Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Wednesday, March 31, 2010

நாத்திகம் எனபது என்ன........?

நாத்திகம் என்ற வார்த்தை பெரியார் காலத்தில் இருந்தே எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்னே சித்தர்கள் காலத்திலே இவை மக்களிடம் பாடல்களாக சொல்லப்பட்டன. அறிவியல் வளர்ச்சி போதிய அளவில் இல்லாத நிலையில் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள நினைக்கவில்லை. ஆனால் பெரியார் வந்து நாத்திகத்தை தீவறமாக்கினார் அவரை பின்பற்றுபவர்கள் இதை முன் முன்னேடுத்து செல்கின்றனர்... உண்மையில் நாத்திகம் எனபது என்ன? ஆத்திகத்திர்க்கு எதிர்மரைதானே ஒன்று இருந்தால் தானே ஒன்று உயிர்யுடன் இருக்கும் ஒன்று இல்லை என்றால் இன்னொன்றுக்கு வேலை இல்லைதானே..? ரஷ்யாவில் நாத்திகத்திற்கு வேலை இல்லை ஏன்யென்றால் அங்கே யாரும் கடவுள் இல்லை என்கின்றனர். காம்யுனிசம் கொள்கையில் உள்ளவர்கள். அங்கே எப்படி நாத்திகம் புகுத்தமுடியும். ஆத்திகத்திர்க்கு தான் அங்கே வேலை இருக்கிறது. 

ஓஷோ, கதை ஒன்று சொல்வார். "ஒரு கிருஸ்துவ பாதிரியார் வேகமாக நடந்து கொண்டுஇருகின்றார் அப்போது பாதிரியாரை ஒரு ஆள் தடுத்து நிறுத்துகிறார். "என்னை ஏன் தடுகின்றிர்கள்" என்று கேட்க அதற்கு அந்த ஆள் "எதற்கு வேகமாக போகின்றிர்கள்" என்று கேட்க. பாதிரியார், "எனக்கு பிரசங்கம் பண்ண நேரம் ஆகிவிட்டது தடுக்காதே வழியை விடு" என்றார். அதற்கு அந்த ஆள் "யாரை எதிர்த்து பிரசங்கம் பண்ண போறிங்க" என்று கேட்க அதற்கு அவர் சாத்தனை எதிர்த்துதானே பிரசங்கம் பன்னபோறேன் கடவுளின் எதிரி சாத்தான் தான் அது அழியவேண்டும்" ஆமாம், நீயார் என்றார். அதற்கு அந்த ஆள் நீ அழியவேண்டும் என்கிறாயே அந்த சாத்தான் நான்தான் என்றது. அவருக்கு பயங்கற கோவம் நான் யாரை அழியவேண்டும் என்று சொல்கிறேனே அந்த சாத்தான் நீ தானா இன்றே ஆண்டவன் மேல் ஆணை இட்டு சொல்கிறேன் நீ அழித்துபோவையாக" என்றார். அதற்கு அந்த சாத்தான் இரு சாமி ஏன் அவசரம் ஆமா நான் அழிந்து போனால் நீ எப்படி வாழ்வாய் நான் அழியவேண்டும் என்று தானே சர்ச்சில் பிரசங்கம் செய்கிறாய் நான் உயிறுடன் இருந்தால் தானே உனக்கு பொழப்பு அழிந்தால் உனக்கு வேலையே இல்லையே என்றது".

என்னுடைய கருத்து என்னவென்றால் ஒன்று இருந்தால் தான் ஒன்று வாழ முடியும் இல்லையென்றால் மற்றதுக்கு வாழ்வேது ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் வேண்டும். மலர் இருந்தால் தானே வாசம் வரும் கூடவே வண்டுகளும் வரும். எது புனிதம் என்கிறோமோ அதுவே அசிங்கமாக மனது நினைக்கிறதே..! இரண்டு நிலைய சரி சமமாக பாவிக்க முடியவில்லையே மனதுக்கு.? அன்ன லக்ஷ்மி, தான்னிய லக்ஷ்மி என்று சொல்ற உணவு தானே பின் மலமாக வெளியேறுகிறது பின் எப்படி அன்னலட்சுமி மல லக்ஷ்மி ஆனாள். இது தான் அது. அது தான் இது. "அண்டத்தில் உள்ளதே பிண்டம்" பெரியார் அவர் நிலையை அவர் தேர்தெடுத்தார். அவர் நிலையை நாம் எப்படி தேர்தெடுப்பது. அவருடைய கார்பன் காப்பியா நாம் எப்படி இருப்பது. அவருடிய முகமூடியை நாம் எப்படி அணிவது. பின் நம் முகம் எப்படி இருக்கும் நம்முடைய தேடுதல் எப்படிபட்டதாக இருக்கும்.




நட்புடன்:

10 comments:

Unknown said...

devil vs angel nice view

http://rkguru.blogspot.com/ said...

@coimbatorebalu

நன்றி

Rama Sethu Ranga Nathan said...

Good Article!!!

http://rkguru.blogspot.com/ said...

@Rama Sethu Ranga Nathan
உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி

ஜீவா ஓவியக்கூடம் said...

நல்ல வாதம்!!

http://rkguru.blogspot.com/ said...

@ஜீவா ஓவியக்கூடம்

உங்க மதிப்பு மிக்க கருத்துகளை வரவேற்கின்றேன்.

Cool said...

Good thinking ma.

சசிகுமார் said...

சூப்பரா இருக்கு சார்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

http://rkguru.blogspot.com/ said...

@சசிகுமார்
ரொம்ப நன்றி...! சசி

ம.தி.சுதா said...

அருமை... மிகமிக பிந்திய புத்தாண்டு வாழ்த்துக்கள்..