Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, May 29, 2016

ஒரு நாள் கடல் வரும். அதில் ஒசையில்லாமல்...!



எங்க வீட்டு பக்கதுல எனக்கு தெரிந்த ஒருத்தர் இருக்கார் அவரிடம் நான் பேசும்போதெல்லாம் அவர் சொல்லுவார், "எனக்கு இந்த பந்தாவே பிடிக்காது. நான் ரொம்ப சிம்பிள், வீண் விளம்பரம் எனக்கு சுத்தமா பிடிக்காது. என் உடம்புல ஒரு தங்கம் போட்டிருக்கன்னா பாருங்க... எனக்கு இந்த தங்க நகை போடுவதே பிடிக்காது. எதுக்கு வெட்டி பந்தா.." என்று சொல்வார். ஆனால் அவரின் சொத்து சுகம், சொந்த தொழில் லாபம், பேங்க் பேலன்ஸ், சொந்தவீடு, அவரின் சொந்த ஊரில் அவருக்கு பல ஏக்கர் இடம், அவர் பேரில் ஒரு கல்யாண மண்டபம், இப்படி எனக்கு தெரிந்து அவருக்கு அவ்வளவு சொத்து உள்ளது. ஆனால் ஆளை பார்த்தால் எளிமையை அவர்தான் எளிமையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தார்போல இருப்பார். அப்படி ஒரு பஞ்ச பரதேசி தோற்றம்.

இப்படி அவர் என்னை பார்க்கும்போதெல்லாம் அவரைபற்றியே சொல்லிகொண்டிருப்பார். நான் சொன்னேன், "நான் கேட்டவரை, இதை நீங்க அதிக முறை என்னிடம் சொல்லிட்டிங்க... இதுக்கு மேலையும் என்னால உங்க பேச்சை பொறுத்துகொள்ள முடியாது. விளம்பரம் பிடிக்காது, தங்கம் பிடிக்காது, எந்த ஆடம்பரமும் பிடிக்காது என்று திரும்ப திரும்ப சொல்றிங்களே... இப்படி நீங்க சொல்லுவதே ஒரு விளம்பரம்ன்னு உங்களுக்கு தெரியலையா...!? நீங்களே உங்களை சுயவிளம்பரம் செய்து செய்துகொள்றிங்களே.. இது உங்களுக்கு சரியா.? தவறா.?. என்று தோணலையா..?" என்றேன். அவர் என்னை ஒருமுறை ஏறிட்டு பார்த்துவிட்டு, பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து போய்விட்டார். அப்புறம் அவர் என்னை பார்கும்போதெல்லாம் தன்னை பற்றி "எளிமை புகழ்" பாடுவதை நிறுத்திகொண்டார்.

"நான் ரொம்ப எளிமையானவன்" என்று சொல்வதும் ஒருவித விளம்பர நோக்கம்தான். வசதி வாய்ப்பு இருந்தால் அனுபவிக்க வேண்டியதுதான். எதுக்கு தன்னை வருத்திகொண்டு கபடநாடகம் ஆடனும். நாம் என்ன சாப்பிடனும் என்று பிறர் என்ன முடிவு செய்வது. இதன் அடிபடையில்தான் நம் வாழ்க்கை அமையனும். நம் கையில் நாம் உழைத்த உழைப்பின் பணம் இருந்தால் வாழ்க்கை தேவைக்கு போக மீதியை வசதிக்காக வாய்புக்காக செலவு செய்து, அனுபவிக்க வேண்டியதுதான். முடிந்தால் பிறருக்கு உதவி செய்யலாம் முடியவில்லையென்றால் அதற்காக வருத்தபடனும் என்ற எந்த அவசியமும் இல்லை. தன்னை தியாகியாக்கி மனதில் அதை உருவகபடுத்தி கருவாடாக காயவேண்டாம்.

