Wednesday, July 16, 2025
பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வா.!?
என்னுடைய நிலைப்பாடு தீய செயல் செய்து கூட ஒருவனை ஊரே சேர்ந்து காரி துப்பினாலும் தற்கொலை எண்ணத்திற்கு வரக்கூடாது என்பேன். அவனும் திருந்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
தீய செயல் செய்து ஊரே காரி துப்பினாலும் தற்கொலைக்கு வரக்கூடாது என்று சொல்லும் போது சத்தியம், தர்மத்தின் வழி சென்று நேர்மையான நல்ல காரியங்கள் செய்து அதில் ஏற்படும் பிரச்சனைக்கு போராட துணிவு இல்லாமல் தன்னை மாய்த்துக் கொள்வது என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த பிறவியில் நாம் பிறந்தது வாழ்வதற்காகதான்.
பிற உயிர்கள் பிறப்பையும் தேர்ந்தெடுக்க முடியாது, இறப்பையும் தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் நாம் பிறப்பை தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் இறப்பை தேர்ந்தெடுக்க முடியும்.
இறப்பை தேர்ந்தெடுக்க முடியும் என்ற உரிமையில் இயற்கை படைத்த உயிரை இயற்கையே எடுத்துக்கொள்ளும் வரை அதற்கு எதிராக செயல்படக்கூடாது.
மனிதன் தோன்றிய 2 லட்சம் வருடமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் போராடிதான் கடந்து வந்திருக்கின்றான்.
இந்த பூமியில் உயிர் வாழ்வதுதே மிகப்பெரிய போராட்டம்தான் அதற்கு தற்கொலை என்றுமே ஒரு தீர்வாக இருக்க முடியாது.
தற்கொலைதான் முடிவு என்றால் மனித இனம் என்றோ அழிந்து போயிருக்கும் இந்த அளவுக்கு முன்னேறி இருக்காது.
அதனால் பிரச்சனையை நாளை தள்ளி போடுங்கள் அந்த நாளை வரும் பொழுது அந்த பிரச்சனை வீரியம் குறைந்திருக்கும் சில நாட்களில் பிரச்சனை என்பதே இல்லாமல் போயிருக்கும்.
#தற்கொலை எண்ணத்திற்கு இதுதான் குறைந்தபட்ச ஒரு தீர்வாக இருக்கும்.
நட்புடன்... 💐
:-Rk. Guru
Life & Spiritual Counseller
Whatsapp: +919361782696
+917904507838
(Share this post...)
0 comments:
Post a Comment