Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Thursday, January 27, 2011

நீ நினைப்பதைத்தான் நானும் நினைக்கின்றேன்.


கட்டளை இடுபவன் தலைவனாகிறான். செயல்படுத்துபவன்தான் செயலாலாளர் ஆகிறான் ஆனால் தலையை விட வால்கலே நாட்டில் ரொம்ப ஆடுகிறது. தலைவனே ஒரு அடிமை. இந்த அடிமைக்கு ஒரு அடிமை  கிடைத்துவிட்டால் சும்மா இருந்துவிடுவானா.? தான் எப்படி எல்லாம்   அடிமைபட்டோம் என்று தன் அடிமைத்தனத்தை அந்த அடிமைமேல் சுமத்தி அடிமையாக்க என்றும்  நினைப்பான். இதுதான் இப்போது இருக்கும் அதிகார ஆளும்  அடிமைகளின் குணம். இந்த அடிமைகள் இப்பொழுது வாழும் நாட்டில் மத அடிமைகளாகவும் , ஜாதி அடிமைகளாகவும், அதிகார அடிமைகளாகவும் புற்றிசல்போல் பரவி இருக்கிறது. இவ்வடிமைகளின் குணம் ஆணவம் கொள்ளும் மனதை கொண்டதுதான் அது அன்பை விரும்பாது வெறுப்பைத்தான் விரும்பும் அடிமைதனத்தைதான் என்றும் ஏற்கும்.

நம்மில் பலபேர்  நண்பர்களைவிட எதிரியைத்தான் அதிகமாக தேடுகிறோம். பல எதிரிபோல் இருக்கும் திருடன்கள் திருடாத நம்மிடம்  கூட்டு வைத்தால்  மற்றவருக்கும் நாமும் திருடியவனாகத்தான்  தெரிவோம். இதில் நேர்மை என்ற கண்ணிருந்தும் அவன் குருடன்தான். உணர்விருந்தும் அவன் ஜடம்தான். நம் நியமான கருத்துக்கு எதிர்ப்பு இருக்கும்வரை அக்கருத்துள்ள எதிர்பாளர்களும் இருப்பார்கள் இருக்கத்தான் செய்வார்கள். தன் உணர்வே சிறந்தது தம் கருத்தே நியாயமானது என்று நினைப்பது ஏற்புடையதாக இருக்காது. காலத்தால் பல கருத்துகளும் கறுத்துதான் போகிறது. உண்மையான கருத்தே கருத்துகளை தாங்கி நிற்கிறது. ஆத்திக கருத்துடையோர் இருக்கும் வரை நாத்திக கருத்தும் இருக்கும்.

ஒருவருக்கு பொழப்பு வேண்டும் என்றால் எதிர்க்கும் இன்னொன்றும் இருந்தாகவேண்டி இருக்கிறது. நம்மில் யாருக்கும் நோயே இல்லையென்றால் டாக்டர் பொழப்பு எப்படி நடக்கும். யாருமே சாகவில்லையென்றால் அதை நம்பி இருப்பவர்களுக்கு எங்கே பொழப்பு...ஒன்றின் விழ்ச்சிதான் இன்னொன்றின் தொடக்கமாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்திற்கு  வேண்டும் என்றால் தொடக்கம்  சொல்லாடல் தேவைபடலாம் ஆனால் வறுமையின் பசியோடு இருப்பவனை இலக்கன சொல்லாடல் கவராது. வறுமையில் உள்ளவனை  சுரண்டும் கூட்டம் என்றும்  சொல்லும் "என்ன மயிருக்குடா நீங்களெல்லாம்  வாழுரிங்க" என்று. இங்கே மயிறு எப்படி அதிகார அழுத்தமாக பயன்படுகிறது பார்த்திர்களா...இதில் வார்த்தையின் பொருளை விட அடக்கும் அதிகாரம்தான் மேலோங்குகிறது. ஒரே வார்த்தையை அன்பாகவும் பயன்படுத்தலாம், அதிகாரமாகவும் பயன்படுத்தலாம் இவை எல்லாம் அவர் அவர் குணங்களை பொறுத்து அமைகிறது. நமக்கு அன்புதான் வேண்டுமே தவிர அதிகாரம்மில்லை அதுவும் சுரண்டி தின்னும் ஆளும் அதிகாரம்மில்லை.

ரோஜா மென்மையுடன் மேன்மையானாலும் அது முட்கள் பாதுகாப்புடன்தான் பூக்கின்றது..எல்லோரிடமும் சுயமரியாதை ஒன்று உள்ளது. முட்டாளும் இதை விரும்புவான்.    'திமீர்தனம்' ஒன்று உள்ளது. இது நியாய, அநியாய அடிபடையில் தன் தவறுகளை திருத்தி கொள்ளும். ஆனால் அடங்கா திமிர்தனம் என்று உள்ளது. அது ஆணுக்கும் உள்ளது. பெண்ணுக்கும் உள்ளது. இந்த திமிர்தனம் மெத்த தெரிந்த ஒட்டுமொத்த ஆணவத்தின் வெளிபாடு. இதனின் ஆரம்பம்  நல்லதாக  இருக்கும் ஆனால் முடிவு இதற்கு பெரும்சோகதான். ஆணவம் முதலில் பிறரை அழிக்கும் பின்    ஆணவம் கொண்டவரையே அழிக்கும்.  நாட்டில் மூன்று வகை பிரிவு மக்கள் இருக்கிறார்கள்.  1.அநியாயங்களை எதிர்த்து போராடுபவர்கள் (பொதுநலவாதிகள்) 2.அநியாயம் நடந்தாலும் எதிர்ப்பு காட்டாமல் ஒதுங்கி செல்பவர்கள் (பல குடும்ப தலைவர்கள்) 3.எப்பவுமே அநியாயம் செய்பவர்கள். (ஆளும் அதிகாரம் படைத்தவர்கள்) இவர்களின் தேவை பொறுத்தே மக்களின் வாழ்வு நகர்கிறது. நியாயங்களை, உண்மைகளை  மக்கள் ஓரளவுக்கு ஏற்றுகொண்டாலும் அது பொய்யாக்கும் வேலைத்தான் அதிகம் நடக்கிறது. மக்களுக்கு கொள்கைகளை முன்னிறுத்தி செல்வதில் அதை  சொல்வதில் கூட ஒரு வித சுயநலம் உள்ளது. கொள்கைகள் எல்லாம் எப்படி உருவாகிறது இன்று நாம் பார்த்தோமானால். கொள்கை வகுப்பவர் பார்த்தது, கேட்டது, அனுபவித்தது எல்லாம் கலந்துதான் ஒரு கொள்கை வடிவம் அவர் பெறுகிறார். இப்படி பார்க்கும் போது அவர் நலன் சார்ந்து பாதிக்கப்பட்ட  ஒரு சுயநலம் உள்ளது என்ன அச்சுயநலம் உருவமில்லாமல் பொதுநலமாய் மாறுவதுதான் என்றும் நடக்கும் அதிசயம். நம் கொள்கைகள் எல்லாமே ஒரு நலனுக்கு உட்பட்டதுதான். அம்மா குழந்தையை அன்புடன் வளர்கிறாள் பாசம் காட்டுகிறாள் பரிவுடன் இருக்கிறாள் என்றால் அது பார்பவருக்கு அக்குழந்தையின் பொதுநலன்தான் ஆனால் அக்குழந்தையின் பாதுகாப்பு பிற்காலத்தில் தனக்கும் கிடைக்கவேண்டும் என்ற சுயநலமும் அதில் அடங்கிருக்கு.  இதனால்தான் பல வீட்டில் மாமியார், மருமகள் பிரச்சனையே வருகிறது. மருமகளால் தன் சுயபாதுகாப்புக்கு ஆபத்து வருமோ என்று பல தாய்கள் பயபடுவதுண்டு. இது ஒருவித சுயநல அடிப்படையில் சார்ந்ததுதான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் உண்டு. அதில் தலையிட கூடாது. என்றால் அது எது மாதிரி சுதந்திரம் என்பதுதான் முதலில் கவனிக்கப்படவேண்டும். போலியில் உழன்று போலியாக ஒரு சுதந்திரம் இருக்க அதை ஏன்,? எதற்கு.? என்று கேட்க கூடாது...தாரலாமாய் கேட்கலாம். இந்த சுதந்திரத்தை கேட்பது தவறில்லை...பல பெண்களுக்கு சமையல்கட்டு, கணவன், குழந்தைகள் என்று அவள் இறுதி வாழ்வை முடித்து கொள்கிறார்கள். கேட்டால் அது அவளுக்கு சுதந்திரம்தான் என்பாள் வெளியுலகம் காணாதவரை அவளுக்கு அது சுதந்திரம்தான். இவை இத்சுதந்திரம் கவனிக்கபடுவது  தனி சுதந்திரம் பெரும்பாலும்  மூடநம்பிக்கை கொண்டே வருகிறது. அது சொந்த மதத்தில் நிலையில் மட்டும் பார்த்தால் அது  பகுத்தறிவாளர்களுக்கு ஏற்புடையதாக என்றும் இருப்பதில்லை எல்லோரும் மனிதர்கள் என்று நினைக்கும் போது மனிதன் சார்ந்த நிலைகளும் அதன் பகட்டு சுதந்திரம் தழுவிய மூடபழக்கங்களும் குறிப்பிடபடுபவைதான் அவை மதம், இனம், மொழி எவ்வகையதும் சார்ந்ததுதான். இதில் பாகுபாடு கிடையாது. உண்மை ஜனநாயக சுதந்திரம் எனபது சுதந்திர கருத்துடன் பேசுவது அப்பேசும் சுதந்திரத்திற்கு தடை விதிப்பதில்லை. அப்படி விதித்தால் அது ஜனநாயகமே இல்லை அது ஒரு சர்வாதிகாரத்தனம். சில நாட்டில் மதங்கள் சார்ந்த நிலையிலே அதன் சட்டங்களுக்கு இருக்கிறதால் அங்கு பேச்சு சுதந்திரத்திற்கு எழுத்து சுதந்திரத்திற்கு ஏது மரியாதை இருக்கிறது. அங்கு அடக்குமுறைதான் இருக்கும். ஆனால் காலம் மாறும் போது பல காட்சிகளும் உடைக்கபட்டுதான் ஆகவேண்டும்.

ஒருவரின் வயதை அவரின் அனுபவ முதிர்ச்சியாய் கொள்ளமுடியுமா.?  வயது முதிர்ச்சில் ஒருவர் அனுபவத்தை அனுபவமாக கொள்ள முடியாது. ஏனென்றால் இன்னும் பெரிய மனிதர் என்ற போர்வையில் டவுசர் போட்ட சின்ன பையன்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருவனின் முதிர்ச்சி எனபது அவன், பிறவி தாய், தந்தை குணம், வசிக்கும் இருப்பிட குணம், படிப்பில் தெளிந்த குணம், நடைமுறை வாழ்வில் அறிந்த குணம் இவையாவும் அவனுக்கும் அவனை சார்ந்த பிறருக்கும் பயன்படுபவதாக இருந்தால் அது அவனின் முதிர்ச்சி அனுபவமாக இருக்கும். இது இல்லாமல்  வெறும் வயது முதிர்ச்சியை மட்டும் வைத்து ஒருவர் அனுபவ முதிர்ச்சியை சமன் செய்யமுடியாது.

அழுதே காரியம் சாதிப்பவர்கள் இருக்கிறார்கள். அதிகாரம் செய்து காரியம் சாதிபவர்களும் இருக்கிறார்கள். நியாமான உரிமையை போராடி பெறுபவர்களுக்கும் இருக்கிறார்கள். இதில் நான் நியாயமான உணர்வின் வார்த்தைகளை எழுதி கருத்தை திணிக்காமல் உங்கள் பகுத்தாயும் அறிவில் உட்புகுத்தவே என்றும் இருக்கின்றேன். என்றும் உங்கள் ஆதரவுடன்....

  
என்றும் நட்புடன்:



Thursday, January 6, 2011

வளர்ந்த குழந்தையின் அவநம்பிக்கை ஆழமானது....


ஒரு குழந்தையின் நம்பிக்கை எப்படி வளர்கிறது. ஒவ்வொரு குழந்தையும் ஏதும் நம்பிக்கை இல்லாமல்தான் சுதந்திர சிந்தனையுடந்தான் பிறக்கிறது ஆனால் அது சுதந்திரத்தை சாதி, மதம், ஒழிங்கின கல்வி போதனை, அதன் கேள்விஞான அறிவை சீர்குலைத்தல் போன்றவை எல்லாம் ஒட்டுமொத்தமாக இந்த சமுதாயத்தால் இழக்கிறது.

 இந்த சமுதாயத்தில் குழந்தைகள் மதம் மற்றும் பிற நம்பிக்கையில் ஊறி வளரும் குழந்தைகள் அம்மதங்களை ஆராயாமல் கேள்வி ஏதும் கேட்காமல் அப்படியே சொல்வதை நம்பிக்கை என்ற பேரில் எற்றுகொள்கிறது. குழந்தை குழந்தையாக இருக்காது  இப்போது வளர்ந்து ஆளாய்  இருக்கும். மற்றும் மன திடமும், உடல்பலமும்  கொண்டவனாய் இருக்கும். இப்போது இவன் நம்பிய மதத்தினை  பிறர்  விமர்சனம் செய்யப்படும்போது. இவனின் நம்பிக்கையின் ஆணிவேரே கொஞ்சம் தளர்வடையும் ஆட்டம்காணும்.  இதை இவன் என்றும் விரும்பமாட்டான். அடுத்து  இவனின் மத நம்பிக்கையை  காப்பதற்கு மத ஆளுமை பிறரின் துணையுடன்  நடத்துவான். இது அடங்கா வன்முறையில் போய் முடியும்.  இதுபோன்ற அடங்கா ஆளுமைதான் எல்லா மத, மார்க்கங்களிலும் நடக்கிறது.

குழந்தையில் நாம் ஏதோ அற்பமாக விதைத்த விதைதான் இன்று இவன் மனதில் ஆழமாக நம்பிக்கை வேறாகி போனது. இதில் இவனின்   போலி நம்பிக்கையை உடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல..அவனின் நம்பிக்கை மண்ணில் ஊன்ற எவ்வளவு வருடம் எடுத்து கொண்டதோ..அதுபோல் அன்னம்பிக்கையை உடைபதர்க்கும் பல வருடம் ஆகும். இது அறிவியல் படைப்பால் நிகழும் சாதனையால் சீக்கிரம் உடைத்து காட்டலாம்.

இப்பதிவில் நான் கூறுவது என்னவென்றால் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் போது அது கேள்வி ஏதும் கேட்காமல் அப்படியே நம்ப ஆரபிக்கும். பின் அதில் விமர்சனம் ஏற்படும்போது வளர்ந்த மீசை வைத்த குழந்தையால் தாங்கி கொள்ள முடியாது. அது ஏதோ ஒரு பற்றுதலுடன்தான் வாழ முற்படுகிறது. அந்த பற்றுதல் நாம் திணிக்கும் மத நம்பிக்கை சார்ந்ததாக இருக்க கூடாது.

குழந்தைகளுக்கு கோவில், சர்ச்,  மசூதி என்று எதுவும் தெரியாது. நாம்தான் அதற்கு அறிமுகபடுத்திகிறோம் வன்முறை நம்பிக்கையை விதைக்கிறோம். இதில் எதையும் விதைக்காமல், எங்கையும்  அழைத்து கொண்டு போகாமல் அவன் கேள்வி கேட்கும் வரை காத்திருங்கள். அவன் விருப்பட்டால் அவனே தேர்தேடுக்கட்டும் மறுபடியும் சொல்கிறேன் வளர்ந்த மனிதனின் பொய்யான நம்பிக்கையை உடைப்பது அவன் எடுத்துக்கொண்ட காலம் போல் ஆகும். இதில் சிரமம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் குழந்தையிடம் எளிதாக ஞான கேள்வியான நம்பிக்கையை உண்டாக்கலாம். அதனால்தான் முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் வளர்ச்சியான, லஞ்சம் ஏதும் அற்ற இந்தியா வரவேண்டும் என்றால் குழந்தைகளிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்று புரிந்துகொண்டு செயல்படுத்தி கொண்டிருக்கிறார். அவர் காண்பது வளர்ச்சி. நாம் காண்பது பகுத்தாயும்  வளர்ச்சி சிந்தனை அதனால்  குழந்தையை சுதந்திரமாக வளர அனுமதியுங்கள். நாளைய சமுதாயம் பகுத்தறியும் சமுகதாயமாக ஜாதி, மத பூசல் இல்லாமல் நல்வழிபாதையில் பயணிக்க வேண்டும் ...இதுவே நம் விருப்பமாக இருக்கவேண்டும்.


 
          
என்றும் நட்புடன்: