Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Friday, July 18, 2025

நீண்ட நாள் வாழ்வு, பல நாள் கனவு, குறுகிய வாழ்க்கை.. ஒரு நாள் மரணம் மறுநாள் அடக்கம் முடிந்தான் மனிதன், ஆனால் அவன் போடும் ஆணவ ஆட்டம்.!! :-Rk. Guru (Share this post...)

Thursday, July 17, 2025

அழகு எங்கு உள்ளது.!?

* அழகு என்பது வெளிப்புறத்தில் இல்லை அது உடலில் இருக்கும் உறுப்புகளிலும், மனதிலும் உள்ளது. இது இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் வெளிப்புற அழகு தன்னால் மிளிரும் ஆனால் 90 சதவீத மக்கள் வெளிப்புற அழக்குகே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். விலை உயர்ந்த ஆடைகள் அணிகிறார்கள் ஆனால் ஆடைக்கேற்ற மாதிரி உடல் இல்லை. ஆண்கள் நிறைமாத கர்ப்பிணி போல் தொப்பை இருக்கிறது. அதுல பேண்ட், சர்ட் டக் செய்துகொண்டு நடந்து செல்வதை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. இதேதான் 90% பெண்களும், வீட்டில் இருக்கும் அண்டாகளுக்கும், குண்டாங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஊதி போகிறார்கள். #நோய் நம்மை நோக்கி வருவதில்லை. நாம்தான் நோயை நோக்கி தேடி செல்கின்றோம். நட்புடன்... 💐 :-Rk. Guru Astrologer, Social Activist, Life & Spiritual Counseller Whatsapp: +919361782696 +917904507838 (Share this post...)

Wednesday, July 16, 2025

பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வா.!?

என்னுடைய நிலைப்பாடு தீய செயல் செய்து கூட ஒருவனை ஊரே சேர்ந்து காரி துப்பினாலும் தற்கொலை எண்ணத்திற்கு வரக்கூடாது என்பேன். அவனும் திருந்துவதற்கு வாய்ப்பு உள்ளது. தீய செயல் செய்து ஊரே காரி துப்பினாலும் தற்கொலைக்கு வரக்கூடாது என்று சொல்லும் போது சத்தியம், தர்மத்தின் வழி சென்று நேர்மையான நல்ல காரியங்கள் செய்து அதில் ஏற்படும் பிரச்சனைக்கு போராட துணிவு இல்லாமல் தன்னை மாய்த்துக் கொள்வது என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பிறவியில் நாம் பிறந்தது வாழ்வதற்காகதான். பிற உயிர்கள் பிறப்பையும் தேர்ந்தெடுக்க முடியாது, இறப்பையும் தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் நாம் பிறப்பை தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் இறப்பை தேர்ந்தெடுக்க முடியும். இறப்பை தேர்ந்தெடுக்க முடியும் என்ற உரிமையில் இயற்கை படைத்த உயிரை இயற்கையே எடுத்துக்கொள்ளும் வரை அதற்கு எதிராக செயல்படக்கூடாது. மனிதன் தோன்றிய 2 லட்சம் வருடமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் போராடிதான் கடந்து வந்திருக்கின்றான். இந்த பூமியில் உயிர் வாழ்வதுதே மிகப்பெரிய போராட்டம்தான் அதற்கு தற்கொலை என்றுமே ஒரு தீர்வாக இருக்க முடியாது. தற்கொலைதான் முடிவு என்றால் மனித இனம் என்றோ அழிந்து போயிருக்கும் இந்த அளவுக்கு முன்னேறி இருக்காது. அதனால் பிரச்சனையை நாளை தள்ளி போடுங்கள் அந்த நாளை வரும் பொழுது அந்த பிரச்சனை வீரியம் குறைந்திருக்கும் சில நாட்களில் பிரச்சனை என்பதே இல்லாமல் போயிருக்கும். #தற்கொலை எண்ணத்திற்கு இதுதான் குறைந்தபட்ச ஒரு தீர்வாக இருக்கும். நட்புடன்... 💐 :-Rk. Guru Life & Spiritual Counseller Whatsapp: +919361782696 +917904507838 (Share this post...)