நான் சமீபத்தில் படித்த செய்தி எனக்கு நினைக்கு வருகிறது. ஒரு சினிமா பத்திரிக்கையில் அச்செய்தி படித்தேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றியது. ரஜினி எப்போதவது நடு இரவில் மாறுவேடம் போட்டு அவரே காரு எடுத்துகொண்டு எங்காவது கிளம்பிவிடுவாராம்,. எங்காவது பிச்சைகாரர்கள், ஏழை கூலி வேலை செய்து பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் மக்களுடன் இவரும் சென்று அங்கையே பிளாட்பாரத்தில் படுத்துவிடுவாராம். அவர்களிடம் ரஜினி, "நீங்க படம் எல்லாம் பார்பிங்களா.. இந்த சூப்பார் ஸ்டார் என்று சொல்றாங்களே ரஜினி அவரை பற்றி எண்ண நினைகிறிங்க..." என்றேல்லாம் கேட்பாராம். அவங்க சொலுவாங்களாம், "ரஜினி ஒரு அருமையான மனுசன், ஏழைக்கு உதவ கூடியவர்..." என்று.. இப்படியெல்லாம் அவர்கள் சொல்வதை கேட்டு அன்றைய இரவு பொழுதை அங்கையே அவர் கழித்துவிட்டு வருவாராம். அவருக்கு வசதி வாய்ப்பு, காசுபணம் மேல அப்படி வெறுப்பு வந்துவிட்டது. புகழ்ச்சி மேல அவருக்கு அப்படி ஒரு சலிப்பு வந்துவிட்டது." என்று இப்படியெல்லாம் நாம் நினைத்தால் அது நம் தவறு. அவருக்கு எளிமையாக இருக்கனும். பிளாட்பாரத்தில் படுத்து உறங்கனும். எழையின் கஷ்டங்களை உணரனும், நாமும் அதுபோல ஒரு நாள் இருக்கனும் என்று ஆசைபடுகிறார். அது அவருக்கு சரியாக இருந்திருக்கு ஆனால் அதே பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் பிச்சைகாரனுக்கும் ரஜினி போல வாழனும், வாழ்க்கை வசதியெல்லாம் அனுபவிக்கனும் என்ற ஆசை இருக்கும் இல்லையா..? இதுதானே நியாயம். அதற்கு ரஜினி என்ன செய்திருக்கனும். பிச்சைகாரர்களை அவர் வாழும் வசதியை அன்றைய பொழுது அவர்களுக்கு ஏற்படுத்திகொடுத்துவிட்டு இவர் அவர்கள் வாழ்க்கைக்கு ஆசைபடனும்.. அதுதானே சரியாக இருக்கும். அப்புறம் அந்த பிச்சைகாரர்களுக்கு தெரியாமல் அவர்களுடன் படுத்து உறங்களாம் அவர்களின் ஏழ்மை நிலையை தனதாக்கி அதில் ஒரு சுகம் காணலாம் அது தவறில்லை. ஆனால் ரஜினி அப்படி செய்கிறாரா..?இல்லையே..! பாதுகாப்பாக நிலம்,புலன், சொத்து சுகம், வசதி வாய்ப்பெல்லாம் ஏற்படுத்திகொண்டு, வாழ்க்கை அடிதளம் மிக உறுதியாக அமைத்துகொண்டு, நட்டநடு ராத்திரியில் ஏழ்மை வேஷம் போடுகிறார்.. அவர் போடும் பல வேஷத்தில் இப்படி ஒரு வேஷம் அவருக்கு தேவையாக இருக்கிறது. மேலே என்னிடம் பேசிய "எளிமை புகழ்" நபரும், ரஜினியும் பெரிய வித்தியாசம் இல்லை. இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான ஆட்கள்தான்.

பாபா, குசேலன் படம் அவருக்கு மிகவும் தோல்வி படமாக அமைந்தது. அடுத்து நடிக்கும் படம் வெற்றி படமாக அமையனும் என்ற அவரின் நோக்கத்தில் கன்னடத்தில் வெளிவந்து நன்கு ஒடிய வெற்றி படமான "சந்திரமுகி" (கன்னடத்தில் வேறு பெயர்) படத்தை இயக்குனர் பி.வாசு தமிழில் எடுக்கிறார். படம் மிக பெரிய வெற்றிபடமாக அமைந்துவிட்டது. அது ரஜினிக்கு மிக பெரிய வெற்றியாக அமைந்தது. மீண்டும் அவரின் வெற்றி உறுதி செய்யபட்டது. அதற்காக அவர் ஒரு நட்சத்திர விடுதியில் முக்கிய சினிமா பிரபலங்களுக்கு மிகபெரிய பார்ட்டி வைக்கிறார். அங்கு "நான் மீண்டும் ஜெயிச்சிட்டேன்" என்று ஆவேசமாக அங்கு இருப்பவர்களிடம் சொல்கிறார். .இச்செய்தியை நான் ஒரு சினிமா  நாளிதழில் படித்தேன். ரஜினி, பாபா, குசேலன் போன்ற தோல்வி படங்கள், அவரை வெற்றி படதிற்கு அழைத்து சென்றிருக்கிறது. "நான் வெற்றி அடைந்தேன்" என்று மகிழ்ச்சி அடைந்தார். தோல்விக்காக வெற்றியை விட்டு கொடுக்க அவருக்கு முடியவில்லை. தோல்வியை பக்கத்தில் வைத்துகொள்ள அவர் விரும்பவில்லை. ஆனால் அவரின் மனசு ஒருவித தோல்வி, தோய்வு, ஏழ்மை, துறவு நிலை போன்றவற்றை விரும்புகிறது. அவர் வாழ்வில் இதுதானே நடக்கிறது. இது யாரை ஏமாற்றும் வித்தை தெரியவில்லை. எனக்கு ரஜினிமேல் தனிபட்ட கோவம் இல்லை ரஜினி போல் இந்நாட்டில் என்னற்ற மக்கள் இப்படிதான் இருக்கிறார்கள்.

