Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Friday, December 16, 2011

சில பேர் கேட்கிறார்கள்...!?

"முல்லைப் பெரியாறில் மலையாளிகளோடும், காவிரி நதிநீரில் கன்னடர்களோடும் சண்டை. இந்த ஆறுகளால் பண்ணையார்களாய், நில உடமையாளர்களாய் இருக்கிற ஆதிக்க ஜாதிக்காரர்களுக்குத்தான் பாதிப்பு. நிலமற்ற தலித்துளுக்கு என்ன பாதிப்பு" என்று...


# கொஞ்சம் உங்கள் ஜாதிய பாகுபாடை தள்ளிவைத்து நம் தமிழ் இன உணர்வுடன் சிந்திப்போமே...அம்பேத்காருக்கு இந்தியாவில் உள்ள உயர் இந்துகளிடம் வெறுப்பு இருந்தாலும் அவர் ஒருபோது வெள்ளைகாரனை நேசித்ததில்லை. வெள்ளக்காரன் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது என்று விரும்பியதில்லை. சொந்த வீட்டில் பகை எப்போதும் இருக்கும் அது எப்போது வேண்டுமானாலும் நீர்த்து போகும் அது கொஞ்சம் காலதாமதமாக ஆகும் அறிவியல் மாற்றத்தில் இந்த பகையை மாற்ற சாத்தியம் உண்டு. இதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது ஆனால் தமிழன், மலையாளி என்ற இன உணர்வில் இது சாத்தியமே இல்லை. இது மக்களின் மொழி உணர்வுடன் கலந்தது. நாடு கடந்தும் தமிழக தொப்புள்கொடி மக்களான ஈழ மக்கள் இருந்தாலும் அவர்கள் தாய்தமிழ் மக்களை நேசிக்காதவர்கள் இல்லை அவர்கள் நேசிப்பதற்கு காரணம் அவர்களும் செந்தமிழ் பேசும் மக்கள். ஏன் நம் பக்கத்து யுனியன் பிரேதேசம் பாண்டிச்சேரியை பாருங்கள் அங்கே அரசியல் ரீதியில் பகைமை இருந்தாலும் அங்கு இருக்கும் மக்களுக்கு தமிழமாநில மக்கள் மேல் எந்த கோவமும் இல்லை ஏனென்றால் அது தமிழ் இன உணர்வுடன் அதிகபடியான தமிழ்மொழி உணர்வு கலந்தது. ஆனால் கேரளா, கர்நாடக, ஆந்திர இம்மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் நம்முடன் சேர்த்து திராவிட இன பாரம்பரியத்தை கொண்டவர்கள் இவர்கள் திராவிட இனம் என்று வரலாற்று ஆசிரியர்களும் அவர்களின் ஆய்வுகளும் கூறுகிறது. இப்படி ஒரு திராவிட இனமாக இருந்தும் ஏன் நமக்குள் பகைமை இருக்கிறது. இதை கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் இப்பகை ஒரு நாட்டின் மத, ஜாதி, இன உணர்வுடன் வருவதை விட, மொழி உணர்வுடன் வருவதுதான் அதிகம் இதுவே மக்கள் உணர்வுகளின் முதன்மையானதாக இருக்கிறது எனபது நன்றாக தெரியும்.

ஒரு இனத்தின் மொழி உணர்வை தகர்தெரிந்தால் மற்ற உணர்வுகள் எதுவும் மிஞ்சாது. உலக புகழ் பெற்ற இயக்குனர் சத்தியஜித்ரே தான் இயக்கிய வங்க மொழி படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தை பற்றி ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி கண்டார் "நீங்கள் ஏன் உங்கள் படங்களை வங்கமொழில் எடுகீரீர்கள் ஏன் இந்தியிலும் எடுக்கலாமே" என்றதுக்கு அவர், "என் மொழி உணர்வை என் மொழில்யிதான் வெளிபடுத்த முடியும் அதை வேறுஒரு மொழில் வெளிபடுத்தினால் அதன் உயிரோட்டம் போய்விடும் அது மரத்தில் இருந்து முறிந்த கிளைகலாகத்தான் இருக்கும்" என்றார். சத்தியஜித்ரே தன வங்க மொழிக்கு அதன் உணர்வுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் பாருங்கள். ஒரு நாட்டு மக்களின் மொழி உணர்வுதான் அந்நாட்டுக்கு மகத்தான ஒன்று. இவை அந்நாட்டின் தேசிய கீதம், தேசிய இறையாண்மையை விட வலிமையானது. அதன் மேல் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் கட்டமைப்பை ஏற்படுத்தலாம் அவ்வளவு உறுதியானது. அதனால் தமிழ் மக்களாகிய நாம் ஜாதி, மத பேதங்களை மறந்து தமிழ் மொழி உணர்வுடன் மட்டும் ஒன்றுபடுவோம்.


என்றும் நட்புடன்:

3 comments:

s balan said...

sinthitu kadaipidikka vendiya karuthu

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்... சரியாச் சொன்னீங்க....
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில் :
"நீங்க மரமாக போறீங்க..."

பொன் மாலை பொழுது said...

பிரமாதமான ஒரு ஆக்கம். தொடர்ந்து எழுதுங்கள்.
பகிர்வுக்கு நன்றி