Saturday, June 21, 2025

அமெரிக்காவின் ரவுடி இஸ்ரேல்

அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ, ஈரான் தலைவர் காமெனியை கொலை செய்துவிட்டால் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்? உங்கள் பதில் என்னவாக இருக்கும்? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு புதின், "இப்படியான சாத்தியங்கள் குறித்து நான் விவாதிக்கக்கூட விரும்பவில்லை. இது கேள்விக்கு மிகச் சரியான பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார். ------------------------------- # ரஷ்ய அதிபர் புதின் மிகப்பெரிய மூளைக்காரன்தான் என்ன ஒரு சமார்த்தியமான பதில்.!! " விவாதிக்க விரும்பவில்லை.. " என்றால் அவருக்கு தகுந்த பாதுகாப்பு எங்களால் கொடுக்க முடியும். "எங்கள தாண்டிதான் அவர தொட முடியும்..." என்பதுதான் புட்டின் சொன்ன பதிலின் ஆழமான பொருள் உள்ளது. அதனால் அமெரிக்காவவோ, இஸ்ரேலோ சர்வாதிகார ஆதிக்க மனோபாவத்தை விட்டு தொலைய வேண்டும். இராணுவம் ஒரு நாட்டிற்குள் செல்லாமல் நவீன ஏவுகனை, ட்ரோன் மூலம் ஒரு நாட்டை அழிக்கலாம் தற்போது அந்த போர் நிலைக்குதான் எல்லா நாடுகளுக்கும் உள்ளது. அதனால் இனிமேல் ஒரு நாட்டை முழுதாக யாராலும் கட்டுப்படுத்த முடியாது உதாரணம் மூன்று வருடங்களால் நடக்கும் ரஷ்ய, உக்ரையின் போர். போர் தந்திரம், போர் யுக்திகள் எல்லாம் மாறிவிட்டது. அதனால் அமெரிக்காவின் அடாவாடி கைப்புள்ளையான இஸ்ரேல் இதை மரமண்டையில் ஏற்றிக்கொள்ளவேண்டும். நட்புடன்... 💐 :-Rk. Guru Astrologer, Social Activist Life & Spiritual Counseller Whatsapp: +917904507839 (Share this post...)

Sunday, February 9, 2025

மகிழ்வித்து மகிழ்

தமிழில் எனக்கு பிடித்த வார்த்தைகள்: "மகிழ்வித்து, மகிழ்" இந்த இரண்டு வார்த்தைகளை கொண்டு நாம் அறத்தின் வழி சென்றால், நம் நாடும் செழிக்கும், வீடும் செழிக்கும். தீயதாக நாம் எடுத்துகொண்டால், அறம் விழும். தீயது என்பது பிறரை பொய்யாக மகிழ்வித்து, பின் அவர்களை வீழ்த்தி, ஒரு நேரம் தான் மட்டும் மகிழ்ந்து, காலப்போக்கில் அம்மகிழ்ச்சியும் சென்று, நோயில் வீழ்ந்து, மடிந்து போவது. ஆனால் அறம் சார்ந்த மகிழ்வு என்பது நோய் கொண்டு இறக்கும் தருவாயிலும் "தான் வாழ்வில் மகிழ்வித்த நபர்கள் இன்னும் அறத்துடன் மகிழ்கிறார்கள்" என்ற மகிழ்வுடன் கண் துயில்வது. உயிர் செல்வது... #நாம் வாழும் வாழ்வு, ஏதோவித ஒரு அர்த்தத்தை நமக்கு உணர்த்திகொண்டே உள்ளது. அதில் ஒன்றே, " மகிழ்வித்து மகிழ்"... :-Rk.Guru