங்க... அவன்தான் கார்ப்ரேட் திருட்டு சாமியாரு...

இந்த மூனு கம்முனாட்டிகங்க சேர்ந்துதான் சாதாரண வெகுஜன மக்களை ஏமாற்றி சுரண்டி தின்கரானுங்க... இந்த மூனு பேருக்கு எச்ச காசை போடுபவன் யார் தெரியுமா.? கார்ப்ரேட் பெரும் முதலைகள். இதுதான் கேடிகளின் சைக்கிள் சிஸ்டம்.

நம்மதான் இவனுங்ககிட்ட இருந்து எச்சரிக்கையாக இருக்கனும். நேற்று வண்டி ஓட்டிகொண்டு போகும்போது என் வண்டிக்கு முன்னே சென்ற வண்டியில் ஒரு வாசகம் எழுதிருந்தது. அது, "உலகத்தை நேசி..! யாரையும் நம்பாதே..! என்று. அதை சொன்னவர் "தல" என்றிருந்தது. ஆமாம், நடிகர் அஜித்குமார்தான் சொல்லிருக்கார் போல... அஜித் ரொம்ப வாழ்க்கையில் அடிபட்டு வந்தவர். அதான் அப்படி ஒரு டயலாக் சொல்லிருக்கார்.

உலகத்தை நாம் நேசிக்கலாம் ஆனால் சில பேரை நம்பாமல் எப்படி இருக்க முடியும். நம்பிதான் ஆகனும். பெத்த புள்ள வயசான காலத்தில் நம்மை காப்பாத்தும் என்று எங்கோ ஒரு மூலையில் நம்பிதான் ஆகனும். கட்டனுன பொண்டாட்டி புருசனும், வாக்கபட்ட புருசனை பெண்ணும் நம்பிதான் ஆகனும். இதேல்லாம் நம்பிக்கை சார்ந்துதான் உள்ளது. இந்த உலகத்தில் மனிதர்களே இல்லாமல் வாழ்ந்தால் அதுவும் ஒருவித வெறுமையான வாழ்க்கைதான்.

நாம் மனிதர்களை புரிந்துகொள்ளவேண்டும். எவனை நம்பனும் எவனை நம்பகூடாது என்ற புத்தி தெளிவு நமக்கு வேண்டும். அப்படி இருந்தால் மனதில் எந்தவித குழப்பனும் நமக்கு வராது. இரண்டாவது ரொம்ப முக்கியமாக எதையும் பெரிதாக எதிர்பார்க்கக் கூடாது. வந்தா வருது வரவில்லை என்றால் போகுது. என்று இருந்துவிடவேண்டும் ஆனால் நம்மாலான்னா முயற்சியை மட்டும் செய்துகொண்டிருக்கவேண்டும்.

அர்த்தசாஸ்திரத்தை எழுதிய சந்திரகுப்த மௌரிய பேரரசில் வாழ்ந்த கௌடில்ய சாணக்கியன் என்ன சொல்லிருகிறான் என்பதை கீழே உள்ள படத்தில் இருப்பதை படியுங்கள். 


சாணக்கியன் நீதி மனிதர்களிடம் ஒருவித எதிர்மறை விளைவையே தோற்றுவிக்கும். நான் சொல்வது என்னவென்றால் நாம் மிகவும் நேர்மையாக இருக்கனும். இது நல்லறம் சார்ந்த விசயம் ஆனால் தன்னை ஏமாற்றுபவனின் காலடிதடம் நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும். நேர்மையை கையாள்வதில் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நேராக வளர்வதில் தவறில்லை ஆனால் யாருக்கு நேராக வளர்கிறோம் என்பதே முக்கியம். இங்கு சூழ்நிலையை ஆராய வேண்டும். அனுபவ புத்தியை கொண்டு சமயோசிதமாக செயல்படவேண்டும். எப்போதோ எதற்கோ சொன்ன சாணக்கியன் கருத்தைவிட, வாழ்க்கை நடைமுறை எதார்தை புரிந்துகொண்டு சொல்லும் என் கருத்து உயர்வானது.

