Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, November 20, 2016

விவாதம் பற்றி என் குரல் பதிவு

பிறரிடம் பேசும் விவாதத்தில் எப்படி வெற்றி அடையனும். என்பதை குரல் பதிவாய் பேசியிருகேன் கேளுங்கள். ஆன்லைனில் கேட்க   இணைப்பை தொடவும்.

https://m.soundcloud.com/rk-guru/stage-speechrec20112016


இப்போது கேட்கும் ஒலிபதிவாகவும்    உங்கள் வாட்ஸ் அப் எண் கொடுத்தால் தங்களுக்கு எண் குரல் பதிவு அனுப்புகிறேன். இல்லையென்றால் என் வாட்சப் எண் தருகிறேன் எனக்கு தங்கள் பெயர் குறிபிட்டு வாட்சப் செய்தி அனுப்புங்கள். என் நம்பர் +917904507839

எல்லாம் நம் வெற்றிக்கான, முயற்சிக்கான நன்மைக்கே... நன்றி

நட்புடன்:
Rk.Guru

Tuesday, November 8, 2016

கருத்து சுதந்திரம்

கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் ஒரு தனி மனிதருக்கு அளிக்கபட்டிருக்கும் உரிமை. ஆனால் ஜனநாயகத்தில் அச்சுதந்திரங்கள் இன்னும் விமர்சிக்க கூடியதாகதான் இருக்கிறது. எதுவெண்டுமானாலும் பேசிடலாம், எழுதிடலாம், என்று கேட்டால், அது இன்னும் வரை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஜனநாயக சுதந்திரம் என்பதே இன்னும் யாருக்கும் புரியாத ஒருவித குழப்ப நிலையிலே மக்கள் மனதில் உள்ளது. கேட்டால் பிறர் நம்பிக்கையில் நாம் தலையிட கூடாது, தனி மனித சுதந்திரத்தை பாழ்படுத்தகூடாது, பிறர் மதத்தை, சாதியை விமர்சிக்ககூடாது என்றேல்லாம் சொற்கள் பலவாறு பரந்துபட்டு இருக்கின்றன.

இதற்கு விளக்கம் நான் கொடுக்கிறேன். மனதில் நன்றாக பதியவைத்துகொள்ளுங்கள். "ஒரு பொது நபர் அவர் தன் நன்னடத்தையை காட்டி மக்களுக்கு சேவை ஆற்றுகிறார் அதனால் சில,பல லாபமும் அடைகிறார் என்றால் அவரின் நன்னடத்தையில் யாருக்கேனும் குற்றம் குறை இருந்தால் அவர் விமர்சிக்கபடுபவர். அதனை ஆதாரத்துடன் விமர்சித்தால் இன்னும் ஏற்றுகொள்ள கூடிய விமர்சனமாக இருக்கும்"

தனிமனித சுக, துக்கத்தை யாரும் விமர்சிக்க தேவையில்லை. ஆனால் அம்மனிதன் பிறரின் சுக, துக்கத்தில் குளிர்காயனும் என்று நினைத்தால் அதற்கு ஆதாரம் இருந்தால் அவ்வாதாரத்தை முன்னிருத்தி விமர்சிக்கலாம். அவரை ஒரு ஏமாற்றுகாரன்(ஃப்ரௌட்) என்றும் சொல்லலாம் தவறில்லை. அவர் தனிமனிதனாக இருந்தாலும் சரி, சாதி, மத அமைப்பை சார்ந்திருந்தாலும் சரி, அவர்கள் விமர்சிக்க தகுதியானவர்களே... இல்லையேன்றால் இங்கு ஜனநாயகம் என்று சொல்லே வெரும் வெற்று வாய்சொல்லாக இருக்கும்.

நான், "ஜனநாயகம்" என்ற வார்த்தையை படித்தாலோ, கேட்டாலோ பிரஞ்ச் புரட்சிக்கு வித்திட்ட, உலகத்தில் ஜனநாயக விதையை தூவிய புரட்சி சிந்தனையாளன் வால்டேர் அவர்களையே நினைத்துகொள்வேன். அவன் சொன்ன வார்த்தைதான் ஜனநாயக தூணை மேலும் உறுதியாக்கியது. அவர் சொன்ன வாக்கியம் இதோ, "உன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம் ஆனால் நீ கருத்து சொல்லும் உரிமையை காக்க, என் உயிர் கொடுத்தும் காப்பேன்" என்றார். என்ன மகத்தான வரிகள்..! என்னை கேட்டால், உண்மையான ஜனநாயகவாதி வால்டேர்தான்.

