Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Thursday, March 11, 2010


புகையினால் ஏற்படும் உடல் நல கேடு

சிகரெட் புகையினால் 4000 மேலான வேதியல் பொருட்கள் உள்ளன. இவற்றில் 50க்கும் மேலானவை புற்றுநோய் உருவாவதற்கு காரணமான (carcinogen) வேதி பொருள்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான பொருள் நிக்கோடின். இது சற்றளவு மூளையை சுறுசுறுப்படைய செய்தாலும் தொடர்ந்து புகைப்பிடிப்பவருக்கு அது நிறுத்தும் போது ரத்தத்தில் நிகோடின் அளவை குறைத்து பதட்டம், தலைவலி, எரிச்சல் அடைதல், முனைந்து செயல்படும் திறன் குறைதல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இவை அடுத்த சிகரெட் பிடிக்கும் போது குறைந்து விடும். அதனால் புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்த சுழற்சியிலிருந்து மீள முடியாமல் அவதிப்படுவர். அடிமையாவர். நிகோடின் தவிர புகையில் உள்ள கார்பன் மோனக்ச்சிட் என்ற வேதி பொருட்கள் பிராணவாயு உடலின் எடுத்து செல்லும் திறனை பாதிக்கிறது.


புகையினால் ஏற்படும் நோய்கள்

புற்றுநோய், ரத்த புற்றுநோய், உயர்ந்த ரத்த அழுத்தம் ரத்த குழாய் அடைப்பு, பக்கவாதம், முச்சு குழாய் இறுக்கம், ஆஸ்துமா, நுரையீரல் நோய் கிருமிகள் தாக்கம், காச நோய், மூக்கிலிருந்து சளி மற்றும் நீர் வடிதல், வயது முதிர்ச்சி, முகசுருக்கம், மலட்டு தன்மை, கண்ணில் குறைவிழுதல், பல், ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள். 10 ல் 8 பேருக்கு புகைப்பிடித்தல் நேரடி காரணமாக உள்ளது. புகையினால் மெல்லும் பழக்கம் உள்ளவருக்கு வாய் உட்புறம், மூக்கு, தொண்டை, உணவுகுழாய், இறைப்பை, கணையம், பித்த நீர் குழாய், சீறுநீர் பை, சீறுநீரகம் இவற்றில் புற்று நோயும், ரத்த புற்று நோயும் வர வாய்ப்பு அதிகம் ஆயுளில் 10 வருடம் அதற்கு மேற்பட்ட ஆயுள் குறைகிறது.

புகைபழக்கம் இல்லாதவர் இப்பழக்கம் உள்ளவரிடம் இருக்கும் போது (ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் பிடித்தால்) புகைக்காத நபர் அவரை அறியாமலே மூன்று சிகரெட் புகைக்கிறார். இது அவரின் சீறுநீரில் உள்ள நிகோடின் அளவு கொண்டு கணிக்கப்பட்டது.


புகை பழக்கத்தினால் ஏற்படும் சமுக பிரச்சனைகள்

1 . மூச்சு காற்று உடை, தோல் அனைத்திலும் புகையிலை விஷம்.
2 . தூசி மற்றும் நுகர்தல் குறைந்து உணவை ருசிக்கும் தன்மை குறைதல்.
3 . பணவிரயம்.
4 . அடிகடி பணியிளிருந்து விடுப்பு.
5 . மற்ற குடும்ப உறுப்பினர், நட்பு இவற்றில் பதிப்பு.


புகைப்பழக்கம் நிறுத்தினால் ஏற்படும் பலன்


12 மணி நேரத்தில் சுவாசம் சுலபமாகிறது.
1
மாதத்தில் தோலில் ரத்தம் சீராக தோல் பலப்பாகிறது.
3 ளிருந்து 4 மாதம் இருமல் மூச்சு இறைப்பு குறைகிறது.
நுரையீரல் திறன் 10 % குறைகிறது.
1 வருடம் நுரையீரல் புற்றுநோய் பாதிக்க்கூடிய வாய்ப்பு பாதியாக குறைகிறது.
15 வருடம் மாரடைப்பு வரும் வாய்ப்பு வேகமாக குறைகிறது.

உலக சுகாதார அமைப்பின் பொது செயலாளர் டாக்டர். மார்க்கரெட் ஜான் கூறுகிறார் "இந்த நுற்றாண்டின் சுமார் 100 கோடி பேர் பலியாவார்கள்" என்று. புகையினால் தயாரிப்புகளுக்கு விதிக்கப்படும் வரிகள் முலம் உலக நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 8 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்தாலும் அதில் ஒரு சதவிதத்துக்கும் குறைவான பணமே புகையிலை கட்டுபாட்டுக்காக பயன்படுத்தபடுகிறது.

"புகை பிடிப்பதன் முலம் இந்தியாவில் 10 லட்சம் பேர் ஆண்டிற்கு உயிர் இழக்கின்றனர்" என்று முன்னால் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்


புகைபழக்கத்தை நிறுத்துவது எப்படி

இப்பழக்கம் உள்ளவர்கள் 3 ல் 2 பேர் அதை விட்டுவிட விரும்புகின்றனர். மனதிடம், தீர்மானம் ஆகியவை முக்கியம்
எப்பொழுது எல்லாம் புகையினால் நினைவு வருகிறதோ அப்பொழுது உட்கார்ந்து அல்லது படுத்த நிலையில் மூச்சினை நன்கு இழுத்து விட முயற்சியுங்கள். உங்கள் குழைந்தைகளை பற்றி சிந்தியுங்கள். உங்களுக்கு உதவும் நபரை கண்டறியுங்கள்.
நன்றாக குடிநீர் அருந்துங்கள். ஆரோக்கியமான உணவினை உட்கொல்லுங்கள் .