"வசதி வாய்ப்புடன் பாதுகாப்பாக இருப்பார்களாம் ஆனால் ஏழ்மையை கண்டு பரிதாபாடுவார்களாம் ஆனால் தன் பாதுகாப்பு, வெற்றியை விட்டுகொடுக்கமாட்டார்களாம்" இதுபோல இருப்பதெல்லாம் என்ன ஒரு வாழ்க்கை நிலை.? இது இரண்டுகெட்டான் வாழ்க்கைதான். அதுலையும் அனுபவைக்க தெரியாம, இதுலையும் இருக்க முடியாம.. இருக்கும் ஒருவித குழப்பமான மனோன்னிலை. இப்படி எல்லாம் வாழ்வது ஒரு வாழ்க்கையே இல்லை. என்னை கேட்டால் நான் சொல்வேன், "வெளியே ஒரு சக்ரவர்த்தி போல வாழுங்கள். எந்த வசதி வாய்ப்பு இருக்கிறதோ அதை எல்லாம் ஏற்படுத்திகொண்டு அனுபவத்து வாழுங்கள் ஆனால் உள்ளுக்குள் எந்த வசதி வாய்ப்பும் தன்னை தீண்டாத அளவுக்கு ஒரு புத்தனாக இருங்கள்" ஆனால் உலகத்தில் இன்று என்ன நடக்கிறது. இதற்கு நேர்மாறாகதான் நடக்கிறது. உள்ளே சொத்து சுகத்தை பாதுகாப்பான ஒரு நிலையான கட்டமைப்பை ஏற்படுத்திகொண்டு ஒரு அரசனாகவும், வெளியே எளிமையின் புகழ் பாடும் பஞ்ச பரதேசி கோலம் கொண்டு இருக்காங்க.. இப்படி இருப்பது அவர்கள் மனதின் மிக நுட்பமான அங்கார திமீர்தனம்தான்.

நீங்களும், நானும் பிறக்கும் போது தனியாகதான் வந்தோம், இறக்கும்போதும் தனியாகதான் போகபோகிறோம். "நான் இவ்வளவு நாள் எளிமையாக வாழ்ந்தேன். என்னை நீங்கள் எல்லாம் பாராட்டினீர்கள் உங்களை போல்தான் எல்லோரும் வாழுனும் என்றேல்லாம் நீங்க சொன்னீர்கள் இப்போது நான் இறக்கும் தருவாயில் இருக்கிறேன். என்னுடன் யாராவது வாருங்கள். என் எளிமையுடன் சேருங்கள். என் மரணமும் ஒரு எளிமைதான் இருக்கிறது. பாருங்கள் நான் வெறும் தரையில்தான் படுத்திருகிறேன். இப்போது என் உயிர் பிரியபோகிறது. வாருங்கள் நாம் எளிமையுடன் இறப்போம்.." என்று கூப்பிட்டு பாருங்க...!? அவங்க வாயில் இருந்து இதுதான் வரும், "இவன் என்ன சுத்த கிறுக்கனா இருக்கான்.. இவன் இவ்வளவு நாளா எளிமையா இருந்தான் சரி.. இப்ப சாக போறான். இப்ப நம்மையும் கூப்பிடுரானே.." என்பார்கள். மிஞ்ச்சிபோனால் உங்களுக்கு ஒரு சிலைவைப்பார்கள். வரலாற்றில் சில பக்கங்களை உங்களுக்காக ஒதுக்குவார்கள். இவ்வளவுதான் அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் எளிமையின் பரிசு, மரியாதை.

ஒன்று நல்லா புரிந்துகொள்ளுங்கள் யாரும் யாருக்காகவும் வருத்தபட மாட்டாங்க.. அப்படி வருத்தம் அவர்களூக்கு இருக்கிறது என்றால் அதில் அவர்களின் சுயநலன் சார்ந்துதான் இருக்கும். அதனால், "மற்றவர்கள் நம்மேல் நன்மதிப்பு ஏற்படுனும் அதனால் நாம் எளிமை தோற்றம் கொண்டு இருக்கனும்" என்று  நாம் முடிவெடுக்கவேண்டாம். இது நம் முட்டாள்தனத்தையே நிறுபிக்கும்.