இதோ இப்போ இருக்கே ஒரு இத்துபோன, செத்துபோன அதிமுக அரசு, அது சரியான தொட்டாச் சிணுங்கி அரசு. அதன் அடிமைகள், ஜெயலலிதாவை பற்றி ஏதாவது சொன்னால் உடனே கைது நடவடிக்கை இறங்குகிறது. அப்புறம் என்ன நமக்கு இந்திய அரசியல் சட்டம் கொடுத்த அடிபடை உரிமை உரிமை காக்கப்படுகிறது. ஒரு மசிறும் இல்ல... நான் எதுவேண்டுமானாலும் பேசிடலாம், எழுதிடலாம் என்று கூறவில்லை. நம்பகதன்மையுடன் ஆதார விளக்கத்துடன் நம் விமர்சனத்தை முன்வைக்கலாம். அப்படியும் ஆதாரம் இல்லாமல் முன்விரோதம் கொண்டு ஒருவர் நம்மை விமர்சித்தால் அவருக்கான விளக்கத்தை கொடுக்கலாம். இல்லையேன்றால் வன்முறையற்ற நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு அறிஞர் அண்ணாவை பற்றி ஒரு உதாரணம் சொல்கிறேன், அண்ணாவை எதிர்கட்சிகாரர்கள் மிக கேவலமாக அவரின் பிறப்பை எல்லாம் விமர்சித்தார்கள். எவனோ ஒரு கயவாலி அவரின் பிறப்பை பற்றி மிக அசிங்கமாக எழுதி, அவர் வீட்டின் எதிரே மாட்டிவைத்து போய்விட்டான். இதை பார்த்த அண்ணாவின் தொண்டர்கள், "அண்ணா மாட்டியவன் யார் என்று எங்களுக்கு தெரியும் அவனை உண்டு இல்லை என்று செய்கிறேன்" என்று கடும் கோவத்துடன் சொன்னார்கள். ஆனால் அண்ணா, மிக நிதானமாக, "அவர் அவரின் இயலாமையை வெளிபடுத்திருக்கிறார். அதை பகலில் எல்லோரும் படிப்பார்கள் ஆனால் இரவில் யாரும் அதை படிக்க முடியாது அதனால் அத்தட்டிக்கு பக்கத்தில் விளக்கை மாட்டி வையுங்கள்" என்றார். அதுதான் நம் அண்ணா... இது வன்முறையற்ற நடவடிக்கை மற்றும் எதிரியும் மன்னிக்கும் பெருந்தன்மை. துன்பத்தையும் இன்பமாக ஏற்றுகொள்ளும் மனபக்குவம்.

இதுபோல் இன்னொறு உதாரணும் கூட சொல்லலாம். புத்தரை ஒருவன் அவரின் சொற்பொழிவு, இந்து மக்களை தவறாக வழிக்கு நடத்துகிறது என்று எண்ணி அவரை பிடிக்காமல் அவர் முகத்தில் காரி துப்பிவிடுகிறான். புத்தர் கூட இருந்தவர்கள் மிகவும் கொதிகிறார்கள். புத்தர் அவர்களிடம், "துப்பியவருக்கு என் கருத்து பிடிக்கவில்லை. அதை வார்த்தையால் அவரால் வெளிபடுத்த தெரியவில்லை. செய்கையால் அதை செய்துவிட்டார். எனக்கு இரண்டும் ஒன்றுதான். வாருங்கள்.." என்றார். மறுநாள் அந்த துப்பிய நபர், தான் செய்ய தவறை எண்ணி புத்தரின் பாதங்களில் சரணடைந்தான்.

இதுபோல் எண்ணற்ற அறிஞர்கள், சிந்தனையாளர்கள், மகான்கள் வாழ்ந்த பூமி இப்பூமி. முறைபடி பார்த்தால் நம் இந்தியாதான் உலத்திற்கே ஜனநாயகத்தை போதித்திருக்கவேண்டும் ஆனால் ஏனோ மக்களின் சாதி,மத நம்பிக்கை, சுயநல ஆசை எல்லாம் சேர்ந்து இங்கு ஜனநாயக மாண்பை குழி தோண்டி புதைத்துவிட்டது. அதன் விளைவுதான் மத்திய, மாநில அரசு விமர்சித்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்குகிறது மற்றும் இதன் போக்கிலே தனி மனிதர்களும் அந்நம்பிக்கையில் இருந்து மீள முடியாமல் விலகி செல்கிறார்கள்.

:-இரா.குரு
7/11/2016

(பதிவை அனைவருக்கும் பகிருங்கள்)

Saturday, October 1, 2016

நடந்த உண்மை சம்பவம்... சிறுகதை வடிவில்.



நான் தினமும்  நடைபயிற்சி(வாக்கிங்) சென்றுவிட்டு வரும்போது ஒரு மனிதனை காண்பேன். அவர், முகத்தை சோகமாக வைத்துகொண்டு அந்த மரத்தில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு இருப்பார். அவரின் தலைக்கு மேலே மஞ்சள் எழுத்தில், "இங்கு பஞ்சர் பார்க்கபடும்" என்று எழுதிருக்கும். அவர் வீடும் அங்கேதான் உள்ளது. அவர் அங்கு தெருவொருமாக பிளாட்பாரத்தில் கடை வைத்திருக்கிறார். அவர் காலையிலே அங்கு வந்து உட்கார்ந்துவிடுவார். நான் ஒவ்வொருமுறை நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வரும்போதேல்லாம் அவரை அங்கு பார்ப்பேன். அவர் சோகமாகதான் இருப்பார் மற்றும் அவர், அங்கு சாலையில் சென்றுகொண்டிருக்கும் வண்டிகளின் டயர்களையே பார்த்துகொண்டிருப்பார். அவரின் இந்த கவனிப்பை நான் தினமும் கவனிப்பேன். அவர் என் வண்டியும் பார்பார். ஆனால் நான் அவரை பார்கிறேன் என்பதை பார்த்து, மெல்லியதாக ஒரு புன்னைகைப்பார். அவரின் புன்னகைக்கு பின் மறைந்திருக்கும் அவரின் சோகம் எனக்கு நன்றாகவே தெரிந்தது. அது என்னை பெரிதாக சோகப்படுத்தியது. அவரின் சோகம் என்றும் குறைந்ததில்லை... "அவரின் பஞ்சரான முகம் காற்றால் நிரம்ப என் வண்டியும் பஞ்சர் ஆகட்டும்" என்று நான் நினைப்பேன். மழை பெய்யும் காலத்தில் அவருக்கு வண்டிகள் அதிகம் வரும். மழையில்தான் மண்ணில் புதைந்திருந்த ஆணிகள் எல்லாம் வெளிக்கிளம்பி டயரை பதம்பார்க்கும். 

