Sunday, February 9, 2025
மகிழ்வித்து மகிழ்
தமிழில் எனக்கு பிடித்த வார்த்தைகள்:
"மகிழ்வித்து, மகிழ்"
இந்த இரண்டு வார்த்தைகளை கொண்டு நாம் அறத்தின் வழி சென்றால், நம் நாடும் செழிக்கும், வீடும் செழிக்கும். தீயதாக நாம் எடுத்துகொண்டால், அறம் விழும்.
தீயது என்பது பிறரை பொய்யாக மகிழ்வித்து, பின் அவர்களை வீழ்த்தி, ஒரு நேரம் தான் மட்டும் மகிழ்ந்து, காலப்போக்கில் அம்மகிழ்ச்சியும் சென்று, நோயில் வீழ்ந்து, மடிந்து போவது.
ஆனால் அறம் சார்ந்த மகிழ்வு என்பது நோய் கொண்டு இறக்கும் தருவாயிலும் "தான் வாழ்வில் மகிழ்வித்த நபர்கள் இன்னும் அறத்துடன் மகிழ்கிறார்கள்" என்ற
மகிழ்வுடன்
கண் துயில்வது. உயிர் செல்வது...
#நாம் வாழும் வாழ்வு, ஏதோவித ஒரு அர்த்தத்தை நமக்கு உணர்த்திகொண்டே உள்ளது.
அதில் ஒன்றே, " மகிழ்வித்து மகிழ்"...
:-Rk.Guru
0 comments:
Post a Comment