இந்த எளிய உண்மையை நீங்கள் புரிந்துகொண்டால் நீங்க வாழும் வாழ்வு புனிதமாகும். அப்புனிதம் உங்களுக்கானதாக இருக்கும். முதன் முறையாக நீங்க, உங்களுக்காக உங்க வாழ்க்கை விரும்பி வாழ ஆரம்பிப்பீர்கள். அதுதான் உண்மையான வாழ்க்கை. வெளியே ஒரு அரசனை போல் இருப்பிங்க.. உள்ளே அமைதியின் உருவமான புத்தரின் நிழல் கொண்டு இருப்பிங்க... இதுவே அழகிய தெய்வீக வாழ்க்கை. ஜீவித ஒளிகொண்ட வாழ்க்கை. பழைய சாதம் கிடைத்தால் ஒரு புத்தனை போல் உண்ணுங்கள். தேவாமிர்ந்தம் கிடைத்தால் ஒரு அரசனை போல் உண்ணுங்கள். இங்கு அரசனில் ஒரு புத்தர் இருக்கிறார். புத்தரில் ஒரு அரசன் இருக்கிறான். 

 
இப்படிதான் நம் ஒவ்வொருவரின் வாழ்வும் அமையனும். ஒரு ஜென் துறவிடம் கேட்டாங்க,, "வாழ்க்கை என்றால் என்ன.? என்று. அத்துறவி தான் தோளில் சுமந்திருக்கும் மூட்டையை கீழே இறக்கிவைத்தார். பின் அவர்கள், "வாழ்க்கையின் நோக்கம் என்ன.? என்றார்கள். அத்துறவி கீழே இறக்கிய மூட்டையை தோளில் சுமந்துகொண்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார். இதுதான் ஜென்னின் வாழ்வியலை பற்றிய மிக எளிமையான தத்துவ விளக்கம். வாழ்க்கையின் நோக்கம் மூட்டையை சுமந்துசெல்வது. தேவைபடும்போது அதை சுமக்காமல் இறக்கிவைப்பது.

இதனால் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள். உங்கள் தேவை அறிந்து வாழுங்கள். எந்த தியாகி பட்டமும் நமக்கு தேவை இல்லை. வாழ்க்கையை எந்த கலங்கமும் இல்லாமல் தெளிந்த நீரோடையாக மாற்றுங்கள். பின் அந்நீரோடையில் பல பேர்  நீர் அருந்த வருவார்கள். ஆனந்த குளியல் போடுவார்கள். மீன்கள் அந்நீரில் துள்ளி குதித்து நீந்தும், பல விலங்குகள், பறவைகள் தாகம் தீர்த்துகொள்ளும்.. உங்கள் பெருமையை எல்லோரும் புகழ்ந்துவிட்டு செல்வார்கள். ஆனால் எந்த புகழ்ச்சியும், இகழ்ச்சியும் எதுவும் உங்கள் மையத்தை தீண்டாது. நீங்கள் மையத்திலே இருப்பீர்கள். தெளிந்த நீரோடியாகவே இருப்பீர்கள். ஒரு நாள் கடல் வரும். அதில் ஒசையில்லாமல் கலப்பீர்கள். பிறவி பெருங்கடலை கடந்து செல்வீர்கள்.

நாம் வாழும் வாழ்வு நமக்காக இருக்கும் போது அது பிறருக்காவும் மாறும். எல்லாம் தன்னால் மாறும். இதுதான் இயற்க்கையின் மிக நுட்பமான சூழ்ச்சம ஆன்மிக விதி. நன்றி...! 

  
நட்புடன்:

Saturday, May 28, 2016

மிக முக்கிய ஆன்மிக பதிவு...!


ஒரு காரியம் நினைக்கும்போதும், அதை செய்யும் போதும் தீடிர் என்று நம்மிடம் பயம் வந்துசேரும். பயம்வரும்போதே சந்தேகமும் கூடவே வரும். இப்படி வருவதற்கு மூல காரணம் என்னவென்று நாம் யோசித்தால், அது அனேகமாக நம் எதிர்பார்காகதான் இருக்கும். அந்த எதிர்பார்ப்புதான் சந்தேக நிழலை பயத்துடன் படியவிடுகிறது. சந்தேகம்,பயம் இருந்தால் பின்னாலே மனதில் குழப்பம் வந்துவிடும். குழப்பம் மனதின் இறுக்கத்தை அதிகரிக்கும். பின் முடிவு தெளிவில்லாமல் போகும். இதனால் அச்செயல் அனேகமாக தோல்வியில்தான் முடியும். எதிர்பார்ப்பு+சந்தேகம்+பயம்+குழப்பம் = மன இறுக்கம். இதை ஒரு எதிர்மறை சிந்தனைக்கு உட்படுத்தலாம். எதிர்மறை சிந்தனை உள்ளவங்களின் செயல்நிலை போதியமட்டும் இப்படியாகதான் இருக்கும், இயங்கும்.