அன்று ஒரு நாள் என் வண்டி, நான் நினைத்தது போல் பஞ்சர் ஆகிவிட்டது. அவரின் கடை நோக்கி வண்டியை தள்ளிக்கொண்டு போனேன். தூரத்தில் இருந்து அவர் என்னையும், என் வண்டியும் பார்த்துவிட்டார். உதவிக்கு ஓடிவந்தார். "விடுங்க நான் தள்ரேன்.." என்றார். அவரின் ஆர்வம் எனக்கு புரிந்தது. அவர் ஒரு முஸ்லிம். அவர் பெயர் சலீம். நான் அவரிடம், "என்ன பாய் டயர் எப்படி இருக்கு.. இன்னும் பத்து பஞ்சர் விழுவதற்கு வாய்ப்பு இருக்கா..?" என்பேன். அவர் என்னைவிட வயதில் மூத்தவர்தான் ஆனால் அவர் என்னை "அண்ணே." என்றுதான் அழைப்பார். எந்த மதம் என்றாலும் தமிழனின் பண்பாடு, மரியாதைக்கு ஒரு அடையாளம் இருக்கு. அது என்றும் குறைவதில்லை... அவர், "ஏண்ணே தமாஸ் பண்றிங்க... டயரை மாத்துங்கண்ணே... பழைசாகிடுச்சு" என்பார். "மாத்திடலாம் பாய், இப்ப எத்தனை பஞ்சர் ஆகிருக்கு" என்றேன். "ரேண்டுண்ணே.." என்றார். ஒரு பஞ்சருக்கு 50 ரூபாய் வாங்குவார். இரண்டு பஞ்சர் 100 ரூபாய் கொடுத்தேன். அவர் என்னிடம் 30 ரூபாய் கொடுத்தார். "ஏன் இருகட்டும்.." என்றேன். "இல்லேண்ணே 70 ரூபா போதும்.." என்றார். "வருமையிலும் ஒரு செம்மை.." என்று அவரை நினைத்து மனம் நெகிழ்ந்தேன்.

இப்போது சில நாட்களாக பாய் அங்கு இருப்பதே இல்லை... மழை காலமும் வந்துவிட்டது. என் வண்டி அவரின் சாலை இருக்கும் பாதை கடந்துதான் தினமும் செல்கிறது. ஆனால் சலீம்பாய் அங்கு இல்லை... அன்று ஒரு நாள் பாய் வீட்டின் அருகில் வெள்ளை உடை அணிந்த மனிதர்கள் சில பேர் நின்றுகொண்டிருந்தார்கள் அவர்கள் எல்லாம் பாய்க்கு உறவினர்கள் போல.. சலீம்பாயின் உறவினர் ஒருவர், அவர்களிடம் ஏதோ பேசிகொண்டிருந்தார். நான் அவர்களிடம் நெறுங்கி, "என்ன ஆச்சு.. எங்கே சலீம்பாய்" என்றேன். அதற்கு அவர், "பாய் தவறிட்டாருங்க... பத்து நாளா நெஞ்சு வலின்னு ராயபேட்டை ஆஸ்பிட்டலில் இருந்தாருங்க... இன்னிக்கு காலையில இறந்துட்டாரு.." என்றார். இதை கேட்டு என் நெஞ்சும் வலித்தது. ...ச்சி, என்று சலிப்பு ஏற்பட்டு, ஓங்கி என் வண்டியின் சீட்டை தட்டினேன். என் வண்டியின் டயர் ஆடியது. நான் டயரை பார்த்தேன். அதுவும் அழுது கொண்டிருந்தது போல... டயரில் காற்று மெல்ல வெளியேரும் சத்தம் கேட்டது. 

இப்போது டயர் பஞ்சர் ஆனதா..!? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் டயரின் சோகத்தை என்னால் அங்கு புரிந்துகொள்ள முடிந்தது. நான் வண்டியை அங்கிருந்து தள்ளிகொண்டுதான் போனேன். அங்கு என் முகமும் பஞ்சர் ஆனது. என் வண்டியும் பஞ்சர் ஆனது. ஆனால் பஞ்சர் போடும் சலீம்பாய் மட்டும் அங்கு இல்லை...

சலீம்பாய் காற்றில் கரைந்துவிட்டார்...!   


 நட்புடன்:

Saturday, August 27, 2016

எந்த வேலையும் இங்கு இரண்டாம்தரமான வேலை இல்லை..


