Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Saturday, November 12, 2011

போதிதர்மரை கொஞ்சமாவது தெரிந்துகொள்ளுங்கள்...


போதிதர்மர் ஒரு சென் துறவி. அவர் இன்னோர் புத்தர் என்று ஓஷோவே சொல்கிறார். அம்பேத்கார் பவுத்த மதத்திற்கு மாறினார். மாறினார் என்றால் புத்தத்தையும் புத்தரை ஏற்றுகொண்டார் என்றுதான் அர்த்தம். தாழ்த்தபட்டவர்களின் தலைவராக இருந்தவர் புத்தரை ஏற்கும் போது போதிதர்மரை ஏற்காதவரில்லை அவர் பாப்பான் என்று சொல்வதிற்கில்லை. அப்படி இருக்கும் போது ஒரு சென் துறவியை இனம் மொழி சாதி என்று ஒரு குறுகிய நோக்கத்தில் அடையாளபடுத்தி தற்குறியாய் நிருத்திவைப்பது அவரை பற்றிய சரியான புரிதலின்மையைதான் காட்டுகிறது. உண்மையில் அவரை பற்றி அவரின் விழிப்புணர்வை பற்றி யாரும் தெரிந்துகொள்ளவே முற்படவில்லை.

பிராமணர்கள் வசிக்கும் இடத்தில் போய் சுவாசித்தாலும் அதே காற்றுதான் , தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு போய் சுவாசித்தாலும் அதே காற்றுதான்...காற்றுக்கு நிறமும் இல்லை, வடிவமும் இல்லை. அதுபோல் போதிதர்மருக்கு இனமும் இல்லை மொழியும் இல்லை, சாதியையும் இல்லை 'இதுபோல' இருப்பவர் என்று சொல்லிலே அடங்காதவர். அவர் புத்தரானவர்.

நீங்கள் பசி எடுக்காத நேரத்திலும் சாப்பிடுவிங்க, தூக்கம் வராத பொழுதும் தூங்க முற்படுவிங்க, வாய் விட்டு சிரிக்கலாம் என்று இருந்தாலும் கவுருவம் என்ற போர்வையில் சிரிக்க மாட்டிங்க, அழுவலாம் என்றால் அழமாட்டிங்க, ஆனால் போதிதர்மர் நம்மிடம் மாறுபட்டு இருந்தார் அவர் விழிப்புடன் இருந்தார். அதுவே ஜென்.

ஒரு ஜென் துறவியிடம் ஞானத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். அவர் சொல்கிறார் "ஞானம் சொல்லில் அடங்காதது அப்படியும் சொன்னால் அது ஞானமில்லாதது.

என்றும் நட்புடன்

1 comments:

vimalanperali said...

இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லி இருந்தால் தேவலாம் போல தெரிகிறது,அவரைப்பற்றி தெரிந்து கொள்ள ஆசை.