இப்போ நேர்மறை சிந்தனை உள்ளவங்க எப்படி இயங்குவாங்க என்று பார்ப்போம். அவங்களிடமும் எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் அவங்க எதிர்பார்ப்பு, முயற்சி, தன்னம்பிக்கை என்பவனவற்றில் இயங்கும். ஒருவிதத்தில் அவங்களுக்கும் சந்தேகம், பயம், குழப்பம் போன்றவை இருக்கும் ஆனால் அவர்கள் முயற்சி,தன்னம்பிக்கை என்ற வார்த்தைகளால் அழுத்திகொண்டு, அதன் மேலே நின்றுகொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் காலுக்கு கீழே சந்தேகம், பயம், குழப்பம் எப்போதும் அங்கையே இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் அதை அவர்கள் உணர மறுப்பார்கள்.
அதை உணருவதற்கே ஒருவித பயம்கொள்வார்கள். ஆனால் வெளியே அந்த பயத்தை காட்டிகொள்ளமாட்டார்கள். "எதற்கு சந்தேகபடுனும், எதற்கு பயபடனும், தன்னம்பிக்கை இருந்தால் எதையும் நாம் சாதிக்கலாம்" என்று சொல்வார்கள். ஆனால் உள்ளுர பயம் அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும் அவங்க அதை தற்காலிகமாக மறைத்துவைப்பார்கள். ஆனால் இது எதிர்மறை சிந்தனை உள்ளவர்களிடம் நேரடியாக தெரியும். இதற்கும், அதற்கும் இவ்வளவுதான் வித்தியாசம்.

இந்த எதிர்மரை சிந்தனைக்கும், நேர்மறை சிந்தனைக்கும் மூலம் எது தெரியுங்களா..? "ஆசை" ஆமாம், ஆசைமட்டும்தான். ஒன்று எதிர்பார்கிறோம் என்றால் ஆசையால்தான் எதிர்பார்கிறோம். இந்த எதிர்பார்பை தொடர்ந்துதான் நேர்மறையும், எதிர்மறையும் மனதில் பிறக்கிறது. இதை மனது பிரிக்கிறது என்றும் சொல்லலாம். இப்படி இருப்பதால், அதற்காக ஆசையே இல்லாமல் நாம் வாழனும் என்று நான் சொல்லவரவில்லை. இந்த மூலத்தை நாம் புரிந்துகொண்டால் நாம் இரண்டு நிலை ஆற்றலிலும் பயணம் செயலாம்.

அந்த இரண்டையும் நாம் லாவகமாக திருப்பிவிடலாம். அதன் செயல்வேகத்தை கவனிக்கலாம் இதில் ஒரு பெரிய பலன் என்னவென்றால் நமக்கு மனம் இறுக்கம் அடையாது. ஆமாம், புரிந்துகொண்ட இடத்தில் மனம் இறுக்கம் அடைய வாய்ப்பே இல்லை. பலபேருக்கு பைத்தியம் அதிகம் பிடிப்பது, எதிர்மறை சிந்தனை உள்ளவர்களுக்குதான். அழுத்தம் அதிகமாகி உடலுருப்புகள் பாதிக்கபடும். இதே நேர்மறை சிந்தனை உள்ளவங்களுக்கு இதயம் சம்பந்தபட்ட பிரச்சனை நேரடியாகவே இருக்கும். ஏனென்றால் உடலை அவங்க ஒரு வாகனமாக பயன்படுத்துவாங்க.. உடலுக்கு ஒய்வு கொடுக்கமாட்டாங்க... என்னை கேட்டால் இரத்த கொதிப்பு அதிகம் வருவது நேர்மறை சிந்தனை உள்ளவங்களுக்குதான்.

நாம இரண்டு ஆற்றலையும் பயன்படுத்த கற்றுகனும். அப்படி கற்றுகொண்டால் நமக்கு உடலிலும், மனதிலும் எந்த பிரச்சனையும் வராது பிரச்சனையை சாதரணமாக கையாளலாம். எனக்கு இரண்டு ஆற்றலின் உட்தன்மை நல்லாவே தெரியும்.

மனதுக்கும் நாம் விடும் மூச்சு காற்றுக்கும் மிக நெருக்கமான சம்பந்தம் உண்டு. மூச்சுகாற்றை சில நிமிடம் நிறுத்தினால் மனதில் எண்ணங்கள் தோன்றாது. மனதின் எண்ணங்களை தோற்றுவிப்பது மூச்சு காற்றே, அதுதான் "பிராணன்" என்ற உயிர் காற்றை உள்ளே அனுப்புகிறது. அந்த பிராணின் சக்திகொண்டே மனம் சிந்திக்கிறது, நேராற்றலாக, எதிராற்றலாக செயல்படுகிறது. இந்த உட்சூழ்சமத்தை நீங்கள் உடலால் உணர்ந்தால், மனம் உங்கள் கட்டுபாட்டில் வந்துவிடும். அப்புறம் வாழ்வின் சாதனை, வெற்றி எல்லாம் ஒன்றுமே இல்லை. இதுவே மிக பெரிய சாதனைதான்.. இச்சாதனைக்கு முன் எந்த சாதனையும் பெரிதல்ல.. நீங்க விடும் சுவாசத்தை கவனித்தாலே போதும். நீங்க தற்போது எந்த ஆற்றலில் இயங்குகிறிங்க என்று தெரிந்துவிடும்.