இந்தியாவில்தான் கரைபடியாத வேலை செய்யனும்ன்னு ரொம்ப பேர் ஆசைபடுவாங்க இதை ஆங்கிலத்தில் "white collar job" என்று சொல்லுவாங்க.. இதை நாம் லோக்கல் பாஷையில் சொல்லனும்ன்னா, "நோவாம நோம்பு கும்பிடரது, நோவாம நுங்கு உரியுரது" என்பார்கள். எனக்கு ஒரு ஐங்கார் பிரமாணன் நண்பன் இருக்கான்.  நான் அவங்க வீட்டிற்கு செல்வேன். அவங்க அம்மா நன்றாக என்னிடம் பேசுவாங்க.. அவங்க தன் மகனை பற்றி பேசும்போது, " நாங்க எல்லாம் ஃபேன் காத்து கீழே வேலை செய்தவங்கப்பா... இவன் என்னடான்னா படிப்ப ஒழுங்கா படிக்காம மார்கெட்டிங் வேலை செய்ரான்." என்றார்.  நான் அமைதியாக கேட்டுகொண்டேன். அவர்கள் பேசிய பேச்சில் சாதிய அடையாள தீமிர் பேச்சு இருந்தது. "நாங்களேல்லாம் அப்படி, நீங்க இப்படிதான்" என்று. இப்படி பேசுவது எல்லாம் பொதுவாக சாதி அடிபடையிலும், இன அடிப்படையிலும், நிற அடிபடையிலும்தான் நடக்கும்.

நான் பொதுவாக எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன் கௌருவம் எல்லாம் பார்க்க மாட்டேன். எனக்கு கட்டிட வேலையான கொத்தனார், பெரியாள் வேலை செய்வேன். பிளம்பிங் வேலை தெரியும், பெயின்ட் வேலையும் தெரியும். எங்கவீட்டுக்கு எல்லாம் பெயின்ட் நான்தான் அடிப்பேன். கொஞ்சம் கார்பென்டர் வேலை, கொஞ்சம் எலட்ரிஷ்யன் வேலையும் பார்பேன். பேன், டியுப் லைட் மாட்டுவது மற்றும் ஒயிரிங் லைன் கனெக்க்ஷன் மாற்றிகொடுப்பது எல்லாம் தெரியும். கடைகியாக ஒன்றை சொல்லவேண்டும் என்றால் ட்ரைனேஜ்ல இறங்கி கழிவு அடைப்பும் எடுப்பேன்.

அன்று ஒருநாள் அப்படிதான் சைதாப்பேட்டை குடித்தனம் இருக்கும் வீட்டில் கக்குஸ் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. அதை என்னிடம் சொன்னாங்க நான் போய் கழிநீர் அலுவலகத்தில் எழுதிகொடுத்துட்டு வந்தேன். ஆனால் "பின்னாடியே வரேன் போங்க..." என்று சொன்னவங்க வரவில்லை மறுநாள் அரசு விடுமுறை அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுகிழமை ஆனால் சனிக்கிழமையே ட்ரைனேஜ் தொட்டி நிரம்பி பொங்கி வழிந்து விட்டது, சரி இதுக்குமேல பார்த்தால் வீடு நாறிடும் என்றேண்ணி தொட்டியில் இறங்கி பட்டையான ஒரு மூங்கில் குச்சியை எடுத்து உள்ளேவிட்டேன். அது கொஞ்ச தூரம் சென்றதும் அங்கு ஏதோ தட்டுபட்டுச்சு.. நல்லா அழுத்தி குத்தியவுடன் கோணிப்பை அடைத்துகொண்டிருந்தது. அதுனுடன் சேர்ந்து தலைமுடி மற்றும் பல சத்தைகள், மனித கழிவு அப்படியே அடித்துகொண்டு வந்தது. நான் கையில் பாலித்தின் கவர் போட்டுகொண்டு வெளியே அக்கழிவை வாரி கொட்டினேன். இதுல ஒரு கொடுமை என்னவென்றால் அதுவரை வேடிக்கை பார்த்த கொண்டிருந்த எங்கவீட்டு கோஷ்டிங்க, அக்கழிவை வாரிகொட்டியதும் "..ச்சீசீ" என்று மூக்கை பொத்திகொண்டு விலகி ஓடியது. அப்புறம் நான் வெளியே வந்து துடைப்பம் எடுத்து அந்த இடத்தை துத்தமாக கழுவிவிட்டேன். பின்பு என்னை நான் தண்ணீரால் சுத்தபடுத்திகொண்டு, எங்க குடித்தனம் இருந்த பெண்ணிடம், "கொஞ்சம் குடிக்க தண்ணி கொடும்மா.." என்றேன். அவங்க என்னிடம் தண்ணீர் கொடுக்க அப்படி ஒரு தயக்கம்காட்டினாங்க.. அவங்க பாத்திரத்தை என் கையில் கொடுக்க அவ்வளவு அருவெருப்பு இருந்தது. அது அவங்க முகத்திலே நன்றாகவே தெரிந்தது. இதெல்லாம் என் மனைவிக்கும் தெரியும். அன்று மட்டும் நான் அப்படியே விட்டிருந்தால் வீடே நாறிபோயிருக்கும்...

திங்கரவரைக்கும்தான் சோறு, அது தொண்ட குழி இறங்கியது மலம். அது வயிற்றுல எத்தனை மணி நேரம் தம்கட்டி இருந்தாலும் அசிங்கம் இல்லையாம் ஆனால் வெளியே வந்தால் ..ச்சீயாம். விலகி ஓடுதுங்க கழுதைங்க... நான் அதுனுடன் அருகில் இருக்க சொல்லவில்லை. அது கழிவுதான், அசுத்தம்தான் அதனால் நோய்தொற்று அதிகம் உண்டாகும். அவைகள் அகற்றபடவேண்டியதுதான். ஆனால் அதை அகற்றும் ஊழியர்களின் நிலையை நாம் நினைத்து பார்க்க மறந்துவிடுகிறோம். இன்னாட்டில்தான் இன்னும் மனித கழிவுகளை மனித அகற்றும் கொடுமை நடந்துகொண்டு இருக்கிறது. 