இருட்டடைந்த மனம் கொண்ட மனிதர்கள். அவர்கள் இருட்டிலே வாழ்ந்து பழகிட்டார்கள். நீதி, நல்லோழுக்கம்,பண்பு, வாய்சொல் தவறாமை போன்ற அறம் சார்ந்த பண்பென்ற வெளிச்சத்தில் வராதவர்கள். வர தயங்குபவர்கள். இவர்களிடம்தான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிருக்கு. 10 பேர் இருக்கானுங்க என்றால் அதில் 9 பேர் திருட்டு பயலுங்க... அதில் மீதி ஒருத்தன்தான் யோக்கியவன். ஆனால் அந்த யோக்கியவன் அந்த 9 பேரில் மறைந்திருப்பான். 9 பேரும் அவனை மேலே வரவிடாமல் மறைத்துவைத்திருப்பானுங்க. ஆ... அந்த ஒருத்தனைதான் நாம் கண்டுபிடித்து அவனிடம் நம் நம்பிக்கையை எதிர்பார்கனும். அவனே உங்களூக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருப்பான்.

வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு. இங்கு யாரையும் யாரும் குறை சொல்ல முடியாது அவங்க அவங்க ஒருவிதமாக வாழ்க்கையை பார்த்து மிரண்டு போய் இருக்காங்க.. மற்றும் ஆசையின் போதையில் எல்லோருக்கும் மாட்டிகொண்டு இருக்காங்க.. இங்கு நுகர்வோர் கலாட்சாரம் அதிகமாகிவிட்டது. ரொம்ப உஷாராக இருப்பவன் கூட போதை போன்ற ஆசையில் மாட்டிகொள்கிறான். சொல்லுவாங்க.. "எங்க அப்பன் நல்லா சம்பாதிச்சான் ஆனால் எல்லாத்தையும் கூத்தியால் வீட்டுல கொண்டுபோய் வச்சுட்டான். இப்ப நாங்க தெருவுல நிக்கிரோம்" என்று. மது, மாது போன்ற போதையில் விழுரவனுங்க நாட்டில் ரொம்ப அதிகம்.

என்னத்த நாம் செய்வது கலிமுத்தி போச்சு என்ற பெரு மூச்சு விட வேண்டியதுதான். போதிய மட்டும் உங்களை உங்கள் சார்ந்தவர்களை தற்காத்து கொள்ளுங்கள். எதையும் முன்னெச்சரிக்கையாக யோசித்து செயல்படுங்கள். பேச்சு, செயல் இரண்டும் கவனமாக இருக்கட்டும். எதற்கும் ஆதாரம் வைத்துகொள்ளுங்கள். ஒலி(ஆடியோ-வாய்ஸ் கால்) ஒளி(ஸ்பை வீடியோ), கையேழுத்து பிரிதி, தேவையானால் விரல்ரேகை பதிவு. இதனுடன் சேர்த்து சாட்சி சொல்ல மனிதர்கள் ஆதாரம் வைத்துகொள்ளுங்கள். அரசியல், அதிகார பலம் உள்ளவர்களை சிறிதேனும் தெரிந்துவைத்துகொள்ளுங்கள். நான் சொன்னது எல்லாவற்றிற்கும் உங்களை தற்காத்து கொள்ளும் வழிகள். இது செய்யும் தொழிலுக்கும் மற்றும் எல்லா உறவு அமைப்புகளுக்கு பொருந்துக்கூடியது. நாம் வட்டத்துக்குள் போவது தப்பில்லை ஆனால் வட்டத்தைவிட்டு வெளிவரவும் தெரிந்திருக்கனும். அவங்கதான் புத்தியை பயன்படுத்தும் அறிவாளிகள். உதாரணதிற்கு நீங்க தூங்கும் போதுகூட காலை ஆட்டிகொண்டுதான் தூங்கனும் இல்லன்னா... இவன் செத்துபோய்ட்டான் என்று மாலையை போட்டுவானுங்க... நான் இதை ஏதோ விளையாட்டாக சொல்லவில்லை எல்லாம் அனுபவ அடிபடையில்தான் இவை அனைத்தையும் சொல்கிறேன். இல்லையென்றால் கவிஞர். நா.முத்துகுமாரை 60 லட்சம் மேல ஏமாற்றுனானுங்களே அதுபோல்தான் நடக்கும். பாவம், மருத்துவம் பார்க்கமுடியாம ஒருபக்கம் பணம் ஏமாற்றம். அனாதையாக பொண்டாட்டி மற்றும் இரண்டு சின்ன குழந்தைகளை தவிக்கவிட்டு மன வேதனையுடன்தான் அவர் இறந்திருக்கார். ரொம்ப கொடுமை..

அதனால் நான் கடைசியாக மேலே சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். "நல்லவங்களாக இருங்க, ஏமாளியாக முட்டாளாக இருக்காதிங்க... நம்முடன் வாழும் பெரும்பான்மையான மக்கள் சரியில்லை.." அவனுங்களுக்கு சந்து கிடைக்சா அடிச்சு ஆளையே துக்கிடுவானுங்க... பின் யாருக்கும் தெரியாம இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டு "அவர் அப்படி, இவர் இப்படி" என்று அலந்துவிடுவானுங்க... அதனால் உங்களையும் உங்கள் சார்ந்தவர்களையும் பாதுகாத்து, மிகவும் எச்சரிக்கையாக இருந்து செயல்படுங்கள். நன்றி...!


நட்புடன்:

Monday, August 15, 2016

கவிஞர்.முத்துகுமார் மர்ம மரணம்...!?



           கவிஞர் நா.முத்துகுமார் மரணம் மிக பெரிய இழப்பு. என்ன அருமையான பாடலாசிரியர் வார்த்தைகள் ஒவ்வொன்றும் செதுக்கிய சிற்பங்கள். எனக்கு அவர் எழுதிய பாடல்களில் பிடித்த பாடல் தங்கமீன்கள் படத்தில் வரும் "ஆனந்த யாழை மீட்டுகிறாள்.." என்ற பாடலே, பொண்ண பெத்த ஒவ்வொரு அப்பனுக்கும் மிகவும் பிடித்த பாடல் அதுவாகதான் இருக்கும். அவர், இனஉணர்வை தன் வார்த்தைகளால் வெளிபடுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான். 7 ஆம் அறிவு படத்தில் ஒரு பாடல் வரும். "இன்னும் என்ன தோழ எத்தைனையோ நாளாய்.." என்ற வரிகளின் நடுவில் சில வார்த்தைகள் அவை, "கழுத்தோடு ஒரு ஆயுதத்தை எங்கள் களங்களில் சுமக்கிறோம். எழுத்தோடு ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியில் சுமக்கிறோம்." என்று.  என்னம்மா எழுதிருப்பார் நம் ஈழஇனத்தையும், நம் தமிழ்மொழியும் இணைத்து எழுதிருப்பார். 

          எனக்கு அவரின் மறைவு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்திவிட்டது. முத்துகுமார் என் நண்பரின் ஆரம்பகால அறை தோழர் அவரின் சொந்த ஊர் காஞ்சிபுரம். முத்துகுமாருக்கு ஆரம்பத்தில் உதவியாக இருந்தது மற்றும் பாலுகேந்திராவிடம் அறிமுகம் செய்துவைத்தது பாடலாசிரியர் அறிவுமதி. பின் 4 நான்கு வருடம் பாலுமகேந்திர படைப்பு பட்டறையில் இருந்து சீமானின் முதல் படத்தில் முதல் பாடல் எழுதி திறை துறைக்கு அறிமுகமானார்.

          என் நண்பர் சொல்லுவார், "முத்துகுமார் அதிகமாக தண்ணி அடிப்பார்" என்று. அவர் மஞ்சள் காமாலையில்தானே இறந்திருக்கிறார். தண்ணி அதிகம் அடிப்பவர்களுக்கு அந்நோய் பிடிபட அதிகம் வாய்ப்புள்ளது, அது என்னன்னு தெரியல, போதைக்கும், கவிஞர்களுக்கு என்றும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. கவிஞர் கண்ணதாசன் மிக பெரிய போதை ஆசாமி, மது மாது இல்லாமல் அவரால் பாடலே எழுத முடியாது. அவரின் ஒரு பாடல் வரிகளே அதற்கு சாட்சி, "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலலிலே என் உயிர் துடிப்பு. நான் பார்பதேல்லாம் அழகின் சிரிப்பு" என்று எழுதி, அவரே அந்த பாடல் காட்சிகளுக்கு வாயசைத்து நடித்திருப்பார். போதையில் இருக்கும்போது எல்லொருக்கும் பார்பதெல்லாம் அழகாகதான் இருக்கும் அதை பார்த்து சிரிப்பும் உண்டாகும். "போதையில் மது கோப்பை கூட காதலியின் உருவத்தை நினைவுபடுத்தும்" என்று ஒரு கவிஞர் எழுதுகிறார். மு.மேத்தா என்ற ஒரு பாடலாசிரியர் இருக்கிறார். அவர் இந்திய அரசின் சாகித்திய அகதெமி விருது வாங்கிய பாடலாசிரியர். அவர் என் கல்லூரி தமிழ் பேராசிரியரும் கூட... இந்த விசயம் எத்தனை பேருக்கு தெரியும்.? என்று தெரியாது. அவர் ஒரு பக்கா செயின் ஸ்மோக்கர், சிக்ரெட்டை தூதி தள்ளுவார். அதில் போதை கண்டே கவிதை எழுதுவார். வாயில் சிக்ரெட்டும் கையில் பேனாவும் இருப்பதை நானே அதிகம் முறை பார்த்திருக்கேன். இப்படி பல கவிஞர் போதையின் அங்கமாக இருந்துதான் பாடல்கள் படைகிறார்கள். நாம் கேட்கலாம், "ஏன் போதையில்லாமல் படைப்பு படைக்கமுடியாதா.?" என்று. ஏன் முடியாது தாரளமாக முடியும். என்னை கேட்டால் அதுதான் அருமையான படைப்பாக இருக்கும் என்பேன். ஆமாம் தியானத்திலே அப்படைப்பு சாத்தியம். சாதாரண கவிஞர்கள் ஒருவித மயக்கத்தில் அந்த உச்ச நிலையில் சில அரிய காட்சிகளிளை காண்கிறார்கள் அதை உணர்ந்து வார்த்தைகளாக எழுதுவார்கள். ஆனால் போதை தீர்ந்த பிறகு அவர்களுக்குள் மிக பெரிய வெறுமை, வெற்றிடம் ஏற்படுகிறது அவர்களை அது சூழ்ந்துகொள்கிறது. அந்த காட்சிகளை மீண்டும் வரவழிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் முடியாமல் போகிறது. மீண்டும் வரவழிக்கவே போதைக்கு உள்ளாகிறார்கள். அந்த வெற்றிடத்தை "சூன்னிய பிரசவம்" என்பார்கள்.

          கவிஞர்களும், எழுத்தாளர்களும் மற்றும் பல துறை படைப்பாளிகளுக்கு அந்த வெறுமை என்றும் இருக்கும். அப்போது எவ்வளவு முயன்றாலும் வார்த்தைகள் புலப்படாது. இது ஒரு பெண் பிரசவித்த பின் அவளின் சக்தி முழுவது தீர்ந்துவிட்டது. அவளுக்கு இப்போது தேவை நிம்மதியான ஒய்வு மட்டுமே ஆனால் அவளை மீண்டும் பிரசவிக்க தயாராக்குபடி நிர்பந்தித்தால் முடிவு அவளின் மரணத்தில் போய் முடியும். இதுபோலதான் படைப்பின் ஜீவிதத்தை போதையில் இழுத்துபிடிக்க கவிஞர்கள், எழுதாளர்கள் எத்தனிகிறார்கள் அந்த இயற்கைதன்மையை நிர்பந்திருகிறார்கள். ஆனால் அது முடியாமல் போக, வற்றிப்போக அது வராமல் போகிறது. அதை நினைத்து ஏங்குபவன் மரணித்துபோகிறான். இது முழுவது மனதின் ஆசையில்தான் நடக்கிறது. பின் அது நேரடியாக உடலை பாதிக்கிறது மரணமே அவர்களுக்கு பரிசாக வந்து சேர்கிறது. நா.முத்துகுமார் இறப்பும் இதன் அடிபடையில்தான் நடந்தேரியது. அவருக்கு கவிதையில் மிகபெரிய தேடுதல் இருந்தது. அவர் சினிமா பாடலாசிரியர் பிரிவில் பி.எச்டி பட்டம் பெற்றவர். இரண்டு தேசிய விருது வாங்கியவர். 1500 பாடல்களை எழுதியவர். இப்படி ஒரு சாதனை நிலைபாடுடையவருக்கு பாடலின் தாக்கம் இயற்கையாகவே மேலும் அதிகரிக்கவே செய்யும். அது குடியின் போதையிலே அவரை அழைத்து சென்றது. முடிவு அவரின் இறப்பு. அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து எட்டு மாதம்தான் ஆகிறது. அந்த குழந்தை பெரியவளாகி தன் அப்பா எழுதிய அந்த "ஆனந்த யாழை.." பாடலை கேட்கும்போதேல்லாம் அந்த குழந்தை என்ன நினைத்து ஏங்கும், "ஐய்யோ, நம் அப்பா இப்போ நம்முடன் இல்லையே..." என்று எப்படியேல்லாம் ஏங்கி தவிக்கும். அதை நினைத்தால் நமக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. 

          ஒருவரின் இழப்பு, காலம் கடந்து மனித உறவுகளை எப்படியேல்லாம் பாதிகிறது. கவிஞர் நா.முத்துகுமார் எனக்கு எந்த உறவும் இல்லை என் நண்பரின் நண்பர் அவ்வளவுதான் ஆனால் எனக்கும் அவரின் இழப்பு மிக பெரிய துக்கத்தை அல்லவா கொடுக்கிறது.  நான் அவர் எழுதிய பாடலை அடிக்கடி பாடிகொண்டிருப்பேன். அதன் தாக்கம்தான் என்னமோ என்னையும் பாதிகிறது. சமீபத்தில் கூட நான் அந்த பாடலை பாடி வாட்ஸ் அப்பில் என் நண்பர்களுக்கு எல்லாம் பகிர்ந்தேன். அப்படி ஒரு ஈர்ப்பு, தாக்கத்தை என்னுள் உண்டாக்கியது அந்த பாடல் வரிகள்.

          கவிஞர் வைரமுத்து காதலன் படத்தில் ஒரு பாடல் வரிகள் எழுதிருப்பார். பாடல் பல்லவியில் "என்னவளே அடி என்னவளே... என்று தொடங்கி சரணத்தில் "வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி.." என்று எழுதிருப்பார். அந்த தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை அதுதான் அதேதான் அந்த படைப்பின் ஜீவிதம். வைரமுத்து ஒரளவுக்கு உணர்ந்திருக்கிறது. அவருக்கு உணர்வு சிந்தனை அதிகம். எத்தனை பேருக்கு தெரியும். அங்குதான் கவிஞர் மற்றும் பல படைப்பாளிகளுக்கு வார்த்தைகளாக அங்கு வந்து அமர்கிறது. அதை போதையில் கூட சில கணங்கள் அமரவைக்கலாம்தான். நான் ஏதோ விளையாட்டாக இதை சொல்லவில்லை நான் சொல்வது முழுவதும் நிஜம். மிக பெரிய கவிஞர்கள், மிக பெரிய படைப்பாளிகள் எல்லாம், "நாம் என்ன படைக்கனும்.." என்று நினைத்துவிட்டு வெறுமனே காத்திருப்பார்கள். இது பல பேருக்கு தெரியாமல் நடக்கிறது. இப்படிதான் நடக்கிறது என்று பல படைப்பாளிகளுக்கு தெரியாது. ஆனால் அப்படிதான் நடக்கிறது. வெறுமனனே காத்திருக்கும் போதே படைப்பு தொண்டையில் வந்து விழும். "ஆஹா...! அது மகா அற்புதம். அதை நான் அனுபவித்திருக்கிறேன். தியான படைப்பின் விசுக்தி சக்கரம் அது. தேவர்களும், அசுரர்களும் பார்கடலில் கடைந்தெடுத்த அமிர்தம் அது. அமிர்தம் வருவதற்கு முன் நஞ்சு வந்தது. அதை சிவன் குடித்து தன் தொண்டையில் நிறுத்தினான். அதன் பின் கடையும் போது அமிர்தம் வந்தது. அதுதான் படைப்பின் அமிர்தம். அது சுவையோ சுவை. அந்த அமிர்தம்தான் ஒவ்வொரு படைப்பாளிக்கும் வருகிறது. இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் உலகத்தில் அத்தனை படைப்பாளிகளுக்கும் வரும். அது படைப்பாளீகளிக்கு பல பேருக்கு இப்படிதான் நடக்கிறது என்று தெரியாது ஆனால் கவிஞர் வைரமுத்துக்கு தெரிந்திருக்கிறது அதான் பாடல் வரிகளில் அதை எழுதிவிட்டார். இதில் கொடுமை என்னவென்றால் அவர்களின் ஆணவம்தான் அதை சாதித்தது என்று தீமிராக நடந்துகொள்கிறது. சாதித்தது அவர்களின்  ஆனவமனம் அல்ல, சாதித்தது அந்த உயிர் ஜீவித மனம் ஆனால் இதைதான் ருசி கண்டவர்கள் கட்டாயபடுத்தி போதையில் வரவழிக் முயல்கிறார்கள்.

          நான் அதை தியானத்தில் அருமையாக வரவழிக்கலாம் என்கின்றேன். எனக்கு அதன் காலடிதடம் நன்குதெரியும். எப்போது வேண்டுமானலும் என்னால் அதை கொண்டுவர முடியும். அருமையான படைப்புகளை அச்ஜிவிதம் துணைகொண்டு என்னால் தரமுடியும். முத்துகுமார் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு இவ்வளவு பெரிய பதிவை என்னால் எழுத முடிகிறது என்றால் எப்படி.? அந்த ஜீவித விசுக்தி சக்கர துணைகொண்டே நான் எழுதுகிறேன். இதில் என் பங்கு எதுவும் இல்லை. வெறுமனே நான் தட்டச்சு செய்கிறேன். வார்த்தைகள் நினைவுகளில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது. இதற்கு எந்த முன்னேற்பாடும் குறிப்பும் என்னிடம் இல்லை. தானாகவே வருகிறது. கடைசியாக பிழை திருத்தம் மட்டும் நான் பார்ப்பேன். அதுதான் என் வேலை. மற்றபடி நான் எழுதுவதெல்லாம் அந்த படைப்பின் மூலமே... நான் கல்லூரி படிக்கும்போதே சிறு சிறு கவிதைகள் எழுதி வந்தேன் அதை எல்லாம் மொத்தமாக தொகுத்தே சமீபத்தில் ஒரு கவிதை புத்தகம் வெளியிட்டேன். அதன் பின் கவிதையில் எனக்கு பெரிய நாட்டம் இல்லை. எப்போதாவது கவிதை எழுதுவதுடன் சரி.. ஆனால் கவிதை தொடர்ந்து எழுத ஆரம்பித்தால் மிக பெரிய படைப்புகளை தரமுடியும். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை என்னால் அந்த படைப்பின் அமிர்ததை எப்படி அருந்தவேண்டும் என்ற வழிமுறை தெரியும். தியானத்தால் என்னால் அதை அடையமுடியும். அற்புதமான படைப்புகளை அந்த ஜீவிதம் துணைகொண்டு என்னால் தரமுடியும். ஆனால் என்னுடைய நோக்கமே அந்த முடிவற்ற எல்லை நோக்கியே உள்ளது. படைப்பை கடந்து பிரம்மத்தில் லயித்து உள்ளது.

          ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். இது நான் அனுபவித்த உதாரணம். இதன் மூலம் நான் சொல்லவந்ததை முழுவதும் உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைகிறேன். "சின்னஞ்சிறு மீன்கள் அதிகம் உள்ள குளத்தின் படியில் நீங்கள் அமர்ந்துகொண்டு அரிசி பொறியை போட்டுகொண்டிருந்தால் மீன்கள் உங்களை சுற்றி அதிகம் வந்துசேரும் அதை சாப்பிட்டுகொண்டே உங்கள் கால்களை அது மெல்லியதாக கடித்துகொண்டு இருக்கும். அப்போது அது உங்களை ஒருவித சந்தோச பரவச நிலையை அழைத்து செல்லும். நீங்கள் அனுபத்திருக்கிங்களா.. என்று தெரியாது அருமையான அனுபவம் அது. அந்த அனுபவம் உங்களுக்கு வேண்டும் என்றால் திருப்போரூர் முருகன் கோயில் குளத்தில் நீங்கள் போய் அனுபவிக்கலாம். இப்போது நாம் அந்த மீன்களின் சுகதிற்கு ஆசைபட்டு நம் மனதில் சட்டென ஒரு எண்ணம் உதித்கிறது. கைகளால் மீன்களை பிடித்துவிடுகிறோம். சில மீன்களே கைகளில் அகப்பட்டுகொள்கிறது. பல மீன்கள் ஓடிவிடுகிறது. பிடித்த மீனை நாம் கண்ணாடி தொட்டியில் விட்டு அழகு பார்கிறோம் மற்றும் தொட்டியில் கால்களை விட்டு குளத்தில் கடித்த சுகத்தை அனுபவிக்க முற்படுகிறோம். ஆனால் அங்கு மீன் பயத்தில் கடிகிறது அது ஆனந்தமாக இல்லை... அந்த பரவசம் இப்போது கிடைக்கவில்லை. மீனுக்கும் உங்களுக்கு உள்ள இயற்கை தொடர்பு துண்டித்து விட்டது. நம் ஆசையினால் அதன் இயற்கைதன்மையை இழந்துவிட்டோம். நாம் அதை கட்டாயப்படுத்தி இழக்கடித்துவிட்டோம்.

          நான் சொன்ன இந்த மேற்குரிய உதாரணம் போல்தான் படைப்பாளிகள் போதையில் சில மீன்களை பிடித்துவிடுகிறார்கள். அவர்கள் பிடித்தது அந்த ஜீவிதத்தின் அற்புதமான விசுக்தியின் அமிர்த மீன்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அது சில மீன்களே.. அதைவைத்து நாம் சுகத்தை காண முற்படும்போதே அதன் இயற்கை போய் செயற்கை உண்டாகி முடிவு மரணத்தில் முடிகிறது. ஒவ்வொரு படைப்பாளியும் இப்படிதான் அதை வலிய பிடித்து அதை சாகடித்து பின் தானும் செத்து போகிறார்கள்.. கவிஞர் நா.முத்துகுமார் மரணமும் இதன் அடிபடையில் நிகழ்ந்ததுதான். இதை நேரடியாக நிருபிக்க முடியாது. ஆனால் அதன் உட்தாத்பரியம் நான் சொன்ன அடிபடையில்தான் நடைபெருகின்றது. இதில் எந்தவித மாற்று கருத்துமில்லை. இதில் படைப்பாளிகள் என் கருத்தை அமோதிப்பார்கள் ஏனென்றால் அவர்களுக்கு நான் சொன்ன விளக்கம் எளிதாக புரிந்திருக்கும்.

          படைப்பின் நிலை பற்றி நான் இன்னும் எவ்வளவோ எழுதலாம் ஆனால் இதனால் இழந்த ஒரு படைப்பாளியை மீட்டு வரமுடியாது. ஆனால் நான் எழுதியது எல்லா படைப்பாளிகளுக்கு ஓர் எச்சரிக்கை. படைபாளிகள் தங்கள் உடல் நலத்திலும் மிகுந்த அக்கரை கொள்ளவேண்டும். "சுவர் இருந்தால் அழகிய சித்திரம் வரைய முடியும்" என்பதை நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

          கவிஞர்.முத்துகுமார், மனைவிக்கும், குழந்தைகளூக்கும் நாம் என்ன ஆறுதலை இங்கு சொல்லமுடியும்.? வெறும் வார்த்தைகளால் அதை நம்மால் நிரப்ப முடியாது அவர்களுக்கு மிக பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. காலம்தான் அதற்கான மருந்தாங்க இருக்கமுடியும். காலமே அனைத்தையும் மாற்றும் சக்தி படைத்தது. காலமாற்றமே அவர்களுக்கான நிவாரணமாக இருக்கமுடியும். இங்கு காலமே அக்குடும்பத்தை காக்கட்டும். அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வர காலம், சக்தியை அளிக்கட்டும்.

இதில் நாம் அனைவரும் ஒரு நிமிடம் பிரார்திப்போம் நா.முத்துகுமார் "ஆத்மா சாந்தி அடையட்டும்..." என்று.


நட்புடன்:
Rk.Guru