 வலது மூளை செயல்படும்போது இடது பக்கம் மூச்சு, உள்ளும், புறமும் சென்று வந்தால், நீங்கள் எதிர்மறை (பெண்ணாற்றல்-சிவ ஆற்றல்) ஆற்றலில் இயங்குறிங்க என்று அர்த்தம். இதே இடது மூளை செயல்படும்போது வலது பக்கம், மூச்சு, உள்ளும் புறமும் வந்து சென்றால் நீங்கள் நேராற்றலில் (சக்தி ஆண்ஆற்றலில்) இயங்குறிங்க என்று அர்த்தம். இரண்டு பக்கமும் சீரான மூச்சு காற்று வரும்போதுதான் நீங்களே சிவசக்தியாக இருக்கிறீர்கள்.

தியானத்திலும் இருக்கும்போதும் மற்றும் அன்பாக இருக்கும்போது நீங்க இருபக்க ஆற்றலில் ஒருங்கிணைந்து இருப்பிங்க.. இதனால்தான் சொல்வார்கள், "அன்பே சிவம்; அன்பே கடவுள்" என்று. அன்பில் ஜீவ ஆதாரத்தை உணரலாம். இதனால்தான் அன்பை எல்லா மதங்களும் மிகவும் வலியுருத்துகின்றன. அன்பே என்றும் சாசுவமானது. அன்பு இருக்கும் இடத்தில் நேர், எதிர் கலந்தே இருக்கும். அங்கு சிவனும், சக்தியும் (ஆணும், பென்ணும்) சங்கமிக்கும் அதுவே அழகிய காதல், அதுவே காமத்தின் உச்சம். அவ்வுச்சத்திலே புத்தர் பிறப்பார்.

நீங்களேதான் அந்த புத்தர் என்று உங்களால் உணர முடியும். முதன்முறையாக உங்கள் உயிர்ஜீவனின் முகத்தை உங்கள் அகக்கண்ணாடியில் பார்பீர்கள். அதுவே பரமானந்தம். அவ்வானந்தம் முன் எந்த ஆனந்தமும் அருகில் கூட வரமுடியாது. அதுவே உண்மையான ஆனந்தம். அதுவே சத்+சித்+ஆனந்தம்=சச்சிதானந்தம். (சிவன்+சக்தி=புத்தன்) அன்பும், தியானமும் இருமுகம் கொண்ட ஓர் முகம். புத்தரின் அதுவே உங்கள் முகம். முதலில் நம் மனதை புரிந்துகொள்ளுங்கள். மூச்சின் ஆற்றலை புரிந்துகொள்ளுங்கள். இதனில் ஒரு தெளிவு நமக்கு இருந்தால் ஆன்மிகம் மிக எளிதான பயணமாகும். நாம் வாழும் வாழ்வும் மிக அருமையாக இருக்கும். நன்றி..!

நட்புடன்:
:

Friday, May 6, 2016

உங்க கால்களை தொட்டு கேட்டுகொள்கிறேன்.





நீங்க நினைப்பதுபோல் ஆன்மிகம் என்பது சாதாரண விசயம் அல்ல.. ஏதோ பூஜை, மந்திரம், வழிபாடு செய்தோம் கேட்டதை பெற்றோம் என்று சொல்லி போவதல்ல.. இவையேல்லாம் மனதை தற்காலிக அமைதிபடுத்தும் வழிமுறை. அந்த அமைதிபடுத்துதல் அதிகமாக ஆசைக்கான அமைதிபடுத்துவதகாதான் இருந்திருக்கும். எங்கே நீங்க உண்மையாக சொல்லுங்கள் பார்கலாம், "நான் பூஜிப்பது, கோவிலில் வழிபாடு செய்வது எல்லாம் என்னை உணர்ந்துகொள்ளதான் மற்றும் மன சாந்தியடையதான் செய்கிறேன்." என்று.

