Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Monday, February 7, 2011

எனக்கு உண்டான மரண அனுபவம்...



உலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லோருக்கும் ஒவ்வொரு வாழ்கை சம்பவங்களில் ஏற்படும் அனுபவம் அவர்கள் வாழும் வாழ்வில் நிரந்தரமாக தங்கிவிடும். இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சில வருடங்களுக்கு முன் ஒருநாள் நான் உடல் அசைவுகள் ஏதும் அற்ற நிலையில் தரையில் வெறுமனே படுத்துக்கொண்டு மரணித்ததுபோல அதாவது நான் இறந்ததுபோல எண்ணி என் நினைவுகள் தாங்கி உள்ள மனதை  நம்பவைத்தேன் அப்போது என் உடம்பில் துளி கூட அசைவு இல்லாமல் அமைதியாக இருந்தேன். அம்மனதை நம்பவைக்கும் முயற்சியிலே இருந்தேன்.  "நான் இறந்து போய்விட்டேன், இறந்து போய்விட்டேன்" என்று மனதில் திரும்ப திரும்ப சொல்லியபடியே இருந்தேன். ஒரு சில நிமிடங்களில் என் மனது நான் சொன்னதை நம்ப ஆரம்பித்துவிட்டது. இப்போது மனது என்னிடமிருந்து தனித்துவிடப்பட்டது. அந்த நேரத்தில் எனது மனது  பரிதவித்த பரிதவிப்பு இருக்கிறதே..! எப்பப்பா..அதை வார்த்தைகளில் சொல்லமுடியாத பரிதவிப்பு.  மனது உண்மையில் "நான் இறந்துவிட்டேன்" என்று  நம்ப ஆரம்பித்துவிட்டது. "அவ்வளவுதான் இந்த உடம்பு மீண்டும் திரும்ப வராது உறவுகள் எல்லாம் அவ்வளவுதான். மனைவி, குழந்தைகள் எல்லாம் விட்டு விட்டு போகவேண்டியதுதான். மறுபடியும் சேரமுடியாதே..! என்ற ஒருவிதமான இறுக்கமான பரிதவிப்பு. அது எதுபோல பரிதவிப்பாய் இருக்கும் என்று சொன்னால்  "நீங்கள் எப்போதாவது மரணத்தை நெருங்கி சென்று வந்திருந்தால் அதை நீங்கள் உணர்ந்திருக்கலாம் அப்போது உங்களுக்கு ஏற்படும் பயம்  "அவ்வளவுதான் நம் கதை முடிந்தது" என்ற நினைக்க தோன்றும்.  ஒரு பத்து பதினைந்து மாடி கொண்ட ஒரு கட்டிடத்தில் முழுவது மூடிய லிப்டில் நீங்கள் தனியாக  போகும் போது லிப்ட் எட்டாவது மாடியில் சென்று கொண்டிருக்கும்போது மின்சார தடைபட்டு நின்றால் அப்போது ஏற்படும் ஒரு நிலை அது கட்டாயம் மரண நிலைக்கு ஒப்பானதுதான். அப்போது  மூச்சு திணறல் ஏற்படும், ஒருவித படபடப்பு, பரிதவிப்பு "அவ்வளவுதான் நம் கதை முடிந்தது" என்ற நினைப்பு கூடவே வந்துவிட்டு போகும். இப்படிபட்ட பல சம்பவங்கள் என் வாழ்வில் வந்துபோன அனுபவங்கள் உண்டு. அவ்வனுபவம்  மரணத்தை தொட்டுவிட்ட அனுபவமாய் இருக்கும் ஆனால் இதில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மரணத்தின் ஒரு புதுவித  வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது. என் மனம் அலைந்த பாடு இருக்கிறதே பெரும் போராட்டமே நடக்கும். அதில் இருந்துதான் நான் தெரிந்துகொண்டேன். "உயிர் பிரிந்த பின் மனமானது  நிறைவேறாத  ஆசைகளுடன் எண்ணங்களுடனே தங்கியிருக்கும்" என்றும் மனமானது அந்த ஆசை எண்ணங்கள் நிறைவேற புதிய உடலை தாங்கி பிறப்பெடுக்கும் என்றும் அப்போதுதான் தெரிந்துகொண்டேன். இவை எல்லாம் என் அனுபத்தில் நான் கண்ட உண்மை...இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் உணர்ந்தால்தான் உங்களுக்கு அது உண்மையாக இருக்கும்.



இதேபோன்று இன்னொரு அனுபவமும்  ஏற்பட்டிருக்கிறது.  ஒருமுறை நான் தியானம் செயலாம் என்று அமர்ந்தேன் அமர்ந்து சற்று நேரம் கண்ணை மூடிய நிலையில் என் எண்ணங்களையே கவனித்து கொண்டிருந்தேன். சட்டேன என் எண்ணம் திசை மாறிய பயணம் செய்தது மனத்தின் பிடிப்பு இல்லாமல் எண்ணம் படுவேகமாக சென்று கொண்டிருந்தது. வேகம் என்றால் சாதாரண வேகம் இல்லை படு பயங்கரமான வேகம் அது  ஒளிவேகத்தைவிட  மிஞ்சிய வேகமாகத்தான் இருந்திருக்கும் அது எங்கையோ என்னை இழுத்து கொண்டே சென்றது. ஒரு இளம் சிவப்பான நிறம் அதினுள் எங்கே சென்று கொண்டே இருக்கிறேன். அவை என்னவென்று ஆராயா கூட அங்கே எண்ணம் இல்லை. ஒரு நிலையில் நான் பயந்துவிட்டேன். கடும் முயற்சி செய்து கண்ணை திறந்தேன். கண்ணை திறந்தால் நான் இருந்த இடத்தில்தான் உட்கார்ந்துகொண்டிருந்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை எனக்கு என்ன ஆச்சு என்று எனக்கே தெரியவில்லை பிரம்மை பிடித்தவன் போல உட்கார்ந்து கொண்டிருந்தேன் மீண்டும் மீண்டும் என் நினைவில் அந்த காட்சிகள்  ஓடிகொண்டிருந்தது. மறுநாள் அதே இடத்தில் தியானத்தில் உட்கார்ந்தேன். இப்போதும் கண்ணை மூடி அமைதியாக என் எண்ணங்களை கவனித்தேன் இப்போது முன் நாள் ஏற்பட்ட அந்த காட்சி  ஏற்படவில்லை மீண்டும் மீண்டும் முயற்சியில் இருந்தேன் ஆனால் அது இன்று வரை எனக்கு தோன்றவில்லை அந்த நிகழ்வு ஏற்பட்டு சில மாதங்கள் கழித்து நூலகத்தில் விவேகானந்தரின் புத்தகம் ஒன்றை படித்துகொண்டிருந்தேன் அப்புத்தகத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுவத்தையும் சொல்லிருந்தார் அதுபோல ஏற்படும் நிலை ஒருவரின் ஆன்மிக மேலான நிலையான சமாதி நிலைக்கு ஒருவரை இட்டுசெல்லும் என்று குறிப்பிடபட்டிருந்தது ஆனால் சில பேர் அந்த நிகழ்வு ஏற்படும் அச்சத்தை பார்த்து திரும்பி வந்துவிடுவார்கள். அதை கடந்து சென்றால் சமாதி நிலை அடையலாம். என்று அவரால் சொல்லபட்டியிருந்தது.


மரணத்தை தழுவிய இன்னொரு நிகழ்வு. ஒரு முறை நான் நன்றாக உறங்கிய  நிலையில் என் உடலை நானே பார்பதுபோல ஒரு காட்சி ஏற்பட்டது. அதில் என் உடம்பு எப்படி இருக்கிறது என்று நானே பார்கின்றேன் ஆனால் பார்க்கும் எனக்கு எந்த உடலும் இல்லை ஆனால் என்னால் பார்க்கமுடிகிறது, கேட்கமுடிகிறது, அதை உணரமுடிகிறது.  இதில் கேட்க முடிகிறது என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். நான் உறங்குவதற்கு முன்னே பக்கத்து வீட்டில் சில பேர் பேசும் சத்தம் என் காதில் விழுந்தது. அவர்கள் ஏதோ பேசிகொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி நானும் நன்றாக உறங்கினேன் என் உறக்கம் தழுவதை நான் நன்றாக உணர்ந்தேன். உறங்கிய சிறிது நேரத்தில் என் நினைவு பிரிக்கப்பட்டு என் உடலை நானே பார்கின்றேன். இது எனக்கு ஏற்பட்ட உண்மை அனுபவம் இதில் சிறிதளவும் கற்பனை இல்லை. கற்பனையை சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை.  என்னை நானே பார்த்தேன். அந்த உடல் இல்லா நான் பக்கத்து வீட்டில் பேசுவதை நன்றாக கேட்கிறேன். என் உடலையும் பார்கிறேன். என்னால் போகமுடிகிறது என் உடலையே சுற்றி சுற்றி வருகிறேன். இது எனக்கு ஒன்றும் புரியவில்லை "நான் எப்படி இங்கே படுத்துகொண்டிருக்கிறேன்" என்று ஒருவித குழப்பம். அந்த குழப்பம் கொஞ்சம் ஆழ்ந்து போகும்போதே என் உடம்பில் ஒருவித சிலிர்பு ஏற்பட்டது. நான் மிரண்டு எழுந்து உட்கார்ந்தேன். சற்றும் முற்றும் பார்த்தேன் யாரும் இல்லை என் உடலை இப்போது பார்க்க முடிகிறது. இப்போதும் மீண்டும் குழப்பம் யார் என்னை பார்த்தது" என்று ஆனால் பக்கத்து வீட்டில் பேசும் பேச்சுகள் நன்றாக கேட்டுகொண்டிருந்தது இதற்கு முன் என்ன பேசினார்கள் என்றும் என் நினைவில் இருந்தது. அப்போதுதான் என்னால் உணரமுடிந்தது உயிர் தற்காலிகமாக பிரிந்த நிலையை...ஏனென்றால் தூக்கமும் ஒரு தற்காலிக மரணத்திற்கு (sleep  is temprary death) ஒப்பானதுதான் என்று ஒரு புத்தகத்தில் படித்தது நினைவில் வந்தது. அந்த மரணமும் என்னால் உணரமுடிந்தது. இதுபோல் என் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் மறக்கமுடியாத அனுபவங்களை என் நினைவிலே தங்கிவிட்டது.


ஒருமுறை மெய்உணர்வு அனுபவமும் உண்டானது. ஆனால் அதை உண்மை ஞானத்துடன் ஒப்பிடமுடியாது. அது ஏதோ ஒரு தூரல போல்தான் வந்தது. பொதுவாக ஞானிகளுக்கு உண்டாகும்  மெய்யுணர்வு அனுபவமும் ரொம்ப ஆனந்தமானது அவ்வுணர்வு எனபது  தன்னைத்தானே உணர்தல். தன்னை யார்.? என்று உணர்தல். அது ஒரு பரிபூரனமான ஆனந்த நிலை அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதை நான் உணர்ந்தவரை சொல்கிறேன். காரணகாரியம் இல்லாமல் ஒரு சந்தோசம் உண்டாகும். அந்த ஆனந்தத்தை நாம் இதுவரை அனுபவதிருக்கமாட்டோம். மரம் செடிகள் எல்லாம் நம்முடன் பேசுவதுபோல தெரியும். எல்லாமே அழகாக தெரியும் அசிங்கம் என்றும் எதுவும் இருக்காது. அன்பு ஊற்று பெருவெள்ளம் போல் நம்மை நோக்கி வரும். அதை அப்போது தாங்கும் மனவலிமை இல்லாமல்தான் இருப்போம். அதனால்தான் ஞானம் அடைந்தவர்கள் அதை கட்டுபடுத்தமுடியாமல் ஆனந்த நடனம் ஆடுவார்கள். பிறர் பார்வைக்கு பைத்தியம் பிடித்ததுபோல இருப்பார்கள். எல்லாமே பரம்பொருள் ரகசியம். இது சாமானியனுக்கு புரியாது. அதன் சாரல் மழையில் நான் நனைந்திருக்கிறேன். முழு மழையும் எதிர்பார்த்துகொண்டிருகிறேன. மறுபடியும் சொல்கிறேன். இவை எல்லாம் என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை...இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் உணர்ந்தால்தான் உங்களுக்கு அது உண்மையாக இருக்கும்.
                                                             

என்றும் நட்புடன்:

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ்10-ல் மற்றும் உலவு-இல்
பதியவும் ...நன்றி.)

Friday, February 4, 2011

தேவை ஏற்படும்போதே தேடுதலும் தொடங்கிவிடுகிறது...


 
குடும்பத்தின் அதிகாரம்:

ஒரு குடும்பத்தின் அதிகாரம் குடும்ப தலைவரிடம் இருக்கிறது. அவ்வதிகாரம் தளர்வானால் அக்குடும்பத்தில் அதிகார பரவல்தான் ஏற்படும் அப்புறம் தடிஎடுத்தவரரேல்லாம்  தண்டல்காரனாக இருப்பார்கள். அப்போது குடும்பம் குடும்பமாக இருக்காது. அதிகாரம் இல்லாத தலைவன் இறந்து போனால் அவரின் சொத்தின் உரிமையை மட்டும் எடுத்துகொண்டு அவரை புரகனிப்பார்கள் புரகனிக்கபட்ட குடும்ப தலைவர் இறந்தால்தான் அவருக்கு முழு மரியாதையே கிடைக்கும். பொதுவாக உறவுகள் வாழ்பவர்களை  கவனிக்க மாட்டார்கள்.  செத்தவர்களைதான்  விழுந்து விழுந்து கவனிப்பார்கள் ஏனென்றால் அவர் மீண்டும் வரமாட்டார் என்ற நம்பிக்கையில் அவர் நினைவுநாளில்  படையல் போட்டு போலியான ஒரு துக்கத்துடன் கவனிப்பார்கள். செத்தவரே இறக்கும்போது கவனிக்க ஆள் இல்லாமல்தான் செத்துபோயிருப்பார். செத்த பிறகு அவரை நினைத்து கொள்கிறோம் என்று அவர்கள் உறவுக்குள் விளம்பரம் தேடிகொள்கிறார்கள்.

வாழ்வு ஒரு நீர்குமிழி:

என்னை கேட்டால் நான் சொல்லுவேன்  "எதுவும் எதுவும்மில்லை அதுவும் அதுவுமில்லை" அது உடலும் இல்லை உள்ளமும் இல்லை எல்லாமே நீர்குமிழிதான். இந்த நீர்குமிழி போடும் வடிவம்தான் வாழ்கை. நம்மிடம் அடக்கப்பட்ட ஒன்றின் வெளிபாடுதான் வார்த்தைகளாக வரும். வார்த்தை தூய்மை எல்லாம் அவர் அவர் வெளிப்பாடு, என்னை பொறுத்தவரை விழிப்புணர்வு கொள். விழிப்புணர்வுடன் இரு...இதுதான் மிகவும்  உன்னதமான வார்த்தை. ஒருவர் விழிப்புணர்வில் நிலைகொண்டால் எல்லாமே அடங்கிவிடும் எல்லாமே மறைந்துவிடும், அங்கு எதார்த்தம் ஒன்றே இருக்கும். முழு வாழ்வும் புரிதலான வாழ்வாய் இருக்கும்.  நான் சுட்டெரிக்கும் சூரியன்.....! என்று மனம் சொல்லும். உன்மையிலே நாம் சுட்டெரிக்கும் சூரியனா.? அப்படி இருந்தால் யாருக்காவது நாம்  பயன்படுவோமா.? மனதுக்கு தன்னையும் அழித்து கொண்டு பிறரையும் அழிக்கும் வேலையைத்தான் நடத்தும். மனம் அதன் தனித்துவத்தை இழந்து தன்னை என்றும் ஒன்றோடு ஒன்று அடையாலபடுத்தியே வெளிப்படும். அதனால் மனத்தின் போக்கை அறிவதை விட வாழ்வின் எதார்த்த போக்கை அறியலாம். 

பரிணாம வளர்ச்சியில் சிதைபடும் உறுப்புகள்:

பயன்படுத்தாத உறுப்புக்குகள் பரிமாண வளர்ச்சியில் இல்லாமல் போகும். உணவை மென்று தின்னத்தான் பற்கள் ஆனால் ஏனோ தானோ என்றுதான் உண்ணுகின்றனர். இன்னும் சில நூற்றாண்டுகளில் மனிதனின் பல் சிறிதாக போய்விடுமாம் இது விஞ்ஞான தகவல். நொறுங்கி தின்றால் நூறு வயது வாழலாம் எனபது ஒரு பழமொழி அதனால் ஜீரண உறுப்புகளுக்கு அதிக வேலைகொடுக்காமல் உணவை நன்கு மென்று தின்போம் பரிணாம வளர்ச்சியில் சிதைபடாமல் நம் உடல் உறுப்புகளை பாதுகாப்போம்.

எதை தேர்ந்தெடுப்பது:

பிரச்சனைகளுக்கான காரணங்களை எளிதாக அலசிவிடுகிறோம் ஆனால் பிரச்சனையில் இருப்பது எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கிறது.  எவ்வளவு சிரமபடவேண்டிருக்கு...ஒருவர் "ஆபாச படங்கள் இணையத்தில் அதிகம் இருக்கிறது. அதை எல்லாம் தடை செய்யவேண்டும்" என்கின்றார். எவ்வளவுதான் தடை செய்வார்கள். தடுத்து வைத்தால்தான் தடைகளை மீறும் மனம்.  காய்கறிகளில்  நல்லது எது.? சொத்தை எது.? என்று தேர்ந்தெடுத்து வாங்குவதுபோல் நல்ல தகவல்களை தேர்ந்தெடுத்து படியுங்கள். நீங்கள் விழிப்புடன் இருக்கும் வரை உங்களை யாரும் முட்டாளாக்க முடியாது.

இணைத்தலின் சூத்திரம்:

பெரிதாக நினைத்தால் சிறிது தானாக அடங்கிவிடும். அதாவது பாடத்தில் பெரிய கணக்கு போட்டால் சிறிய கணக்கு விடை எளிதாக தெரிந்துவிடும். பெருந்தன்மையாக நடந்தால் சிறுபுத்தி மறைந்துவிடும். ஒன்றுபட்டு தமிழர் உணர்வுடன் ஒற்றுமையுடன் இருந்தால் ஜாதி தானாக மறைந்துவிடும். இணைத்தலின் சூத்திரம் இதுதான் ஆனா ஒன்றுபட்டு இருப்பதுதான் பல பேருக்கு கடினமாக இருக்கிறது. இருப்பது கடினம் என்றால் பெறுவதும் கடினமாகும். அதனால் போதியமட்டும் ஜாதி,மத பேதம் இல்லாமல் சமத்துவமாக இணைந்திருப்போம்.  



என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ்10-ல் மற்றும் உலவு-இல்
பதியவும் ...நன்றி.)

Tuesday, February 1, 2011

'உண்மை'யை ஏற்பவர்கள் படிக்கலாம்....



இந்த முட்டாள், அறிவாளி என்ற சொற்களில்தான் எவ்வளவு பாகுபாடு. அறிந்தேதேல்லாம் அறிவாகுமா.? நயவங்கஜமான அறியாவாளியாய் ஒருவன் இருப்பதை விட முட்டாளாகவே இருந்து விடலாம். அவனால் தன்னை தவிர யாருக்கும் ஒரு கெடுதலும் நேராது ஆனால் எல்லோரும் தன்னை ஒரு அறிவாளி என்று பிரகனபடுத்த என்றும் முயற்சித்துகொண்டுயிருக்கிறார்கள். தன்னுடைய முட்டாள்த்தனத்தை மறைத்துக்கொண்டு..! சிலநேரங்களில் நானும் இந்த முட்டாள்தனத்தை செய்கின்றேன். ஒருவரை நாம் அறிவாளி என்று சொல்ல அவர் வீட்டில் இருக்கும் புத்தக அலமாரி கூட  அவருக்கு விளம்பரம் தேடிகொடுகிறது. வீட்டிற்குள் வரும் மக்களை அழகுபடுத்தும் புத்தக அலமாரிகள். அழகுக்கு மட்டும்தான் பயன்படுகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா.? மதங்கள் ஒன்றாக அமரும் இடமும்    "புத்தக அலமாரி"தான். கீதையும், குரானும் கட்டி தழுவி கொண்டிருக்கும். ஆனால் புத்தகங்களில் மட்டும்தான் தழுவல் இருக்கும் அந்த மதங்களை சார்ந்த மனிதர்களில் என்றும் இருக்காது.   மதங்களில் உள்ள மூடபழக்க வழக்கங்கள் ஒழியவேண்டும் அப்போதுதான் மனிதத்துவம், மனித நேயம் காணும். இவை காணவேண்டும் என்றால் அறிவியல் வளர்ச்சி அபரிதமான அளவில் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அறிவியலில் அறிந்ததை ஆதாரமாக்கி அறிவின்மையை அழிக்கலாம். அறிந்ததையே இன்னும் பகுத்தாய்ந்து பகுத்தறிவாளனாய் மாற்றலாம், நாமும் மாறலாம்.  அதனால் நித்தம் நொடிபொழுதும் அறிவியலின் படைப்பில் புதிய குழந்தையாக நாம் பிறபெடுப்போம்.

அறிவார்ந்த ஒரு மொழியை கற்றவரின் நற்சிந்தனை சில,பல மொழி கற்றவரின் அறிவுக்கு ஈடாகுமா.? என்றால் அது ஈடாகமல்தான் இருக்கும். ஒருவரின் சிந்தனைகள் என்றும்  படைக்கப்படும் படைப்பை உண்டாக்கும். ஆனால் அதன் 'மொழி அறிவு' படைப்பின் வளர்ச்சிக்கு பயன்படும். மொழியை மொழி மாற்றம் செய்ய வேண்டுமானால் பிற மொழி தேவை படலாம் ஆனால் நம் சிந்தனை கருத்துகள், அதன் படைப்புகள் எல்லாம் நம் தாய்மொழியிலே வெளிபடவேண்டும். எவர் ஒருவர் தன் தாய் மொழியை சிறந்து கற்று உணர்பவரே அவரே கருத்துள்ள சிந்தனைக்கு உரியவராக இருப்பார். சிந்தனையில்  தன்னை மற்றவர் முன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றும் முன்னிலைபடுத்தி கொள்ளவேண்டும், அடையாளபடுத்தி கொள்ளவேண்டும்  என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் அதிகமாக இருக்கும். இதில் முன்னிலைபடுத்துதல் எனபது  அதிகாரத்துடன் சேர்ந்து வரும்போது படுமோசமான விளைவுகள்குடியதாக இருக்கும். அதுவே அறிவின் ஊடாக முன்னிலைபடுத்தும்போது ஆணவம் கொண்டால் அதுவும் மோசமாகதான் இருக்கும். இதில்  வசதி மூலமாக உறவின் முன் தங்கள் முன்னிலைபடுத்தினால் அது உறவை மதிக்காததனமாக இருக்கும். தனக்காக வாழாமல் பிறர் பார்க்கவேண்டும் என்று வாழ்ந்தால் அது தன் சுயநல ஆசையை முன்னிலைபடுத்தியதாக இருக்கும். இப்படியே முன்னிலைபடுத்துவதுதான் ஒருவரின் வாழ்வாக என்றும் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது. அவர் குணங்கள் மாறாமல்....

நேற்றிய அழிவு இன்றிய ஆக்கமாக பயன்படுகிறது. காலம் மெல்ல விழுங்கும் சக்தி படைத்தது. எனக்கு தெரிந்த நண்பன் எதிர்பாராமல் மேலே கல் எறிந்த போது அது அந்த பக்கமாக வந்த ஒருவர் மண்டையில் பட்டுவிட்டது. நாங்கள் பதறியடித்துக்கொண்டு கிட்ட போய் பார்த்தோம் அவருக்கு ரத்த காயங்கள் எதுவும் இல்லை ஆனால் அவர் மயக்க நிலைக்கு சென்று விட்டார். பின்பு அவரை தண்ணீர் தெளித்து. நான் நண்பரை கடிந்துகொண்டு அவரை எழுப்பும் போது அவர் ஏதோ...சந்தோசம் கொண்டவர்போல் எழுந்தார். தலையை முன்னும் பின்னுமாக ஆட்டினார். ஆ.! என்று அதிசயத்தார். அவர் சொன்னார் "பல மாதங்களாக இருந்த என் தலைவலி இப்போது இல்லை. எனக்கு கல்லடிபட்டது வேதனை என்றாலும் இப்போது தலைவலி போனதை நினைத்து ரொம்ப சந்தோசம்" என்று நண்பனிடம் நன்றி சொல்லிவிட்டு சென்றார். இப்போது நான் நண்பனை பார்த்தேன். எனக்கு அவன் மேல் இருந்த கோவம் மாறி எனக்கும் ஆச்சரியம் வந்தது. இப்போது நான் நண்பனை வாழ்த்துவதா.? இல்லை திட்டுவதா.? என்று எனக்கு குழப்பம் வந்துவிட்டது. முன்னர் செய்த செயல் குற்றம் பின்னர் நடந்த செயல் அற்புதம்.

வெயில் கடுமையை உணர்ந்தவனுக்கு மழையின் பொழிவையும் எதிர்பார்த்து அதை உணரத்தான் செய்வான். உணர்ந்து மீண்டும்  வெயிலுக்காக காத்திருப்பான் மழையின் பொழிவை ஏற்கனவே  உணர்ந்ததால்  இப்போது வெயிலின் கடுமை அவனை ஒன்றும்  பாதிப்பதில்லை பின்னால் மழை வரும் என்று அவன் நன்றாக உணர்ந்தவனாக இருப்பான். இப்படியே பருவ காலங்களை மாறி மாறி பார்த்தவனுக்கு அவனின் வலி எங்கே.? வேதனை எங்கே.? எல்லாம் சமமாகி நீரோட்டமாய் போய்விடும். ஒன்றில் உள்ளே இன்னொன்றும் உள்ளது. ஒவ்வொரு புனிதத்திலும் ஒரு அசிங்கம் உள்ளது. ஒவ்வொரு அசிங்கத்திலும் ஒரு புனிதம் உள்ளது. சேர் அசிங்கம் என்று நாம் நினைத்தால் அழகான செந்தாமரையாய் காணமுடியாது. வலியான வேதனை வேண்டாம் என்றால் பூமாறி பொழியும் இன்பத்தை நாம்  ரசிக்க முடியாது. இயற்கையின் படைப்பில் எல்லாமே ஏற்க்ககுடியது வெறுப்பதாய் இருந்தால் இயற்கை எதுவும் நமக்கு படைக்கபட்டிருக்காது.

பொதுவான நியாயமான விஷயங்கள் சொல்வதற்கும் ஒரு நயம் வேண்டும் போல இருக்கிறது. நாம் கொஞ்சம் கோவம் கலந்து நியாயத்தை சொன்னால் கேட்பவருக்கு அந்நியாயம் கூட அநியாயாமாக போகிறது.  நாம் ஒருவருக்கு  நியாயமான விளக்கம் கொடுத்து வந்து கொண்டே இருப்போம் கடைசியாக  "நான் சொல்வது உனக்கு புத்தி இருந்தால் புரிந்துகொள்வாய்" என்று முடித்தால் அவ்வளவுதான் நாம் சொன்ன நியாயங்கள் எதுவும் அவர் ஏற்றுகொள்ள மாட்டார். நம் நியாயத்தை விட அதுனுடன் சேர்ந்து வரும் அன்பான நியாயத்தைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

நம் எண்ணம்தான் செயலுக்கு வடிவம் கொடுகிறது. நாம் எல்லோரும் நினைக்கும் எண்ணங்களை வெளியில் சொன்னால் மனித இனமே இருக்காது. நம் எண்ணம் அறிவால் தடுக்கபட்டுதான் செயலாக வருகிறது அதில் நல்லது, தீயது என்று பிரிகிறது. எல்லாவற்றிக்கும் எண்ணம்தான் ஆதாரமாக உள்ளது. இதில் உடல் வெறும் கருவிதான். எண்ணம்  ஒடசொன்னால் ஓடும் நில் என்றால் நிற்கும். இதில் நம் எண்ணத்தைதான் சரியான முறையில் நாம் பயன்படுத்தவேண்டும் அப்படி பயன்படுத்தினால் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும்  வெற்றி கிடைக்கும். இதைதான் ஏசுபிரான் சொன்னார் " தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கபடும்" என்று.  நம் எண்ணத்திற்கும் அற்புதமான   பிரபஞ்சதிற்க்கும் நெருங்கிய தொடர்புண்டு. நம் எண்ணத்தின் வேகத்தை நாம் எப்போது உணரலாம் என்றால்  நாம் செயல் மற்றவரால் செயல் தடுக்கபடும்போதும், நம்மிடம் ஒருவித தடுமாற்றம் ஏற்படும்போதும்  அதாவது உங்களை ஒருவர் கோவப்பட்டு திட்டும்போதும், அடிக்கும்போதும் எண்ணத்தின் வேகம் அதிகமாக இருக்கும். நம்மிடம் அமைதி  நிலையிலும் எண்ணம் வேகமாகத்தான் இருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் உங்கள் எண்ணங்களை கவனியுங்கள் ஏற்கனவே நடந்ததை, நடப்பதை  எண்ணிகொண்டிருக்கும். உங்கள் எண்ணங்களை கவனியுங்கள். நிச்சயம் வாழ்வு நலம் பயக்கும். கண்ணை திறந்தால் பார்க்கும் காட்சிகள் எண்ணங்கலாகிறது . கண்ணை மூடினால் எண்ணங்களே காட்சிகலாகிறது. காட்சிகளை கவனித்தால் எண்ணங்கள் விழ்கிறது. எண்ணங்கள் இல்லாத இடத்தில் புதிய காட்சி தோன்றுகிறது. அது அழியா காட்சியாய் இருக்கிறது. அது புத்தன் கண்ட காட்சியை இருக்கிறது. அதனால் மீண்டும் சொல்கிறேன் எண்ணங்களை கவனியுங்கள் புதிய தரிசனம் காணலாம்.

கற்பனைகளை உண்மையாக்குவதுதான் பெரிய சாவலே அடங்கிருக்கிறது. வானத்தில் பரந்த பறவையை பார்த்து தாமும் அதுபோல பறக்கவேண்டும் என்ற கற்பனை செய்த மனிதன் அதை உண்மையாக்குவதற்க்கு பெரிய சவாலே நடத்தி காட்டினான். அந்த சவால் 'ரைட் சகோதரர்களால்' உண்மையாக்கபட்டது. நாம் சொல்லும் கற்பனை அல்லாத உண்மையை இறுகிய நிலையில் சொன்னால் இறுகிய நிலையிலே கேட்பவர்களும் உண்டு. அதனால் எனக்கு இறுகிய நிலை இல்லாமல் உங்களுக்கு நன்கு புரியும் நிலையில் இயல்பான நடையிலே இக்கட்டுரையை எழுதியுள்ளேன். மீண்டும் உங்கள் ஆதரவுடன்........நன்றி..!



என்றும் நட்புடன்:

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ்10-ல் மற்றும் உலவு
பதியவும் ...நன்றி.)