 இந்த நாட்டில்தான் இதுபோல் கொடுமை எல்லாம்... ஜப்பானில் பள்ளி குழந்தைகளே தான் பயன்படுத்தும் கழிவரையை தானே எப்படி சுத்தம் செய்யவேண்டும் என்று பள்ளி நிர்வாகமே சொல்லிகொடுக்கிறது மற்றும் அதற்கென்றே ஒரு வகுப்பே இருக்கிறது. உலகத்திலே ஜப்பான் போல சுத்தமான நாட்டை எங்கும் பார்க்க முடியாது. அப்படி ஒரு சுத்தம் அங்கு. ஆனால் இந்தியாவில் சுத்தம் பற்றி வாய்கிழிய பேசுகிறார்கள். "எவனாவது சுத்தம் செய்யட்டும், நாம் நோவாம போயிட்டு வந்துடலாம்.." என்று  நினைக்கிறார்கள். இதோ நம்ம பக்கத்து நாடான சீனாவை எடுத்துகொண்டால் அங்கு கக்கூஸ் கழுவுரவனும் அவனுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளியும் ஒரே டேபிளில் உட்கார்ந்து டீ அருந்துவார்கள். அங்கு, "இவன் கக்கூஸ் கழுவுரவனாச்சே.. நாம முதலாளியாச்சே" என்ற பாகுபாடு இருக்காது. அதுதான் பொதுவுடமை சித்தாந்தத்தின் அடிபடை மரபு,. அதுதான் உண்மையான சமத்துவம், சகோதரத்துவம். அதுதான் நானும் இங்கு எதிர்பார்பது. ஆனா இங்குதான் அந்த வேலை செய்ரவங்கள தோட்டி, சக்கிலி என்று சாதி அடையாளம் கொடுத்து அழைகிறார்கள் மற்றும் ஒதுக்கி வைகிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான் என்ற எண்ணம் இல்லை. அவர்களும் பல்வேறு போராட்டங்களின் மூலம்தான் அரசிடம் இருந்து பெறமுடிகிறது. ஆனால் மக்களின் மனங்களோ இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கின்றது.

இதெல்லாம் நான் எதற்கு இங்கு சொல்கிறேன் என்றால், "எந்த வேலையும் இங்கு கீழ்தரமான, இரண்டாம்தரமான வேலை இல்லை. எல்லோரும் இங்கு சமம், செய்யும் தொழிலில் ஏற்ற தாழ்வு பார்க்ககூடாது. அப்படி பார்த்தால் அதைவிட கொடுமை வேறெதுவும் இருக்காது. அப்படி பார்க்கும் மனநிலை இருந்தால் அவர்கள் படித்த படிப்பை எல்லாம் தூக்கிகொண்டு போய் குப்பையில் போடவேண்டியதுதான். நாம் மனிதர்களை படிக்கனும், மனித மனங்களை படிக்கனும், எந்த தொழிலாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் செய்யனும். அதுவே உயர் கல்வியின் லட்சணம் மற்றும் அடையாளம். அவர்கள் போன்றவர்களை நான் சிறந்த கல்விமான் என்பேன்.  

இன்னாடு வளர்ச்சி பெற பல மனித தடைகளை கடக்கவேண்டிருக்கு. அப்படியெல்லாம் கடந்தால்தான் இன்னாடு முழு வளர்ச்சி பெற்ற நாடாக மாறும். உண்மை வல்லரசு கனவு, நனவாகும்.  நன்றி..!
 
நட்புடன்:   
Rk.Guru

Friday, August 19, 2016

என் எழுத்து தொட்டு நக்குகிற தேன் அல்ல..



அடடா, அருமையான தமிழ்திரைபடம் சமீபத்தில் வெளிவந்து நன்றாக ஓடிகொண்டிருக்கும் "ஜோக்கர்" என்ற படம் அரசியலை கிழிகிழின்னு கிழிச்சிருக்கு. கிழிச்சிட்டார் இயக்குனர். படம் முழுவதும் எதார்த்தமான இயல்பான நடிப்பு. இடதுசாரி சிந்தனை அதிகம் நிரம்பிய படம். அவசியம் எல்லோரும் பார்க்கவேண்டிய படம். இந்த படத்திருக்கு மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக விருது கொடுக்கவேண்டும். அப்படி விருது கொடுக்க தவறினால் இது உண்மையில் கேடுகெட்ட ஜனநாயக அரசுதான் என்று நான் இன்னும் ஒரக்க சொல்வேன்.