 நான் நிச்சயம் சொல்வேன், ஒருபோதும் உங்க பிரார்த்தனை இப்படி இருக்காது. பிரார்த்தனை ஒருவரின் முழுக்க முழுக்க அவரின் சுயதேவை சார்ந்தே இருக்கிறது. உடம்பின் நோய் சரியாகனும், பொண்ணு, புள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கனும், அவங்களூக்கு நல்ல இடத்தில் வரன் அமையனும், வீடு வாசலுடன் சவுக்கியமாக இருக்கனும்." இதுதான் ஒருவரின் அதிகபடியான பிரார்த்தனை கோரிக்கையாக இருக்கும்.

இதெல்லாம் ஆன்மிகமே இல்லை. இது ஒரு பக்கா வியாபாரம். "நான் கேட்டதை நீ கொடுத்தால், நான் உனக்கு மொட்டை போடுவேன், உண்டியில் காசுபோடுவேன், காது குத்துவேன், நெருப்பு மேல் நடப்பேன், நடந்தே பாத யாத்திரை வருவேன்" என்று இப்படியேல்லாம் சிலை முன் சொல்லி கோரிக்கையை நிறைவேற்றி கொள்வது.

இது எதற்கு சாமி, கோவில், குளம் எல்லாம்.? உங்களுக்கு மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் தெரிந்தால் போது நீங்க கேட்டதைவிட அதிகமாகவே கேட்டு பெறலாம் இதற்கு எந்த சிலையின் முன் விழுந்து அழவ வேண்டியதில்லை. உள்மன ஆற்றலின் சக்தி அவ்வளவு பிரமாண்டமானது எதையும் கேட்டு பெறலாம். தெரியுங்களா, நீங்க சிலையின் முன் பிரார்த்தனை கோரிக்கை விடும்போது உங்க மனத்தின் ஆற்றலில்தான் அவையாவும் நிறைவேறுகிறது. மற்றபடி நீங்க வழிபடும் சிலைக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. உங்க  மனதின் நம்பிக்கைக்கு ஒரு உருவம் வேண்டும். அதனால்தான் சிலை தேவைபடுகிறது. இதை நான் நிச்சயமாக சொல்வேன். இதை நீங்க கோவில் போய்தான் நிறைவேற்றனும் என்றில்லை. இதை எங்கிருந்தும் கேட்டு பெறலாம். இது முழுக்க முழுக்க மனத்தின் நம்பிக்கை சார்ந்த விசயமாகும்.

ஒரு செயலை நீங்க முழுமையாக நம்பிவிட்டால் அது  நல்லதோ, கெட்டதோ  நம் ஆழ்மனம் எந்தவித கேள்வியும் கேட்காமல் செய்து முடிக்கும் ஆற்றல் உடையது. உங்களுடைய கோரிக்கை எல்லாம் உங்க ஆழ்மனதிடமே கேட்டுபெறலாம் ஆனால் இதனால் ஆத்ம அருள் கிடைக்காது. மனத்தின் ஆற்றலை வேண்டுமானல் புரிந்துகொள்ளலாம். அது இன்னும் உங்களுக்கு வாழ்வின் ஆசை அதிகமாக்கும் தவிர ஆத்ம அருள் கிடைக்க வழி செய்யாது. ஆத்ம அருளுக்கு உங்க ஆசையின் வீரியத்தை குறைக்கவேண்டும். தியானம் செய்யவேண்டும்.

ஆழ்மனது என்பது நாம் போகும் வழியில் கலைப்பு நீங்க மோர், இளநீர், தண்ணீர் அருந்துவது போலதான் ஆனால் ஜீவித ஒளியை காணமுடியாது. அதற்கு கடும் பிரம்ம பிரார்த்தனம் செய்யனும். தியானத்தின் மூலம் ஒட்டுமொத்த உங்க சக்தியை பயன்படுத்தனும். நான் மறுபடியும் சொல்கிறேன். ஆன்மிகம் என்பது சாதாரண விசயம் இல்லை உங்கள் சக்தி முழுவது அதற்கு செலுத்தியாகனும்.

இதை இன்னொரு விதத்தில் சொல்லனும் என்றால் ஆன்மிகம் என்பது மிக சாதாரணம். எந்தவித முயற்சியும் வேண்டாம் நீங்கள் தயாராக இருந்தால் போது ஜீவித ஒளி உங்கள் மேல் பொழிய காத்திருக்கிறது.

நான் சொல்வேன், "எல்லாம் முயற்சியும் வீண்தான் ஆனால் எல்லா முயற்சியும் வீண் என்று சொல்வதற்கு நாம் எல்லா முயற்சியும் செய்தாகனும்" இதுதான் இதன் முரண்பாடே.... ஆமாம், தண்ணீரில் மிதப்பது மிக எளிமையான விசயம்தான் ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மிதக்கிறேன் என்று இறங்கினால் முழுக வேண்டியதுதான். நீரில் மிதப்பதற்கு நாம் கடுமையாக பயிற்சி செய்யனும். அதன்பின்னே எந்தவித முயற்சி இல்லாமல் நீரில் மிதக்கமுடியும்.

இது நம் எல்லாருக்கும் தெரியும் என்று நினைகிறேன் செத்த பிணம் நீரில் மிதக்கும். பிணம்  நீரிடம் எந்தவித முயற்சியும் செய்வதற்கு அதனிடம் "நான்" என்ற ஆணவம் இல்லை அதனால் அது மிதக்கும். எப்போது நமக்கு "நான்" என்ற ஆணவம் இல்லாமல் போகிறதோ அப்போது எந்தவித முயற்சியும் வேண்டாம். உயிர்தன்மையுடன் நீரில் மிதக்கலாம். நீர் உங்களை மிதக்கவிடும். ஆத்ம அருள் தானாய் வந்து சேரும். ஆன்மிகதிற்கு எந்தவித முயற்சி தேவை இல்லை என்பதை நாம் அப்போது புரிந்துகொள்வோம். அதுவரை நாம் எல்லாவித முயற்சியும் செய்துதான் ஆகனும்.

முயற்சியில் எளிமையான முயற்சி தியானம் மட்டுமே. ஆம், தியானம் மட்டும்தான். அதுதான் ஜீவிதத்தின் மிகபெரிய திறவுகோல்.  நீங்களும் உருவமற்ற கடவுளின் சொரூபம். நாம் அனைவரும் கடவுளே அதனால்தான் உபநிஷத்தில் "அஹம் பிரம்மாஸ்மி" (நான் கடவுள்) என்கின்றார்கள். ஒருவர் தன்னை உணரும்போது அப்போது அவர் கடவுளாக உணர்கிறார். தன்னை உணர்வதற்கு தியானமே சிறந்த ஒன்று. தியானம் அழகிய பூச்செறிந்த நற்பாதை. அதனால் தியானம் செய்யுங்கள். உங்கள் பாதங்களை தொட்டு கேட்டுகொள்கிறேன். தியானம் செய்யுங்கள். வாழ்க்கையின் எதையும் இழக்கலாம் ஆனால் தியானத்தை இழக்காதீர்கள். அது மிக பெரிய பொக்கிஷம். நான் உணர்ந்தால் சொல்கிறேன். தியானத்தை விடாதீர்கள்.

இரண்டு வகையில் தியானம் செய்யலாம் ஒன்று கண்ணை மூடிகொண்டு உங்க மனதில் தோன்றும் எண்ணங்களை எந்தவித மதிப்பீடும் கொடுக்காமல் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் வெறுமனே கவனித்துகொண்டு இருக்கலாம். இது ஆரம்பம் கொஞ்சம் கடினமாகதான் இருக்கும். குப்பை நிறைந்த அறையை சுத்தம் செய்யும் போது தூசி தும்பு படு வேகத்தில் கிளம்பத்தான் செய்யும் பொறுமையுடன் சுத்தம் செய்தால் அறை சுத்தமாகும். இது பல பிறவிகளாக சேர்ந்த குப்பை ஆரம்பம் அப்படிதான் இருக்கும். தொடர்ந்து எண்ணங்களை கவனித்துகொண்டு இருங்கள். தெளிவு பிறக்கும். இன்னொரு வகை  நீங்க விடும் மூக்சு காற்றை அது உள்ளே போகும் போதும் வெளியே வரும்போது எந்தவித தடங்களும் செய்யாமல் அது எப்படி போகிறதோ அப்படியே அதை வெறுமனே கவனித்து கொண்டு இருப்பது. இந்த இரண்டில் எது சவுகரியமோ அதை செய்யுங்கள். நிமிர்ந்து உட்கார்ந்து செய்தால் நல்லது. எதையும் கட்டாயத்தில் செய்யாதிங்க... எப்போது ஒய்வு கிடைக்குமோ அப்போதெல்லாம் செய்யுங்க... வெறும் கண்ணை மூடி எண்ணங்களையோ அல்லது மூச்சு காற்றையோ கவனித்தால் போதும். பாருங்க எவ்வளவு எளிமையானது என்று. ஆனால் இந்த எளிமையானதில்தான் மிக பிரமாண்டமான பொக்கிஷம் இருக்கிறது. மிக பெரிய விருட்சத்தின் விதை தியானத்திலே உள்ளது. முதன் முதலில் நீங்கள் யார் என்பதை அங்கு உணர்வீர்கள்.

அதுவே உங்கள் உண்மை சொரூபம் அதுவே பிரமாண்ட ஜீவிதத்தின் சொரூபமாகும். அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம் என்ற திருமூலர் சித்தர் வாக்கு மெய்படும்.

பொறுமையாக படித்தமைக்கு நன்றி...!

          நட்புடன்: