Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Wednesday, April 17, 2024

இங்கு எதுவும் அழிக்கபடவில்லை, உருவாக்கபடவுமில்லை. இருப்பது என்று சொல்வதற்குமில்லை, அது இல்லை என்று சொல்வதற்குமில்லை.. அது இருந்தால் என்ன.!? இல்லன்னா என்ன.!? நிர்வாணம் நீ பிறக்கும்போதே தொடங்கியது. பல வருடம் நீ ஆடைபோட்டு மறைத்துகொண்டிருந்தாய். ஆடையை (ஆசை,ஆணவம்) துறந்ததால், நீ அதை கண்டுபிடித்துவிட்டாய். அங்கு நீ அதை தேடி அடிந்துவிட்டாய் என்பதல்ல.. இருப்பதை மீண்டும் நினைவுபடுத்திகொண்டாய், உணர்ந்துகொண்டாய் என்பதே.. ஆன்மிகத்தில் தேடிய அடைய ஒன்றுமில்லை.. இருப்பது அப்படியேதான் இருக்கிறது. கடலுக்குள் நீந்திகொண்டு கடலை எங்கும் தேடவேண்டாம். நீ நீந்துவதுதான் கடல். எல்லாமே நீதான், அதனால்தான் கட+உள்(கடவுள்) என்றார்கள். உனக்குள் கடந்து செல், அதுவே கடவுள். அதுவே நீ, பின் நீயே கடவுள் என்பதை உணர்வாய. :-Rk.Guru rkguru3@gmail.com (Share this post...)
கணவன் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு அமங்கலமாக செய்யப்படும் சடங்குகள் இந்து மதத்தின் அகோர முகத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. கணவன் இறந்து ஏழாவது நாள் இறந்தவனுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு, ஒப்பாரி வைத்து பின் இறந்தவனின் மனைவியை தன் அம்மா வீட்டிற்கு அழைத்து வந்து விடுவார்கள். அதுவும் இரவு பொழுதில் அழைத்து வருவார்கள் ஏனென்றால் அவளை யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக, மறுநாள் சூரியன் வருவதற்கு முன்னே மீண்டும் அழைத்துச் சென்றுவிடுவார்கள். அப்பெண் தாய்வீட்டுக்கு வரும்வேலை பூவும், பொட்டும், தாய் வீட்டு சீர் என்று கொடுத்த புடவையை கட்டிகொண்டு சோகமாக ஒரு மூலையில் அமர்ந்திருக்க, அங்கு வருவோர் போவோர் எல்லாம் அப்பெண்ணை பார்த்துவிட்டு கண்ணீருடன் மூக்கை சிந்திவிட்டு செல்வார்கள். அப்போது அப்பெண்ணை பார்காதவர்களை பார்த்து சொல்லுவார்கள், "கடைசியா வந்து மூஞ்சிய பார்த்துட்டு போப்பா.. மறுபடியும் எப்போ அவள இப்படி பார்க்க போற..'என்று. என்னிடமும் அப்படி சொன்னார்கள். "நான் ஏன் அப்படி பார்க்கணும்" என்று கேட்டேன். இதேதான் மீண்டும் கேட்கிறேன் ஏன் இந்த பழமையான பொறம்போக்குகள் வகுத்த அறம் கேட்ட விதியை தூக்கி சுமக்க வேண்டும்..? ஏன் நான் அப்படி பார்க்கனும்.? அதாவது கடைசியாக முகத்தை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்வதன் அர்த்தம், இனிமேல் அந்தப் பெண் சாகும்வரை கை நிறைய வலையல் இல்லாமல், பூவும், பொட்டும் இல்லாமல் இருப்பாள் அதனால் கடைசியாக மங்களகரமாக இருக்கும்போதே பார்த்துவிடுங்க என்பதுதான் அதன் பொருள். இந்த விதிகள் எல்லாம் ஏன் எப்போதும் ஆண்களுக்கு பொருந்தாமல் போகிறது.!? பெண்களும் இதை எல்லாம் ஏன்.!?, எதற்கு.? என்று கேட்காமல் அப்படியே ஏற்றுகொள்கிறார்கள்.!? நான் இங்கு ஒரு விசயத்தை வலியுருத்த விரும்புகிறேன். ஒரு பெண்ணின் கணவன் இறந்தால் அவள் மிகுந்த சுதந்திரம் அடைந்தவளாக மாறுகிறாள். மாறவேண்டும். ஏனென்றால் ஒரு பெண்ணுக்கு முதன்மையாக கட்டுப்படுத்துபவன், அடக்குபவன் அவனின் கணவனே.. அந்த முதன்மையானவனே இல்லாதபோது, அப்பெண் யாருக்கு கட்டுபடவேண்டும்,? யாருக்கு அடிபணியவேண்டும்.? உண்மையில் பெண்ணின் சுதந்திரம், ஆணிடம் இருந்து முழுமையாக விடுதலை பெறும்போதே கிடைக்கிறது. பெண்ணின் கணவன் இறக்கும்போது, அவள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. அவள், அவளுக்கான விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழலாம்... அவள் இந்த சமூக நச்சரிப்பு கூட்டதிலிருந்து விலகி என்றும் சுதந்திரமாக வாழலாம்.. கணவனே கண் கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன், திருமணம் சொர்கத்தில் நிச்சயக்கபட்டு ஒன்று" என்ற பழைய மக்கிபோன பஞ்சாங்கத்தை தூக்கிபோட்டு அவள் வாழவேண்டும். இதைவிட அவள், திருமணம் என்ற பந்தத்தில் உள்ளே செல்லாமல் இருப்பதுதான் மிகச் சிறப்பு. #இந்துமதம், நயவஞ்சகத்தனமான ஆண்களின் சூழ்ச்சியால் பின்னப்பட்டுள்ளது. அதில் பெண்களே முதல் பலியாகிறார்கள். :-Rk.Guru (Must Share this post...)
மரணம் நெருங்கி வரும் வேளையில், "இனிமேல் நாம் பிழைக்க முடியாது அவ்வளவுதான்..." என்று பயத்துடன் இருக்கும்போது மீண்டும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தால் நமக்கு தெரியும். இவ்வளவு நாள் ஆணவத்தில் ஆடிய ஆட்டம், திமிராக பேசிய பேச்சு எல்லாம் நம் கண் முன்னால் வீழ்ந்துகிடக்கும்.. அதை நன்கு உணரலாம். அப்படியும் உணரவில்லை என்றால் அதுங்க எல்லாம் மனித பிறவிகளே இல்லை... கண்ணதாசன் பாடலைதான் இங்கு குறிப்பிடவேண்டும். "உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு... இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு... கொண்டாடும் போது ஒரு நூறு பேரு.. உடல் கூடு விட்டு ஆவி போனால் கூட யாரு..!? #மரணம் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டு போய்விடும். நாம் பல வருடம் வாழும் வாழ்க்கை வர்ணஜாலம்கொண்ட மிகப் பெரிய நீர்க்குமிழி. அதை வெடிக்க வைக்க ஒரு சின்ன குண்டூசி போதும். பட்டென்று வெடித்து இருந்த சுவடு தெரியாமல் போய்விடும். "ஒருவருக்கு தன் வாழ்வை பற்றிய 'புரிதலே' மிக பெரிய அரசன்" என்கிறார் புத்தர். எனக்கு வாழ்வை பற்றிய மிக நுட்பமான புரிதல் உள்ளது. அது உங்களுக்கு...!? :-Rk.Guru rkguru3@gmail.com (Share this post...)
மனிதர்களிடம் எப்போதும் ஒரே மாதிரி பழகக் கூடாது, எல்லோரிடமும் ஒரே மாதிரி பல்லைக்காட்டி சிரிக்கவும் கூடாது ஏனென்றால் மனித மனங்கள் அவ்வளவு கொடூரமானது. மனித மனம், பொறாமை, சூழ்ச்சி, வஞ்சம், பேராசை, பயம், சோம்பேரித்தனம், ஆணவம் போன்றவற்றால் கிலோ கணக்கில் நிரம்பியுள்ளது. சிரிக்க வேண்டியவர்களிடம் மட்டுமே பல்லைக்காட்டி சிரிக்க வேண்டும். அப்படியும் ஒரு வேலை சிரிக்கவில்லை என்றால் நீங்கள் ரொம்ப கொடூரமானவராக மாறிவிடுவீர்கள். :-Rk.Guru (Share this post...)

Wednesday, January 17, 2024

டிஜிட்டல் யுகம்

சங்ககாலத்தில் மக்களின் வாழ்வியலில் மன்னரின் படையாட்சி, புலவர் போன்ற அறிவுசார் சான்றோர்கள், மக்களுக்கும், மன்னருக்கும் ஒரு இணைப்பு பாலமாக இருந்து கொண்டிருந்தார்கள். அதன்பின் காலம் சென்றதும் குடியாட்சி மலர்ந்தது, பின் ஆட்சியில் மக்களை பங்கேற்கும் நிலைக்கொண்டு அரசியல்வாதிகள் என்று தனிப்பெரும் பிரிவாக அது பிரிந்தது. புலவராக இருந்த சான்றோர்கள் அறிவுசார் கலை, இலக்கிய எழுத்தாளார்களாகவும், மேடை பேச்சாளர்களாகவும், கவிஞராகவும், நடிகராகவும், மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு மையமாக இருந்தார்கள். பின் தமிழக அரசியலில் சாதிய, மதத்துவ இழிவை புறம்பட பேசி சமுகநீதி போன்ற உள்ளீட்டு காரணிகளை கொண்டு, கொள்கை, சித்தாந்தம் தத்துவார்த்த அடிப்படையில் பெரியார், தோழர் ஜீவானந்தம் போன்றோர்கள் மற்றும் அண்ணா, கலைஞர் போன்றோர் தங்களின் பேச்சு, எழுத்து கலை இலக்கிய தன்மையைக் கொண்டு மக்களிடம் ஜனநாயகஅரசாட்சியின் மேன்மைதன்மையை, மக்கள் நலன் சார்ந்து, கொண்டு சென்றார்கள். (இதில் கலைஞர் தன் மக்கள் நலன் சார்ந்தும் கொண்டு சென்றார்.) ஆனால் தற்போது மன்னராட்சி அதிகாரதனமும் இல்லை, பெரியார், ஜீவானந்தம் போன்றோர் முன்னெடுத்த சமூகநீதி கோட்பாடு, தத்துவார்த்த அரசியலும் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூக வட்டத்திற்குள் அறிவுசார் மக்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் ஆற்றலான பேச்சு, எழுத்து, நடிப்பு போன்ற கலை இலக்கியதாலும் நிலைக்கொண்டு தனித்துவப்பட்டது. அந்த தனித்துவமே எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற பிம்பங்களை மக்கள் முன் முன்னிறுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு தள்ளியது. அதாவது கலை, இலக்கியம் மக்களிடம் மேலோங்கி அது அரசியல்தனத்திற்கு வழிவகுத்தது. அதைக்கொண்டு எழுத்தாளர்களும், பட்டிமன்ற பேச்சாளர்களும், கவிஞர்களும், நடிகர்களும் தன்முனைப்போடு 2015 ஆண்டு வரை திரிந்துகொண்டிருந்தார்கள். ஆனால் 2015 மேல் டிஜிட்டல் யுகத்தில் வரைமுறையற்ற இணைய சேவை கிடைத்தபின் அந்த அறிவு சார் மக்களின் பெருமதிப்பு மற்றும் கர்வமிதப்பு பெருமளவு புறம் தள்ளப்பட்டது . வாட்ஸபில், கவிஞர்கள், குறும் எழுத்தாளர்களை நிறையப்பேர் உருவாகினார்கள். டிக்டாக், ஷார்ட் மூலமாக தன் நடிப்பை வெளிப்படுத்தினார்கள் அதன்மூலம் வாய்ப்பும் பெற்றார்கள். இப்படி இருக்கையில் கலை, இலக்கிய, நடிப்பு கலைஞர்களின் அதிகார மமதையை மக்களிடம் ஏற்படுத்த முடியவில்லை. அது ஒடுங்கிவிட்டது (அ) ஒடுக்கபட்டது. இனிமேல் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற எந்த கலைஞர்களும் அரசியல் தலைமைத்துவத்தை கைப்பற்ற முடியாது. அதற்கு மறைந்த விஜயகாந்தே சாட்சி. அதேபோல் அறிவுசார் எழுத்துலக தலைமையும், தானே சிறந்த பேச்சாளர்கள் என்று பெருமிதம் கொள்ளும் பிம்பமும், மக்களிடம் காட்டாற்று வெள்ளம் போல், டிஜிட்டல் யுகம் அடித்து துவம்சம் செய்துவிட்டது. இது தமிழ்நாட்டு அரசியலின் ட்ரண்டை, ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றது. மக்களிடம் இருக்கும் இன, மொழி, மத, சாதியவாதம் அனைத்தும் இந்த டிஜிட்டல் யுகத்தில் அடித்து நொருக்கபடுகின்றது. மக்களுக்கான வாழ்வியலுக்கான அரசியலை யார் கொண்டு செல்கிறார்களோ, அதைப் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களே பரிமாணதிற்கு (சர்வைவலுக்கு) பொருந்தமுடியும். அவர்களே இந்த டிஜிட்டல் யுகத்தின் முதன்மை ஹீரோக்களாக கொண்டாடபடுவார்கள். அப்போதெல்லாம் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு முக்கோண வடிவதன்மை இருந்தது. மக்கள் ஒருமுனையில் இருந்தால், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருமுனையானாலும் ஓர் முனையாக செயல்பட்டார்கள்(செயல்படுகிறார்கள்) மக்களிடமிருந்து மறைமுகமாக விலகித்தான் இருந்தார்கள். மக்கள் அவர்களை ஒரு பிரமிப்பாக,பயத்துடன்தான் பார்த்தார்கள், அதைதான் அவர்களும் விரும்பினார்கள் ஆனால் இந்த டிஜிட்டல் யுகத்தில் அந்த இரண்டு புள்ளியும் மக்களின் கீழ் செயல்படும் தன்மைக்கு முழுதாக கொண்டுவர முயற்சிக்கிறது, அவர்களுக்கு, "மக்களுக்காகத்தான் நீங்கள்.." என்று உணர்த்துகிறது. #மக்களே முதன்மையானவர்கள். இன, மொழி, சாதி சமயமற்ற நல்வாழ்வுக்கான அடையாளத்தை நோக்கி தற்போது தமிழ்நாட்டு அரசியல் நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை நினைத்து எனக்கு பெரும் மகிழ்ச்சி..!! :-Rk.Guru rkguru3@gmail.com (Share this post...)

Tuesday, May 23, 2023

பெண்ணியம் பேசும் பெண்களுக்கு...

ஒரு கல்யாணமான பெண்ணுக்கு கணவனின் ஆதரவு எவ்வளவு முக்கியமானது என்பதை கணவனின் ஆதரவு இல்லாமல் போகும்போதுதான் அவள் நன்கு உணர்வாள். இங்கு யாருக்கும் எதுவும் எளிமையாக கிடைக்கும்போது அதன் மகத்துவம் தெரியாது. தாயின் அன்பும் அதுபோல்தான்.. தாய் இல்லாமல் போகும்போதுதான் அதை நினைத்து ஏங்குவார்கள். ஒரு பெண் என்னதான் மிகப்பெரிய சாதனை செய்தாலும் அங்கு ஆண் இருக்கும்போது அதை பகிர்ந்துகொள்ள அவளுக்கு மிகுந்த சுவாரஸ்யம் மற்றும் ஆத்ம அழகு மிளிரும் #ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பது போல் பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் நிச்சயமாக ஆண் இருக்கிறான். இதை புரிந்து கொள்ளாத, ஆணை மதிக்காத பெண்ணியம் (Feminism) பேசும் பெண்களுக்கு அவர்கள் தன் வாழ்நாளில் அதை புரிந்துகொள்ள முடியாமலே போகின்றது. :-Rk.Guru (Share this post...)

Friday, May 12, 2023

இவ்வுலகில் எது அறம்.!?

அறம் என்ற ஒன்றை நாம் பிரிக்கும்போது அறமற்ற இன்னொன்று தொங்கிக் கொண்டு உள்ளதே.. அப்பொழுது 

இரட்டைத் தன்மை அங்கு உள்ளது என்று பொருள்படுகிறது.


இரட்டைத் தன்மை கொண்டமை மனதில் அதிநுட்ப செயல் திட்ட வடிவமே..


மனது அறம் என்பதை விரும்புகிறது. மனம் விரும்பும் அறம், எப்படி ஞானம் என்று சொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லும்.!?


மனதின் இன்னொரு முகம் அறிவு. அறிவின் உள்ளாழம் பகுத்தறிவு என்று எடுத்துக் கொள்ளப்படும்போது இந்த மனம், அறிவு, பகுத்தறிவு இவையெல்லாம்தான் ஞானத்தின் பாதை தீர்மானிக்குமா.!?


மனதின் வரையறை, விளக்கங்கள் எதை திருப்திப்படுத்துவது.!? எதை முழுமைப்படுத்த முனைவது .!?


 ஒன்று ஒரு வடிவம் கொடுத்து 

நாம் சொல்வதால் அது ஒன்றே என்று பொருள் கொள்ளப்படுகிறது.


அந்த ஒன்று எண்ணை இரண்டு என்று கூட சொல்லிவிட்டுப் போகலாம்.


இதே போன்று தானே அறம்  என்பதும் இன்று நீங்கள் சொல்லும் 'அறம்' நாளை அது அறமற்றதாகக்கூட மாறலாம்.!


இறுதியாக யாம் சொல்லபடுவது யாதெனில்.


அறம்,அறமற்ற தன்மையை கடந்த பார்வை வேண்டும் ஒரு சாதகனுக்கு.


அறத்தொடு நிற்பது மனதின் பாதுகாப்பான, ஒரு சவுகரியமான விசயம்.


ஏன் நம்மை ஒரு ஆசிரியர், பேராசிரியர், கல்லூரி முதல்வர், துணைவேந்தர் என்றெல்லாம் அழைத்துக் கொள்கிறோம்.


ஏனென்றால் அங்கு  மனதின் ஒரு நுட்பமான ஆணவம் வெளிப்படுகிறது. தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது. தன்னை மறைமுகமாக பெருமைப்படுத்திக் கொள்வது . அறம் சார்ந்த வட்டத்துக்குள் நிலை நிறுத்திக் கொள்வது.


ஏன் நம்மை,  "யாம் ஒரு அறம் சார்ந்த பிச்சை எடுப்பவன், பிச்சை எடுத்ததை பிறருக்கும் கொடுத்து தானும் உண்பவன்" என்று பெருமையாக ஏன் சொல்லிக் கொள்வதில்லை.!?

அங்கேயும் அறம் என்பது சொல்படுவது உள்ளதுதானே...


அறம் என்று சொல்லப்படுவதில் ஆணவம் பொதிந்துள்ளது. அறம், அறமற்றது என்பதை தாண்டிய 

பார்வை வேண்டும்.


நாம் மரம் என்று சொல்வதனால் மரத்துக்கு எந்தவித உணர்தல் தேவையும் இல்லை. அது அதுவாகவே உள்ளது.


நம் மனதின் தேவைக்கு  மாமரம், பலாமரம் என்று பெயரிட்டு பயன்படுத்திக் கொள்கிறோம்.


அறம் மனிதகுலம் தோன்றிய வரலாற்றில் மரபுசார்ந்த மனிதர்களின் சொல்லிலும், செயலிலும், நூல் வடிவிலும் ஏராளமாக உள்ளன.


அப்படி இருந்தும் ஏன் மனிதனுக்கு இன்னும் அறத்தை போதித்துக் கொண்டே இருக்கின்றோம்.!?


ஏனென்றால் மனிதனுக்கு அறம் பற்றி சொல்வதில் மனதின் சுய அரிப்பு அடங்கியுள்ளது.  தன்னால் முடியாததை பிறரை செய்யவைத்து காண வேண்டும் என்ற ஆசையின் அரிப்பு.


#அறம்,அறமற்றதை மறப்போம்.

புல் தானாக வளரும்..

மேகங்கள் விலகும்

சூரியன் பிரகாசிக்கும்..


:-Rk.Guru


(Share this post....)