100 கோடி பேர்களின் மரணம் நம் கைகளில் உள்ளது. இன்றே வீசிஎறிவோம்.


நட்புடன் உங்கள் Rk.குரு




......................சமுக நலன் காப்போம்............

இப்பதிவை முன்னெடுத்து செல்ல உதவுங்கள். உங்கள் ஓட்டுகளாக......

6 comments:

சாமக்கோடங்கி said...

சொல்லி சொல்லி கடுப்பாச்சுப் பா...

சிகரெட் பாக்கட் கவர்லயே கொட்ட எழுத்துல போட்ருக்கான் பா.. குடிக்கறது தப்புண்ணு... இப்ப எலும்புக் கூடு படம் எல்லாம் கூட போட ஆரம்பிச்சிட்டான்.. அவனுக்கு அவ்வளவு தைரியம். எப்படியும் இத ஆரம்பிச்சவன் உட மாட்டான்..

சாகரவங்க சாகட்டும்.. அது அவன் அவன் தானே தேர்ந்தெடுத்திக்கிட்ட விதி... ஆனா புகைப் பழக்கம் இல்லாதவங்கள வாழ விடலாம்..

நல்ல பதிவு. ஓட்டு போட்டாச்சு... இன்னும் கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரி செய்தால் சூப்பரா இருக்கும்..(ப்ளாக் உலகில் தமிழ் பட்டொளி வீசி பறக்கிறது நண்பரே... நம்மால் ஏன் களங்கம்.. உயரப் பிடிப்போம் நம் தாய்த் தமிழை....)

வரதராஜலு .பூ said...

தேவையற்ற பழக்கவழக்கத்தை விடமாட்டேன் என்பவர்களை என்ன செய்வது?

http://rkguru.blogspot.com/ said...

@பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

nandri

நட்புடன் ஜமால் said...

கேக்கனுமே மக்கள் ...

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

பணம் கொடுத்துத் தான் வியாதிகளை வாங்கிக் கொள்கிறோம் நிறைய பேர். அதன் பாதிப்பு நம்மோடு உள்ளவரையும் துன்புறுத்துகிறது என்பதற்கு இந்த போதையின் மூத்த பிள்ளை "புகை" யே சாட்சி!

ஒரு சின்ன மயக்கம் வந்தாலே மருத்துவம் நாடும் மனித அறிவு 'எப்படி பணம் கொடுத்து மயக்கத்தை பெற தன்னை ஆட்படுத்திக் கொள்கிறதோ???!!!

இருப்பினும், கால சுழற்சியால் , வசிக்கும் சுற்றத்தால் அல்லது பனியின் நிமித்தம் மற்றும் நிமித்தமென கூறிக் கொள்ளும் நியாய கருத்துக்களினால், நட்பின் ஈர்ப்பில் அல்லது தவறான பழக்க முறையில் இதுபோன்ற போதை வஸ்த்துக்களை பயன்படுத்திக் கொள்கிறோம், என்றாலும், அது தவறென உணர்ந்த பின்னேனும் நிறுத்திக் கொள்வோமே.

நிறுத்துவது ஒன்றும் அத்தனை பெரிதில்லை. போதை அத்தனையுமே முதலில் வாந்தியெடுத்து, தலை சுற்றி, நாற்றம் சகித்து, தன்னை கடினப் படுத்திக் கற்றுக் கொண்டது தானே? அப்படி கடினப் படுத்தியாவது நிறுத்திவிடுவோம்.

ஒரு செயலை 'அறவே வேண்டாம் நிறுத்தத்தான் வேண்டும்' என்று மனதின் ஆழம் வரை நினைத்து 'அறவே வெறுத்து விடுவோமெனில் 'அது தானே தன்னை விட்டு 'மெல்லவேனும் விலகிப் போகும்!

பழக்கமுள்ளோர் தயவுசெய்து விரைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்காக இல்லையென்றாலும் பிறருக்காகவாவது நிறுத்திக் கொள்ளுங்கள்.

ஒருவேளை, எனக்குத் தான் யாரும் இல்லையே எனின், உங்களை சுற்றியிருப்போருக்காகவாவது நிறுத்திக் கொள்ளுங்கள்.

டீ.பி. உள்ள நோயாளியின் ஒரு முறை உமிழும் எச்சிலிலிருந்து குறைந்த பட்ச ஆளுக்கேனும் அந்த நோய் பரவ வாய்ப்புள்ளதாம்.

அதின்றி, சாதாரணமாக நாம் புகைக்கும் புகையின் மத்தியில் அல்லது அதனை கடந்து எத்தனையோ குழந்தைகளும் வாழ்கின்றன என்பதையும், நம்மால் நேரும் மாசு கேடான சுற்றுசூழலால் யாரேனும் ஒருவராவது ஒரு சிறு அளவிலாவது பாதிக்கப் படுகிறார்கள் என்பதை மனசாட்சியோடு இங்கே நினைவு கொள்வோம் உறவுகளே..

மிக நல்ல சமுதாய அக்கறை உள்ள பதிவு குரு. ஒரு எழுத்தாளன் அல்லது படைப்பாளியின் எழுதுகோலின் கூர்மை சமூகக் கொடுமைகளை அறுத்தெறிவதாய் இருத்தல் வேண்டும். அவ்விதம். இந்த உங்களின் பதிவு ஒருவருக்கேனும் உதவும் குரு.

மிக்க மனமார்ந்த நன்றிகளும், நிறுத்தப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்களும்!

வித்யாசாகர்

ம.தி.சுதா said...

தெரிந்து தான் நான் இதை தொடுவதில்லை... சகோதரம்..