நான் 15 வருடங்களுக்கு முன்பிருந்தே பொதுவுடைமை, சமூகநீதி தோழர்களான காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மார்க்சிம் கார்கி, தந்தைபெரியார், அம்பேத்கார் போன்ற புத்தங்களை அதிக படித்து வளர்ந்தவன். அப்போதெல்லாம் உள்ளுக்குள் ஒருவித போராட்ட உணர்வே எனக்கு அதிகம் நிரம்பிருக்கும்.. இடையில் பௌத்ததில் நாட்டம் ஏற்பட்டது. புத்தர் புத்தகங்களை அதிக படிக்க ஆரம்பித்தேன். இதில் ஒஷொ, புத்தரை அவரின் அழகிய வார்த்தைகளால் விளக்கிருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பின் ஒஷொ எழுத்துமேல் எனக்கு தனியாத தாகம் ஏற்பட்டது. இதில் என் உள்ளுக்குள் இருந்த போராட்ட உணர்வு இலக்கிய, ஆன்மிக வடிவமாக மாறியது.

என் எழுத்து தொட்டு நக்குகிற தேன் அல்ல... தொட்டால் சுடும் நெருப்பு. நான் இன்றும் "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர். நான் 2009 இருந்து சமூக வளைதலங்களில் என் கருத்துகளை எழுதிவருகின்றேன். எனக்கு யாரிடமும் பயம் இல்லை. எனக்கு தோன்றுவதை தைரியமாக சொல்வேன், எழுதுவேன். எனக்கு சாதி, மத அமைப்புகளிடம் இருந்தும், முக்கிய இரு கட்சிகளிடம் இருந்தும் எவ்வளவோ மிரட்ட போன் கால்கள் வந்தது. நேரடியாக சில பேர் மிரட்டிவிட்டு சென்றார்கள். இரண்டு முறை போலிஸ் விசாரனை வேற நடந்தது.

ஒரு எழுத்தாளன் என்பவன் வார்த்தைகளில் சமரசம் செய்துகொள்ள கூடாது. எதற்கும் வலைந்து கூனிகுறுகக் கூடாது. நினைப்பதை துணீந்து எழுதனும் அப்படி எழுதுபவனே சமூக எழுத்தாளன்.

சில நண்பர்கள் சொல்கிறார்கள், "நல்ல நல்ல கருத்துகளைதான் எழுதுர.. ஏன் அதை புத்தகமாக எழுதி வியாபரம் செய்யலாமே உனக்கு பணம் கிடைக்குமே" என்றார்கள். "புத்தகம் எழுதலாம்தான் ஆனால் எனக்கு பணம் சம்பாதிக்கனும் நோக்கம் அல்ல... அதற்கு பல தொழில் இருக்கு. என் கருத்து மக்களிடம் சென்று சேரனும் அது எந்த ஊடகம் வழியாக சென்றால் என்ன... இதில் லாப நஷ்ட கணக்கு பார்க்க முடியாது." என்றேன்.

நாம் சமூகத்தில் குடும்ப அமைப்பு கொண்டு வாழ்கிறோம். சமூகம் அரசியல் சார்ந்து உள்ளது. அந்த அரசியல் தீமிர் பிடித்த அரசியல்வாதி கைகளிலும் பணம் படைத்தவன் கைகளில் உள்ளது. நாம் நம் தலைமுறைக்கு செய்யவேண்டிய முக்கிய கடமைகள் உள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் நம் பிள்ளைகளுக்கு முதலில் காந்தியை அறிமுகபடுத்துவதைவிட காரல் மார்சையும், தந்தை பெரியாரையும் அறிமுகபடுத்தவேண்டும். பிள்ளைகளுக்கு சமூக அரசியலை வளர்க்கவேண்டும். இந்திய அரசியலமைப்பு மற்றும் மூப்பிரிவு சட்டங்களை சொல்லிகொடுக்கவேண்டும். எவ்வளவு பெரிய அதிகார தீமிர் பிடித்த மயிராக இருந்தாலும் அவன் கண்ணுல விரலைவிட்டு ஆட்டும் அளவுக்கு போராடும் மனோபாவத்தை வளர்க்கவேண்டும்.

இந்த ஜனநாயக நெறிமுறை அமைப்பு சரியில்லை இதை மாற்றியாகனும்.


தோழமையுடன்:

Wednesday, August 17, 2016

இந்த சினிமாகாரனுங்களில் முக்கால்வாசி பேர்..!?



60-70 லட்சம் வரை நா.முத்துகுமாருக்கு பல தயாரிப்பாளர்கள் கொடுக்கவேண்டிய பணமாம். பல செக்குகள் போலி மோசடி செக்காம். அவருக்கு உயர் மருத்துவம் பார்க்க போதிய பணம் இல்லாமல்தான் அவர் இறப்புக்கு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவரும் யாரிடமும் பணம் கேட்கவில்லை. சமாளித்துவிடலாம் என்றிருந்திருக்கிறார்.

படுபாவி பயலுக... 70 லட்சம் வரையும் பாக்கி வைத்து ஒரு அருமையான படைபாளியை ஏமாற்றிருக்கானுங்க.... இந்த உலகம் கேடுகெட்ட உலகம். நல்லவங்களதான் தேடிபிடித்து ஏமாற்றும்.

என்னை கேட்டால், நாம் நல்லவங்களாக இருக்கலாம் ஆனால் முட்டாளாக இருக்ககூடாது. நாம் யாரையும் ஏமாற்ற வேண்டாம் ஆனால் நம்மை ஏமாற்றவனிடம் மிகவும் ஜாக்ரதையாக இருக்கனும்.

இந்த சினிமாகாரனுங்களில் முக்கால்வாசி பேர் திருட்டு பயலுங்க. சினிமாவே ஒரு மாய உலகம்தான். அது வெளிபுற அழகு கவர்ச்சி கொண்டது. உள்ளே பல அழுக்குகளை சுமந்திருக்கும். சினிமாகாரனுங்க அடுத்து இன்னொரு கேடி பயலுக இருக்கானுங்க அவனுங்கதான் உலகமகா ஜித்தனுங்க அவனுங்கதான் அரசியல்வியாதிங்க... ஐய்யோ, சினிமாகாரனுங்களிடனும், அரசியல்வியாதிகளிடனும் நீங்க பேச்சு கொடுத்தா... சும்மா வக்கணையா பேசுவானுங்க... இந்த உலகமே அவனுங்க முப்பாட்டன் வாங்கி போட்ட சொத்துதான் என்று அலந்துவிடுவானுங்க.... ஒன்னா நம்பர் கேப்மாரிங்க பயலுங்க.. ஆனால் இவனுங்க இரண்டு பேரையும் விழுங்கி சாப்பிடுற இன்னொரு மிகபெரிய கேப்பாரி இருக்கான்... அவனுங்ககிட்ட இவனுங்க இரண்டு பேரும் எப்போதும் தொடர்பிலே இருப்பானுங்க... அவன்தான் கார்ப்ரேட் திருட்டு சாமியாரு...

இந்த மூனு கம்முனாட்டிகங்க சேர்ந்துதான் சாதாரண வெகுஜன மக்களை ஏமாற்றி சுரண்டி தின்கரானுங்க... இந்த மூனு பேருக்கு எச்ச காசை போடுபவன் யார் தெரியுமா.? கார்ப்ரேட் பெரும் முதலைகள். இதுதான் கேடிகளின் சைக்கிள் சிஸ்டம்.

நம்மதான் இவனுங்ககிட்ட இருந்து எச்சரிக்கையாக இருக்கனும். நேற்று வண்டி ஓட்டிகொண்டு போகும்போது என் வண்டிக்கு முன்னே சென்ற வண்டியில் ஒரு வாசகம் எழுதிருந்தது. அது, "உலகத்தை நேசி..! யாரையும் நம்பாதே..! என்று. அதை சொன்னவர் "தல" என்றிருந்தது. ஆமாம், நடிகர் அஜித்குமார்தான் சொல்லிருக்கார் போல... அஜித் ரொம்ப வாழ்க்கையில் அடிபட்டு வந்தவர். அதான் அப்படி ஒரு டயலாக் சொல்லிருக்கார்.

உலகத்தை நாம் நேசிக்கலாம் ஆனால் சில பேரை நம்பாமல் எப்படி இருக்க முடியும். நம்பிதான் ஆகனும். பெத்த புள்ள வயசான காலத்தில் நம்மை காப்பாத்தும் என்று எங்கோ ஒரு மூலையில் நம்பிதான் ஆகனும். கட்டனுன பொண்டாட்டி புருசனும், வாக்கபட்ட புருசனை பெண்ணும் நம்பிதான் ஆகனும். இதேல்லாம் நம்பிக்கை சார்ந்துதான் உள்ளது. இந்த உலகத்தில் மனிதர்களே இல்லாமல் வாழ்ந்தால் அதுவும் ஒருவித வெறுமையான வாழ்க்கைதான்.

நாம் மனிதர்களை புரிந்துகொள்ளவேண்டும். எவனை நம்பனும் எவனை நம்பகூடாது என்ற புத்தி தெளிவு நமக்கு வேண்டும். அப்படி இருந்தால் மனதில் எந்தவித குழப்பனும் நமக்கு வராது. இரண்டாவது ரொம்ப முக்கியமாக எதையும் பெரிதாக எதிர்பார்க்கக் கூடாது. வந்தா வருது வரவில்லை என்றால் போகுது. என்று இருந்துவிடவேண்டும் ஆனால் நம்மாலான்னா முயற்சியை மட்டும் செய்துகொண்டிருக்கவேண்டும்.

அர்த்தசாஸ்திரத்தை எழுதிய சந்திரகுப்த மௌரிய பேரரசில் வாழ்ந்த கௌடில்ய சாணக்கியன் என்ன சொல்லிருகிறான் என்பதை கீழே உள்ள படத்தில் இருப்பதை படியுங்கள். 


சாணக்கியன் நீதி மனிதர்களிடம் ஒருவித எதிர்மறை விளைவையே தோற்றுவிக்கும். நான் சொல்வது என்னவென்றால் நாம் மிகவும் நேர்மையாக இருக்கனும். இது நல்லறம் சார்ந்த விசயம் ஆனால் தன்னை ஏமாற்றுபவனின் காலடிதடம் நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும். நேர்மையை கையாள்வதில் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நேராக வளர்வதில் தவறில்லை ஆனால் யாருக்கு நேராக வளர்கிறோம் என்பதே முக்கியம். இங்கு சூழ்நிலையை ஆராய வேண்டும். அனுபவ புத்தியை கொண்டு சமயோசிதமாக செயல்படவேண்டும். எப்போதோ எதற்கோ சொன்ன சாணக்கியன் கருத்தைவிட, வாழ்க்கை நடைமுறை எதார்தை புரிந்துகொண்டு சொல்லும் என் கருத்து உயர்வானது.

இருட்டடைந்த மனம் கொண்ட மனிதர்கள். அவர்கள் இருட்டிலே வாழ்ந்து பழகிட்டார்கள். நீதி, நல்லோழுக்கம்,பண்பு, வாய்சொல் தவறாமை போன்ற அறம் சார்ந்த பண்பென்ற வெளிச்சத்தில் வராதவர்கள். வர தயங்குபவர்கள். இவர்களிடம்தான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிருக்கு. 10 பேர் இருக்கானுங்க என்றால் அதில் 9 பேர் திருட்டு பயலுங்க... அதில் மீதி ஒருத்தன்தான் யோக்கியவன். ஆனால் அந்த யோக்கியவன் அந்த 9 பேரில் மறைந்திருப்பான். 9 பேரும் அவனை மேலே வரவிடாமல் மறைத்துவைத்திருப்பானுங்க. ஆ... அந்த ஒருத்தனைதான் நாம் கண்டுபிடித்து அவனிடம் நம் நம்பிக்கையை எதிர்பார்கனும். அவனே உங்களூக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருப்பான்.

வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு. இங்கு யாரையும் யாரும் குறை சொல்ல முடியாது அவங்க அவங்க ஒருவிதமாக வாழ்க்கையை பார்த்து மிரண்டு போய் இருக்காங்க.. மற்றும் ஆசையின் போதையில் எல்லோருக்கும் மாட்டிகொண்டு இருக்காங்க.. இங்கு நுகர்வோர் கலாட்சாரம் அதிகமாகிவிட்டது. ரொம்ப உஷாராக இருப்பவன் கூட போதை போன்ற ஆசையில் மாட்டிகொள்கிறான். சொல்லுவாங்க.. "எங்க அப்பன் நல்லா சம்பாதிச்சான் ஆனால் எல்லாத்தையும் கூத்தியால் வீட்டுல கொண்டுபோய் வச்சுட்டான். இப்ப நாங்க தெருவுல நிக்கிரோம்" என்று. மது, மாது போன்ற போதையில் விழுரவனுங்க நாட்டில் ரொம்ப அதிகம்.

என்னத்த நாம் செய்வது கலிமுத்தி போச்சு என்ற பெரு மூச்சு விட வேண்டியதுதான். போதிய மட்டும் உங்களை உங்கள் சார்ந்தவர்களை தற்காத்து கொள்ளுங்கள். எதையும் முன்னெச்சரிக்கையாக யோசித்து செயல்படுங்கள். பேச்சு, செயல் இரண்டும் கவனமாக இருக்கட்டும். எதற்கும் ஆதாரம் வைத்துகொள்ளுங்கள். ஒலி(ஆடியோ-வாய்ஸ் கால்) ஒளி(ஸ்பை வீடியோ), கையேழுத்து பிரிதி, தேவையானால் விரல்ரேகை பதிவு. இதனுடன் சேர்த்து சாட்சி சொல்ல மனிதர்கள் ஆதாரம் வைத்துகொள்ளுங்கள். அரசியல், அதிகார பலம் உள்ளவர்களை சிறிதேனும் தெரிந்துவைத்துகொள்ளுங்கள். நான் சொன்னது எல்லாவற்றிற்கும் உங்களை தற்காத்து கொள்ளும் வழிகள். இது செய்யும் தொழிலுக்கும் மற்றும் எல்லா உறவு அமைப்புகளுக்கு பொருந்துக்கூடியது. நாம் வட்டத்துக்குள் போவது தப்பில்லை ஆனால் வட்டத்தைவிட்டு வெளிவரவும் தெரிந்திருக்கனும். அவங்கதான் புத்தியை பயன்படுத்தும் அறிவாளிகள். உதாரணதிற்கு நீங்க தூங்கும் போதுகூட காலை ஆட்டிகொண்டுதான் தூங்கனும் இல்லன்னா... இவன் செத்துபோய்ட்டான் என்று மாலையை போட்டுவானுங்க... நான் இதை ஏதோ விளையாட்டாக சொல்லவில்லை எல்லாம் அனுபவ அடிபடையில்தான் இவை அனைத்தையும் சொல்கிறேன். இல்லையென்றால் கவிஞர். நா.முத்துகுமாரை 60 லட்சம் மேல ஏமாற்றுனானுங்களே அதுபோல்தான் நடக்கும். பாவம், மருத்துவம் பார்க்கமுடியாம ஒருபக்கம் பணம் ஏமாற்றம். அனாதையாக பொண்டாட்டி மற்றும் இரண்டு சின்ன குழந்தைகளை தவிக்கவிட்டு மன வேதனையுடன்தான் அவர் இறந்திருக்கார். ரொம்ப கொடுமை..

அதனால் நான் கடைசியாக மேலே சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். "நல்லவங்களாக இருங்க, ஏமாளியாக முட்டாளாக இருக்காதிங்க... நம்முடன் வாழும் பெரும்பான்மையான மக்கள் சரியில்லை.." அவனுங்களுக்கு சந்து கிடைக்சா அடிச்சு ஆளையே துக்கிடுவானுங்க... பின் யாருக்கும் தெரியாம இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டு "அவர் அப்படி, இவர் இப்படி" என்று அலந்துவிடுவானுங்க... அதனால் உங்களையும் உங்கள் சார்ந்தவர்களையும் பாதுகாத்து, மிகவும் எச்சரிக்கையாக இருந்து செயல்படுங்கள். நன்றி...!


நட்புடன்: